பிரபலமான இடுகைகள்

புதன், 12 நவம்பர், 2014

தளபதி ஆய்வு மற்றும் கலந்துரையாடல் - 3

(தொடர்ச்சி-2)

            

அடுத்த சுற்று ஒன்றியக்கழக செயலாளர்கள் மற்றும் நகரக் கழகச் செயலாளர்களுக்கானது. இந்த சுற்றில் கலந்து கொண்டவர்கள் பேசவில்லை. தளபதி மட்டுமே பேசினார்கள். அதே போல மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட சுற்றிலும் தளபதி அவர்கள் மட்டுமே பேசினார்கள்.

காரணம் இவர்கள் எல்லோரும் தளபதி அவர்களுடன் மற்ற நேரங்களில் சந்திக்க அதிகம் வாய்ப்புள்ளவர்கள். அதனால் தான், அதிகம் சந்திக்க வாய்ப்பில்லாத கிளைக்கழக நிர்வாகிகளுக்கு கலந்துரையாட அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற சுற்றில் கிடைத்த தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள் தளபதி அவர்கள். அடித்தளமாக விளங்கும் அவர்களது எதிர்பார்ப்பையும் எண்ணத்தையும் ஈடேற்றுகிற அளவிற்கு நிர்வாகிகள் செயல்படக் கேட்டுக் கொண்டார்கள்.

கழகத்தவர் மற்றும் பொதுமக்கள் இல்ல நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்தவர்களை அன்போடு நலம் விசாரித்தார் தளபதி அவர்கள். அவர்களும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள் தளபதியிடம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எங்கள் மாவட்டத்தின் மூத்தவர் மு.கந்தசாமி அவர்களுக்கு தளபதி அவர்கள் வேட்டி அணிவித்து மரியாதை செய்தார்கள் . இவர் வயது 102. செந்துறை ஒன்றியத்தின் முதல் ஒன்றிய செயலாளர். மூன்று முறை ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர்.

              

பெரம்பலூருக்கு தளபதி அவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததில் இருந்தே ஆர்வத்தோடு தயாராகி விட்டார் அய்யா கந்தசாமி. ஒரு விபத்தில் கால் முறிந்து நடக்க சிரமப்பட்டாலும் தளபதி அவர்கள் நிகழ்ச்சி என்றவுடன் ஒரு இளைஞரைப் போன்று துடிப்போடு வந்து விட்டார்.

அவர் தளபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து பரவசப்பட்டக் காட்சி மறக்க இயலாதது. கழகத் தொண்டர் என்ற உணர்வோடு அய்யா கந்தசாமி அவர்கள் தளபதியை சந்தித்தது குறித்து மகிழ, மூத்த கழகத் தோழரை மரியாதை செய்வித்து தளபதி மகிழ கூடியிருந்த எல்லோரும் நெகிழ்ந்து போனோம்.

அடுத்த சுற்றில் கட்சி சார்பற்ற நான்கு தொழிலதிபர்கள், இரண்டு டாக்டர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இயங்கக்கூடிய நான்கு பேரை சந்தித்தார் தளபதி. பொது நிலையில் இயங்கக்கூடிய அவர்களது கருத்துகளை கேட்டு அறிந்தார்.

கடைசியாகப் பொது உறுப்பினர்கள் கூட்டம. கலந்துரையாடலின் போது கழகத் தோழர்களின் உரையின் போது, தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை, யார் சொன்னார்கள் என்று பெயர் குறிப்பிட்டு, தளபதி அவர்கள் தன் உரையில் பேசினார்கள்.

               

அந்த தோழர்களுக்கு எல்லாம் எல்லை இல்லா மகிழ்ச்சி. அடிமட்டத் தொண்டன் சொன்ன கருத்தை தளபதி கூட்டத்தில் எடுத்துரைத்து பாராட்டுகிறார் என்றால் அதற்கு மேல் என்ன வேண்டும்?

தொண்டர்கள் கருத்தைக் கேட்ட நிறைவோடு தளபதி அவர்களும், தங்கள் கருத்தைக் காது கொடுத்து கேட்கும் தலைவனை பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியோடு கழகத் தோழர்களும் அடுத்த இலக்கை நோக்கியப் பயணத்தை துவக்கினார்கள்.

# இதன் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக