பிரபலமான இடுகைகள்

புதன், 30 ஏப்ரல், 2014

தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்....

இந்திய ஜனநாயகத் திருவிழாவின், தமிழக வகையறாவின் மண்டகப்படி முடிவுக்கு வந்ததுள்ளது...

ஊர் திருவிழா என்றால், ஒரு வாரம் கொண்டாடப்படும். கோவில் சார்ந்த நிகழ்வுகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருவிழாவுக்கான திடீர் கடைகளில் மக்கள் முண்டியடிப்பார்கள். ஒரு சந்தை நிகழ்வாக, பணப்பரிமாற்றம் இருக்கும்.

இங்கும் அது தான் தேர்தலில். தேர்தலுக்கான அடிப்படைப் பணி கட்சிகளின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதில் துவங்கும். நன்கு பிரபலமான சின்னமாக இருந்தாலும், அதிக இடங்களில் வரையப்படும். காரணம், அதுவே ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் என்பதால்.

                   

என்ன பிரமையை ஏற்படுத்திவிடும் என சிலர் நினைக்கலாம். புனைவுச் செய்திகளை வெளியிட்டு, பத்திரிக்கைகள் குறிப்பிட்ட சதவீத படித்தோர் மத்தியில் ஏற்படுத்த முயற்சிப்பதைப் போல், சுவர் விளமபரம் பார்த்து கட்சிகளின் வலிமையை முடிவு செய்யும் சிலர் உள்ளனர்.

அரசியல் கட்சி நிர்வாகிகளிலேயே சிலர், அந்த ஊரில் அந்த சின்னம் மட்டும் தான் இருக்கு, வேற கட்சிக்கு வேலை இல்ல போல என சொல்பவர்கள் உண்டு. இதனால் சுவர் பிடிப்பதிலேயே அடிதடி துவங்கிவிடும். இதனால் சில இடங்களில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, சுவரில் இடம் பிடிக்கத் துவங்கி விடுவர்.

வீட்டு உரிமையாளர் ஒப்புதல் பெற்றே, விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் நடைமுறை இருந்தாலும், மிரட்டி விளம்பரம் செய்யும் கட்சிகளும் உண்டு. அடிதடி நடந்து காவல்துறை வரை சென்று வழக்காகும் நிலை இன்னும் இருக்கிறது. "இரண்டு கட்சியினரும் தெரிந்தவர்கள், ரெண்டு பேரும் படம் போட்டுக்குங்க" என்ற நிலையும் உண்டு.


                   

இது ஓவியர்களுக்கு ஒரு முக்கியத் தொழிலாக இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது ஓவியர்கள் குறைந்து விட்டதால், சின்னம் போடும் பணி முடிக்க மிகச் சிரமமாகி விடுகிறது. புதிய சின்னம் பெறுகிறவர்களுக்கு, குறுகிய நாட்களில் சுவர் விளம்பரம் முடிப்பது பெரும் பணி.

எப்படியும் சுவர் விளம்பரத்திற்கு, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுடையதையும் கூட்டிக் கணக்கிட்டால், இரண்டு கோடியை தாண்டும். பதினைந்து நாட்கள் கூத்திற்கு, இந்த செலவு கூடுதல் தானே ?

கடந்தத் தேர்தலில் இருந்து, நகராட்சிப் பகுதிகளில், தேர்தல் கமிஷனால் சுவர் விளம்பரம் தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுவர்கள் “பளீச்” எனக் காட்சியளிக்கிறது. சுவர் விளம்பரம் இல்லாததால், நகராட்சியில் உள்ளோர் வாக்களிக்கத் தடுமாறவில்லை.

எனவே இதனை கிராமங்களுக்கும் அமல்படுத்தி, சுவர் விளம்பரத்தை தடை செய்தால், வீட்டு சுவர்கள் கறை படாமல் தப்பிக்கும். சண்டை, வருத்தம், வழக்குகள் வராது. வெட்டிச் செலவு குறையும். தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்.

# தேர்தல் ஆணையப் பார்வைக்கு....

திங்கள், 28 ஏப்ரல், 2014

நம்ம சின்னம், என்ன சின்னம் ?

வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கடந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.

“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா?”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.

# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” !


                             Photo: வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கட்ந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.

“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா?”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.

# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” !

புதன், 23 ஏப்ரல், 2014

ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன்...

ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை வேட்பாளர் அண்ணன் திருமா சந்திக்கும் நிகழ்ச்சி.

முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தனர். முதல் வரிசையில் ஒருவர் தனித்து தெரிந்தார். பேசுவோரின் பேச்சைக் கேட்டு ஏக ரெஸ்பான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் நிகழ்ச்சிகள் என்றால் இது போல் ஒருவர் அவசியம் இருப்பர்.

முகத்தில் காட்டிய ரெஸ்பான்ஸ் தாண்டி, கைகளிலும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். பேசுவோரின் கருத்துகளை நாட்டியம் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கண்களில் டாஸ்மாக் எபெக்ட். யாராவது கண்டித்தால், அவர்களை பதிலுக்கு கண்டித்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பகுதியில் மலையப்பநகர் என்ற பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று அண்ணன் திருமா அந்தப் பகுதியில் ஒரு சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு வந்திருந்த நரிக்குறவ சமுதாயத்தினர் அண்ணன் திருமா அவர்களுக்கு, தங்கள் வழக்கப்படி “பாசிமணி மாலை” அணிவித்தனர். 


                  

அப்போது நமது ஆள், அவரும் அணிவிப்பது போல ஆக்ட் கொடுத்தார்.

மாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி பேசும் போது, காமெடி கவுண்ட்டர் கொடுத்தார் நமது ஆள். நான் பேசும் போது, என்னைப் பார்த்து சைகை காட்டினார். பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

அண்ணன் திருமா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மா.செ அண்ணன் துரைசாமி, ஒ.செ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி என நிர்வாகிகளுக்கு சால்வை போடும் போது, தானும் தலையை நீட்டினார் நம்ம ஆள். அணிவித்த சால்வையை பார்த்து திருப்தி ஆனார் .

திடீர் பிரமுகர் ஆன சந்தோஷத்தில் எங்களோடு உணவருந்த வந்தார். அங்கும் அதையும் இதையும் பேசி செண்டர் ஆப் அட்ராக்ஷன் ஆனார். உணவருந்தி வெளி வந்தோம். வெளியே வந்தவுடன் என்னை உற்றுப் பார்த்தார். “ஆகா, சிக்கிக்கிட்டோம்”.

“ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன் எம்.எல்.ஏ”. நான் பேசுவதற்குள் முந்தினார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காட்டுராஜா. “சித்தப்பா, அவரு ஊரோட நம்ம ஊருக்கு தான் அதிகம் எம்.எல்.ஏ வந்திருப்பாரு” என்று சொல்லி நான் அந்த ஊரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மேற்கொண்ட பணிகளை பார்வையிட வந்ததையும், திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு வந்ததையும் பட்டியலிட்டார்.

“அப்படியா?” நம்ம ஆள். “அவரு வந்தப்ப நீ எங்கேயாவது போயிருப்ப, அதுக்கு என்ன செய்யறது?” காட்டுராஜா சொல்ல, “அட, ஆமால்ல” என்றவர் என்னை பார்த்தார். “நான் அரியலூர்ல தான தங்கியிருக்கேன். வரும் போது பார்க்கலாம்” என்றேன்.

இப்போ அவரு கொடுத்தாரு டிவிஸ்ட். “அட அது தெரியும் எம்.எல்.ஏ. நான் தினம் அரியலூர் வருவேன். உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கற அந்த ஆபிஸால நான் அந்த தெருவுக்கு வர்றதில்ல”. 

“எந்த ஆபிஸ்?” 
“கலால் ஆபிஸ்”

கலால் ஆபிஸ்னா மதுவிலக்கு காவல்துறை அலுவலகம்.

# நான் தான் அவுட். நம்ம ஆள் செம ஸ்டெடி தான் !

வியாழன், 17 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. 


                         

வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 


                                  Photo: (தொடர்ச்சி)...

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார். 

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார். 

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.



                               

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். 


                               

இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார்.

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4

உடையார்பாளையம் நுழைந்த தளபதியின் வாகனம் அண்ணா சிலை அருகில் நின்றது. தாமதத்தில் 5 நிமிடம் குறைக்கப்பட்டிருந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது. பத்து மணிக்காவது குன்னத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

                   

கிரிக்கெட் மேட்சில், சேஸிங்கில் ரன்னையும், மிச்சமிருக்கும் பந்து எண்ணிக்கையையும் மாறி மாறி கணக்கு பார்ப்பது போல, போக வேண்டிய தூரத்தையும், மிச்சமிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் தளபதி ஒரு நிமிட உரையை முடித்திருந்தார்.

விளாங்குடி கைக்காட்டி நோக்கி கான்வாய் பறந்தது. தளபதி அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வந்தார்கள். மற்றக் கட்சிகளின் பணி, வேட்பாளர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கைக்காட்டியில், அரியலூர் ஒ.செ ஜோதிவேல் காத்திருக்க, அதற்கு அடுத்த பாயிண்டில் இருவர் பரபரத்திருந்தனர்.

அடுத்த பாயிண்ட்டான கீழப்பழூரில் திருமானூர் ஒ.செ கென்னடியும், மா.து.செ தனபாலும் தான் பரபரத்திருந்தனர். காரணம், கீழப்பழூரை கட் செய்து, நேராக அரியலூர் போகப் போவதாக அவர்களுக்கு செய்தி. யார் சொன்னார்கள் என்று தெரியாமலே வதந்தி பரவி விட்டது.

பல வருடங்களாக, திருமானூர் ஒன்றியப் பகுதிக்கு தளபதி அவர்களின் சுற்றுப்பயணம் அமையாத காரணத்தால், இந்த வாய்ப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து, கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. கேட்பவர்களிடம் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

9.15 (6.45). கைகாட்டியை அடைந்த போது இந்த செய்தி கிடைத்தது. அவர்களை அழைத்து கீழப்பழூர் வருவதை உறுதி செய்தோம். கைக்காட்டியிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருவதால், அந்தப் பாதையில் சென்றாலும் தாமதமாகும். அதற்கு கீழப்பழூர் சென்று அரியலூர் செல்வதே சரி.

கைக்காட்டியில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும் தளபதி அவர்களுக்கு மனம் கொள்ளவில்லை, “இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள், அதிக நேரம் பேச முடியவில்லையே” என. ஒரு நிமிட உரை, கிளம்பினோம்.

இதற்குள் காரில் சார்ஜ் செய்யப்பட்டு எனது மொபைல் உயிர் பெற்றது. அரியலூர் நகர செயலாளர் முருகேசனை அழைத்து, அரியலூர் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து நிலையம் வழியாக பாதையை மாற்றச் சொன்னேன், பத்து நிமிடம் மிச்சமாகும் என்பதால்.

9.30 (7.00). கீழப்பழுரை அடைந்தோம். ஒரே நிமிட உரை. கூடியிருந்தவர்களுக்கு வருத்தம், தளபதி அதிக நேரம் பேசவில்லையே என, தளபதி அவர்களுக்கு வருத்தம், அதிக நேரம் பேச முடியவில்லையே என. அந்த இருவருக்கும் மகிழ்ச்சி, தளபதி வந்தாரே என. எனக்கும் மகிழ்ச்சி, இவர்களையும் ஏமாற்றவில்லை, குன்னமும் அடைந்து விடலாம் என்று.
( தொடரும்)....

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 3

சோழத்தரத்தில் உரையாற்றி விட்டு, காட்டுமன்னார்கோவில் சென்ற போது 7.45. பெரும் ஆரவாரத்திற்கு இடையே தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார். 

                     


இப்போது 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதம். இத்தோடு கடலூர் மாவட்டம் முடிவடைகிறது. அடுத்து அரியலூர் மாவட்டம்.

மின்னல் வேகத்தில் சென்றால் தான் குன்னம் செல்ல முடியும். தளபதி ஓட்டுனர் பாலுவிடம் நிலைமையை சொன்னேன். “கவலைப்படாதீங்கண்ணே, புடிச்சி போயிரலாம்” என்றார். நிர்வாகிகளை மொபைலில் பிடித்து, முன்னால் எந்த வாகனமும் செல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்னேன்.

5.40-க்கு மீன்சுருட்டியில் இருந்திருக்க வேண்டும். 8.15-க்கு நுழைந்தோம். மூன்று ரோடு சந்திக்கும் இடம். மக்கள் வெள்ளம். மகிழ்ச்சிக் கூக்குரல். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க.கண்ணன், தருமதுரை ஆகியோர் நின்று வரவேற்றனர்.

தளபதி மேடை ஏற எழுந்தார்கள். இடையில் நின்ற என்னைப் பார்த்தார். “அண்ணா, சுருக்கமாக பேசினா போதும். அப்போ தான் கூட்டத்திற்கு சென்றடைய முடியும்”. சிரித்துக் கொண்டே மேடை ஏறினார்கள் தளபதி. இரண்டே நிமிடம், ரத்தினச் சுருக்கமாய் பேசி, அண்ணன் திருமாவிற்கு வாக்கு கேட்டு முடித்தார். இறங்கும் போது சிரித்தார்,”என்ன சரியா ?”. “ரொம்ப நன்றிங்க அண்ணா”

வேன் வேகமெடுத்து, சிட்டாய் பறந்தது. குறுக்கு ரோட்டில் ஒரு பெரும் கூட்டம் நின்று மறித்தது. ஹாரனை அழுத்தியபடியே, லாகவமாய் ஒதுக்கி ஓட்டினார் பாலு. தளபதி அவர்கள் கூடியிருந்தோருக்கு வணக்கம் வைத்தபடியே வந்தார்கள், சமாதானப்படுத்தும் விதமாக.

மாலை 6.00 மணிக்கு சென்றிருக்க வேண்டிய ஜெயங்கொண்டத்தை அடைந்த போது இரவு 8.35. சிதம்பரம் சாலையில் பேசும் இடம். இரண்டு பர்லாங் தூரத்திற்கு மனிதத் தலையாகக் காட்சியளித்தது. தளபதி அவர்களுக்கு மனமில்லாமல் மூன்று நிமிடத்தில் பேச்சை முடித்தார்கள். “இவ்வளவு நேரம் தானா ?”என நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தவித்தார்.

ஜெயங்கொண்டம் பகுதிக்கு, கழக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்த குறிப்புகளை என்னிடத்தில் காட்டி சிரித்தார் ஜின்னா. தளபதி பேச்சில் குறிப்பிடுவதற்காக தயார் செய்யப்பட்டது. நேர நெருக்கடியால், பேச முடியவில்லை.

கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, தளபதி அவர்களுக்கு இறங்க மனமில்லை. நான்கு ரோடு சந்திப்பு வரை மேடை மேலே நின்றவாறு, மக்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியவாரே வந்தார். சால்வைகள் கொடுத்தனர். தூரத்தில் நின்ற ஒரு தோழர், தான் கொண்டு வந்த எலுமிச்சைப் பழத்தை கொடுக்க இயலாமல் தூக்கி வீச, அதை தளபதி அனாயசமாகக் கேட்ச் பிடிக்க, உற்சாகக் கூச்சல்.

மேடையிலிருந்து கீழே இறங்கிய அண்ணன் திருமா, படிக்கட்டிலேயே அமர்ந்துக் கொண்டு தளபதி அவர்களோடு உரையாடிக் கொண்டு வந்தார். தளபதி அவர்களும் தன் இருக்கையை திருப்பி உட்கார்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியை அண்ணன் சுபா.சந்திரசேகர் தன் மொபைலில் படம் பிடித்தார். “எவ்வளவு இணக்கமான கூட்டணி என்பதற்கு எளிதான விளக்கம் இந்தக் காட்சி. எவ்வளவு எளிமையான தலைவர்கள். வேறு எந்தக் கூட்டணியிலும் இது போல் காட்சியை காண இயலாது” என்றார்கள் ஜின்னாவும், சுபாவும்.


                      

நேரம் ஆகிறது என, குன்னத்தில் இருந்தோர் அடித்து, அடித்து என் மொபைல் சார்ஜ் காலி.

(தொடரும்...)

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2

தளபதி கான்வாய் சிதம்பரத்தில் நுழைந்தது. தெற்குரத வீதியிலிருந்து, மேலரத வீதிக்கு திரும்பும் போதே, வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. போலீஸ் ஸ்டேஷன் கடக்கும் போதே, வேனின் இருபுறமும் அலையடித்து ஒதுங்குவது போல் மக்கள் வெள்ளம். 


                   

பஸ் நிறுத்தம் அருகில், பேசும் இடம். தளபதி அவர்களும் திருமாவும் வேனின் மேற்புறம் செல்லும் போது எழுந்த உற்சாகம் சில நிமிடங்கள் நீடித்தது. நாங்கள் எழுந்து வேனின் நான்குபுறமும் சுற்றிப் பார்த்தோம், ஆனந்தம். மனிதக் கடலுக்கு நடுவே தீவு போல மிதந்தது, தளபதி அவர்களின் வாகனம்.

பேச ஆரம்பித்த தளபதி அவர்கள், கூடியிருந்தவர்களின் உணர்வை பிரதிபலித்து, உற்சாக மிகுதியில் இருந்தார். பேசும் நேரம் கூடிக் கொண்டே போனது. 


                           


ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளியது. “நான் சாலை வழியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். பிரச்சாரத்திற்கு ஜெ எப்படி வருவார் ?” எனக் கேட்டு தளபதி தன் கையை “ஹெலிகாப்டர் காற்றாடி” போல் சுழற்றி காட்ட, “ஹோ” என்று எழுந்த ஓசை உச்சம் தொட்டது.

வேனின் கடைசி சீட்டில் இருந்த மகேஷ் தீவிரமாக செல்போனில் ஷூட் செய்து கொண்டிருந்தார். ஒரு டாஸ்மாக் நபர் தளபதியின் பேச்சுக்கு, தீவிரமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் ரசிக்கத்தக்க அளவில் இருந்தது. மகேஷ் அனேகமாக இதை குறும்படமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது.

வேனின் முன் சீட்டை ஒட்டி, நின்று பேசும் மேடை. அதை அடுத்து இரண்டு இருக்கைகள். ஒன்றில் அண்ணன் எம்.ஆர்.கே.பி, இன்னொன்றில் அண்ணன் திருமா. அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கை, அதில் மகேஷ். இன்னொரு இரண்டு இருக்கை, அதில் அண்ணன்கள் துரைசாமி, சுபா.

இடையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு என்னை இருத்தினார் மகேஷ். ஜின்னா நட்த்துனராக உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார், ஏதாவது எழுதும் பணி என்றால் நிற்கும் மேடையின் படிக்கட்டில் அமர்ந்து எழுதுவார். கலகலப்பாக கல்லூரி டூர் போல இருந்தது.

3.40-க்கு செல்ல வேண்டிய கீரப்பாளையத்திற்கு செல்லும் போது மணி 5.50. சரியாக இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்கள் தாமதம். அங்கேயும் நல்லக் கூட்டம். அடுத்தப் பாயிண்டான ஒரத்தூர் செல்வதற்குள், வழியில் மூன்று ஊர்களிலும் மக்கள் திரண்டு நின்று வேனை மறிக்க முயன்றனர். தளபதி கையசைத்து சமாளித்து வந்தார்.


                           

சேத்தியாத்தோப்பை அடையும் போதும் அதே தாமதம்(4.20-6.30). நல்லக் கூட்டம், எழுச்சியான வரவேற்பு. குமாரக்குடி செல்லும் போது மணி 6.50, தாமதம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆனது. இது போன்ற டூர்களில் நேரத்தை குறித்துக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்வது என் வழக்கம். அதனால் இந்தப் புள்ளி விபரம். அது தான் காப்பாற்றியது என்னை.

பயணத் திட்டத்தில், கடைசியாக குன்னம் கூட்டத்திற்கு 7.40க்கு செல்வதாக திட்டம். 9.30-க்கு சென்றால் கூட போதும். 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம் என்றால் சரி செய்யலாம். ஆனால் சோழத்தரத்தில் பேசும் போது 2 மணி நேரம் 25 நிமிட லேட். இதே நிலையில் போனால் குன்னம் போகும் போது இரவு பத்தாகிவிடும். அதற்கு மேல் பேச அனுமதி கிடையாது.

லேசாக எனக்கு ஜுரம் வரும் போல இருந்தது....

(தொடரும்...)

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 1

23.03.2014. வைத்தீஸ்வரன்கோவில். மாலை 3.00 மணி.

கி விட்டார்கள் என தகவல் வந்தது. வெளியில் வெயில் கடுமையாக இருந்தது. முதல் நாள் நாகை மாவட்டம் சீர்காழியில் பொதுக்கூட்டத்தில் பேசிய தளபதி அவர்கள், வைத்தீஸ்வரன்கோவிலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்கள்.

கடலூர் மாவட்ட எல்லையான வல்லம் படுகையில் மாலை 3.00 மணிக்கு பிரச்சாரம் ஆரம்பிப்பதாக திட்டம். இரண்டு நாளாகவே மாலை 5.00 மணி வரை வெயில் கடுமையாக தகிக்க ஆரம்பித்திருந்தது. அதனால் சற்று தாமதமாக ஆரம்பிக்கலாம் என அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் நானும் ஆலோசித்திருந்தோம்.


                         


4.00 மணிக்கு கிளம்பினார்கள் தளபதி. பிரச்சாரம் செய்ய வசதியாக மேலே திறக்கும் வசதி உள்ள வேன். வேனில் தளபதி அவர்களுக்கு உதவியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் அசேன் முகம்மது ஜின்னாவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்.

தளபதியின் சுற்றுப்பயண விபரங்கள், பேசிய பேச்சுகள், பத்திரிக்கை செய்திகள், அன்றைய சுற்றுப்பயண விபரங்கள், பிரச்சார இடங்கள், அவை குறித்த விபரங்கள், ரூட் மேப் என தயாராக இருக்கிறார்கள். தற்போதைய செய்திகள் குறித்து அப்டேட்கள். ஜின்னா மூன்று மொபைல்களை வைத்துக் கொண்டு தகவல் தொடர்பில் பிஸி.

தளபதி அவர்கள் வாகனத்தில் வேட்பாளரோடு மாவட்டசெயலர்கள் பயணிப்பது வழக்கம். அதனால் எனக்கும் அந்த வாய்ப்பு. வேட்பாளர் அண்ணன் திருமா, கடலூர் மாவட்ட செயலர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் பா.துரைசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் ஆகியோரோடு நானும்.

மணி 04.15. கொள்ளிடம் பாலம் தாண்டும் போதே மேளதாள முழக்கம் கேட்டது. கொள்ளிடக் கரையில் அமைக்கப்பட்டிருந்த சாலையை தளபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார் எம்.ஆர்.கே, “இந்த சாலை நம் ஆட்சிக்காலத்தில் தான் அமைக்கப்பட்டது. எனது சொந்த ஊரை நேரடியாக இணைக்கிறது. தூரம் குறைகிறது”

சாலையை பார்த்தேன். தொலைவில் ஒரு டி.வி.எஸ்50 பறந்து வந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். வரும் போதே தளபதி வாகனத்தை பிடித்து விட்ட குஷி முகத்தில் தாண்டவமாடியது. வண்டியில் நேராக வந்து மோதி விடுவாரோ என எனக்கு பயம். குழந்தைகள் வேனை நோக்கி ஆர்வமாக கையாட்டினார்கள்.

தளபதி அவர்கள் வாகனம் வல்லம்படுகையை அடைந்தது. மேள, தாளம் முழங்க, ஓயிலாட்டத்தோடு அந்தப் பகுதியே அதிர்ந்தது. சாலையே தெரியவில்லை. வேனின் மேற்புறம் மெல்ல திறந்தது. தளபதி அவர்களும் திருமாவும் மேற்புறம் தோன்ற உற்சாகக் குரல்கள்.

தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார்கள். உற்சாகமான ரெஸ்பான்ஸ் கழகத் தோழர்களிடமிருந்தும், விடுதலை சிறுத்தைகளிடமிருந்தும். முதல் இடமே சிறப்பாக அமைந்த குஷியில் எல்லோரும், குறிப்பாக அண்ணன் எம்.ஆர்.கே.பி, சொந்த மாவட்டம் அல்லவா...

(தொடரும்)