பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 ஏப்ரல், 2014

தளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. 


                         

வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 


                                  Photo: (தொடர்ச்சி)...

கீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது. 

அரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.

அந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.

மாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.

அகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.

“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்

தளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.

தளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார். 

திருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.

வேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது. வேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.

ஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.

தளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில். 

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார். 

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

தளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.



                               

திருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம். 


                               

இது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.

தளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் ?”என மகிழ்ந்தார்.

அண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார்.

தங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.

அங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ?”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.

# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக