பிரபலமான இடுகைகள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

மக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)

பொன்பரப்பி, சிறுகளத்தூர் ஊராட்சி.

பொன்பரப்பி என்றதும் பலருக்கும் பளிச் என்று தனித்தமிழ்நாடு போராளிகள் நினைவுக்கு வருவார்கள். தோழர் தமிழரசன் காவல்துறை சதியால் வீழ்த்தபட்ட ஊர். 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது, இது நீண்ட நாள் கோரிக்கை. அரசு மேல்நிலைப்பள்ளியில் 70 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கால்நடை துறை கிளை மருந்தகம், மருந்தகமாக தரம் உயர்த்தப்பட்டு கட்டிடம் வழங்கப்பட்டது.

பொன்பரப்பி-துளார், பொன்பரப்பி-உஞ்சினி சாலைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பல்வேறு தெரு சாலைகள் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனாலும் இன்னும் பல சாலைகள் மேம்பாடு செய்ய வேண்டிய பெரிய ஊர் ஆகும்.

photo.JPGphoto.JPG

தற்போது மக்கள் சந்திப்பில் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அங்கேயே பரிசீலனை செய்து பரவலாக ஊரின் எல்லா பகுதிக்கும் பிரதிநிதித்துவமாக பணிகளை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

1.குடிகாடு அய்யனார் குளத்தெரு -தார் சாலை
2.வினாயகர் கோவில் தெரு -தார் சாலை
3.ஆதிதிராவிடர் காலனி -சிமெண்ட்சாலை
4.அண்ணா நகர் -சிமெண்ட்சாலை
5.சந்தைக்கு கட்டிட வசதி

சிறுகளத்தூர் ஊராட்சி


photo.JPG


ஊராட்சியின் சமுதாயக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலானோர் கோரிக்கைப்படி கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நூலகத்திற்கு கட்டிட வசதி, இயங்கிக் கொண்டிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், இரண்டு சாலைகள் மேம்பாடு திட்டங்களை அறிவித்தேன்.

photo.JPGphoto.JPG

இங்கும் முந்திரி விவசாயிகளின் பிரச்சினை முக்கியமாக எழுப்பப்பட்டது. முந்திரிக்கு வறட்சி நிவாரணம், மாவட்ட நிர்வாகத்தில் கோரி, ஏற்கப்படாவிட்டால் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்பதே மக்கள் குரல்.

# தயார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக