மோடியின் கனவையும், அம்மாவின் கனவையும்
ஆய்வு செய்து கொண்டிருந்தோம். தொடர்வோம் தற்போது...
பெரிய மாநிலங்களை பற்றி பார்த்தோம். அடுத்த
நிலையிலுள்ள 20-30 தொகுதிகளை கொண்ட மாநிலங்கள் மத்தியப்பிரதேசம் 29, கர்நாடகா 28,
குஜராத் 26, ராஜஸ்தான் 25, ஒரிசா 21, கேரளா 20.
மத்தியபிரதேசம் மாநிலம் தொடர்ந்து
பா.ஜ.க-வின் ஆட்சியின் கீழ் உள்ளது. ஆனால் கடந்த எம்.பி தேர்தலில் காங்கிரஸ் 12
இடங்களை பிடித்துள்ளது. பா.ஜ.க 16 இடங்களை பிடித்தது.
கர்நாடகாவில் பா.ஜ.க வசம் 19, காங் 6
எம்.பி-களும் வைத்துள்ளன. ஆனால் தற்போது பா.ஜ.க-வை எடியூரப்பா குடைந்துக்
கொண்டிருக்கிற நிலையில், வரும் எம்.பி தேர்தலில் நிலமை சிக்கல் தான் பா.ஜ.க-விற்கு.
குஜராத் 1995-லிருந்தே பா.ஜ.க கைப்பிடியில்
உள்ளது. ஆனால் கடந்த எம்.பி தேர்தலில் மக்கள் பா.ஜ.க-விற்கு 15 இடங்களையும், காங்கிரஸிற்கு
11 இடங்களையும் அளித்துள்ளனர். வரும் தேர்தலிலும் இதுவே தொடரும் நிலை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு. 20 எம்.பிக்கள்
காங்கிரஸிடமும், 4 எம்.பிக்கள் பா.ஜ.கவிடமும் உள்ளனர். ஆனால் வரும் தேர்தலில் நிலை
சற்று மாறலாம்.
ஒரிசாவில் பா.ஜ.க கூட்டணி கட்சியான பிஜூஜனதாதளத்தின்
ஆட்சி. நவீன் பட்நாயக் முதல்வர். அவரிடம் 14 எம்.பிக்களும், காங்கிரஸிடம் 6
எம்.பிக்களும் உள்ளனர். காங்கிரஸிற்கு சரியான மாநில தலைமை இல்லாததால் நவீன் கையே
ஓங்கியிருக்கும்.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 16 எம்.பிக்களும்,
கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 4 எம்.பிக்களும் உள்ளனர்.
அடுத்த நிலையிலுள்ள மாநிலங்களான அசாம் 14,
ஜார்கண்ட் 14, பஞ்சாப் 13, சத்திஸ்கர் 11, ஹரியானா 10, இவற்றில் காங்கிரஸும்,
பா.ஜ.க-வும் கிட்ட்தட்ட சம அளவில் எம்.பிக்களை பெற்றுள்ளன. அதே நிலையே தொடரும்.
இதுவரை பார்த்த மாநிலங்களில் வெற்றி
பெறுகிற எம்.பிக்கள் எண்ணிக்கையை பொறுத்தே ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு.
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர மீதி
மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க நினைத்தே பார்க்க வேண்டியதில்லை. கர்நாடகாவிலும்
கடந்த தேர்தல் எண்ணிக்கை வராது.
பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும்
வாய்ப்பு இல்லை. அங்கே வெற்றி பெறக் கூடிய மாயாவதியும், முலாயமும் ஆதரிக்கப்
போவதில்லை.
மேற்குவங்கத்திலும் பா.ஜ.க கதைக்காகப்
போவதில்லை.
கூட்டணியில் இருக்கிற பிகார் நிதிஷும்,
ஒரிசா நவீனும் மோடியை ஆதரிக்க மாட்டார்கள்.
ராமபிரானே வந்து கணை தொடுத்து ஆட்சிக்
கனியை பறித்துக் கொடுத்தால் மோடி பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது.
இதே கதை தான் அம்மா கதையும்.
காங்கிரஸிற்கு ஆந்திராவில் பெரிய இழப்பு
இருக்கும். மற்ற மாநிலங்களில் சில இடங்களில் இழப்பும், சில இடங்களில் சிறு வரவும்
இருக்கும்.
முலாயம், மாயாவதி, மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி,
நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், பவார் ஆகியோர் தான் 2014-ல் மத்திய அரசை யார்
ஆளுவது என்று முடிவு செய்பவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மோடியையும் ஏற்றுக்
கொள்ளமாட்டார்கள், ஜெயலலிதாவையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இருவரும் 2014 வரை
கனவில் மகிழ்ச்சியாக திளைத்திருக்கட்டும்.
மத்திய அரசு அமைய இன்னொருவரின் கண்ணசைவும் தேவை.
அவர் தான் தலைவர் கலைஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக