பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஓடுகாலி, நாறவாயன், தட்டுவாணி, முடிச்சவிக்கி - நல்ல தமிழ் வார்த்தைகள் !

"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் – (முறைகேடாக) வீட்டைவிட்டு சென்று விடும் பெண். 

“ஓடுகாலி” என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதில் தவறில்லை” என்று அமைச்சர் வைத்திலிங்கம் சொல்ல, “இது அவையில் குறிப்பிடக்கூடாத வார்த்தை அல்ல” என்று சபாநாயகர் மெல்ல, அதற்கு முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொல்ல, அட அட. 

                   

இதை தொடர்ந்து சபையில் பயன்படுத்த மேலும் சில வார்த்தைகளை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

நாறவாயன் – அம்மாவை வாய் மணக்க, மணக்க புகழும் அமைச்சர் பெருமக்களை இனி நாறவாயன்கள் என அழைக்கலாம். நற்றமிழில் நாற்றம் என்பது மணத்தையே குறிக்கும்.

தட்டுவாணி – அம்மாவை புகழும் போதெல்லாம், சட்டசபை மேசையை தட்டி மகிழும் ஆளுங்கட்சி ச.ம.உக்களை ‘தட்டு’வாணிகள் என்று சொன்னால், மிகவும் சந்தோசப்படுவார்கள்.

முடிச்சவிக்கி – ஆளுங்கட்சிக்கு இக்கட்டு வரும் போதெல்லாம் சப்பைக்கட்டு கட்டி எதிரிகளின் முடிச்சை அவிழ்ப்பதால், கூட்டணிக் கட்சி தலைவர்களை முடிச்சவிக்கி என்று அன்போடு அழைக்கலாம்.

மொள்ளமாறி – எதிரணியில் வெற்றி பெற்று மெள்ள மெள்ள, மாறி மாறி உங்கள் பக்கம் வந்திருப்பவர்களை ஆசையாய் மொள்ளமாறி என்று அழைக்கலாம்.

காண்டு – எதிர்கட்சியினரை காது கொடுத்து கேட்கமுடியாத “கொடூர” வார்த்தைகளால் “காண்டாய்” அர்ச்சிக்கும் சில வல்லவராயர்களை காண்டு என்று கூப்பிட்டால் சிறப்பு.

இவர்களை எல்லாம் வைத்து கட்டி மேய்க்கும் தலைமையையும், சபையை பாங்காய் நடத்தும் சபாவையும் விளிக்க அவர்களே சிறப்பான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

“அம்மாவை சென்னை பாஷையில்...”
"யாருப்பா குறுக்க பேசறது, அதெல்லாம் அவுங்க பார்த்துப்பாங்க".

# ஒரு ஓடுகாலி இது போன்ற வார்த்தைகளை தானே பரிந்துரைக்க முடியும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக