பிரபலமான இடுகைகள்

திங்கள், 17 நவம்பர், 2014

போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா ?

“வணக்கம். நான் மு.க.ஸ்டாலின் பேசறேன்”
“வணக்கம். நான் கலைஞர் பேசறேன்”


.
.
“நீங்க கருணாநிதி தானே?”
“ஆமாங்க”
“ஆலத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தானே?”
“ஆமாங்க”
.
.
“நான் அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் பேசறேன்”
“ஏங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவரு, பெரம்பலூர் வந்து என்னைப் பாத்துட்டு போனாரு. நீங்க யாருங்க?”
“ஸ்டாலின் தான் பேசறேங்க”
“நான் அவருக்கே தலைவர் கலைஞர்ங்க”
(இவர் பெயர் கருணாநிதி என்பதால், நாங்கள் பெயர் சொல்லி அழைக்க தயங்கி, அவரை “கலைஞர்” என்று அழைப்போம். அதில் அவர் கலைஞராகவே ஆகிவிட்டார்)
“உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல”
“திமுக-காரனுக்கு யாரும் புரிய வைக்க வேண்டாங்க. நல்லா புரியும்”
“போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா?”
“ஆமாம். Private Number-னு வந்தது”
(இப்போ தான் நம்ம ஆளுக்கு லேசா புரிய ஆரம்பிச்சுது, குரல் தளபதி மாதிரி தான் இருக்குன்னு)
“அய்யா, அய்யா நான் பிரைவேட் நம்பர்ன உடனே வெளிநாட்டு கால்னு நினைச்சேன்”
“எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் அய்யா”
“ஆய்வுக்கு வந்தீங்களே. எப்படி இருந்தது?”
“உங்கள பார்த்ததும், உங்கக்கிட்ட பேசினதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அய்யா. தெரியாம பேசிட்டேன் அய்யா”
“பரவாயில்ல. ஊருக்கு வரும் போது பார்க்கிறேன், தலைவராச்சே”
சிரிப்போடு முடித்திருக்கிறார் தளபதி அவர்கள்.

***********************************

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காட்டுராஜா ஒரு நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதே போல் அழைப்பு
“வணக்கம். நான் ஸ்டாலின் பேசறேன்”
(நம்பமுடியாமல்) “யாருங்க?”
“சென்னையிலிருந்து மு.க.ஸ்டாலின் பேசறேன்”

*************************************

இப்படியே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து கிளைக்கழக ஆய்வில் கலந்து கொண்ட நூற்று அய்ம்பதும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் அலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார் தளபதி அவர்கள். தளபதியோடு பேசிய மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள் தோழர்கள்.
.
மூன்றாம் நாள் எனக்கும் அழைப்பு
“சங்கர், எங்க இருக்கீங்க?”
“அரியலூர்லங்க அண்ணன்”
“ஊர்ல என்ன விசேஷம்?”
“நீங்க எல்லோருக்கும் பேசினது தாங்க அண்ணா விசேஷம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, நீங்க அழைச்சு பேசியது”

************************************

அண்ணன் ஆ.ராசா தளபதியை சந்தித்திருக்கிறார்கள்.
“உங்க ஊர்காரங்க அவ்வளவு ஈசியா நம்ப மாட்டேங்கிறாங்க. நான் பேசறேன்னு உறுதிபடுத்திக்கிட்டு தான் பேசறாங்க” சிரிப்போடு தளபதி சொல்லி இருக்கிறார்கள்.

**********************************

ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதியும், காட்டுராஜாவும் தளபதியை சந்தித்தார்கள்.

“அய்யா, தெரியாம நடந்துடுச்சி. இவங்க குடும்பமே கழகக் குடுமபம். இவர் பெயர் தலைவர் பெயர் (கருணாநிதி). இவர் தம்பி பெயர் பேராசிரியர் பெயர் (அன்பழகன்). அடுத்த தம்பி பெயர் உங்கள் பெயர் (ஸ்டாலின்). இவர் தம்பிகள், நண்பர்கள் வெளி நாட்டில இருக்காங்க. அங்கிருந்து அழைக்கும் போது சமயத்தில் “பிரைவேட் நம்பர்”னு வரும். யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சு பேசிட்டாரு”
.
“பரவாயில்ல. இது சகஜம் தான்” என்ற தளபதி அவர்கள் அருகில் இருந்த அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் இவரைக் காட்டி “இவரு தான் ஃபோன்ல எங்கிட்ட சண்டை போட்டவர்” என்று சிரிக்க, பயத்தோடு போனவர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்.

# தொண்டர்களின் தோழன் !

வியாழன், 13 நவம்பர், 2014

அறிவு வரமாட்டான்

அறிவழகன்.

பென்சிலுக்கு உடை உடுத்தியது போன்ற ஒல்லியான உருவம். பென்சிலால் வரைந்தது போல மீசை. எப்போதும் சிரித்த முகம். துறுதுறுப்பான பார்வை. விறுவிறுப்பான நடை. இவை அறிவுக்கு அமைந்த அடையாளங்கள்.

                

திருத்தமானப் பேச்சு. உறுதியான நிலைப்பாடு. எந்நேரமும் கருப்பு-சிவப்பு கரை வேட்டி. ஓயாத உழைப்பு. சலியாத கழகப்பணி. கழக நிகழ்வுகள் குறித்த துல்லிய நினைவு. இவை அறிவு ஏற்படுத்திக் கொண்ட அடையாளங்கள்.

பள்ளி செல்லும் காலத்திலேயே கழக மேடைகளிலேயே அதிக நாட்டம். பாடப்புத்தகம் படித்ததை விட முரசொலி படித்ததே முதற்பணி. அரை டிராயரோடு கழக நிகழ்ச்சிகளுக்கு வரத் துவங்கிய அறிவு இங்கேயே வளர்ந்தான்.

ஓலைக் குடிசை வீடு, போக்குவரத்து வசதியில்லா கிராமம், ஊக்குவிக்க யாரும் இல்லை என இவை யாவும் அறிவை தடுத்தாலும் அறிவின் கழகப்பணி நிற்கவில்லை. மகன் அறிவு, கழக மாநாட்டுக்கு போக விருப்பப்பட்டால் அண்டா, குண்டாவை அடகு வைத்து அனுப்பிவிடும் ஏழை விவசாயி தந்தை.

உள்ளுர் நிர்வாகிகள் அறிவை ஆளாகக் கூட மதிக்காத நிலை. காரணம் தோற்றம், ஏழ்மை. ஆனாலும் தன் பணியின் மூலம் மெல்ல, மெல்ல வெளிச்சத்திற்கு வந்தான். அப்போது மாவட்ட செயலாளராக இருந்த என் தந்தையார் பார்வையில் பட்டான். அங்கீகரிக்கப்பட்டான்.

நான் மாவட்ட செயலாளராக ஆன பிறகு அறிவுக்கான முக்கியத்துவம் கூடியது. மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடக்கும் போது கூட்ட நடவடிக்கை குறிப்பேட்டில் பதியப்படும். “மினிட் நோட்” என்று சொல்லப்படும் அவை வரலாற்று ஆவணங்கள். அதை எழுதி பராமரித்தவன் அறிவு.

அடுத்து பொதுக் கூட்டங்களுக்கு துண்டறிக்கை தயாரிப்பது. அது தான் பெரிதும் அரசியலாகும். யார் பெயரை எங்கு போடுவது, எப்படிப் போடுவது எனபதில் தான் சிக்கல் வரும். ஆனால் எந்த விமர்சனமும் வராமல் அதை தயாரித்து விடுவான் அறிவு. எங்கும் கண்ணுக்கு தெரியாத செயல்பாட்டாளர்கள் ஓரிருவர் தான் இருப்பர். எனக்கு அது போல் அறிவு.

2001 உள்ளாட்சித் தேர்தல். கழகம் எதிர்கட்சி. முக்கியப் புள்ளிகள் வெற்றி தோல்விக்கு அஞ்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் (50,000 வாக்கு) பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை. வாய்ப்பு கேட்காத அறிவை கூப்பிட்டு “நிற்கிறாயா?” என்றேன். "அண்ணன் சொன்னா நின்னுடறேன்” என்றான். நின்றான். தோல்வி தான், துவளவில்லை.

அந்த தோல்விக்கு பரிசாக 2006 தேர்தலில், பலத்த போட்டிக்கிடையே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெற்றிப் பெற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினரானான். கழகப் பணிக்கு அங்கீகாரமாக, அண்ணன் ஆ.ராசா பரிந்துரையில் தொண்டரணியின் மாவட்ட துணை அமைப்பாளரானான். திருமணமானது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானான்.

2011 உள்ளாட்சித் தேர்தல். இந்த முறை தோல்வி. ஆனாலும் சலிக்காமல் தன் பணி தொடர்ந்தான். இந்த முறை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பணிக்கு பரிந்துரைத்தேன். மாநில அமைப்பாளர் அண்ணன் மா.உமாபதி கூட கிண்டலாகக் கேட்டார்,”தூணா ஆள் கொடுப்பீங்கன்னு பார்த்தேன், துரும்பா கொடுத்திருக்கீங்களே மாவட்டம்?”

கழக நிகழ்ச்சிகளின் போது கூட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பணி என்பதால் அறிவின் ஒடிசலான தேகத்தை குறித்து அப்படிக் கேட்டவர், இப்படி முடித்தார்,” ஆனா அறிவா கொடுத்திருக்கீங்க. மகிழ்ச்சி”. இப்படி அனைவரையும் பணியால் கவர்ந்தவன் அறிவு.

இந்த நிலையில் அறிவின் சொந்த வாழ்க்கையில் சிறு இடர்பாடுகள். அதற்கு தீர்வாக மதுவை நாட ஆரம்பித்தான். கண்டிக்க முற்பட்ட காரணத்தால், என் கண்ணில் படுவதை தவிர்த்தான். தீபாவளிக்கு முன்பாக அலைபேசியில் அழைத்தான்,”அண்ணா, தீபாவளிக்கு தம்பிக்கு ஒண்ணும் கவனிப்பில்லையா?”

“நீ தான் என்னைப் பார்க்காம ஓடிட்டியே தம்பி” என்றேன். “பார்க்கலன்னா, அண்ணன் விட்டுடறதா” என்றான். “தீபாவளி முடிஞ்சு அண்ணன பார்க்கறேன். அண்ணன் நினைக்கிறது போல சரியாயிடுவேன்” என்றான். எப்போதும் அண்ணன் என்ற அழைப்பு தவறாது.

அதைவிட அவனது உறவினர்கள் அவனை எப்படி அழைக்கிறார்களோ, அதே முறையில் என்னை அழைப்பார்கள். அப்படி என்னை உடன்பிறந்தவனாகவே அவர்களிடம் உணர்த்தி வைத்திருப்பான். அவனது ஊரை சுற்றியிருக்கும் ஊர்களில் கழகத் தோழர்கள் இல்ல நிகழ்ச்சியில் என்னை கொண்டு போய் நிறுத்திவிடுவான். எனது சொந்த ஊர் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டான்.

தீபாவளி முடிந்து இரண்டு நாட்களில் அறிவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி. சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதி. தொண்டையின் உட்புறம் ஒரு கட்டி. சாப்பிட முடியவில்லை, பேச முடியவில்லை. மதுப்பழக்கத்தால் கல்லீரல் பிரச்சினை. மஞ்சள் காமாலை என ஒட்டு மொத்தத் தாக்குதல்.

தன் உடல்நலம் சரியில்லாத என் தந்தையார், மருத்துவமனைக்கு சென்று அறிவை பார்த்துவிட்டு மருத்துவர்களை அழைத்து, “இவன் என் மகன். எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று சொல்லி வருமளவுக்கு அவர்களது செல்லப்பிள்ளை.

நானும் போய் பார்த்து, உயரதிகாரிகள் மூலமாக மருத்துவர்களுக்கு தகவல் சொல்லி சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டிவிட்டு வெகு நேரம் உடனிருந்தேன். கிளம்பும் போது,”3-ந்தேதி ஆர்ப்பாட்டம். 6-ந்தேதி தளபதி வருகை. இடையில் திருமணங்கள், 11-ந்தேதி உண்ணாவிரதம். 12-ந்தேதி வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு வந்தேன்.

ஆனால் அவன் முந்திக் கொண்டான். ஆம், நேற்று உயிரற்ற உடலாய் ஊர் திரும்பி விட்டான். சுற்று வட்டாரமே திரண்டுவிட்டது. இரவு 10.00 மணிக்கு உடல் எரியூட்டப்படும் வரை ஆயிரக்கணக்கானோர் அகலவில்லை. அது தான் அறிவின் பணிக்கான அடையாளம்.

மருத்துவமனையில் விடைபெறும் போது, ஒரு நிமிடம் என்ற அறிவு ஏதோ சைகை காட்டினான். எனக்கு புரியவில்லை. பேனாவையும், பேப்பரையும் வாங்கி எழுதிக் கொடுத்தான். "மினிட் நோட்டில் ஒரு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை எழுத விட்டுவிட்டேன், பேப்பரில் எழுதி வைத்திருக்கிறேன். அதை எடுத்து எழுதி விடுஙகள்"

என் கண்கள் கலங்கிவிட்டன. உயிருக்கு போராடும் நிலையிலும் கழகப்பணி தான். "உடல் நிலை சரியாகி நீயே வந்து எழுது" என்று சொல்லி வந்தேன். மினிட் காத்திருக்கிறது. அறிவு வரமாட்டான்.

# நீ என்ன வராமல் போவது, எங்களுள் தான் வாழ்கிறாய் அறிவு

                  

புதன், 12 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 3

(தொடர்ச்சி-2)

            

அடுத்த சுற்று ஒன்றியக்கழக செயலாளர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர்களுக்கானது. இந்த சுற்றில் கலந்து கொண்டவர்கள் பேசவில்லை. தளபதி மட்டுமே பேசினார்கள். அதே போல மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட சுற்றிலும் தளபதி அவர்கள் மட்டுமே பேசினார்கள்.

காரணம் இவர்கள் எல்லோரும் தளபதி அவர்களுடன் மற்ற நேரங்களில் சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளவர்கள். அதனால் தான், அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாத கிளைக்கழக நிர்வாகிகளுக்கு கலந்துரையாட அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற சுற்றில் கிடைத்த தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள் தளபதி அவர்கள். அடித்தளமாக விளங்கும் அவர்களது எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் ஈடேற்றுகிற அளவிற்கு நிர்வாகிகள் செயல்படக் கேட்டுக் கொண்டார்கள்.

கழகத்தவர் மற்றும் பொதுமக்கள் இல்ல நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்தவர்களை அன்போடு நலம் விசாரித்தார் தளபதி அவர்கள். அவர்களும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள் தளபதியிடம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் மூத்தவர் மு.கந்தசாமி அவர்களுக்கு தளபதி அவர்கள் வேட்டி அணிவித்து மரியாதை செய்தார்கள் . இவர் வயது 102. செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய செயலாளர். மூன்று முறை ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர்.

              

பெரம்பலூருக்கு தளபதி அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததில் இருந்தே ஆர்வத்தோடு தயாராகி விட்டார் அய்யா கந்தசாமி. ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க சிரமப்பட்டாலும் தளபதி அவர்கள் நிகழ்ச்சி என்றவுடன் ஒரு இளைஞரைப் போன்று துடிப்போடு வந்து விட்டார்.

அவர் தளபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து பரவசப்பட்டக் காட்சி மறக்க இயலாதது. கழகத் தொண்டர் என்ற உணர்வோடு அய்யா கந்தசாமி அவர்கள் தளபதியை சந்தித்தது குறித்து மகிழ, மூத்த கழகத் தோழரை மரியாதை செய்வித்து தளபதி மகிழ கூடியிருந்த எல்லோரும் நெகிழ்ந்து போனோம்.

அடுத்த சுற்றில் கட்சி சார்பற்ற நான்கு தொழிலதிபர்கள், இரண்டு டாக்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்கக்கூடிய நான்கு பேரை சந்தித்தார் தளபதி. பொது நிலையில் இயங்கக்கூடிய அவர்களது கருத்துகளை கேட்டு அறிந்தார்.

கடைசியாகப் பொது உறுப்பினர்கள் கூட்டம. கலந்துரையாடலின் போது கழகத் தோழர்களின் உரையின் போது, தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை, யார் சொன்னார்கள் என்று பெயர் குறிப்பிட்டு, தளபதி அவர்கள் தன் உரையில் பேசினார்கள்.

               

அந்த தோழர்களுக்கு எல்லாம் எல்லை இல்லா மகிழ்ச்சி. அடிமட்டத் தொண்டன் சொன்ன கருத்தை தளபதி கூட்டத்தில் எடுத்துரைத்து பாராட்டுகிறார் என்றால் அதற்கு மேல் என்ன வேண்டும்?

தொண்டர்கள் கருத்தைக் கேட்ட நிறைவோடு தளபதி அவர்களும், தங்கள் கருத்தைக் காது கொடுத்து கேட்கும் தலைவனை பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு கழகத் தோழர்களும் அடுத்த இலக்கை நோக்கியப் பயணத்தை துவக்கினார்கள்.

# இதன் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் !

திங்கள், 10 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 2

“ஒவ்வொருவராக கருத்து சொன்னோம். இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டார். முடிக்கும் போது ‘இன்னும் ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் பேசியதை ஓரமாக உட்கார்ந்திருந்தவர் குறிப்பு எடுத்துக் கொண்டார்”

       

“நாங்கள் கூட போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு நேரம் எங்களோடு செலவிடுவார் என நினைக்கவில்லை” என்றனர் ஆய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்.

அடுத்து கழக இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி தோழர்கள் கலந்து கொண்ட ஆய்வு. எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். எல்லோருடையக் கருத்துகளும் குறிப்பெடுக்கப்பட்டிருக்கிறது, சகோதரர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால்.

அடுத்து மகளிரணியை சேர்ந்தோர் மட்டும். இவர்களில் யார் கலந்து கொள்வது என்பதை, நிர்வாகிகள் பட்டியலை கொண்டு ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்து, தலைமைக் கழகத்தில் இருந்தே நேரடியாக அழைப்பு அனுப்பப் பட்டது. அப்போது சிலருக்கு வெளி உலகமே தெரியாதே, இவர்கள் தளபதி முன்னால் எப்படி பேசப் போகிறார்களோ என்ற கமெண்ட்டும் எழுந்தது. ஆனால் இந்தப் பெண்கள் தான், பொதுமக்கள் கருத்தை அப்படியே பிரதிபலித்திருகிறார்கள், “எது தேவையோ அதை”.

இன்னும் தளபதி அவர்கள் வார்த்தையில் சொன்னால், “நான் இப்போ தான் முதன்முதலா மைக்ல பேசறேன். தப்பிருந்தா மன்னிச்சுக்குங்க என்று ஆரம்பித்த பெண் சிறப்பாக பேசினார். முதலில் பேசவே தயங்கிய பெண்கள், மற்றவர்கள் பேசியதை பார்த்துவிட்டு பிறகு மைக் வாங்கி நல்ல கருத்துகளை வழங்கினார்கள்”

அடுத்த சுற்று கிளைக்கழக நிர்வாகிகள். இவர்கள் தான் கழகத்தின் அடித்தளம். இவர்கள் தலைமையை சந்திக்க வாய்ப்பே இல்லாதவர்கள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றி வலு சேர்க்கிறவர்கள். இவர்களோடு அதிக நேரம் செலவிட்டார் தளபதி.

மேலமைப்பு நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும், கழகம் எப்படி தேர்தலை எதிர் கொள்ள வேண்டும், மக்களை எப்படி அணுக வேண்டும் என்று கள நிலவரத்தோடு அவர்கள் சொன்னதை உன்னிப்பாக உள் வாங்கிக் கொண்டார், என்பதில் அவர்களுக்கு ஆனந்தம்.

அதைவிட ஆனந்தம் ஒன்று அவர்களுக்கு. தங்கள் வாழ்நாளில் தலைவர், தளபதியோடு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, தளபதியே அழைத்து ஒவ்வொருவருடனும் தனியாக நின்று, அவர்கள் தோளில் கைப்போட்டுக் கொண்டு ஃபோட்டோ எடுத்து, அதை அங்கேயே பிரிண்ட் போட்டு கையில் கொடுக்க, வாழ்நாள் மகிழ்ச்சி அவர்களுக்கு.

       

அடுத்து ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டார்கள். அவர்களோடும் அதிக நேரம் செலவிட்டார்கள் தளபதி அவர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் சில கருத்துகள் திரும்ப, திரும்ப சொல்லப்படும். ஒருவர் பேசியதையே இன்னொருவர் வேறு வடிவத்தில் சொல்வார், பொருள் ஒன்றாக இருக்கும்.

அது போன்ற நேரங்களில் நாமாக இருந்தால், “புரியுது. அடுத்த விஷயத்திற்கு போங்க” என்று சொல்லி விடுவோம். ஆனால் தளபதி அவர்கள் பொறுமையாக, உன்னிப்பாக, முகம் சுளிக்காமல் அனைவர் கருத்தையும் கேட்டுக் கொள்வது தான் இந்த ஆய்வின் வெற்றியே.

அடுத்த சுற்று....
(தொடரும்)

சனி, 8 நவம்பர், 2014

ஆய்வுப் பணி - தளபதி வருகை

      
தஞ்சையிலிருந்து தளபதி அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று அலைபேசி செய்தி. நாங்கள் மாவட்ட எல்லையான திருமானூரில் கூடி வரவேற்பு கொடுத்தோம். அண்ணன் ஆ.ராசா அவர்களும் சுபா.சந்திரசேகர் அவர்களும் தஞ்சை சென்று அழைத்து வந்தார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கே பொதுக்கூட்டம் போல் கழகத் தோழர்கள் கூடிவிட்டனர்.



அடுத்து பெரம்பலூர் மாவட்டக் கழக சார்பாக குன்னத்தில் வரவேற்பளித்தனர்.

பெரம்பலூர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் அலுவலகத்தை அடையும் போது மணி இரவு 10.00. உடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் விடை பெற்று சென்றனர்.

அதற்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் விடை பெற்ற பிறகு இரவு உணவு அருந்த சென்றார்கள். உணவருந்தி படுக்க இரவு 11 ஆகியிருக்கும். காலை 05.30க்கு எழுந்து, தயாராகி நடைபயிற்சி மேற்கொள்ள சென்றார்கள். இது 06.11.2014.

03.11.2014 அன்று சென்னையிலிருந்து இந்த சுற்றுப்பயணம் துவங்கியது. அன்று அதிமுக அரசால் பால் விலை, மின் கட்டணம் ஏற்றப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் போர்பாட்டில் வடசென்னை மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு புதுக்கோட்டைக்கு கிளம்பினார்கள் தளபதி.

04-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிளைக்கழக ஆய்வு நிகழ்ச்சிகள். 05-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு நிகழ்ச்சிகள். அது முடித்து தான் 06-ம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான ஆய்வு நிகழ்ச்சிகள்.

               

காலை 09.00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்பகம் கலை அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு தயார் செய்தார். சரியாக 08.50, தளபதி அவர்கள் வந்துவிட்டார்கள். ஆய்வு துவங்கியது. நேரந் தவறாமையின் சின்னமாக விளங்குகிறார்.

முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல். நிர்வாகிகள் யாரும் பங்கேற்பது கிடையாது. தளபதி அவர்கள் மட்டுமே. காரணம், ஆய்வில் பங்கேற்பவர்கள் அப்போது தான் யாரை கண்டும் தயங்காமல் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பார்கள் என்பதால்.

 நிர்வாகிகள் வாயிலில் நின்று வரவேற்றோம்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஆய்வு முடிந்தது. முடிந்து வெளியே வந்த மாணவர்கள் முகத்தில் எல்லையற்ற ஆனந்தம். ஒரு மாணவரை அழைத்து காரணம் கேட்டோம்.

“இவ்வளவு பெரியதலைவரிடம் என்ன சொல்வது என்று திகைத்தோம். அவர் எங்கள் பெயரை சொல்லி அழைத்து பேச சொன்ன போது தயக்கம் விலக ஆரம்பித்தது”…….

(தொடரும்)

சனி, 1 நவம்பர், 2014

அண்ணன் ஜேட்லிஜி அண்ட் மோசடிஜிக்களின் புதிய பிரசங்கங்கள்

அண்ணன் ஜேட்லிஜியும், அண்ணன் மோடிஜியும் சி.ஏ.ஜி பத்தி புதுப்புது கண்டுபிடிப்பா அடிச்சு உடுறாங்க.....

                        

**************************************
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "சி.ஏ.ஜி தான் கண்டறிபவைகளை கொண்டு, தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்" என்று புதன்கிழமையன்று கேட்டுக் கொண்டார், இதே கோணத்தில் தான் காங்கிரஸ் 2G மற்றும் நிலக்கரி ஒதுக்கீட்டினால் தேசத்திற்கு நட்டம் என்று செய்திகள் வந்த போது ஏற்கனவே குரல் எழுப்பியது. – டைம்ஸ் ஆப் இந்தியா.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CCYQFjAC&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-should-not-sensationalize-its-findings-Arun-Jaitley-says%2Farticleshow%2F44972857.cms&ei=nstTVI3gNIG9mgWskILgCg&usg=AFQjCNHiWnxjg_2-BxX4v50MWE0VCtQnQA&sig2=t75kTA0UmAS9R1Htu19nnw

****************************************

இன்னும் அவர் பேசியவைகளை பார்த்தால், இவர் ஏற்கனவே பேசுனதல்லாம் “கஜினி” திரைப்படத்தில் வர்றது போல் பச்சை குத்திவிடனுமோன்னு தோனுது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் இதே சி.ஏ.ஜி பரபரப்பாக 2ஜி குறித்து ஆய்வறிக்கையை “திருட்டுத் தனமாக” வெளியிட்ட போது, அதை கையில் வைத்துக் கொண்டு, பாஜக-வினர் பாராளுமன்றத்தை மாதக் கணக்கில் நடத்த விடாமல் முடக்கிப் போட்ட போது இதே அண்ணன் அருண் ஜேட்லியும் அங்க தான் இருந்தார்.

இவரு தான் இப்ப சி.ஏ.ஜி-க்கு அறிவுரை சொல்லி இருக்கார் என நினைக்காதீங்க. பெரியண்ணன் மோடி இன்னும் ஒரு படி மேல போய் சொன்னாரு,”எதிரிகளை தாக்குவதற்காக சி.ஏ.ஜி-யை அரசியல் ஆயுதமாக பயன் படுத்தக் கூடாது”.

இத எப்போ சொன்னாருன்னு கேப்பீங்க. அப்போ தான் அவரு நம்மை எல்லாம் "உய்விக்க தேவதூதரா அவதாரம்" எடுக்க “வைக்கப்பட்ட” நேரம். ஆமாங்க பிரதமர் ஆன நேரம். இத எங்க சொன்னாருன்னு கேக்குறீங்களா ? பிரதமரா ஆன உடனே பெரியண்ணனுக்கு குஜராத் சட்டமன்றத்துல பிரிவு உபச்சார விழா கொடுத்தாங்க. அங்க தான் மே21 அன்னைக்கு முழங்குனாரு.

அதுக்கு லிங்க்: https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=9&cad=rja&uact=8&ved=0CFEQFjAI&url=http%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fallaboutnarendramodi%2Fnarendra-modi-bids-farewell-to-gujarat-assembly%2Farticle1-1221447.aspx&ei=ANJTVM1658ebBfTcgaAD&usg=AFQjCNFo13BcP03VC_8lTmWYiVSKEpYZ9A&sig2=T2Bw_ppUCWg0SYX2Ge1vSw

***********************************************
தேர்தல் நேரத்துல 2ஜி, நிலக்கரி ஊழல்ன்னு சி.ஏ.ஜி அறிக்கையை காட்டி முழங்கி ஆட்சிய பிடிச்சவரு ஏன் இப்படி திடீர்னு யூ-டர்ன் அடிச்சி நோ-என்ட்ரில பூந்தாருன்னு சந்தேகம் வரும். ஜூலை மாசம் இதே சி.ஏ.ஜி “குஜராத் அரசு ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் அதிகபட்ச லாபம் பெறுவதற்கு தவறான வழியில் உதவியிருக்கிறது” அப்படின்னு குற்றம் சாட்டப் போவுதுன்னு தெரிஞ்சிருக்கு.

அதுக்கு லிங்க் :https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0CCUQFjAB&url=http%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Findia-others%2Fcag-raps-gujrat-govt-for-extending-undue-benefits-to-reliance-essar%2F&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNE_0mVtPl5MSMkp9SEkRklGIAqiUQ&sig2=8mYh_rxkUnbNl0rFxcea0A

***********************************************
இது எப்புடி முன்னாடியே பெரியண்ணனுக்கு தெரிஞ்சதுன்னு கேக்கறீங்களா ? சி.ஏ.ஜி அலுவலகத்திலேருந்து ஏற்கனவே 2ஜி ரிப்போர்ட திருடி கொடுத்த குரூப், பெரியண்ணன் பிரதமர் ஆன பிறகு கொடுக்காம இருப்பாங்களா ?

இது தான் பெரியண்ணனுக்கு முதல்முறையான்னா, அதுவும் கிடையாது. ஏற்கனவே பெரியண்ணனின் அரசாங்கத்தால் 17,000 கோடி நட்டம்னு சி.ஏ.ஜி சொல்லி இருக்கு

அதோட லிங்க் ;https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB4QFjAA&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-raps-Narendra-Modi-govt-for-Rs-17000-cr-losses%2Farticleshow%2F12476483.cms&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNFfdgzwCLCmSeKhnMad1DWO8H1JeQ&sig2=5dVHpbh_5Dm_XQlt189FIA

***********************************
இப்ப சின்ன அண்ணன் அருண் ஜேட்லி சி.ஏ.ஜி-க்கு சொல்லி இருக்கற அறிவுரையா பார்த்தா, அடுத்தாப்ல ஏதோ அறிக்கை வரப் போவுதோன்னு சந்தேகமா இருக்கு. சரி, அது வரட்டும் பாத்துப்போம்.

இதே சி.ஏ.ஜி அறிக்கையை வச்சிகிட்டு தான 2ஜி-ல அந்தக் கூத்து அடிச்சீங்க. எங்க அண்ணன் ராசாவை விசாரணையிலேயே சிறையடைக்க வச்சீங்க. நீங்களே தீர்ப்பு கொடுத்தீங்க.

# அப்ப எங்களுக்கு வந்தது ரத்தம் இல்லியா ஜேட்லிஜி அண்ட் மோசடிஜி ?