பிரபலமான இடுகைகள்

சனி, 20 ஜூன், 2015

பறவைகள் மீண்டும் கூட்டிற்கு...

"எலெக்ட்ரிகல்ல யார் யார் வந்திருக்காங்க?".  "ஜெர்மனியிலே இருந்து ஹரி வந்துட்டான். ராமசுப்பு துபாயில் இருந்து மும்பை வந்துட்டான், நாளை சென்னை. துபாய் மோகன் வந்தாச்சி. சிங்கப்பூர் வெங்கட்ரமணன் பெங்களூரு வந்துட்டான். சுகுமார் ஹைதராபாத்லருந்து சிதம்பரம் போயிட்டான். நாளை வரான்".

"ஹரி எங்கருக்கான், போன் போடும்மா". "ஹரி, விடிகாலை வந்திருக்கான், இப்போ நேச்சுரல்ஸ் போயிருக்கானாம்". "ஏண்டா, வந்த உடனே அங்க போயிட்டான். ஜெர்மனில சலூனே இல்லியா?" ராம்ஸ் ஃபார்முக்கு வந்துட்டான். இனி ரெண்டு நாள் துவம்சம் தான்.

"எங்கப்பா இந்த சிங்கப்பூர் குரூப்பு?". "அவிங்க ஃப்ளைட் நேரா கோடம்பாக்கம் துளசி பார்க் ஹோட்டல்ல லேண்ட் ஆயிடுச்சாம். அங்க தான் இருக்குதுங்க அந்த குரூப்பு ". "இப்பவே இந்த நக்கல் நையாண்டின்னா ரெண்டு நாள் தாங்குமாடா?". "ஏய், ஏண்டா, இதெல்லாம் பார்த்தது தானேடா"

சிவில் அண்ட் ஸ்ட்ரக்சுரல் டிபார்ட்மெண்ட்க்கும் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்க்கும் இருந்த போட்டியில் சி.எஸ் முந்தியது. ஆமாம் சி.எஸ்சிலிருந்து 30க்கும் மேல வர்றாங்க. சிலர் திடீர்னு வரலன்னு சொல்றாங்க, சிலர் இப்போ வர்றேன்னு சொல்றாங்க. ஆனா கணக்கு பேலன்ஸ்டா போயிகிட்டிருக்கு.

சிங்கப்பூர் கலைவாணன் சென்னை  வந்து சேர்ந்த கதை தான் நாளைய நிகழ்ச்சிக்கு செம டிரெய்லர்.

சிங்கப்பூர். கலை அட்வான்ஸா ரெடியாயிட்டதா நினைச்சி வீட்டில் ஹாயா உட்கார்ந்திருக்கும் போது தான் ஃபோன். "ஏர்போர்ட் போயிட்டியா?" மணி கேட்க, "ஏன்டா, என்ன அவசரம்?". "டிக்கெட் எடுத்து போர்டிங் டைம் பாரு".  டிக்கெட்டை எடுத்து கலை பார்க்க, நேரத்தை மாற்றி நினைச்சிக்கிட்டிருந்தது தெரிஞ்சுது.

டென்ஷனான கலை, தன்னோட டிக்கெட் போட்ட முகிலுக்கு போன் அடிக்க,"மாம்ஸு டைம் பார்க்கறது இல்லியாடா?". "நானே மணி சொல்லி இப்ப தான் கிளம்புறேன். வந்து சேரு". முகில் வீடு ஏர்போர்ட்டுக்கு அருகில் இருப்பதால், அவர் செக் இன் டைமுக்கு சென்று விட்டார்.

கலை நேரத்திற்குள் வந்து சேருவது சிரமம் என்பது தெரிந்தது. கவுண்டரில் போய் முகில், "டிராபிக்ல மாட்டி வந்து கிட்டு இருக்காங்க. கொஞ்சம் டைம் வேணும்" சொல்ல, "வரட்டும் பார்ப்போம்" என்று பதில்.

என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் உட்கார, பக்கத்து சேரில் அதை விட சோகமாக ஒரு நபர். கலைக்கு போன் செய்ய, "நல்ல நேரமா டிராபிக் இல்ல மாம்ஸ். வந்துகிட்டிருக்கோம்". இப்போ பக்கத்து நபருக்கு ஃபோன். டென்ஷனாக, "எப்ப வருவீங்க?" எனக் கேட்டு அமைதியாகி இருக்கிறார்.

'ஆஹா, நமக்கு கம்பெனி சிக்கிட்டாண்டா' என முகில் அவரைப் பார்க்க, அந்த நபர் யூனிஃபார்மில் இருந்தார். விமானி யூனிஃபார்ம். அதே விமானத்தின் விமானி. 'அப்பா, இவருக்கு வேண்டியவரே வரனுமா? தப்பிச்சோம்'.

15 நிமிடங்கள் கழித்து, விமானியோட ஆள் வந்து சேர்ந்தார். எதையோ கொடுத்தார். விமானியின் ஐ.டி கார்டு. தலைவர் ரூமிலேயே அதை விட்டுவிட்டு வந்துவிட, அதனால் விமானத்திற்கு  அனுமதிக்கவில்லை. கெஞ்சி , கதறி இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் கூடுதலாக செக் இன்னிற்கு பர்மிஷன் வாங்கி கலையை, விமானத்தில் ஏற்றி விட்டார் முகில்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் சாதித்த தமிழன் முகில் வாழ்க. நாளைய சந்திப்பில் இன்னும் எத்தனை கதைகளோ..

# 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற பறவைகள் இன்று (20.06.2015) மீண்டும் ஒரு கூட்டில்...                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக