பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் !

ஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர் அக்கறை தெரிஞ்சுது.

                                 

ஆனா அந்த ஜோசியருங்க சொன்னது எல்லாம் ஏதோ நோக்கத்தோட சொன்ன மாதிரி இருக்கு. நீங்களே பாருங்க…

ஜோதிடர் ஷெல்வி:
ஜெயலலிதா ஜாதகத்தில் குரு கெட்டு போயிருப்பதாலேயே அவர் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகி விட்டது. (எனக்கென்னமோ காடுவெட்டி குருவ ஜெயில்ல வச்சத சொல்லி காட்டற மாதிரியே இருக்கு)

அதிமுகவினர் ஆலங்குடி கோவிலுக்கு சென்று தினந்தோறும் வழிபட வேண்டும். (பக்கத்தில தான் தலைவர் கலைஞர் தொகுதி திருவாரூர், கலைஞர் பிறந்த திருக்குவளை எல்லாம். போங்க, போங்க)

அங்கு அபிஷேகம், அன்னதானம் செய்ய வேண்டும். மஞ்சள் நிறத்தில் வஸ்திரதானம் செய்யலாம். மஞ்சள் நிற உணவை அன்னதானமாக வழங்க வேண்டும். மஞ்சள் நிற சுண்டல், புளி சாதம் போன்றவற்றை அன்னதானமாக வழங்க வேண்டும். (கலைஞரோட மஞ்சள் சால்வையை கிண்டல் செய்யும் அதிமுக கம்பெனிக்கு எல்லாம் மஞ்சள்ல. சபாஷ். இது ஒன்னும் மஞ்சள் கிண்டல் இல்லையே?)

                  

ஜோதிடர் கே.பி.வித்யாதரன்:
மாணவ, மாணவியருக்கு அதிமுகவினர் உதவி செய்யலாம். (எப்புடி, ஹோம் ஒர்க் மட்டுமா? கிளாஸ் ஒர்க்குமா?) நடைமுறை மற்றும் யதார்த்த பரிகாரம் என்றால் அது தேக பரிகாரமேயாகும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய வேண்டும். ( ஆகா, வடிவேல சின்னபையன் வேனுக்குள்ள கூட்டிக்கிட்டு போற ஸீன் தான ஞாபகம் வருது…)

அதிமுகவினர் சுத்த பத்தமாக இருந்தால் பரிகாரம் முழுபலனைக் கொடுக்கும். அசைவத்தை தவிர்க்கலாம். பசு தானம் செய்யலாம். மொத்தத்தில் யாகம் செய்வதை விட தியாகம் செய்வது நல்லது. (சரத்குமார பார்த்து வடிவேலு சொல்ற அதே “ஆச்சாரம்?”மா)

           

ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு:
குரு தோஷம் ஏற்பட்டுள்ளதால், மடாதிபதிகளின் ஆசி, குல ஆச்சார்யர்களின் ஆசி மிக அதிகமாக தேவை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மடங்களிலும் உள்ள மடாதிபதிகளுக்கு “பிஷாவந்தனம்” செய்ய வேண்டும். (இவன் தான்யா முக்கியமான ஆப்ப வைக்கிறான். காஞ்சி மடத்துக்கு போங்கோ, நடு'வாளும் சின்ன'வாளும் காத்துண்டிருக்கா.)

ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்:
(போட்டான்யா ஒரே போடு) ராம ஜன்ம வனத்திலே, சீதை சிறை வைத்ததும், தீதில்லாதோர் மூன்றிலே, துரியோதனன் படை மாண்டதும், தருமபுத்திரன் நாலிலே, வனம் வாசம்பாடி போனதும், இமையெட்டினில் வாலி பட்டம் இழந்து, மேம்பாடி ஆனதும், ஈசனார் ஒரு பத்திலே, தலையேட்டிலே இருந்துண்டு, ராவணன் முடி, 12ல் விழுந்தது' என, ஜோதிட நுால் கூறுகிறது

தற்போது ஜெயலலிதாவிற்கு, சந்திர கிரகணத்தால், 90 நாட்கள் ஆகாது; ஆபத்தை சந்திக்கணும். உடனிருப்போர் துரோகியாக மாறுவர்; அரசில் குளறுபடி நடக்கும். ( ஜோசியர் அண்ணே, அம்மா தினமலர் தான் படிக்கிறாங்களாம்)

ஜோதிடர் ஆர்.கே.வரத ராஜ், காஞ்சிபுரம்:
ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் இடத்தில், கேது இருப்பதால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.சுக்கிரன் உச்ச மாக இருக்கும் காரணத்தாலும், கேது சட்ட நெருக்கடியை கொடுக்கும் கிரகம் என்பதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நேரம், கட்சி தலைவர்களாக இருக்கும் பெண்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி தரும். ( அந்த ஆள் மோடி இங்க எங்கய்யா வந்தாரு. நாஞ்சில் சம்பத் சொல்றது சரி தான் போல “சர்வதேச சதி”)

ஜோதிடர் பாலசேகர், சென்னை:
விதிப்படி எது நடக்கணுமோ, அது நடக்கும். பரிகாரம் எதுவும் கிடையாது. சிலரின் மன திருப்திக்காகவே, பரிகாரம் சொல்லப்படுகிறது.( அவ்ளோ தான். சிம்பிள்)

# அம்மா, உங்களுக்கும் இப்படியேத் தான் தோணுச்சா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக