பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 நவம்பர், 2015

வெள்ளத்தில் மூழ்கும் தமிழகம்

அவர் முதல்வர் அல்ல, எதிர்கட்சித் தலைவரும் அல்ல, ஆனால் அவர் தான் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் கடமையாளர்.  தான் இயங்கினால், தானாக எல்லாம் இயங்கும்  என்பதை தளபதி உணர்ந்திருப்பார் போலும்.

நமக்கு நாமே பயணம் மூன்று கட்டமாக முடிந்திருந்தது அப்போது. 11,000 கிலோமீட்டர் தூர நீண்ட பயணம். ஒவ்வொரு நாளும் காலை 08.00 மணிக்கு தயாரானால், நிகழ்ச்சி முடிவு இரவு 10.00க்கா, 12.00க்கா என்பது யாருக்கும் தெரியாது. அப்போது தான் இரவு உணவு.

இப்படியே நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, வாகனப் பயணமாக சென்று மக்களை சந்தித்து வந்த நேரம் அது. ஒரு நாள் பயணத்திற்கே ஒய்வு தேவை என்பது பலரின் நிலை இன்று. ஆனால் இவருடையதோ இடையறதா, ஓய்வில்லாதப் பயணம்.

அதனால் அவர் ஓய்வெடுப்பார் என்று நினைத்திருக்கும் போது தான் அந்த செய்தி. கடலூர் மாவட்டம் கன மழையால் பாதித்தது என்ற செய்தி.

மொத்த மாவட்டமும் நீரில் மிதக்கிறது. நெய்வேலியில் ஒரே நாளில் 47 செ.மீ மழை. இது வரை காணாத வெள்ளம். பல ஊர்களில் சாலையை காணவில்லை. குறிஞ்சிப்பாடி பகுதியில் வீடுகள் இடிந்தன. ஒவ்வொரு நாளும் உயிர்சேதக் கணக்கு கூடுகிறது. இப்படி கடலூர், "கண்ணீர் ஊர்" ஆனது.

கடலூர் மாவட்டம் அவர் தொகுதியும் அல்ல. அங்கு திமுக எம்.எல்.ஏக்கள் யாருமில்லை. ஆனாலும் அவர் விரைந்தார். ஒவ்வொரு பகுதியாக சென்றார். மக்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார், தேற்றினார்.

சென்னையிலும் தன் தொகுதியான 'கொளத்தூரோடு' பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை அவர். எங்கெங்கு பாதிப்போ, அங்கெல்லாம் சென்றார். முழங்கால் அளவு நீரில் அசராமல் நடந்தார். கழிவு நீரும்  சில இடங்களில் கலந்தே சென்றது.

வாகனம் செல்லாத இடங்களில் இரு சக்கர வாகனமான ஸ்கூட்டியில் சென்றார். எப்படியோ, எந்த வகையிலோ பாதிக்கப்பட்டோரை சென்றடைந்தார். ஆறுதல் கூறினார், நிவாரண உதவிகளை வழங்கினார்.

தெருவில் சாக்கடை கலந்த நீர் பெருக்கெடுத்தாலே, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் பலர். வெள்ளம் பெருக்கெடுத்தாலே சிலர் வெளியே வரமாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் பலர் அப்படித் தான்.

ஆனால் இவர் வந்தார், இவர் மட்டுமே வந்தார்.

இதை சில அறிவாளிகள் 'நாடகம்' என்று எள்ளி நகையாடுகிறார்களாம்.

இருக்கட்டும், தன் சகோதரன் அடிப்பட்டால் துடிப்பதையும் நாடகம் என்று அவர்கள் சொல்வார்களேயானால், அதில் நாம் சிறந்த நடிகராக இருப்பது தவறு இல்லை.

தன்னலம் மறந்து, பொது நலம் காக்கின்ற தலைவன் அவர். அவர் நடிகர் என்றால், நாமெல்லாம் நடிகர்களாக முயற்சிக்க வேண்டும்.

# இவரது அன்பு வெள்ளத்தில் மூழ்குகிறது தமிழகம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக