பிரபலமான இடுகைகள்

திங்கள், 10 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 2

“ஒவ்வொருவராக கருத்து சொன்னோம். இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டார். முடிக்கும் போது ‘இன்னும் ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் பேசியதை ஓரமாக உட்கார்ந்திருந்தவர் குறிப்பு எடுத்துக் கொண்டார்”

       

“நாங்கள் கூட போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் இவ்வளவு நேரம் எங்களோடு செலவிடுவார் என நினைக்கவில்லை” என்றனர் ஆய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்.

அடுத்து கழக இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி தோழர்கள் கலந்து கொண்ட ஆய்வு. எல்லோருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். எல்லோருடையக் கருத்துகளும் குறிப்பெடுக்கப்பட்டிருக்கிறது, சகோதரர் மகேஷ் பொய்யாமொழி அவர்களால்.

அடுத்து மகளிரணியை சேர்ந்தோர் மட்டும். இவர்களில் யார் கலந்து கொள்வது என்பதை, நிர்வாகிகள் பட்டியலை கொண்டு ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்து, தலைமைக் கழகத்தில் இருந்தே நேரடியாக அழைப்பு அனுப்பப் பட்டது. அப்போது சிலருக்கு வெளி உலகமே தெரியாதே, இவர்கள் தளபதி முன்னால் எப்படி பேசப் போகிறார்களோ என்ற கமெண்ட்டும் எழுந்தது. ஆனால் இந்தப் பெண்கள் தான், பொதுமக்கள் கருத்தை அப்படியே பிரதிபலித்திருகிறார்கள், “எது தேவையோ அதை”.

இன்னும் தளபதி அவர்கள் வார்த்தையில் சொன்னால், “நான் இப்போ தான் முதன்முதலா மைக்ல பேசறேன். தப்பிருந்தா மன்னிச்சுக்குங்க என்று ஆரம்பித்த பெண் சிறப்பாக பேசினார். முதலில் பேசவே தயங்கிய பெண்கள், மற்றவர்கள் பேசியதை பார்த்துவிட்டு பிறகு மைக் வாங்கி நல்ல கருத்துகளை வழங்கினார்கள்”

அடுத்த சுற்று கிளைக்கழக நிர்வாகிகள். இவர்கள் தான் கழகத்தின் அடித்தளம். இவர்கள் தலைமையை சந்திக்க வாய்ப்பே இல்லாதவர்கள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றி வலு சேர்க்கிறவர்கள். இவர்களோடு அதிக நேரம் செலவிட்டார் தளபதி.

மேலமைப்பு நிர்வாகிகள் எப்படி பணியாற்ற வேண்டும், கழகம் எப்படி தேர்தலை எதிர் கொள்ள வேண்டும், மக்களை எப்படி அணுக வேண்டும் என்று கள நிலவரத்தோடு அவர்கள் சொன்னதை உன்னிப்பாக உள் வாங்கிக் கொண்டார், என்பதில் அவர்களுக்கு ஆனந்தம்.

அதைவிட ஆனந்தம் ஒன்று அவர்களுக்கு. தங்கள் வாழ்நாளில் தலைவர், தளபதியோடு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, தளபதியே அழைத்து ஒவ்வொருவருடனும் தனியாக நின்று, அவர்கள் தோளில் கைப்போட்டுக் கொண்டு ஃபோட்டோ எடுத்து, அதை அங்கேயே பிரிண்ட் போட்டு கையில் கொடுக்க, வாழ்நாள் மகிழ்ச்சி அவர்களுக்கு.

       

அடுத்து ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகள் அழைக்கப்பட்டார்கள். அவர்களோடும் அதிக நேரம் செலவிட்டார்கள் தளபதி அவர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளில் சில கருத்துகள் திரும்ப, திரும்ப சொல்லப்படும். ஒருவர் பேசியதையே இன்னொருவர் வேறு வடிவத்தில் சொல்வார், பொருள் ஒன்றாக இருக்கும்.

அது போன்ற நேரங்களில் நாமாக இருந்தால், “புரியுது. அடுத்த விஷயத்திற்கு போங்க” என்று சொல்லி விடுவோம். ஆனால் தளபதி அவர்கள் பொறுமையாக, உன்னிப்பாக, முகம் சுளிக்காமல் அனைவர் கருத்தையும் கேட்டுக் கொள்வது தான் இந்த ஆய்வின் வெற்றியே.

அடுத்த சுற்று....
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக