பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 அக்டோபர், 2013

எதிர்கட்சிக்காரன் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு....

பட்டசபை

ஆளுங்கட்சி உறுப்பினர் கவுண்டமணி பேச எழுகிறார். அமைச்சர்கள் வரிசையில் உட்கார்ந்திருக்கும் கார்த்திக் இவரை பார்த்து சிரிக்கிறார். அவரைப் பார்த்து கவுண்டமணி கையை ஓங்குகிறார்.

 “பாட்டவைத் தலைவர் அவர்களே, நான் கேட்க விரும்புவது ஒன்னு தான். ஆட்சி வந்து மூனு வருஷம் ஆச்சு. ரெண்டாவது வருஷமே என்னை மந்திரியாக்கறதா பேச்சு. ஆனா இன்னும் ஆக்கல.

இந்த டகால்டி தலையன் செந்தில்லாம் முதல்வர். இது வரைக்கும் மந்திரிசபைய 10 தடவ மாத்தியாச்சி. ஆனா எனக்கு இன்னும் வாய்ப்புக் கொடுக்கல. எனக்கு என்ன கொறச்சல்.

ஊருக்குள்ள இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவ பத்தி கேட்டுப் பாருங்க. அண்ணன் நல்லவரு, வல்லவருன்னு சொல்வாங்க. நல்லா சைக்கிள்லாம் பெண்டு எடுப்பாரு, ஆக்குவாருன்னு பேசிப்பாங்க.

பட்டசபைல எதிர்கட்சிக்காரன் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு நான் தான் பேசிக்கிட்டுருக்கேன் மேன். வேற எவன் பேசறான். இந்தக் கார்த்திக்குலாம் பேச வருமா, சமயத்தில அவன் என்ன பேசறான்னு அவனுக்கே புரியாது. அவன்லாம் மந்திரி.

இந்த டோமர் வாயன் சந்தானம். வெறும் பன்ச் டயலாக்கா பேசுவான். ஆனா ஒன்னாவது அர்த்தம் இருக்குமா, ஆனா அத கேட்டுகிட்டு அவன் மந்திரியாக்கிட்டான் செந்திலு.

சரளாவ மந்திரின்னா ஒத்துக்கலாம். லாங்-ஜம்பல எதிர்கட்சிகாரன் உதைக்க ஓகே. வாய தொறந்தா எதிர்கட்சிகாரன் மேல கூவம் பாயும்.

இவன பாரு, சத்தியராஜூ, பொறக்கும் போதே நடிக்கன்னு பொறந்தவன். டைப்டைப்பா மூஞ்ச வச்சிக்கிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஆக்சன் குடுப்பான் . இவனுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்.

“அவ்வ்வ்வ்னு சவுண்ட்டு உட்டே அவன்கூட மந்திரியாயிட்டான்யா. அவன் கெட்ட கேடு எஜுகேஷன். இவன் எதிர்கட்சிகாரன திட்டியிருக்கானா ? சந்துக்கு சந்து அடி வாங்கிகிட்டு வருவான். இல்லன்னா எதிர்கட்சிகாரன் சைக்கிள்ளேயே ஏறி போயிடுறான்

அந்த பாளுனர் பாச்சையா வேற போண்டா சாப்பிட்டுகிட்டு எனக்காக காத்துகிட்டு இருப்பாருய்யா. அவரு வேற ஊர் ஊரா கிளம்பிட்டாருன்னா, புடிக்க முடியாது. சீக்கிரம் மந்திரியா ஆக்குங்கய்யா.

ஏய் மேன். இதான் லிமிட். இனிமே எதிர்கட்சிகாரன் திட்டமாட்டேன். உங்களையே திட்டுவேன். என்ன மந்திரியாக்கற வரை திட்டுவேன்.

மேசையில் இருக்கும் புத்தகங்களை எடுத்து செந்திலை அடிக்கிறார் கவுண்டமணி. பாய்ந்து பிடிக்கிறார். செந்தில் ஓடுகிறார்.

 “ஏய் செந்தில் நான் ஒன்ன என்ன கேட்டேன், மந்திரி வேணும்னு கேட்டேன்“ கவுண்டமணி புலம்பி கொண்டே கண் விழிக்கிறார். பக்கத்தில் செந்தில் சட்டை கிழிந்து உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறார்.


# ஏன் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக