பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இயங்கிக் கொண்டே இருப்பவர்...

இவர் எப்படி இப்படி இயங்குகிறார், இவர் எப்படி. இப்படி உழைக்கிறார், இவர் எப்படி இப்படி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என பிரமிக்க வைக்கிற தலைவர் ஒருவர் உண்டென்றால், அவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

முதல் நாள் கன்னியாகுமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி வரும். மறுநாள் திருவள்ளூரில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற செய்தி வரும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாள் என சுற்றுப் பயணங்கள்.

இந்த சுற்றுப்பயணங்களுக்கு இடையில் ஒரு நாள் சென்னை என்றால், தனது தொகுதியான கொளத்தூரில் இருப்பார். மாலை அறிவாலயத்தில் கழகப் பணி. சட்டமன்றம் நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைத்து வாதாடுவார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கிறவர் அவர்.

ஆனால் இந்த செய்திகள் மக்களை சென்றடைகிறதா என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. காரணம் அவர் மாவட்டங்களில் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகள், அந்தந்த மாவட்ட செய்திதாள்களில் இடம் பெறும். மற்ற மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

முரசொலியில் இந்த செய்திகள் வரும். ஆனால் அதை கழகத் தோழர்கள் மாத்திரமே படிப்பார்கள் . தொலைக்காட்சிகள் பரபரப்பு செய்திகளின்  பின் ஓடுவதால் , குறிப்பிட்ட நேரமே இந்த செய்திகள் இடம் பெறும்.

தளபதி அவர்கள் முகநூலில் இணைந்த பிறகு, இந்தக் குறை சற்று நீங்கியது. தளபதி அவர்கள் கலந்து கொள்கிற நிகழ்வுகள், நாட்டு நடப்பு குறித்த அவரது கருத்துக்களை தெரிந்துக் கொள்ள ஏதுவானது.

இப்போது அதில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் தளபதி அவர்கள். 'M.K. Stalin’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயலி பதிவிறக்கம் குறித்த சுட்டிகள் :-

Android - http://bit.ly/1LDtuem
iOS - http://bit.ly/1F94HtB
Windows - http://bit.ly/1Ju2yNm

அவர் செய்திகளை அறிவதற்கு மாத்திரம் இல்லாமல், நாட்டின் பிரச்சினைகள் குறித்தும், அவரது தொகுதி குறித்தும். நமது கருத்துக்களை  தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் தளபதி.

திமுகவை சேர்ந்தவர்கள் மாத்திரம் அல்ல, மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் அவரை தொடர்ந்தால் அவர் குறித்த கண்ணோட்டம் மாறும்.

அரசியல் மீது வெறுப்பு கொண்டவர்களும் இந்த செயலி மூலம் அவரது இடையறதா பணி குறித்து அறிந்தால், அவர்களுக்கு அரசியல் குறித்த பார்வை மாறும்.

# இயங்கிக் கொண்டே இருப்பவரை தொடர்வோமே, நாமும் இயங்குவோமே !       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக