ஒரு நாள் நண்பரை பார்க்க ஆட்டோ பிடித்தேன்.
ஆட்டோ அண்ணா மேம்பாலம் கீழே வள்ளுவர் கோட்டம் பாதையில் திரும்புகிறது, இன்னொரு ஆட்டோ இடிப்பது போல் முந்த முயல்கிறது. இந்த ஆட்டோ ஓட்டுனர் ( படத்திலிருப்பவர் ), அந்த ஓட்டுனரை பார்த்து " நிதானமாகப் போப்ப
ஆட்டோ அண்ணா மேம்பாலம் கீழே வள்ளுவர் கோட்டம் பாதையில் திரும்புகிறது, இன்னொரு ஆட்டோ இடிப்பது போல் முந்த முயல்கிறது. இந்த ஆட்டோ ஓட்டுனர் ( படத்திலிருப்பவர் ), அந்த ஓட்டுனரை பார்த்து " நிதானமாகப் போப்ப
ா " என்கிறார். அந்த ஆட்டோ ஓட்டுனர் ( இளைஞர் ) இவரை பார்த்து " பெருசு, அவசர உலகம். வேகமா போனா தான் சவாரி கிடைக்கும் " என்றார்.
ஆட்டோ ஓட்டுனர் , " வயசு வேகத்துல பேசுறாரு. நான் நிதானமாக இருக்கிறதனால தான் வண்டி ஓடுது" என்றார். நானும் " ஆமாம். வயசு ஏற ஏற பக்குவம் தன்னால வரும்" என்றேன். " நீங்க எந்த ஸ்டேண்ட் ? " என்று கேட்டேன். " திருவான்மியூர் " என்றார்.
" சொந்த ஊர் எது ? " என்றேன் . நிறைய ஆட்டோ ஓட்டுனர்கள் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர் " மரக்காணம். ஆனா திருவான்மியூர்ல 40 வருசத்துக்கு முன்னாடி செட்டிலாயிட்டேன், அப்போ அது அவுட்டர், இப்போ மெயின் சிட்டி ஆயிடுச்சி" என்றார்.
அவராகவே, " அந்த தம்பி சொன்னது போல அவசரப்படாம நிதானமா இருந்ததனால தான் , இடத்த விக்காம , சொந்த ஆட்டோ ஓட்டி பிழைக்கிறேன்" என்றார். " எத்தனை பிள்ளைகள் ? " என்று கேட்டேன்.
" அய்ந்து பெண் பிள்ளைகள் " என்று சிரித்தார். " அய்ந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி என்று பழமொழி உண்டு. பரவாயில்லை நீங்க ஜெயிச்சிருக்கீங்க, உங்க பேர் என்ன ? " என்று கேட்டேன்.
# சிரித்துக்கொண்டே சொன்னார் " ராஜா ".
ஆட்டோ ஓட்டுனர் , " வயசு வேகத்துல பேசுறாரு. நான் நிதானமாக இருக்கிறதனால தான் வண்டி ஓடுது" என்றார். நானும் " ஆமாம். வயசு ஏற ஏற பக்குவம் தன்னால வரும்" என்றேன். " நீங்க எந்த ஸ்டேண்ட் ? " என்று கேட்டேன். " திருவான்மியூர் " என்றார்.
" சொந்த ஊர் எது ? " என்றேன் . நிறைய ஆட்டோ ஓட்டுனர்கள் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர் " மரக்காணம். ஆனா திருவான்மியூர்ல 40 வருசத்துக்கு முன்னாடி செட்டிலாயிட்டேன், அப்போ அது அவுட்டர், இப்போ மெயின் சிட்டி ஆயிடுச்சி" என்றார்.
அவராகவே, " அந்த தம்பி சொன்னது போல அவசரப்படாம நிதானமா இருந்ததனால தான் , இடத்த விக்காம , சொந்த ஆட்டோ ஓட்டி பிழைக்கிறேன்" என்றார். " எத்தனை பிள்ளைகள் ? " என்று கேட்டேன்.
" அய்ந்து பெண் பிள்ளைகள் " என்று சிரித்தார். " அய்ந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி என்று பழமொழி உண்டு. பரவாயில்லை நீங்க ஜெயிச்சிருக்கீங்க, உங்க பேர் என்ன ? " என்று கேட்டேன்.
# சிரித்துக்கொண்டே சொன்னார் " ராஜா ".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக