பிரபலமான இடுகைகள்

புதன், 26 பிப்ரவரி, 2014

இந்தியாவையே அதிரடிக்கும் தேர்தல் அறிக்கை...

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை - பிற்சேர்க்கை...

                            

1. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் சீர் கெட்டிருப்பதால், அதனை சீராக்க தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் செய்த, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியாவின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, "அதிரடி"யாக நேர் செய்யப்படும்.

2. தமிழகத்தின் மின் வெட்டை 2 மணி நேரத்திலிருந்து, 4-14 மணி நேரமாக போராடி உயர்த்திய, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம்.விஸ்வநாதன் இந்திய மின்சாரத் துறை அமைச்சராக பதவியமர்த்தமப்பட்டு மின்சாரம் "சரி" செய்யப்படும்.

3. ராஜஸ்தான், குஜராத், உ.பி, ம.பி போன்ற வடமாநிலங்களில், குடிநீர் பஞ்சம் நிலவுவதாக வருத்தத்திற்குரிய செய்திகள் வருகின்றன. எனவே மலிவு விலையில் குடிநீர் விற்க போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்திய போக்குவரத்துக்கு மாற்றப்படுவார்.

4. அமைய இருக்கிற மக்களவையை செயல்பட விடாமல் தடுக்க, மோடியும், ராகுலும் தனித் தனியாக திட்டமிடுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு "உரிய முறையில்" பதிலளிக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார்.

5. இந்திய அளவில் இடைத் தேர்தல்கள் வருவது தவிர்க்க இயலாது. அதனை கையாளுவதற்கென்று ஒரு துறை எனது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு, தமிழக அமைச்சர் பா.வளர்மதி படையமர்த்தப்படுவார்.

6. இந்தியா முழுவதும் இருக்கும் மாடுகள் "அம்மா" என்று தான் கதறுகின்றனவா என்று கண்டறியவும், ஒரு மாநிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடுத்த மாநிலத்தில் இலவசமாக கொடுக்கவும், கால்நடைத் துறை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மந்திரி சின்னையா நியமிக்கப்படுவார்.

7. பாராளுமன்றத்தில் புதிய வரலாறுகளை சொந்தமாகக் கூறவும், கடந்த கால ஆட்சி மீது குறை சொல்லியே எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பதற்காகவும் உள்துறை அமைச்சராக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நியமிக்கப்படுவார்.

8. இந்தியாவில் உள்ள எல்லா மாநகராட்சிகளையும் இணைத்து, அந்த கூட்டமைப்பின் மேயராக சைதை துரைசாமி நியமிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் அம்மா உணவகம், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு, அந்த மாநகரங்களும் "சென்னை"யை போலவே 'சிறப்பாக' பராமரிக்கப்படும்.

9. விதி 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடும் போது, அதனை வரவேற்று பேசுவதற்காகவே, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த செ.கு.தமிழரசன், சரத்குமார், தனியரசு ஆகியோரோடு தா.பாண்டியன், பண்ருட்டி, வேல்முருகன் ஆகியோர் நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவார்கள்.

10. தமிழக சட்டசபை போல, இந்திய பாராளுமன்றம் சுமுகமாக நடக்க வழிவகை செய்யப்படும். பேசினால் மைக் கட் செய்யவும், போராடினால் தூக்கி வெளியே போடவும், பேட்டி கொடுத்தால் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரவும் தமிழக சபாநாயகர் தனபால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து சபாநாயகராக செயல்படுவார்.

# கும்தலக்கா கும்மாவா அம்மான்னா சும்மாவா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக