பிரபலமான இடுகைகள்

திங்கள், 20 மே, 2013

இந்த நெருப்பு விடாது....

அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட்டு வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை“ நீக்கிய ஜெயலலிதா, எங்கள் மக்களின் வயிற்றெரிச்சலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

12.05.2013 மாலை செந்துறை ஒன்றியம், மருங்கூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஒரு குடிசை வீடு எரிந்து விட்டது, முற்றிலுமாக. ஒரு சிறு பொருளும் தப்பவில்லை, ரேசன் அட்டையிலிருந்து பிள்ளைகளின் மாற்றுசான்றிதழ், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு தானியங்கள் வரை. 

தீயை அணைக்க முயன்றதில் வீட்டுக்காரரின் கையில் தீக்காயம். குடும்பத்தாருக்கு மனக்காயம். இவரது குடும்பம் சகஜ நிலைக்கு திரும்ப ஆண்டுகள் பல ஆகும்.

இன்று நேரில் சென்று, உதவி செய்து ஆறுதல் கூறி வந்தோம். உடன் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர் கனிமொழி, பொன்னுசாமி, பாஸ்கர், ஜெயராமன், வாசு.

“கலைஞர் வீடு வழங்கும் திட்டம்“ நீக்கப்படாமல் தொடர்ந்திருந்தால் இந்த வீடு, கான்கிரீட்டு வீடாக மாறியிருக்கும். எங்கள் பகுதியில், இன்னும் பல வீடுகள் குடிசை வீடுகளாகவே இருக்கின்றன.

கோடை முடியும் வரை அனைவரும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும். 


ஜெயலலிதாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு  பலியாவது பொதுமக்களே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக