பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பேராசிரியர் பெருந்தகை - மாண்பு

மறைந்த அலைகடல் வெற்றிகொண்டான் அவர்களின் நினைவு நாளில் கலந்து கொள்ள தேதி கேட்டு பேராசிரியர் அவர்களை நேற்று சந்தித்தோம் , நானும் வெற்றிகொண்டான் அவர்களது மகனும் - வெ.கொ.கருணாநிதி , ஜெயங்கொண்டம் நகர செயலாளர் .

" இரண்டு நாட்களில் தேதியை சொல்கிறேன் , என்னுடைய வயதை கவனத்தில் கொள்ளுங்கள். தேதி கொடுத்தால் , வெற்றிகொண்டான் உழைப்பிற்கு அவசியம் தவறக்கூடாது , மற்றவர்கள் தவறாக நினைத்து விடக்கூடாது " என்றார் . இதிலேயே அவரது பண்பு விளங்கியிருக்கும் . ஆனால் சொல்ல வந்தது அதுவல்ல .
உள்ளே நுழைந்தவுடன் எனது தந்தையாரின் நலம் விசாரித்தவர் , கிளம்புபோது வெற்றிகொண்டான் மகன் கருணாவை பார்த்து கேட்டார்

" என்ன தொழில் செய்கிறீர்கள் ? உனது தந்தையார் ஊர் ஊராக சென்று பேசினார் , இந்த காலத்தில் உன்னால் முடியாது. ஒரு தொழிலும் செய்து குடும்பத்தையும் கவனி " என்றார். உடன் வந்தவர்கள் மெய் சிலிர்த்துவிட்டார்கள். அவர் வயதுக்கு, தகுதிக்கு, பதவிக்கு இந்த அளவுக்கு அக்கறையோடு கேட்பார் என்று எதிர்பர்க்கவில்லை.

வழக்கமான அரசியல்வாதிகள் போல் இல்லாமல் , குடும்ப உணர்வோடு , அக்கறையோடு உறவாடுகிற காரணத்தால் தான் தலைவர் கலைஞர் அவர்களும் , பேராசிரியர் அவர்களும் இந்த வயதிலும் மிளிர்கிறார்கள் . இது தான் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் ........ மாண்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக