பிரபலமான இடுகைகள்

வியாழன், 29 நவம்பர், 2012

எம் இனிய பாரதிராஜா அவர்களே

எம் இனிய பாரதிராஜா அவர்களே, 

உங்கள் பாசத்திற்குரிய ரசிகன் பேசுகிறேன்.

முதல் மரியாதை பார்த்து உங்கள் மீது அதிக மரியாதை கொண்டவன், கிராமத்தை கிராமமாக காட்டியதற்காக, நடிகர் திலகத்தின் இன்னொரு பரிமாணத்தை காட்டியதற்காக.

பல இயல்பான இயக்குனர்களை தமிழ் திரைக்கு, வாரி வழங்கிய குரு நீங்கள். வாழைக் கன்றுகளாக உங்களை ஒட்டி வளர்ந்து, நல்ல படங்களை வழங்கி உங்களுக்கு பேர் வாங்கி தந்து வருகிறார்கள்.

புராண படங்களில் சிக்கித் தவித்த தமிழ் திரையுலகை, சமூகத் தளத்திற்கு இழுத்து வந்து புரட்சிகர
சிந்தனைகளை மலரச் செய்ய, திராவிட இயக்கம் ஆற்றியது பெரும் பணி.

அதே போல பாலச்சந்தர் போன்றோரின் பராமரிப்பில் மேடை நாடகங்களின் ஜெராக்ஸ் காப்பியாக வெளிவந்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, கிராமத்து வயல்வெளிகளில் அட்மிட் செய்து இயற்கை ஆக்சிஜன் ஏற்றியது நீங்கள் தான்.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், உங்களுக்கு வயதானது போல், உங்களுக்குள் இருக்கும் கலைஞனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் தான் சமீப காலமாக உங்கள் படங்கள் தடுமாற துவங்கிவிட்டன, உங்களை போல.

இளையத் தலைமுறைக்கு ஈடுகொடுத்து, உங்கள் படமும் ஓட வேண்டுமென ஆசைப்படுவது நியாயமே. ஆனால் அதற்காக மன்சூர் அலிகான் போல கிறுக்குப் பேட்டி கொடுத்தால், அந்தப் பரபரப்பில் படம் ஓடிவிடும் என நினைப்பது என்ன நியாயம் ?

அல்லி நகரத்து, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, புகழ் பெற்ற இயக்குனர் பாரதிராஜாவாக வந்தப் பாதையை திரும்பிப் பாருங்கள். திராவிட இயக்கம் செப்பனிட்டப் பாதையில் தான் உங்கள் திரைத் தேர் பவனி வருகிறது.

வைகோ மீது ஏதும் தனிப்பட்ட கோபம் என்றால், திராவிட இயக்கத்தின் மீது பாய்வது ஏன் ?

திராவிட இயக்கம் தான், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதே. தமிழனா மாறுங்கன்னு அறிவுரை சொல்ல வந்துட்டிங்க...
திராவிடனா இருந்து நாங்க தமிழுக்கு செய்வதை, நீங்க தமிழனா இருந்தே செய்யுங்களேன். ஒன்னும் செயலில் முடியாது உங்களால்.... வாய்ச் சொல்வீரர்.

பார்ப்பன எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துறதா சொல்றீங்க... மாலை நேரத்தில், கிளப் நண்பர்களிடத்தில், திரை உலகில் பார்ப்பன ஆதிக்கம்னு புலம்பியது யார் ? பாரதிராஜா தானே.

ஆனந்த விகடனில் பேட்டி ஹைலைட்டா வரனும், உங்கள் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு கவரேஜ் கிடைக்கனும்னு திடீர்னு பிராமண ஆதரவு அவதாரமா ?

ஏற்கனவே கலைஞர் மீது பாய்ந்ததும், பிறகு காலில் விழுந்ததும், ரஜினியை குதறியதையும் பிறகு கொஞ்சியதையும் நாடு கண்டது தானே.

நீங்கள் நல்ல இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் என்பதை நாடறியும், "கல்லுக்குள் ஈரம்" பார்த்தோமே !

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை சிறப்பா எடுங்க. பார்த்து, நல்லாயிருந்தா பாராட்டுறோம். வேலையப் பாருங்க...

" இதுவரை தென்றலின் விரல் பிடித்து வலம் வந்த பாரதிராஜா, புயலின் கரம் பிடித்து வருகிறேன்" , அப்படின்னு கொடிப் பறக்குது படத்துக்கு நீங்கள் பேசிய முன்னோட்ட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

# இப்போ எந்தக் கைய பிடிச்சிருக்கீங்க.....?

1 கருத்து: