பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சீமப்பசுவும், நாட்டுப்பசுவும்....

தொழிலில் நொடிச்சுப் போனார் ராமசாமி. உதவ முன் வந்தார் அப்பா கந்தசாமி. தன் வீட்டுக்கு அழைச்சார். "பின்புறம் கட்டியிருக்கும் இரண்டு மாட்டுல ஒன்ன பிடிச்சுக்கிட்டு போ. வாழ்க்கைய திரும்ப துவங்கு, ஆறு மாசம் கழிச்சு வா"ன்னுட்டார்.

ஒன்று சீமைப்பசு, மற்றொன்று நாட்டு மாடு. எதப் புடிச்சிக்கிட்டு போறதுன்னு ராமசாமிக்கு குழப்பம். நாளைக்கு வந்து புடிச்சிக்கிறேன்னு வந்துட்டார். வந்து நண்பர்கள்கிட்ட ஆலோசன கேட்டார்.

                            

நண்பர் பழனிசாமி சொன்னார்,"சீமப்பசு தான் ஒஸ்தி. எப்புடி மொழு மொழுன்னு இருக்கு பாரு. வேளைக்கு முப்பது லிட்டர் கறக்கும். நாட்டுப்பசுவ பாரு, வத்தலும் தொத்தலுமா. அது நாளைக்கே பத்து லிட்டர் தான் கறக்கும்"

இன்னொரு நண்பர் சிவலிங்கம்,"உண்மை தான். நாட்டுப்பசு கம்மியா தான் கறக்கும். ஆனா செலவு வைக்காது. சீமப்பசுவ வச்சி காப்பாத்தறது பால் கறக்குற காச தாண்டிடும்" அப்படின்னாரு.

பழனிசாமி ஒரு பண்ணையக் காட்டினாரு. "பாரு, பண்ணையே எப்புடி இருக்குன்னு. பிரம்மாதமா. நீ இது போல ஆகனும்னா சீமப்பசுவ புடிச்சிக்கிட்டு வந்துடு". ராமசாமியும் குஷி ஆயிட்டாரு.

ராமசாமி சீமப்பசுவ புடிச்சிக்கிட்டு வந்து வீட்டுல கட்டுனாரு. மறுநாள் பால் கறந்தாரு. பழனிசாமி சொன்ன அளவு கறக்கல. இருந்தாலும் நாளைக்கு கறக்கும்னு இருந்தாரு. மறுநாள் பகல்ல சீமப்பசு கத்திகிட்டே இருந்துது.

பழனிசாமிய கூப்பிட்டு கேட்டாரு, என்ன செய்யறதுன்னு. "அது வெயில் தாங்காது. ஒரு கொட்டா போடு"ன்னாரு. போட்டார். சத்தம் நிக்கல. ஒரு காத்தாடிய மாட்டி விடுன்னாரு. மாட்டி விட்டாரு. தெனம் மூனு வேள குளுப்பாட்டுன்னாரு. பட்டியல் நீண்டு போச்சு.

ராமசாமி 24 மணி நேரமும் மாட்டோடவே இருந்தாரு. டவுனுக்கு போய் தீவனம் வாங்க வேண்டி ஆயிடுச்சி. கறந்த பால விட செலவு அதிகமாயிடுச்சி. கையில இருந்த காசெல்லாம் கரஞ்சி, கடன் வாங்க ஆரம்பிச்சிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

மறுபடியும் சிவலிங்கத்த பாத்தாரு ராமசாமி. சிவலிங்கம்,"நான் அப்பவே சொன்னன்ல, நமக்கு நாட்டு மாடு தான் சரின்னு. நம்ம நிலமைக்கு ஏத்தது. நம்ம வயல்லேயே கட்டிப் போடலாம். புல்ல தின்னுக்கும். செலவு இல்ல."அப்புடின்னாரு.

அப்பா ஆறு மாசம் சொல்லியிருக்காரு. அது வரைக்கும் சீமப்பசு ஒதைக்கறதெல்லாம் வாங்கிக்க வேண்டியது தான்.

# ஏற்காடோ, வயக்காடோ வாழ்க்க ஒன்னு தான.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக