பிரபலமான இடுகைகள்

வியாழன், 2 மே, 2013

மத்திய அரசு - பலி துவங்கியிருக்கிறது....



நாடாளுமன்ற சபாநாயகர் மீராக்குமாரி, சாக்கோவை நீக்க முடியாது என எதிர்கட்சி எம்.பிக்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நிராகரித்தாலும் கோரிக்கையின் வீரியம் அப்படியே இருக்கிறது.

பாராளுமன்றக் கூட்டு குழுவின் அறிக்கை திட்டமிட்டு "லீக்" செய்யப்பட்டதும், பிரதமரை அழைத்து விசாரிக்கத் தேவையில்லை என்று அறிக்கை தயாரித்திருப்பதும், நேரில் வரத் தயாராக இருந்தும் ஆ.ராசா அவர்களை அழைத்து விசாரிக்க மறுப்பதும் என சாக்கோவின் நடவடிக்கை எதிர்கட்சி உறுப்பினர்களை வெகுண்டெழ செய்துள்ளது.

                                           



சாக்கோவுக்கு எதிராக மனு அளித்துள்ள கட்சிகள் அரசியல் ரீதியாக ஓரணியில் நிற்க முடியாதவர்கள். ஆனால் சாக்கோவின் மூலமான காங்கிரஸின் செயல்பாடு இவர்களை ஒரு நிலைப்பாட்டில் செயல்பட வைத்துள்ளது.

பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், அய்க்கிய ஜனதாதளம், திமுக, அதிமுக, பிஜூஜனதாதளம், திரிணமுல் காங்கிரஸ் என எதிரும் புதிருமான கட்சிகள் ஒன்றாய் சேர்ந்து சாக்கோவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.

எந்த அட்டர்னி ஜெனரல் வாகனவதியின் சாட்சியத்தை ஜெபிசியின் அறிக்கைக்கு அடிப்படையாக சாக்கோ கொண்டிருக்கிறாரோ, அந்த வாகனவதி நிலக்கரி பிரச்சினையில் காங்கிரசால் பலிக்கொடுக்கப் பட்டிருக்கிறார் தற்போது.

சாக்கோவோ, மீராக்குமாரியோ, வாகனவதியோ எல்லாம் மத்திய அரசின், காங்கிரஸின் கைப்பாவைகளே, காங்கிரஸின் குரலை ஒலிப்பவர்களே. இவர்களே தான் பலியாடுகளும்...

# பலி துவங்கியிருக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக