பிரபலமான இடுகைகள்

திங்கள், 10 டிசம்பர், 2012

அண்ணா அறிவாலயம் திறப்பு விழா




1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி. வழக்கமாக முப்பெரும் விழா கொண்டாடப் படுகிற நாள். அந்த ஆண்டு “ அண்ணா அறிவாலயம் “ திறக்கப் பட்ட மகத்தான நாள்.

சட்டமன்ற வளாகத்தில் இருந்த கழகத்திற்கான சட்டமன்ற அலுவலகத்தை, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக காலி செயத போது, எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு தான் அண்ணா அறிவாலயம்.

கழகத்திற்கென்று சிறப்பானதொரு அலுவலகம் அமைப்பது என முடிவெடுக்கிறார்கள் தலைவர் கலைஞரும், பேராசிரியர் அவர்களும். அதனையும் காண்போர் வியக்கும் வண்ணம் சென்னையின்
மத்தியில் அமைக்க திட்டமிட்டனர்.

கழக நிகழ்ச்சிகளில், தலைவர் கலைஞர் கலந்துக் கொண்டால், அதற்கு கழகத் தோழர்களிடம் நிதி வசூலிக்கப்படும். அதை கேலியும் கிண்டலும் செய்தனர் எதிர்கட்சியினர். அனால் அந்த நிதி அண்ணா அறிவாலயத்திற்காக திரட்டப்பட்டது.

தலைவர் இதற்காக ஓய்வெடுக்காமல் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்றார். கழக உடன்பிறப்புகளும் ஒவ்வொரு ரூபாயாக நிதி திரட்டி, தலைமைக் கழகத்திற்கு வழங்கினர்.

அண்ணா அறிவாலயத்தின் வடிவமைப்பை தலைவர் கலைஞரே உருவாக்கினார். தேர்ந்த பொறியாளர்களுக்குரிய நேர்த்தியோடு, பண்டை தமிழ் மன்னர்களின் நுணுக்கங்களோடு அண்ணா அறிவாலயத்தை எழிலாக எழுப்பினார்.

அந்த அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழா. கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசியர் பெருந்தகை தலைமையில் விழா. கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் மரியாதைக்குரிய ராணி அம்மையார் சிறப்பு விருந்தினர்.

தலைவர் கலைஞர் அவர்கள் பெருமிதத்தோடும், நெகிழ்ச்சியோடும் அண்ணா அறிவாலயத்தை திறந்து வைத்தார்.

அதிக நிதி திரட்டிக் கொடுத்த அன்றைய சென்னை மாவட்ட கழக செயலாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு அன்றைய எங்களது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் கழக செயலாளர் எஸ்.கே.வடிவேலு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கோடி கழகத் தொண்டர்களின் கனவு நனவாகியது. உற்சாக வெள்ளத்தில் கலைஞரின் உடன் பிறப்புகள் ஊர் திரும்பினர்.

ஆனால் நள்ளிரவில் கழகத் தோழர்களின் பயணம் தடைப்பட்டது....

( தொடரும்.... )
 

1 கருத்து: