பிரபலமான இடுகைகள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,5 (20.08.2013)

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-4, 5 (20.08.2013)


பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துகளை கூறினார்கள். பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில மேம்பாட்டு பணிகளுக்கு உடனடியாக தீர்வு அறிவித்தேன். 

photo.JPG


நாகல்குழி ஊராட்சி: 
அனைவரும் ஒருமித்து கேட்ட முதல் கோரிக்கை, துவக்கப்பள்ளி சாலை அருகே இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சுற்றுசுவர். ஒரு தெருவிற்கு குடிநீர் வசதி இல்லாததால் புதிதாக குழாய் அமைத்து தர கோரினர். ஒரு தெருவிற்கு சிமெண்ட் சாலை.

photo.JPGphoto.JPG

வீராக்கன் ஊராட்சி:
இந்த ஊரில் 17 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 6 மனுக்கள் தனிநபர் பிரச்சினைகள், முதியோர் உதவித் தொகை போன்று. மீதி 11 மனுக்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து. 11 மனுக்களில் ஒரு சில பணிகள் கோரப்பட்டு இருந்தாலும் ஒன்பது மனுக்களில் முதல் கோரிக்கையாக ஒரே கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அந்த ஒரே கோரிக்கை, அந்த ஊருக்கு ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்பது. எனவே அதனை ஏற்று அறிவித்தேன்.

பொதுப் பிரச்சினையாக ஒரு அம்சம் அனைவராலும் வலியுறுத்தப்பட்டது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என. தமிழக அரசால் வறட்சி நிவாரணம் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய விவசாயமான முந்திரிக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.

என்னுடைய பதிவை தொடர்பவர்களுக்கு தெரியும், ஒரு முந்திரி விவசாயி கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பதிவு செய்திருந்தேன். அந்த செய்தி தினத்தந்தி பத்திரிக்கையிலும் வந்திருந்தது. அப்போது அதனை திசைதிருப்ப முந்திரிக்கு நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அவசர அவசரமாக கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

இரண்டு வருடமாக மழை குறைவால் நிலத்தடி நீர்மட்டம் இறங்கியுள்ள நிலையில் முந்திரி விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போயுள்ளது. விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.

அரசு கவனம் செலுத்த வேண்டும்....


Photo: மக்கள் சந்திப்பு - 4, 5, 6, 7

20.08.2013 செவ்வாய் கிழமை 
மாலை 4.00 மணி நாகல்குழி ஊராட்சி
மாலை 5.00 மணி வீராக்கன் ஊராட்சி

21.08.2013 புதன் கிழமை
மாலை 4.00 மணி பொன்பரப்பி ஊராட்சி
மாலை 5.00 மணி சிறுகளத்தூர் ஊராட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக