பிரபலமான இடுகைகள்

புதன், 31 அக்டோபர், 2012

நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?

பத்திரிக்கைகள் எல்லாம் இதே பரபரப்பு. ஜெயில்லலித்தை சந்திக்க, விஜயசாந்த்-க்கு அனுமதி கிடைக்குமா ?. ஒரு வேளை விஜயசாந்தின் மனுவை, ஜெ ஏற்றுக் கொண்டு சந்திக்க ஒப்புக்கொண்டால்....

விஜயசாந்த் ஜெ-வின் அலுவலகத்தில் நுழைகிறார்.....
ஜெ : நீர் தான் விஜயசாந்த் என்பவரோ ?
வி : ஆங்.... இதிலேயே சந்தேகமா ?
ஜெ : கேட்ட கேள்விக்கு பதில்...
வி : ம்ம்ம்ம். அதேதான்...
ஜெ : ஏது இவ்வளவு தூரம் ?
வி : கடையிலிருந்து பக்கம் தான்...
ஜெ : வந்த நோக்கம் என்னவோ ?
வி : உரிமை நாடி வந்துள்ளேன்...
ஜெ : என்ன உரிமை ?
வி : என் எம்.எல்.ஏக்களை மீட்க வந்தேன்...
ஜெ : எனக்கும் உரிமை உண்டு.

வி : உரிமை, உரிமை. எப்படி உரிமை, ஏது உரிமை?  சீட்டு கொடுத்தாயா ? நோட்டு கொடுத்தாயா ? எம் வேட்பாளர்களுக்கு குட்டுதான் வைத்தாயா ? அவ்வப்போது அடித்து தான் விளையாடினாயா ? கட்சிக்கு தலைவரா ? பொதுச் செயலாளரா ? உனக்கு என்ன உரிமை ?
ஜெ : பிரச்சாரம் செய்தேன், வாக்கு கேட்டேன், வேறென்ன செய்ய ?
வி : இதெல்லாம் என் டையலாக். நீங்கள் பேசக் கூடாது.
ஜெ : சரி. நீரே பேசும்...

வி : அக்காங்க் , இந்தா புள்ள இந்த தமிழ் நாட்டுல ஒரே சட்டசபை, அதில 234 எம்.எல்.ஏ , அதில என் கட்சிக்கு 29 பேர், அதில நாலு பேர் இப்போ உன் சைடு. இன்னும் இருக்குன்னு நீ சொல்ற. நான் சொல்றன், இல்லன்னு. இந்த நாட்டுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளால பிரச்சின வர்ரப்போ நான் தான் போராடனும். ஏன்னா, ராணுவம் என்னத் தான் கூப்பிடும். நம்ம நாட்டு ராணுவத்துல மூனு பிரிவு, அதுல இருக்குற சிப்பாய்ங்க 23லட்சத்து57 ஆயிரத்து 365 பேர். அதுல விமானப்படைல...
ஜெ : ( இடைமறித்து ) வெயிட்,வெயிட். இந்தப் புள்ளிவிவரம்லாம் என் கிட்ட வேண்டாம்.  ஓ.பி.எஸ் கிட்ட சொல்லு , அவர் தான் நிதி.
வி : விமானப்படைல 5 லட்சத்து 42ஆயிரத்து....
ஜெ : அய்யோ.... ( மயக்கமாகிறார் )
வி : (அங்கு கட்டிப் போடப்பட்டிருக்கிற நான்கு பேரின் கட்டுகளை அவிழ்த்து ) ஓடி வாங்க ஓடிடலாம்....

( பிண்ணனியில் " அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே ..." பாடல் ஓடுகிறது )

படத்திற்கும், கதைக்கும் தொடர்பில்லை. கதையில் வரும் சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே.

# சுழி குற்றப் பிரிவுலிருந்து வர்றீங்களா

5 கருத்துகள்: