பிரபலமான இடுகைகள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

சோழமண்டல தளகர்த்தர் கோ.சி.மணி


தலைவர் கலைஞர் அவர்களால் " சோழ மண்டல தளகர்த்தர் " என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

மேக்கிரிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவராக பொதுவாழ்க்கையை துவங்கியவர். அதனாலேயே அடித்தட்டு மக
்களின் தேவைகளை உணர்ந்தவர். இதனால் தான், தலைவர் கலைஞரால் உள்ளாட்சித்துறை அமைச்சராக்கப்பட்ட நேரத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட பம்பரமாக சுழன்றார். காலையில் காஞ்சிபுரத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியதாக செய்தி வரும், மாலையில் கன்னியாக்குமரியில் கள ஆய்வு புகைப்படம் வரும். மறுநாள் காலை உதகையில் இருப்பார்.

ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் - ஆட்சி பொறுப்பில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர், சோழமண்டலத்திற்கு தளகர்த்தராக- கழகப்பொறுப்பில்...

இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்கி அழகு பார்த்தவர். ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் உடன் ஒரு படை வரும். எஸ்.கல்யாணசுந்தரம், குத்தாலம் கல்யாணம், திருவிடைமருதூர் ராமலிங்கம்,சாக்கோட்டை அன்பழகன், திருப்பனந்தாள் ரவிச்சந்திரன் என. இவரால் இன்று ஒவ்வொருவரும் தனி அடையாளத்தோடு திகழ்கிறார்கள். சிறந்த மாவட்ட செயலாளர்.

1996-2001 ஆட்சிக்காலத்தில், சனிக்கிழமை தோறும் அதிகாலை ஒரு கார் தனியாக கும்பகோணத்தில் தெருதெருவாக சுற்றும். காரில் அமைச்சர் கோசி.மணி இருப்பார், உடன் அதிகாரிகள் இருப்பார்கள். இந்த சாக்கடையை அகற்றி வாய்க்கால் அமையுங்கள் என்பார். இந்த சாலை அடுத்த வாரத்திற்குள் அகலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறக்கும். இப்படித்தான் யானைக்கால் வியாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டி.

ஒரு முறை ஒரு தோழர், " ஒரு டெண்டர் வருகிறது, நீங்கள் உதவிட வேண்டும்" எனக் கோரினார். " கோரிக்கையை ஏற்று பணியை நிறைவேற்றுவது மட்டுமே என் பொறுப்பு, டெண்டர் விடுவதெல்லாம் அதிகாரி வேலை. இனி நீ என் முகத்தில் விழிக்காதே " என வெடித்தார். ஆடுதுறை பேரூரை கடக்கிறவர்கள், அவர் வீட்டை பார்த்தவர்களுக்கு அவரது நேர்மை, எளிமை புரியும். நெருப்பு.

2011 பொதுத்தேர்தல் - கழகம் தோல்வி. " தமிழக மக்கள் ஓய்வு அளித்திருக்கிறார்கள் " என தலைவர் கலைஞர் பேட்டியளிக்கிறார். தலைவரை சந்திக்கிற அய்யா கோசி.மணி கேட்கிறார், " எப்படி நீங்கள் ஓய்வு என்று சொல்லலாம் ?, மக்கள் அறியாமல் வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்". " மணியே இவ்வளவு உணர்வோடு இருக்கும்போது, எனக்கும் அந்த உணர்வு தானாக வருகிறது" என்றார் தலைவர் கலைஞர். தலைவனுக்கான தலைமைத் தொண்டன்.

எம்.எல்.சி, அமைச்சர், மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் அன்போடு " மணியண்ணன் ".

# பின்பற்றப்பட வேண்டிய தொண்டர் - களவீரர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக