பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஜா.லலிதா-விடம் கிருகதாஸ் சூடான பேட்டி !!!

“புத்தி” படத்தை தொடர்ந்து, நாம நாட்டுக்கு இன்னும் நிறைய கருத்து சொல்லனும்னு இயக்குநர் கிருகதாஸுக்கு ஆச வந்திடுச்சி. டீ.வி ஆரம்பிக்க முடிவெடுத்தாங்க. ஆரம்பிச்சாச்சி. இங்க ஹிட் அடிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.

           

புதிய தலைமுறை பேட்டியை பார்த்தவுடன் “புத்தி டீ.வி” டீமுக்கு ஒரு ஆசை வந்தது. இவங்க முன்னாள் துணை முதல்வர தான பேட்டி கண்டாங்க, நாம முன்னாள் முதல்வரையே பேட்டி காணுவோம்னு முடிவெடுத்தாங்க. ஜா.லலிதாவை சந்தித்தார்கள்.

போற வழியில பார்த்தா தான், கேள்வி தாள் மிஸ்ஸிங். என்ன பண்றதுன்னு தெரியல. பார்த்தாங்க, புதிய தலைமுறை பேட்டிய வச்சி கேள்வி தயார் பண்ண சொல்லி அசிஸ்டெண்ட் டைரக்டர் கிட்ட சொன்னார். அத வச்சி பேட்டிய ஆரம்பிச்சாங்க. அப்படீயே கேட்டா, என்னாகும்னு தெரியும்ங்கிறதால, பட்டி, டிங்கரிங் பார்த்து கேட்டாங்க.

கிருகதாஸ் ஆரம்பிச்சார்.
கி.தா: நீங்க ஒரு முன்னாள் முதல்வர், சென்னையில ஏற்பட்டிருக்கிற மழை, வெள்ள பாதிப்பை பார்த்து என்ன தோணிச்சி ?
ஜா.ல: மழை பெய்தா நிறைய தண்ணீர் வரத்தான் செய்யும். அப்படி வந்தா வெள்ளமாகத் தான் உருவெடுக்கும். அதனால பாதிப்பு ஏற்படத் தான் செய்யும். இதுல சொல்ல என்ன இருக்கு?. நெக்ஸ்ட்…

கி.தா: பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை பற்றி நீங்கள் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஏன் தயக்கம் ?
ஜா.ல: பெங்களூரு எங்க இருக்கு? என்ன நீதிமன்றம்? என்ன கருத்து? 230 பேர் செத்தது மட்டும் தான் எனக்கு தெரியும். நான் வழிநடத்துவேன்.

கி.தா: அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா ?
ஜா.ல: அரசியலே முடிஞ்சிடுச்சி. அப்புறம் எங்க வாழ்வு? கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளை காணவில்லையே.

அப்ப தான் அணிலன் உள்ள வந்தார். கிருக காதுல கிசுகிசுத்தார். “ண்ணா. வெளியில செங்க்ஸ் குரூப் பெட்ஷீட் விரிச்சு போட்டு உக்காந்திருக்கு. பனீர் குரூப் சேர் போட்டு உக்காந்திருக்கு. கையில கட்டையும் கழியும் இருக்கு. நீங்க கேக்குற கேள்வி விவரம் வெளியில போகுது போல”

கிருகதாஸுக்கு லேசா வேர்க்க ஆரம்பிச்சுது. சமாளிச்சு தொடர்ந்தார்.

கி.தா: தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கு, அதை பாஜக நிரப்பும்னு சொல்றாங்களே
ஜா.ல: பாஜக-வையே நாங்கள் நிரப்புவோம்

கி.தா: நீங்க இல்லாம கட்சியில குரூப் பாலிடிக்ஸ் வந்திடுச்சின்னு பேசிக்கறாங்களே
ஜா.ல: நான் வந்துட்டன்ல.

மீண்டும் அணில் வந்தார் “ண்ணா. பண்ருட்டி வாள்முருகன் வந்துட்டாருங்கண்ணா. நம்மள தாண்டி சவுண்ட் விடுவாருங்கண்ணா. போதும்ணா”

“எப்படியாவது இன்னும் கொஞ்சம் சமாளிப்போம்” என்று கிசுகிசுத்த கிருகதாஸ் பேப்பர புரட்டினாரு. பதட்டத்தில் பேப்பர் கை நழுவியது. குனிந்து பொறுக்க ஆரம்பித்தார்.

ஜா.ல: “என்ன கிருக்குதாஸ், பேப்பர் இல்லாம கேள்வி கேக்கத் தெரியாதா? நீங்க கஜினியா மறக்கறதுக்கு? இன்னும் ரெண்டு கேள்வி தான் முடிங்க”

கி.தா: ஜெயில்ல எப்படி பொழுது போச்சி?
ஜா.ல: (கண்கள் பழுத்தன. விரலகள் முறித்தன) வாட் மேன்? ஹவ் டேர் யூ?

கி.தா: (அழும் குரலில்) “சரிங்க அம்மா. நாட்டு மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புறீங்க?"
ஜா.ல: “நாசமாப் போங்க….”

அணிலன் ஓட, கேமராவோடு கிருகதாஸ் தலைதெறிக்க ஓட்டமெடுக்கிறார். புத்தி டீவியின் ஓ.பி வேன் தாக்கப்பட்டு கண்ணாடி உடைகிறது. அணிலன் வேனை கிளப்ப ஏணியை பிடித்து தொற்றிக் கொள்கிறார் கிருகதாஸ்.

கிருகதாஸ் சட்டையை பிடித்து தொங்குகிறார் வாள்,”என் பேட்டிய எடுய்யா. அம்மா பாக்கணும்” “யோவ். நீ வேற நேரம் காலம் தெரியாம. உன் பேட்டிய எடுக்கறதுக்குள்ள என் போட்டிய எடுத்துடுவாங்கய்யா. விடுய்யா”

புத்தி டீவியில் பிளாஷ் நியூஸ் “பால் விலை ரூ.10 உயர்வு”

# வாலு போயி புத்தி வந்தது டும் டும் டும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக