பிரபலமான இடுகைகள்

சனி, 10 மே, 2014

இரு சக்கரப் பேரணி - புல்லட் பிரச்சாரம் ஆனது...

ஆண்டிமடத்தில் பெரிய பரிசு காத்திருந்தது...
ஆண்டிமடம் போன உடன் திறந்த வாகனத்தில் உரை நிகழ்த்தி, பேரணியை துவக்கி வைத்து விட்டு இறங்கினேன். பைக் அங்கே நிற்கிறது என்றார்கள், கூட்டத்தின் முன் பகுதியை காட்டி. முன்னே சென்றேன். அங்கே கம்பீரமாக நின்றது அந்த பரிசு.

Royal Enfield Bullet. பார்த்தவுடன் சற்று மிரட்சி தான். சின்ன பைக்குகளை ஓட்டிய பழக்கம் இருக்கிறது, புல்லட்? இந்த புல்லட் ஜெயங்கொண்டம் மகேஷுடையது. ஏற்கனவே மகேஷ் வாங்கிய போது, கொண்டு வந்து காட்டிய அன்று 50 மீட்டர் ஓட்டி பார்த்த அனுபவம் மட்டும் தான்.

பட்டன் ஸ்டார்ட், தட் தட் தட் என ரெடியானது. இன்று ஒருவரும் பின்னால் உட்காரவில்லை (துணியவில்லை). கிளம்பியது பேரணி. சின்ன பைக்குகளை விட இதுவே ஓட்டுவதற்கு இலகுவாகவும் லாகவாகமும் இருந்தது. எளிதாக சைக்கிளை கையாளுவது போல வளைவுகளில் ஒத்துழைத்தது.

நிறுத்தும் இடங்களில் மட்டும் சிரமப்பட்டேன். அதுவும் போக போக சரியானது. என் கல்லூரி நண்பர் ஹரிகிருஷ்ணா ஒரு குழுவோடு பைக்கிலேயே கொடைக்கானல், இமயமலை போய் வந்த போது கிண்டல் அடித்தது உண்டு. இப்போது தான் பைக்கின் அருமை புரிந்தது.

100 கி.மீ போனதே தெரியவில்லை. பேரணி சிறப்பாக நடந்தேரியது. 20-ந் தேதி திருமானுர் ஒன்றியம், 21-ந் தேதி வேப்பூர் ஒன்றியம் என புல்லட் பயணம் தொடர்ந்தது. அதில் நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள். திருமானூரில் வி.சி.கட்சி மா.செ அன்பானந்தம் பின் சீட்டில் அமர்ந்தார். ஒ.செ கென்னடி ஒரு பைக்கை ஓட்டி வழிகாட்டியானார்.


                        

வேப்பூரில் பத்து நிமிடம் பின்னால் உட்காருகிறேன் என்று உட்கார்ந்த ஒ.செ அண்ணன் குன்னம் ராசேந்திரன் மதியம் வரை இறங்கவில்லை, "புல்லட் கம்பர்ட்டா இருக்குங்க" என்று. பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமி ஒரு பைக்கில். வெங்கடாசலம் ஒரு பைக்கில், வெற்றிசெல்வன் ஒரு பைக்கில், தங்கதுரை ஒரு பைக்கில் என உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் இனிமையான பைக் ரைட்                 


                        .

ஆங்காங்கு நிறுத்தி இளநீர், மோர், ஜூஸ் என வழங்கி பயணக் களைப்பு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் கழகத் தோழர்கள். சில இடங்களில் எம்.எல்.ஏ-வை பின்னால் காரில் எதிர்பார்த்து, எங்களை போக சொல்லி கையாட்டி விட்டு தடுமாறிய காட்சிகள் வெயிலின் சூட்டை மறந்து சிரிக்கச் செய்தன


                        .

மைக் வைத்து பேச சொல்லும் இடங்களில் பைக்கிலிருந்து இறங்கப் போனால், நீண்ட தூரம் பயணம் செய்வதால், வேண்டாம் உட்கார்ந்து கிட்டே பேசுங்க என சொல்ல, வேன் பிரச்சாரம் போல பைக் பிரச்சாரம் அமைந்தது.

முதல் நாள் வெயிலின் கொடுமையாலும், புழுதி பறந்து கண்களில் தூசி நிரம்பியதாலும் அண்ணன் ஞானமூர்த்தி தனது "ரேபான்" கிளாஸை இரவல் கொடுத்தார். அது தான் மீதி மூன்று நாளும் கைக்கொடுத்தது. நல்லாத் தான் இருக்கு.

   

                                 

எப்படியோ பிரச்சாரப் பயணம் புல்லட் மீது ஒரு காதலை ஏற்படுத்திவிட்டது...


வியாழன், 8 மே, 2014

இரு சக்கரப் பேரணி - "ஓட்டுவீங்க இல்ல?".

கலவர முகத்தோடு அண்ணன் ஞானமூர்த்தி கேட்டார், "ஓட்டுவீங்க இல்ல?". மையமாக தலையசைத்தேன். பக்கத்தில வர்ற பைக் எல்லாம் இடிக்கிற மாதிரி வரும் போது நீங்க மட்டும் பதில் சொல்லிடுவீங்களா ?

அப்போது பார்த்து அண்ணன் செல்வராஜ், "கியர்லாம் பின்னாடி அமுக்கனும்" என்றார். இதற்குள் கிளட்ச் கைப்பழக்கமானது. ஒரு ஃபர்லாங்கில் செந்துறை பஸ்ஸ்டாண்ட் அடைந்தோம். இதற்குள் கியர் கால்பழக்கத்திற்கு வந்துவிட்டது. நிதானமாக 25 கி.மீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினேன்.

எங்கள் பைக்கிற்கு இணையாக ஒரு பைக், மற்ற பைக்குகள் பின்னால் என பேரணி ஒழுங்கானது. சிறுதெருவை காட்டினார் அண்ணன் ஞானமூர்த்தி,"உள்ளே போவதா?" என்றார். "மெயின் ரோடு மட்டுமே" என்றேன். என் கஷ்டத்தை உணர்ந்தவராக, மற்றோரை நேரே வரக் கைக்காட்டினார்.

செந்துறை தாண்டியது. பைக் பழகியிருந்தது. "பேரணியில் நான் தொடர்ந்தால், ஒருவரை ஒருவர் முந்தாமல் வருவார்கள் போலிருக்கே?" என்று கேட்டேன். "உண்மை தான். உங்க பின்னாடியே வருவாங்க. ஸ்பீடையும் கண்ட்ரோல் பண்ணிட்டீங்க. ஓட்டுங்க, பேசிப்போம்"என்றார் அண்ணன் ஞானமூர்த்தி. அவருக்கும் நம்பிக்கை வந்துடுச்சி போல.

சேடக்குடிகாடு, மருவத்தூர் கிராமங்களை மெயின் ரோடிலேயே கடந்தோம். பொன்பரப்பிக்கு முன்பாக சிறுகளத்தூர் செல்ல திருப்பினோம். சிறுகளத்தூரில் சந்துபொந்துகள் வழியாக செல்ல வேண்டிய நிலை. சர்வசாதாரணமாக பைக் செல்ல ஆரம்பித்தது. 


                         

உச்சி வெயிலில் முந்திரிக்காடுகளின் வழியே புகுந்து புறப்பட்டன பைக்குகள். கீழமாளிகை, மருங்கூர், மாத்தூர் வழியாக கோட்டைக்காடு கிராமத்தை அடைந்த போது மதியம் 2.30. மதிய உணவு நேரம். அது கோட்டைக்காடு முனியப்பா கோவில். சுற்றிலும் இருந்த மர நிழலில் அமர்ந்தனர். உணவு வந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 80 கிமீ பயணம். சாலையில் இருந்த புழுதி அனைத்தும் வந்தோர் உடையிலும், தலை முடியிலும். செம்மண் பூமி. என் உடை செக்கக்செவேல் என ஆகியிருந்தது. புதுத் துண்டை தண்ணீரில் நனைத்து தலையை துடைத்தேன், துண்டு சிகப்பு நிறமானது. நீரில் அலசி முகம் துடைத்தேன். மீண்டும் சிகப்பானது.

அந்தக் கோவில் புகழ் வாய்ந்தது. முனியப்பா பலருக்கும் குலதெய்வம். அப்போது தான் ஒரு குடும்பம் படையல் போட்டிருந்தனர். எங்கள் முகத்தைப் "பார்த்து" பிரசாதம் கொடுத்தனர். புளிசாதம், தயிர்சாதம். திருப்தியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், பிரசாதம் கொடுத்தவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.

"இவர் தான் எங்க எம்.எல்.ஏ". சோற்றுக் கையோடு வணக்கம் வைத்தேன். அவர் மகிழ்ச்சியோடு, "நாங்களும் கழகம் தாங்க, கள்ளக்குறிச்சி" என்றார். வயிறார நன்றி சொன்னேன். உணவோடு பயணத்தை நிறைவு செய்தேன். 19.04.2014 ஆண்டிமடம் பேரணி.

முதல் பயணத்தில் சிறப்பாக பைக் ஓட்டியதற்கு (பெரிய?)பரிசோடு காத்திருந்தார்கள்.......(தொடரும்)

புதன், 7 மே, 2014

இரு சக்கரப் பேரணி - கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல்...

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மட்டும் தான் இரு சக்கரப் பேரணி நடத்துவதாக திட்டமிட்டிருந்தார்கள், செந்துறையில். கழகத் தோழர்களையும் கலந்து கொள்ள சொன்னேன். முதலில் திட்டமிட்ட தேதி மாறி, 17.04.2014 அன்று நடத்துவதென முடிவானது.

அன்று காலை வேறு நிகழ்ச்சி இல்லாததால், நானே வந்து துவங்கி வைக்கிறேன் என்று சொன்னேன், கழகத் தோழர்கள் கூடுதலாக கலந்து கொள்வார்கள் என்பதால். காலையில் பேரணியை துவக்கி வைக்க சென்றேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவரின் தனி செயலாளர் அண்ணன் மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் மற்றும் கருத்தியல் செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியசைத்து துவக்கி வைக்கும் எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன்.

பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் பூ.செல்வராஜ் தனது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினார், ஹீரோ ஹோண்டா. போட்டோ செஷன் என ஏறி உட்கார்ந்தேன். "ஓட்டப் போகிறீர்களா ?" என்று கேட்டார் ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி.


                    Photo: முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மட்டும் தான் இரு சக்கரப் பேரணி நடத்துவதாக திட்டமிட்டிருந்தார்கள், செந்துறையில். கழகத் தோழர்களையும் கலந்து கொள்ள சொன்னேன். முதலில் திட்டமிட்ட தேதி மாறி, 17.04.2014 அன்று நடத்துவதென முடிவானது.

அன்று காலை வேறு நிகழ்ச்சி இல்லாததால், நானே வந்து துவங்கி வைக்கிறேன் என்று சொன்னேன், கழகத் தோழர்கள் கூடுதலாக கலந்து கொள்வார்கள் என்பதால். காலையில் பேரணியை துவக்கி வைக்க சென்றேன். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவரின் தனி செயலாளர் அண்ணன் மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் மற்றும் கருத்தியல் செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியசைத்து துவக்கி வைக்கும் எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன்.

பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் பூ.செல்வராஜ் தனது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினார், ஹீரோ ஹோண்டா. போட்டோ செஷன் என ஏறி உட்கார்ந்தேன். "ஓட்டப் போகிறீர்களா ?" என்று கேட்டார்  ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி.

"ஆமாம்" என்றேன். "நான் பின்னால் உட்காரட்டுமா?"என்று கேட்டார் அண்ணன் ஞானமூர்த்தி. "உட்காருங்கள்" என்றேன். பத்திரிக்கையாளத் தோழர்கள் புகைப்படம் எடுத்தனர். அண்ணன் சிபிசந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணன் வெற்றிச்செல்வன் தனது வழக்கமான நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்து கொண்டிருந்தார். "இன்னாண்ணே, ஓட்டப் போறியா ?" என்று தனது டிரேட்மார்க் சென்னைத் தமிழில் கேட்டார்.

"ஆமாண்ணே" என்றேன். வெளியே தெம்பாக சொல்லிவிட்டேன். பைக் ஓட்டி ரொம்ப நாளானது நமக்கு தானே தெரியும். 1993-1996ல் ஒரு பஜாஜ் M-80 வாகனத்தை பிழிந்து எடுத்திருக்கிறேன். பிறகு ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக்கை கொஞ்சம் நாள் ஓட்டினேன்.

1996 டிசம்பரில் மகேந்திரா அர்மடா ஜீப் வாங்கிய பிறகு, இரு சக்கர வாகனம் ஓட்டும் வாய்ப்பு குறைந்து விட்டது. டச் விட்டுப் போய் விட்டது, அதிகம் ஓட்டவில்லை, ஆனால் அவ்வப்போது ஓட்டுவதால் மறக்கவில்லை.

சரி, சொல்லியாச்சி, செந்துறை நகர் வரை ஓட்டிவிடுவோம் என ஸ்டார்ட் செய்தேன். கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல், சற்று தடுமாறினேன். பைக் லேசாக வளைந்து, வளைந்து கிளம்பி நேர் கோட்டுக்கு வந்தது. இப்போது தான் அண்ணன் ஞானமூர்த்திக்கு நிலவரம் புரிந்தது, முகம் கலவரம் ஆனது.....

"ஆமாம்" என்றேன். "நான் பின்னால் உட்காரட்டுமா?"என்று கேட்டார் அண்ணன் ஞானமூர்த்தி. "உட்காருங்கள்" என்றேன். பத்திரிக்கையாளத் தோழர்கள் புகைப்படம் எடுத்தனர். அண்ணன் சிபிசந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணன் வெற்றிச்செல்வன் தனது வழக்கமான நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்து கொண்டிருந்தார். "இன்னாண்ணே, ஓட்டப் போறியா ?" என்று தனது டிரேட்மார்க் சென்னைத் தமிழில் கேட்டார்.

"ஆமாண்ணே" என்றேன். வெளியே தெம்பாக சொல்லிவிட்டேன். பைக் ஓட்டி ரொம்ப நாளானது நமக்கு தானே தெரியும். 1993-1996ல் ஒரு பஜாஜ் M-80 வாகனத்தை பிழிந்து எடுத்திருக்கிறேன். பிறகு ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக்கை கொஞ்சம் நாள் ஓட்டினேன்.

1996 டிசம்பரில் மகேந்திரா அர்மடா ஜீப் வாங்கிய பிறகு, இரு சக்கர வாகனம் ஓட்டும் வாய்ப்பு குறைந்து விட்டது. டச் விட்டுப் போய் விட்டது, அதிகம் ஓட்டவில்லை, ஆனால் அவ்வப்போது ஓட்டுவதால் மறக்கவில்லை.

சரி, சொல்லியாச்சி, செந்துறை நகர் வரை ஓட்டிவிடுவோம் என ஸ்டார்ட் செய்தேன். கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல், சற்று தடுமாறினேன். பைக் லேசாக வளைந்து, வளைந்து கிளம்பி நேர் கோட்டுக்கு வந்தது. இப்போது தான் அண்ணன் ஞானமூர்த்திக்கு நிலவரம் புரிந்தது, முகம் கலவரம் ஆனது..


(தொடரும்...)

திங்கள், 5 மே, 2014

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குவது, கொடுப்பது குறித்த விவாதம் உச்சம் தொடுகிறது. 

                     

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் “எல்லோரும்”, ஓட்டை விலைக்கு விற்கிறார்கள் என்று சொல்வது சரி கிடையாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போர், தினம் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு நிச்சயம். ஓட்டு போட செல்ல ஒரு நாள் வேலையை இழக்கிறார்கள்.

சம்பளம் இல்லையென்றால், அன்றைய குடும்ப நிலை அதோகதி தான். அவர்கள் வங்கி கணக்கு உள்ளவர்கள் கிடையாது, எனவே கையிருப்பு இருக்காது. கூடுதல் பணம் இருந்தால், அது தான் டாஸ்மாக்கிற்கு போய்விடுமே. இவர்களை பொறுத்த வரை இந்தப் பணம் அன்றைய கூலி.

பொதுவாக மத்திய தட்டு மக்கள் மன நிலை, ஒரு சில விஷயங்களில் ஒரே நிலையில் இருக்கும். பொருட்காட்சிகளில் பார்த்திருக்கலாம், பாப்கார்ன் இயந்திரம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஸ்டாலில், சாம்பிள் கொடுப்பார்கள். அங்கு கூட்டம் மொய்த்தெடுக்கும்.

இலவசப் பொருட்கள் குறித்த மன நிலை அது தான். தங்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி தான் விடுவோமே என்ற எண்ணம். இதை கடந்த ஆட்சிக் காலத்தில் நேரடியாக உணர்ந்தேன், இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில்.

வீட்டில் ஹாலில், படுக்கையறையில், டைனிங் ஹாலில் என்று தனித்தனி டி.வி வைத்திருப்பார்கள். அவர்கள் தான் முதல் ஆளாகக் கேட்பார்கள், “எங்களுக்கு எப்போ டி.வி தருவீங்க?”. இவர்களில் எல்லோரும் இலவசம் என்பதால் மாத்திரம் கேட்பதில்லை.

இது நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், திருப்பி தரும் இலவசப் பொருள் தானே, எனவே நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது என்ற எண்ணம் தான். வரிசையில் நின்று வாங்கவும் தயங்குவது இல்லை. உரிமையோடு கேட்கவும் தயங்குவது இல்லை.

அது போன்று நடுத்தர வர்க்கத்தின் மனநிலை, ஏன் நாம் செலவு செய்து, ஆட்டோவிலோ, பைக்கிலோ சென்று வாக்களிக்க வேண்டும்? யாரோ ஆட்சிக்கு வரப்போகிறார்கள், யாரோ சம்பாரிக்கப்போகிறார்கள் அதற்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமும்.

அன்றைய சம்பளமோ, ஆட்டோ செலவோ ஏதோ ஒன்றை கொடுத்தல் அவர்களை வாக்களிக்க வர செய்ய தூண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

அதை அரசியல் கட்சிகள் கொடுப்பது தான் தவறு. இந்த ஆண்டு தேர்தல் நடத்த ரூபாய் 3500 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டுள்ளது. 


                     

கட்சிகள் செய்யும் செலவு ரூபாய் 30,000 கோடியை தாண்டி விடும். 81.45 கோடி வாக்காளர்களுக்கு செலவுக்கு அரசே கொடுத்துவிட்டால், ரூபாய் 200 கொடுத்தால் 16,290 கோடி செலவாகும்.

# ஆம், அரசே பணம் கொடுத்து விடலாம் !