பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 டிசம்பர், 2015

மூத்தவரை வணங்குவோம்

1977ல் தமிழகம் ஒரு ஆட்சி மாற்றம் கண்டு எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். அப்போது பெரம்பலூர், கரூர், அரியலூர் எல்லாம் சேர்ந்து ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். மாவட்டத்தில் மொத்தம் 18 தொகுதிகள்.

அதில் திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு இடங்களில் தான் வெற்றி பெற்றது. ஒன்று திருவெறும்பூர், வெற்றி பெற்றவர் கே.எஸ்.முருகேசன். இன்னொரு தொகுதி அரியலூர், வெற்றி பெற்றவர் அய்யா த.ஆறுமுகம்.

மீண்டும் 1980ல் எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். ஆனால் அரியலூர் தொகுதியில் கழகமே வெற்றி. அய்யா ஆறுமுகம் அவர்கள் தான் வெற்றி பெற்றவர். சட்டமன்றத்தில் கழகக் குரலாக கம்பீரமாக ஒலிப்பார்.

எம்.ஜி.ஆர் அவர்களே ஒரு கட்டத்தில் ஆள் விட்டு இவரை அ.தி.மு.கவிற்கு அழைத்தார். ஆனால் அய்யா மறுத்துவிட்டார். கலைஞர் தான் என் தலைவர், கழகம் தான் என் இயக்கம் என தெளிவாக சொல்லி விட்டார்.

ஆளுங்கட்சி அனுகூலங்களை சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் அசையவில்லை. அது தான் அய்யா ஆறுமுகம் அவர்கள். அரியலூர் ஆறுமுகம் என்று அன்றையக் காலக்கட்டத்தில் தமிழகம் முழுதும் அறிமுகம்.

இன்றும் மூத்தவர்கள் அரியலூர் என்றால் அவர் பெயரை தான் உச்சரிப்பார்கள். அரியலூர் தொகுதியில் எம்.எல்.ஏ என்றாலே அவர் பெயர் தான் மக்களுக்கு இன்றும்  நினைவு வரும்.

1984ல் மீண்டும் தேர்தல். இந்திராகாந்தி இறப்பும், எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவும் தேர்தல் முடிவுகளை பாதித்தன. அரியலூர் வெற்றி வாய்ப்பு பறி போனது. ஆனால் 1989ல் அரியலூரை மீண்டும் அய்யா த.ஆறுமுகம் அவர்கள் கைப்பற்றினார்கள்.

1996ல் அரியலூர் ஒன்றியப் பெருந்தலைவர். இவரது மேடைப் பேச்சு ரசிக்க வைக்கும். தொகுதியின் ஒரு முனையில் இருக்கும் கிராமத்தில் கழக ஆட்சியில் நடைபெற்ற பணிகளை சொல்ல ஆரம்பித்து, இன்னொரு முனையில் இருக்கும் கிராமத்தில் நடைப்பெற்ற பணிகளை சொல்லி முடிப்பார்.

கழகத்தில் கிளை செயலாளர், ஒன்றிய துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட அவைத் தலைவர் என அயராமல் கழகத்திற்கும், மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

அய்யா ஆறுமுகம் அவர்களுக்கு இன்று 83வது பிறந்தநாள். நேரில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றோம்.

# வணங்குவோம், வாழ்த்துவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக