tag:blogger.com,1999:blog-55468501886129000782024-03-13T05:39:20.648+05:30சிவசங்கர்.எஸ்.எஸ்அனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.comBlogger640125tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-83251294398874934212017-08-31T12:42:00.001+05:302017-08-31T12:43:58.978+05:30இராஜேந்திர சோழங்குறிச்சி !<p dir="ltr">சோழங்குறிச்சி , அரியலூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமம். உடையார்பாளையம் பேரூரில் இருந்து சற்றே உள்ளடங்கிய கிராமம். மாமன்னன் இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை தன் தலைநகராக கொண்டு நிர்மாணித்த புதிய சாம்ராஜ்யத்தின் ஒரு கிராமம் தான் இது. அதனால் தான் 'சோழன்'குறிச்சி. கடந்த வாரத்தில் இருந்தே, அங்கிருந்து அழைப்பு.</p>
<p dir="ltr">திருஞானம், சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர். விடுமுறை கிடைத்தால் ஊருக்கு வந்துவிடுவார். மதி, வெளிநாடு சென்று பணியாற்றி வந்தவர். நல்லதம்பி, கல்லூரியில் துறைத் தலைவர். ஊருக்கு அழைத்துக் கொண்டிருந்த தோழர்கள் இவர்கள். நண்பர்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கேரம்போர்ட் மற்றும் செஸ் போர்ட் வாங்கி வைத்திருந்தனர். அதனை வழங்குவதற்கே அழைத்திருந்தனர்.</p>
<p dir="ltr">சோழங்குறிச்சி ஒரு சிறப்பான ஊர். ஊர் வளர்ச்சிக்கு எல்லோரும் தோள் கொடுப்பார்கள். சோழங்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவர்கள் சதுரங்கம் (செஸ்) விளையாட்டில் மாவட்ட அளவில் நான்காண்டுகளாக பரிசு வாங்கி வருகிறார்கள். இதை கண்டு ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளே பாராட்டியுள்ளார்கள்.</p>
<p dir="ltr"> காரணம், தனியார் பள்ளியில் சதுரங்கம் விளையாட்டைப் பயிற்றுவிக்க, தனிப் பயிற்சியாளர் உள்ளார். சோழங்குறிச்சி அரசு பள்ளியில் பயிற்றுவிப்பவர்கள் விளையாட்டு ஆசிரியர் மட்டுமல்ல, ஆங்கிலம், கணித ஆசிரியர்களும். இங்கு இதற்கு தனியாக பயிற்சியாளர் கிடையாது. தங்கள் பாடம் நடத்திய நேரம் போக மற்ற ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டை பயிற்றுவிக்கிறார்கள்.</p>
<p dir="ltr">பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் நேற்று (30.08.2017) நடைபெற்ற எளிமையான விழாவில் கேரம்போர்டையும், செஸ் போர்டையும் மாணவர்களிடம் வழங்கினோம். ஆசிரியர்களையும், வெற்றிப் பெற்ற மாணவர்களையும் வாழ்த்தி இரண்டு நிமிடம் பேசினேன். நேற்று நிகழ்ச்சி நடந்த அதே நேரம், அகல்யா என்ற இந்தப் பள்ளியின் மாணவி கரூரில் நடைபெற்ற மணடல அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தக்கட்டமாக, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.</p>
<p dir="ltr">வரும் செப்டம்பர் மாதம் சோழங்குறிச்சியில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்காக ஒரு பெரும் திடலை சுத்தம் செய்து, விளையாட்டிற்கு தயார் செய்யும் பணி நடக்கிறது. இங்கு தான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடங்கள் அமைய உள்ளன. அந்த இடத்தை பார்வையிட அழைத்து சென்றனர். வெளியில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது இந்தப் பகுதி. ஜல்லிக்கட்டுக்கும், பள்ளிக்கும் சேர்த்து பணி. இளைஞர்கள் பணியை பெருமிதமாக குறிப்பிட்டார் மூத்தவர் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் கலியபெருமாள்.</p>
<p dir="ltr">சோழர் காலத்து கிராமம் என்பதால் நிறைய ஏரிகள் உள்ளன. அவற்றை குடிமராமத்து பணி மூலம், ஆழப்படுத்தும் பெரும் பணி நடந்துள்ளது. எல்லா ஏரிகளையும் கழகத் தோழர்களே தூர் வாரியிருந்தனர். கடந்த மாதம் ஒரு ஏரியை பார்வையிட்டேன். அந்த ஏரியை மதி மற்றும் நண்பர்கள் ஆழப்படுத்தியிருந்தனர். இன்று ஒரு ஏரியை அழைத்து சென்று காண்பித்தனர். </p>
<p dir="ltr">நான்கு அடி ஆழம் இருந்த சேறும், சகதியும் அகற்றப்பட்டிருக்கின்றன. பணியை சிறப்பாக செய்ய உதவியவர் சி.என்.அண்ணாதுரை என்ற உள்ளூரை சேர்ந்த பேராசிரியர் என்பதை குறிப்பிட்டார் ஷாஜஹான். அப்போது தான் திரு ஒரு வரலாற்று தகவலை சொன்னார். நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஏரியும் ராஜேந்திர சோழர் காலத்து ஏரி தான்.</p>
<p dir="ltr">அப்போது சுற்றிலும் காட்டுப்பகுதி. அங்கு ராஜேந்திர சோழன் வேட்டைக்கு வருவாராம். நாங்கள் நின்றிருந்த ஏரியின் எதிர்கரையில் ஒரு கோயில் இருக்கிறது. ராஜேந்திரசோழன் காலத்தில் அங்கு ஒரு கற்றளி இருந்ததாகவும், அதை ஒட்டிய ஓய்வு மண்டபத்தில் தான் ராஜேந்திரன் வேட்டைக்கு பின் ஒய்வெடுப்பார் என செவி வழி வரலாறாக உள்ளது. அங்கு வந்தால் அவர் மனத் துயர் நீங்குமாம். அதனால் அந்த கோயிலின் பெயர் 'மனத் துயர் நீக்கும் மகாலிங்கம்' ஆலயம்.</p>
<p dir="ltr">எது எப்படியோ, ஊரில் இருக்கும் ஏரிகளை தூர் வாரி, மக்கள் மனத் துயர் நீக்கியுள்ளனர் கழகத் தோழர்கள்.</p>
<p dir="ltr">இந்த ஏரியை தூர் வாரிய கழகத் தோழருக்கு சற்று பொருள் நட்டம். ஆனாலும் அயராமல் பணி முடித்துள்ளார். அவருக்கு ஊர் சார்பாக, ஊராட்சி செயலாளர் செல்வராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்தி, நன்றி தெரிவித்தோம்.</p>
<p dir="ltr">ராஜேந்திர சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியை தூர் வாரிய அந்தத் தோழரின் பெயர், 'ராஜேந்திரன்'.</p>
<p dir="ltr"># நற்பணிகள் மூலம் வரலாற்றில் இடம் பெறும் "சோழங்குறிச்சி" ! <br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-4H_ntowSFMs/Wae3Mc1TjkI/AAAAAAAAFf4/UrTzIem_NEsqVNXrLjMzIHeW4m4OR34DACHMYCw/s1600/FB_IMG_1504113712752.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-4H_ntowSFMs/Wae3Mc1TjkI/AAAAAAAAFf4/UrTzIem_NEsqVNXrLjMzIHeW4m4OR34DACHMYCw/s640/FB_IMG_1504113712752.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-MWlVjUck-WY/Wae3NVkHeDI/AAAAAAAAFf8/hinsbVL4JLkstrqZlx4UgrkyeMJ5K7uvwCHMYCw/s1600/FB_IMG_1504113721446.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-MWlVjUck-WY/Wae3NVkHeDI/AAAAAAAAFf8/hinsbVL4JLkstrqZlx4UgrkyeMJ5K7uvwCHMYCw/s640/FB_IMG_1504113721446.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-48873508509825469972017-08-17T21:59:00.001+05:302017-08-17T21:59:40.091+05:30தேமதுர தமிழோசை உலகமெலாம்..<p dir="ltr">கலைஞன் பதிப்பகம், சென்னையில் தமிழ் நூல்களை பதிப்பித்துக் கொடுத்து தமிழ்பணியை சிறப்பாக செய்யும் அமைப்பு . 1956ல் மாசிலாமணி அய்யா அவர்கள் துவங்கியது தான் இந்த "கலைஞன் பதிப்பகம்". </p>
<p dir="ltr">ஒரு கட்டத்தில் தனது மகன் நந்தன் அவர்களிடம் பொறுப்பை கைமாற்றி விட்டார் அய்யா மாசிலாமணி. தமிழ் நூல்களை பதிப்பித்து தமிழ் பணியாற்றிய தந்தை வழியில், நந்தன் அவர்களும் தமிழ்பணி தொடர்கிறார்.</p>
<p dir="ltr">கலைஞன் பதிப்பகம் இதுவரை 5,000 நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இதில் பெரும் பகுதி தமிழ் சார்ந்ததாக இருக்கும். </p>
<p dir="ltr">கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைகழக தமிழ் துறையும் இணைந்து அடுத்தக் கட்ட பணியை கடந்த ஆண்டு துவங்கினார்கள். நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் பணி.</p>
<p dir="ltr">கடந்த ஆண்டு கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து 400 நூல்களை வெளிக் கொணர்ந்தார்கள். ஆய்வரங்கம் நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இந்தப் பணி.</p>
<p dir="ltr">அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பணி நீண்ட வரலாறுடையது. பழம் தமிழ் நூல்களை புதுப்பித்தார்கள். ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை நூல் வடிவம் கொடுத்தார்கள். அதன் நீட்சியாக இப்போது இந்தப் பணி.</p>
<p dir="ltr">தமிழ்த்துறை தலைவர் பேராசியர் அரங்க.பாரி அவர்கள் தனி அக்கறையோடு இந்த புதுமையான திட்டத்தை வடிவமைத்தார். அடுத்து ஆயிரம் நூல்களை வெளிக் கொணரும் திட்டம் வைத்திருக்கிறார்.</p>
<p dir="ltr">தமிழ் அறிஞர்கள், ஆளுமைகள் குறித்து நூல் அமைந்திருக்க வேண்டும். நூறு பக்க அளவில் நூல் அமைந்திருக்கும். நூலை வெளியிடும் நிகழ்ச்சிக்கு முன் இருக்கும் அமர்வில் நூல் சுருக்கம் அதன் ஆசிரியரால் வாசிக்கப்படும்.</p>
<p dir="ltr">இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் கைக்கோர்த்துள்ளன. மலேசியாவில் உள்ள மலேயப் பல்கலைக்கழகம் கூடுதல் நெருக்கம். காரணம், மலேசியத் தமிழர்கள்.</p>
<p dir="ltr">அண்ணாமலைப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய நூல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதே போல இந்த ஆண்டு மலேசியாவில் வெளியிட திட்டமிட்டனர்.</p>
<p dir="ltr">மலேசியப் பல்கலைக்கழகம் நூறாண்டு கால வரலாறு உடையது. சிங்கப்பூரில் முதலில் துவக்கப்பட்ட மருத்துவகல்லூரி பின்னர் பல்கலைக்கழகமாக விரிவாக்கப்பட்டது. </p>
<p dir="ltr">சிங்கப்பூரும், மலேசியாவும் பிரிந்த பிறகு "மலேயப் பல்கலைக்கழக"மானது. மலேயப் பல்கலைக்கழகத்தில் 1955ல் இந்திய ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது.</p>
<p dir="ltr">இந்த மையம் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து உலக தமிழறிஞர்கள் மாநாடும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தியது.</p>
<p dir="ltr">இதில் மலேசியாவை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட 100 நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எழுதிய 25 நூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்கள் அமர்வுக்கு பிறகு, வெளியீட்டு விழா நடைபெற்றது.<br></p>
<p dir="ltr">மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் மலேயப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. மருத்துவம் முதல் அனைத்துத் துறைகளும் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளன. </p>
<p dir="ltr">சிங்கப்பூர் அதிபராக விளங்கிய எஸ்.ஆர்.நாதன் மலேயப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள். </p>
<p dir="ltr">இதே போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் மலேசியாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மலேசியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும், மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவராக விளங்கியவருமான வி.டி.சம்பந்தன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.</p>
<p dir="ltr">மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் மோகனதாஸ், பேராசிரியர்கள் முனைவர் கிருஷ்ணன் மணியன், முனைவர் குமரன் என மலேசியத் தமிழர்கள். தமிழ் ஆர்வலர்கள். இவர்கள் ஆராய்ச்சி மற்றும் தேர்வுப் பணிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பில் இருப்பவர்கள்.</p>
<p dir="ltr">இப்படி ஒன்றுக்கொன்று பிணைப்பாக உள்ள அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தார்கள். இறுதி நாள் விழாவில் நானும் பங்கேற்றேன்.</p>
<p dir="ltr"># தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம் !<br><br><br></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-o-z110qAZeI/WZXEcbYBLcI/AAAAAAAAFfU/J5Z8YFe9UcUBpJELLSVLzDC_I8ACWlNJQCHMYCw/s1600/images-4.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-o-z110qAZeI/WZXEcbYBLcI/AAAAAAAAFfU/J5Z8YFe9UcUBpJELLSVLzDC_I8ACWlNJQCHMYCw/s640/images-4.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-15940495025818732352017-08-13T19:26:00.001+05:302017-08-13T19:26:28.988+05:30தமிழ்நாடு படும்பாடு !<p dir="ltr">சென்னை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான கூட்ட நெரிசல். முன்புறம் சீருடையில்லா காவல்துறையினர் இருந்தனர். அதில் ஒருவர் பார்த்த முகமாக இருந்தார். நான் அவரை கடக்கும் போது சிரித்தார். நான் சிரித்து நின்றேன். "என்ன சார், எப்ப முடியும்?". யோசித்தேன். " அரசாங்கம் தான் சார்". "இப்ப தான் ஆரம்பிச்சிருக்காங்க. பார்ப்போம் சார்" என்று சிரித்து நகர்ந்தேன்.</p>
<p dir="ltr">குடியேற்றத் துறையில் (இமிக்ரேஷன்) கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொள்வார்கள். காரணம், வெளிநாடு செல்பவர்களில் சிலர் எல்லா தவறான வழியையும் கையாள்வார்கள். அவர்களிடம் கடுமை காட்டியாக வேண்டும். அதனால் எல்லோரிடமும் அந்த கடுமை தொடரும். ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும், இதே போல கிடைத்த அனுபவங்கள் பல உண்டு.</p>
<p dir="ltr">அதையே எதிர்பார்த்து கடவுச்சீட்டை நீட்டினேன். வாங்கி பார்த்தார். "விசா" என்று கை நீட்டினார். கொடுத்தேன், வாங்கி பரிசோதித்தார். "என்ன விஷயமா போறீங்க?". " ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறேங்க". "நீங்க என்ன செய்றீங்க?". கொஞ்சம் தயங்கி சொன்னேன்," அரசியல்வாதி". நிமிர்ந்துப் பார்த்தார். "என்னவா இருக்கிறீங்க சார்?". "முன்னாள் எம்.எல்.ஏ சார்". " எந்தத் தொகுதிங்க?". "குன்னம் சார்".</p>
<p dir="ltr">" எந்தக் கட்சிங்க சார்?". "தி.மு.கங்க". கையில் இருந்த கடவுச்சீட்டு, நுழைகை அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் கீழே வைத்தார். " அப்புறம் எப்ப தான் சார் ஆட்சியக் கவிழ்ப்பீங்க ?". இது சமீபகாலமாக வழக்கமாக சந்திக்கிற கேள்வி தான். இருந்தாலும் இப்போது வித்தியாசமான இடத்தில் இருந்து என்பதால் கொஞ்சம் திகைப்பு. "இல்ல சார். கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டா காலமெல்லாம் பேச்சாகும்னு தளபதி நினைக்கிறார்".</p>
<p dir="ltr">" மக்கள் அப்படி எதிர்பார்க்கல சார். எப்ப இந்த ஆட்சி முடியும்னு தான் பார்க்குறாங்க. இப்ப அவங்களா கவிழ்த்துப்பாங்கன்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. நல்லது நடக்கட்டும் சார்". சொல்லி விட்டு கடவுச்சீட்டில் படக்கென்று முத்திரைக் குத்தினார். கடவுச்சீட்டை திருப்பிக் கொடுத்து போகலாம் என்று தலையசைத்தார். "கண் ஸ்கேன் சார்", என்றேன். முடிந்தது என்று தலையசைத்தார். நன்றி சொல்லி நகர்ந்தேன். </p>
<p dir="ltr">விமானம் சரியான நேரத்திற்கு கிளம்பியது. தூக்கத்தோடு பயணம். அயல்தேசம். அறை சென்று, சிறிது ஓய்விற்கு பிறகு, தயாரானேன். உணவிற்கு பிறகு நிகழ்ச்சிக்கு கிளம்பினேன். சீருந்து பிடித்தேன். அது ஒரு பல்கலைக்கழக வளாகம். சிறப்பான கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து நிகழ்ச்சிகள் போய் கொண்டிருந்தன. </p>
<p dir="ltr">தமிழ் துறை சார்ந்த விழா. பல தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கூடியிருந்தனர். சிலருக்கு அறிமுகப்படுத்தப் பட்டேன். ஆர்வமான உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஒரு தமிழறிஞர் என்னைப் பார்த்து கையமர்த்தினார். "அதெல்லாம் இருக்கட்டும். என்ன தான் அய்யா நடக்குது. இந்தக் கொடுமை எல்லாம் எவ்வளவு நாள் தொடரும். சீக்கிரம் முடிக்க வழியில்லையா?".</p>
<p dir="ltr">சிரித்தேன். " சிரிக்காதீங்க. பதில் சொல்லுங்க". பழைய பதிலையே (கவிழ்ப்பு வேணாமே) சொன்னேன். அவர் சமாதானம் ஆகவில்லை. " சார், அரசியல்ல இதெல்லாம் செய்யல்லன்னா தான் தப்பு. பாமர மக்களுக்கு அவங்க தினப்படி வாழ்க்கைக்கு பிரச்சினை இருக்கக் கூடாது. அவ்வளவு தான். நியாயம், தர்மம் பேசறவங்க ஓட்டுப் போட வரமாட்டாங்க". ஒரு பிரசங்கமே நிகழ்த்தினார்.</p>
<p dir="ltr">நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வந்திருந்தனர், பங்கேற்பாளர்கள். தேநீர் இடைவெளி. பதிப்பக உரிமையாளர் கேட்டார்,"முரசொலி பவள விழா சிறப்பா இருந்ததா?". "முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் மாலை நிகழ்வு மாத்திரம் மழை குறுக்கீடு". </p>
<p dir="ltr">அப்போது ஒரு அயல்நாட்டு அன்பர் ஆரம்பித்தார்," என்னாச்சு உங்க தமிழ்நாட்டுக்கு?".</p>
<p dir="ltr"># அய்யா, ஆள விடுங்க. நான் தமிழ்நாடே இல்லிங்க...<br>
</p>
Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-75814358817852755182017-08-10T18:57:00.001+05:302017-08-10T18:57:54.795+05:30பவளவிழா முரசொலிக்கு<p dir="ltr">18 வயதில், எதிர்கால திட்டமிடலில் கல்வியில் கவனம் பாயும். அல்லாதோருக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மிகும். சிலருக்கு விளையாட்டில் கவனம் திரும்பும். </p>
<p dir="ltr">அந்த சிறுவனுக்கு தமிழ் மீதும், அரசியல் மீதும், எழுத்தின் மீதும் ஆர்வம் திரும்பியது. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் வகையில் பத்திரிகை துவங்க திட்டமிடுகிறார். </p>
<p dir="ltr">அன்றைய அவருடைய பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு, கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்குகிறார். 18 வயதில் பத்திரிக்கை நிறுவனர் "கலைஞர்".</p>
<p dir="ltr">பத்திரிக்கைக்கு பெயர் சூட்ட வேண்டும். துவங்கும் போதே, போர் அறிவிப்பு ஒலியை நினைவில் நிறுத்தி பெயர் சூட்டுகிறார். அப்போது இந்திக்கு எதிரான போர் முரசு தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த நேரம். </p>
<p dir="ltr">அதை ஒட்டிய பெயராக "முரசொலி" என சூட்டுகிறார். அன்றிலிருந்து சமூக அவலங்களுக்கு எதிராக அந்த முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இன்றும்.</p>
<p dir="ltr">மெல்ல வளர்ந்து வரும் சூழலில் முரசொலியை துண்டறிக்கையாக அச்சிட்டு வெளியிடுகிறார், அதன் நிறுவனரான தலைவர் கலைஞர். பின்னர் மாத இதழாக மலர்ந்தது முரசொலி. </p>
<p dir="ltr">அடுத்து வார இதழானது முரசொலி. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக நாளிதழாக உருவெடுத்தது. அதன் ஒவ்வொரு படி வளர்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் நிறுவனர் கலைஞர். </p>
<p dir="ltr">தலைவர் கலைஞரும் அரசியல், கலை உலகம் என பயணித்துக் கொண்டிருந்தார். அவரும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" மூலம் திரை உலகில் முத்திரை பதித்தார்.</p>
<p dir="ltr">படத்திற்கு கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்தன. அந்த திரைக்கதை வசனங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது. அதன் விற்பனை உச்சம் தொட்டது.</p>
<p dir="ltr">வசனப் புத்தகத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு, சென்னையில் முரசொலிக்கு அச்சகம் திறந்தார். நாளிதழாக கழகத்தின் கொள்கைகளை கழகத் தோழர்களிடம் கொண்டு சேர்த்தது முரசொலி.</p>
<p dir="ltr">அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள் பல இதழ்களை நடத்தி வந்தனர். அதில் இன்றும் வெற்றிகரமாக நடக்கும் ஒரே பத்திரிக்கை 'முரசொலி' மட்டும் தான்.</p>
<p dir="ltr">ஏன், தலைவர் கலைஞரே பல பத்திரிக்கைகளை துவக்கி நடத்தியவர், பல பத்திரிக்கைகளை துவக்க காரணமாக இருந்தவர். ஆனால் அவற்றிலும் 'முரசொலி' தான் தொடர்ந்து ஒலிக்கிறது.</p>
<p dir="ltr">ஒரு பத்திரிக்கை தொடங்கி நடத்துவது சாதாரண செயல் கிடையாது. பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம். நாளிதழுக்கு தினம் செய்திகளை தொகுத்து வெளியிடுவது சிரமம்.</p>
<p dir="ltr">வெகுஜனப் பத்திரிக்கை என்றால், அரசியல், பொழுதுபோக்கு, கலை, இலக்கியம், ஜோதிடம் என கலந்துக் கட்டி சமாளித்து விடலாம். ஒரு இயக்க செய்திகளை மாத்திரம் வெளியிட்டு, கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நாளிதழை நடத்துவது மிகச் சிரமம்.</p>
<p dir="ltr">அதையும் 75 வருடம் நடத்துவது மிகப் பெரும் சாதனை. அந்த சாதனையை செய்தவர் தலைவர் கலைஞர். அதிலும் துவங்கிய நாளில் இருந்து, 75வது வருடம் வரை நிறுவியவரே நிர்வகிப்பது பெரும் சாதனை ஆகும்.</p>
<p dir="ltr">கையெழுத்து பத்திரிக்கையாக துவங்கிய போது எப்படி கண்ணும் கருத்துமாக முரசொலியை கவனித்தாரோ, முதலமைச்சராக இருந்த போதும் கவனித்தார், உடல் நலம் குன்றும் வரையிலும் தொடர்ந்து கவனித்தார்.</p>
<p dir="ltr">உடன்பிறப்பு கடிதம், கேள்வி பதில் என கலைஞரது நேரடி பங்களிப்பு இருக்கும். அதல்லாமல் கேலிச்சித்திரங்கள், எதிர்கட்சி நாளிதழ் மற்றும் தலைவர்களின் தாக்குதலுக்கான பதில் செய்தி என அவரது மறைமுக பங்களிப்பு இருக்கும்.</p>
<p dir="ltr">சாதாரண ஒரு தி.மு.க தொண்டர் கூட மாற்று அரசியல் கட்சித் தலைவரின் சவாலுக்கு பதில் சொல்லும் திறன் உள்ளவர்கள் என்று வியக்கப்படுவதுண்டு. அதற்கு முழு முதற் காரணம், முரசொலி தான். முரசொலி படித்தாலே தயாராகி விடலாம்.</p>
<p dir="ltr">காலை முரசொலி அலுவலகத்திற்கு சென்று கடிதம் எழுதி விட்டு, அன்றைய நாளிதழை வடிவமைத்து விட்டு வருபவர், மாலை முதல் இதழ் அச்சான உடன் அதைப் பார்த்தால் தான் மற்ற பணிகளுக்கு செல்வார். அவரது அந்த கடமை உணர்வு தான் முரசொலியின் வெற்றி.</p>
<p dir="ltr">முரசொலியின் வெற்றி கலைஞரின் வெற்றி. அந்த அளவிற்கு கலைஞர் வேறு, முரசொலி வேறு என்று பிரிக்க முடியாது. கலைஞரின் வார்த்தையில் சொல்வதானால், "முரசொலி கலைஞரின் மூத்தப் பிள்ளை".</p>
<p dir="ltr">அந்த மூத்தப் பிள்ளை தான், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், பள்ளிக் கூடம், பல்கலைக்கழகம். முரசொலியை மாணவனாக வணங்குகிறேன்.</p>
<p dir="ltr"># தொடர்ந்து முரசு ஒலிக்கும், காலமெல்லாம் !</p>
<p dir="ltr">_எஸ்.எஸ்.சிவசங்கர்.</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-Eh8mvTv-9Ag/WYxfWRykE5I/AAAAAAAAFe8/uAEvV37aOBg1SYrYZOVJA2FBxGM0Pv4UgCHMYCw/s1600/IMG-20170810-WA0008.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-Eh8mvTv-9Ag/WYxfWRykE5I/AAAAAAAAFe8/uAEvV37aOBg1SYrYZOVJA2FBxGM0Pv4UgCHMYCw/s640/IMG-20170810-WA0008.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-56863078271080469202017-08-06T22:57:00.001+05:302017-08-06T22:57:54.907+05:30122 எம்.எல்.ஏக்களுக்கான ஆட்சி !<p dir="ltr">மேசை மீது தினத்தந்தியை விரித்து வைத்து விட்டு, டீயை ஒரு வாய் குடித்தேன். சொய்ங், சொய்ங், சொய்ங் என தொடர்ந்து சத்தம். "என்ன முருகா சத்தம்?" என்றுக் கேட்டேன். </p>
<p dir="ltr">வாசற்படியில் நின்ற முருகன் சொன்னார், "வரிசையா காரா போவுதுண்ணா. தேசியக் கொடி கட்டிய காரு, அதிமுக கொடி கட்டிய காருன்னு வரிசையா போவுதுண்ணா". "மந்திரிங்க காரா?". " ஆமாண்ணா, சில மந்திரிங்களும் போறாங்க".</p>
<p dir="ltr">இத்தனை மந்திரிகள் வந்தா ஏதாவது பெரிய நிகழ்ச்சியா இருக்கணும்னு நினைச்சா, கொஞ்ச நேரத்தில் செய்தி வந்தது. அத்தனை மந்திரிகளும் அரியலூர் கலைக்கல்லூரிக்கு தான் வந்தார்கள். </p>
<p dir="ltr">வந்து, ஒரு உயரமான கழியை நட்டு வைத்து பூசை செய்திருக்கிறார்கள். மறுநாள் பத்திரிக்கைகளில் புகைப்படமும் வந்தது. ஏழு மந்திரிகள் கழுத்து நிறைய மாலையோடும், தலையில் பரிவட்டத்தோடும் நின்றார்கள்.</p>
<p dir="ltr">மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழா. அதை அரியலூரில் வரும் 28ம் தேதி நடத்துகிறார்கள், அரசு சார்பாக. அந்த விழாவுக்கான பந்தல் கால் நடும் விழாவிற்கு தான் ஏழு மந்திரிகள் வந்துள்ளனர். விழாவிற்கு முதல்வரோடு பத்து மந்திரிகள் வருவார்களாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த பந்தக்கால் நிகழ்ச்சியாம்.</p>
<p dir="ltr">ஒரு மந்திரிக்கே எவ்வளவு வேலைகள் இருக்கும். ஏழு மந்திரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் ஒரு பந்தக்கால் நட இவர்கள் வந்தால் என்றால், அப்படி வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.</p>
<p dir="ltr">முதல்வருக்கே வேலை இல்லை என்னும் போது, பாவம் மந்திரிகளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவது, அதற்கு ஏற்பாடு செய்வது என மொத்தத்தில் தமிழக அரசாங்கம் இப்படித் தான் நடக்கிறது.</p>
<p dir="ltr">இதைத் தெரிந்ததால் தான் முதல்வரை மந்திரிகள் மதிப்பதில்லை, மந்திரிகளை எம்.எல்.ஏக்கள் மதிப்பதில்லை, எம்.எல்.ஏக்களை கட்சிக்கார்கள் மதிப்பதில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களை மதிப்பதில்லை.</p>
<p dir="ltr"> மிகக் கொடூரமான மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து, ஒரு அரசாங்கம் அவலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கிறது.</p>
<p dir="ltr">கடலூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் எம்.சி.சம்பத். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் அவரை மதிப்பதில்லை. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் புறக்கணிப்பார்கள்.</p>
<p dir="ltr"> நேற்று உச்சகட்டமாக சீனியர் மந்திரி செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார்கள், சம்பத் கலந்து கொண்டதால். ஆனால் மந்திரிகள் அது குறித்து கவலைப்படவில்லை, வெட்கப்படவும் இல்லை.</p>
<p dir="ltr">காலையில் சென்னையில் பேட்டி கொடுக்கிறார் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன். "டி.டி.வி.தினகரன் தான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்" என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.</p>
<p dir="ltr">நண்பகல் மதுரையில் இருந்து அமைச்சர் உதயக்குமார் பேட்டி. "டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக பதவிப் பட்டியல் அறிவித்தது தவறு. அவருக்கு அதிகாரமே கிடையாது", அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் உதயக்குமார்.</p>
<p dir="ltr">இரவு, தொலைக்காட்சியில் ஒரு காட்சி. தேனீ மாவட்டம் தேக்கடி பக்கம் ஒரு ஆய்வு. மந்திரி உதயக்குமார் முன் நடக்க, தங்க.தமிழ்ச்செல்வன் பின் நடக்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்து 70 எம்.எம்'ல் சிரித்துக் கொள்கிறார்கள். காலை ஆரம்பித்து, மாலைக்குள் இவ்வளவு டிராமாக்கள்.</p>
<p dir="ltr">மந்திரி ராஜேந்திர பாலாஜி, முன்னாள் மந்திரி வைகைச்செல்வனை " அழுகிய தக்காளி" என்கிறார். இவர் அவரை 'போஸ்டர் ஓட்டியவர்' என்கிறார். இன்னும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள்.</p>
<p dir="ltr">எம்.எல்.ஏ வெற்றிவேலும், மந்திரி ஜெயக்குமாரும் ஒருவர் முகத்தில் ஒருவர் காரி உமிழ்ந்துக் கொள்ளாத குறை தான். அவ்வளவு விமர்சனங்கள். ஆட்சியில் யார் ஓங்குவது என்பதற்கு தான் இவ்வளவு பாடும் படுகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அல்ல.</p>
<p dir="ltr">இத்தனையும் எடப்பாடியா, டி.டி.வி.டியா என்று ஒரே அணிக்குள் நடக்கும் கூத்துகள். இதல்லாமல், ஓ.பி.எஸ் கும்பல் ஒன்று. கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தனக்கு தானே பேசிக் கொள்ளும் கூட்டம். எல்லாவற்றையும் காரசாரமாக பேசிவிட்டு, சட்டமன்றத்திற்குள் சென்றால் மௌனவிரதம் இருக்கும் வாய்பேசா மனிதர் போல் இருப்பார்கள்.<br></p>
<p dir="ltr"> எவ்வளவு வெட்டுக்குத்து, காறி உமிழ்தல் நடந்தாலும் ஆட்சி கவிழக்கூடாது, பதவி போய்விடக் கூடாது என்பது மாத்திரமே ஒரே கொள்கை அவர்களுக்கு. யாரும் யாரையும் மதிப்பதில்லை, யார் பேச்சையும் யாரும் கேட்பதில்லை. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.</p>
<p dir="ltr"> முதல்வரும், அமைச்சரும், எம்.எல்.ஏவும் மதிப்பது ஆட்சியையும், பதவியையும் மாத்திரமே.<br></p>
<p dir="ltr">மொத்தத்தில், "இது 122 எம்.எல்.ஏக்களுக்காக, 122 எம்.எல்.ஏக்களால் நடத்தப்படும், 122 எம்.எல்.ஏக்களின் ஆட்சி".</p>
<p dir="ltr"> (அப்போ ஆறுகுட்டி கதைன்னு கேக்குறீங்களா? போகப்போகத் தெரியும்)</p>
<p dir="ltr">இந்த 122ம் சேர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.</p>
<p dir="ltr"># நீங்க நல்லா இருக்கணும், நாளும் முன்னேற !<br><br><br><br></p>
Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-85392887069090148042017-08-02T21:24:00.001+05:302017-08-02T21:24:08.628+05:30அதிகாரம் படுத்தும் பாடு !<p dir="ltr">அதிகாரம் படுத்தும் பாடு...</p>
<p dir="ltr">குஜராத் என்பது பாரதிய ஜனதாவின் கோட்டை என்பது அறிந்த உண்மையாகி விட்டது. ஐந்தாவது முறையாக அங்கே பா.ஜ.க ஆட்சி தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.</p>
<p dir="ltr">அதில் தற்போதைய இந்தியப் பிரதம மந்திரி மோடி மூன்று முறை முதல்வராக இருந்தவர். அப்போது தான் குஜராத் பா.ஜ.கவின் கோட்டையாக்கப் பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித் ஷா.</p>
<p dir="ltr">மோடி - அமித்ஷா ஜோடி அங்கே காட்டிய வேகத்தை தேசிய அரசியலிலும் காட்ட விரும்பினார்கள். மெல்ல மோடி டெல்லியை நோக்கி நகர்ந்தார். அங்கே தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், அமித்ஷாவையும் தேசிய அரசியலுக்கு இழுத்துக் கொண்டார்.</p>
<p dir="ltr">தங்கள் மேஜிக்கை தேசிய அரசியலிலும் வெற்றிப் பெற வைத்தார்கள். உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றியை தக்க வைத்தது. இப்போது இந்த ஜோடி தான் இந்திய அரசியலின் அதிக அதிகாரம் பொருந்திய நபர்கள்.</p>
<p dir="ltr">அந்த அதிகாரத்தின் மூலமாக இன்னும் பல வெற்றிகளை மறைமுகமாகவும் குவித்தார்கள். கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. ஆனால், 13 இடங்கள் பிடித்த பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது, மத்திய அரசின் அதிகார பலத்தால்.</p>
<p dir="ltr">மணிப்பூரிலும் காங்கிரஸ் 28 இடங்களோடு முன்னால் இருந்தது. 21 எம்.எல்.ஏக்களோடு இருந்த பா.ஜ.க மோடியின் அதிகார பலத்தால், அமித்ஷாவின் இயக்கத்தில் ஆட்சியை பிடித்தது.</p>
<p dir="ltr">போன வாரத்தில் பிகாரில் நடந்தது நினைவுப்படுத்த வேண்டியதில்லை. ஓர் இரவில் ஆட்சி மாற்றம், பி.ஜே.பி கையில் லகான். அதிக இடங்கள் கொண்ட லாலு, குறைவான எம்.எல்.ஏக்களோடு இருந்த நிதிஷ்குமாரை முதல்வராக்கினார். அந்த நிதிஷை இழுத்து, பா.ஜ.க ஆதரவு கொடுத்து, முதல்வராக்கியது. பா.ஜ.கவிற்கு துணை முதல்வர். இனி அதிகாரம் பா.ஜ.கவிடம் தான், நிதிஷ்குமரால் அசைய முடியாது.</p>
<p dir="ltr">இந்த தொடர் கைப்பற்றல்கள், அதிகாரப் பசி கொண்ட மிருகமாக மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சியை, அந்த ஜோடியை. இன்னும், இன்னும் வேட்டையாட வேண்டுமென ரத்தவெறி வந்து விட்டது. இந்த நேரத்தில் தான் அடுத்த தேர்தல் அறிவிப்பு.<br></p>
<p dir="ltr">பாராளுமன்றத்தின் ஓர் அவையான ராஜ்யசபாவுக்கான தேர்தல் குஜராத் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடமும் வெற்றி பெற வாய்ப்பு.</p>
<p dir="ltr">ஆனால் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதற்கான ஆட்டம் ஆரம்பித்தது.</p>
<p dir="ltr">முதலில் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைத்த இடைவெளியில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வேலைகள் நடந்தன. காங்கிரஸ் ஏற்கனவே எழ முடியாத நிலை தான் குஜராத்தில் .</p>
<p dir="ltr">மோடியால் பா.ஜ.கவிலிருந்து விரட்டப்பட்ட தலைவர் சங்கர் சிங் வகேலா. தனி செல்வாக்கு மிகுந்த நபர். வெளியில் வந்தவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனாலும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.</p>
<p dir="ltr">அவரை இப்போது காங்கிரஸிலிருந்து வெளியே இழுத்தார்கள். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்பட்டனர். ஆறு பேர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.</p>
<p dir="ltr">தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமித்ஷா வலையை வீச ஆரம்பித்தார். இருக்கும் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள, எல்லோரையும் கர்நாடகாவிற்கு விமானம் ஏற்றினார்கள். ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டார்கள்.</p>
<p dir="ltr">அடுத்த அதிகார அம்பு வீசப்பட்டது. "இந்த ராஜ்யசபா தேர்தலில் 'நோட்டா'வுக்கு ஓட்டு போடலாம்", என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போடும் தேர்தலில் 'நோட்டா' தேவை இல்லை. ஆனால் அதிகாரம் திணித்தது.</p>
<p dir="ltr">அடுத்து என்ன செய்யலாம் என்று மிருகம் பார்த்தது. கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் எம்.எல்.ஏக்கள், கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் பாதுகாப்பில் உள்ளனர். சிவகுமார் கழுத்தை குறி வைத்துள்ளது மிருகம்.</p>
<p dir="ltr">எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் பணம் நடமாடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததாம். உடனே ரெய்டு நடந்தது. 10 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியிடப்படுகிறது.</p>
<p dir="ltr">இதில் கவனிக்க வேண்டியது, அதே எம்.எல்.ஏக்கள் " எங்களுக்கு பா.ஜ.க தரப்பில் கோடி கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசினார்கள்" என வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். அது வருமான வரித்துறை கண்ணில் படவில்லை.</p>
<p dir="ltr">கூவத்தூரில் தமிழக சட்டசபையை ஏலம் விட்டதை நாடே பார்த்தது. பத்திரிக்கைகள் எழுதின. ஊடகங்கள் 'லைவ்' காட்டின. ஒரு ச.ம.உறுப்பினரே பணம் கொடுக்கப்பட்டதை சொல்லி, அது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியது. இதுவும் வருமான வரித்துறை கண்ணில் படவில்லை. இதை இன்று சுட்டிக்காட்டி தமிழக எதிர்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் கண்டித்தும் உரைக்கவில்லை மத்திய அரசுக்கு.</p>
<p dir="ltr">அந்த ஒற்றை ராஜ்யசபா இடத்தை கைப்பற்ற தேர்தல் தேதி மாற்றம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு வலைவீச்சு, நோட்டா ஓட்டு, வருமான வரித்துறை ரெய்டு என அத்தனை அதிகாரத்தையும் பிரயோகித்துப் பார்க்கிறார்கள்.</p>
<p dir="ltr">அந்த இடத்தில் போட்டியிடுகிறவர் சோனியா அவர்களின் செயலாளர் அகமது பட்டேல். அவர் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் தான். புதிதாக பதவிக்கு வந்து தலைவலி கொடுக்கப் போகிறவர் அல்ல.</p>
<p dir="ltr">ஆனாலும் அந்த இடத்தை கைப்பற்ற இவ்வளவு பிராயத்தனங்கள்.</p>
<p dir="ltr">காரணம், அதிகார வெறி.<br></p>
<p dir="ltr">இதுவும் நல்லது தான். வெறி முற்றினால் எல்லோரையும் தாக்கும், உடன் இருப்பவர்களையும். அப்போது ஓர் முடிவு வரும். இது இயற்கை நியதி.</p>
<p dir="ltr">இந்தத் தேர்தலில் குறி தப்பாமால் வெற்றி பெறலாம். எதிர்கட்சிகள் வீழ்த்தப்படலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத எதிரி உருவாவான். தொடர் வெற்றியில் ஓர் சின்ன சறுக்கல் கூட , அதலபாதாளத்தில் தள்ளும்.<br></p>
<p dir="ltr"># சின்ன அம்பு கூட வேட்டை வெறி மிருகத்தை வீழ்த்தும் !<br><br><br><br></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-NrWjIc3dENM/WYH1nlf6jCI/AAAAAAAAFds/C9hb9SjpoDMnI0RQhD-m6RuLzsnnDsTzwCHMYCw/s1600/images-4.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-NrWjIc3dENM/WYH1nlf6jCI/AAAAAAAAFds/C9hb9SjpoDMnI0RQhD-m6RuLzsnnDsTzwCHMYCw/s640/images-4.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-56036453584979848022017-08-01T14:46:00.001+05:302017-08-01T14:47:43.320+05:30அரசாங்கம் லேவாதேவி தொழில் அல்ல<p dir="ltr"><br>
"இலவச தொகுப்பு வீடுகள் கூடாது. மான்யத்துடனான கடன் வழங்கக் கூடாது. இலவசத் திட்டங்களும், மானியங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு செலவு செய்யும் பணத்தைக் கொண்டு வெளிநாடுகளுக்கு இணையாக வசதிகளை செய்து முன்னேற்ற வேண்டும்", என முழங்கினேன்.<br></p>
<p dir="ltr">1996ல் உள்ளாட்சிப் பொறுப்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வு பெற்றேன். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு பெற்றேன்.</p>
<p dir="ltr">முதல் கூட்டம். அரசுத் திட்டங்கள் குறித்து, கருத்து கேட்கப்பட்டது. அப்போது தான் எனது புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினேன்.</p>
<p dir="ltr">அப்போது என் வயது 26. கூட்டத்தில் இருந்த வயதில் மூத்தவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் புரட்சி வீரனாக நினைத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.</p>
<p dir="ltr">அடுத்த மூன்று மாதத்தில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம், திருமணம், துக்கம் என கிராமங்களை சுற்றி வரும் சூழல். அதுவரை நான் மக்களை பார்த்த பார்வைக்கும், மக்கள் பிரதிநிதியாக அவர்களிடம் நெருங்கிப் பழகிய பிறகான பார்வைக்கும் வித்தியாசம் ஏற்பட்டது.</p>
<p dir="ltr">மக்கள் வாழ்சூழல், வறுமை, குடும்பப் பிரச்சினைகள், அதனாலான பொருளாதார தாக்கங்கள் என நேரடிப் பாடம் கற்றேன். நான் முதல் கூட்டத்தில் பேசியதை நினைத்து வெட்கிப் போனேன்.</p>
<p dir="ltr">வறுமையை ஒழிப்பதும், எல்லோருக்கும் கல்வியை அளிப்பதும், வேலையை உறுதிப்படுத்துவதும் ஒரு நீண்டப் பயணம். அதுவரை சமூக நலத்திட்டங்கள் தொடரத்தான் வேண்டும் என்பதை மெல்ல உணர ஆரம்பித்தேன்.</p>
<p dir="ltr">வறுமை ஒழிப்பு திட்டங்கள், மானியம் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை நிறுத்தும் போது, சிலர் அதை வழிமொழிவது பரவாயில்லை. ஆனால் அதை பெறுபவர்களை பிச்சைக்காரர்கள் கண்ணோட்டத்தில் பார்த்து எள்ளி நகையாடுவது மிருகத்தனம்.</p>
<p dir="ltr">இப்போது, ரேசன் அட்டை கிடையாது என்பதற்கு அரசு சொல்லியிருக்கிற கட்டுப்பாடுகள் தவிர்த்து இன்னும் 10 சதவீதம் பேரே எஞ்சியிருப்பார்கள். மீதம் உள்ளோர் 90 சதவீதம் பேரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்களா ?</p>
<p dir="ltr">ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாதாம். ஆண்டுக்கு ஒரு லட்சம் என்றால், மாதம் எட்டாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று ரூபாய். </p>
<p dir="ltr">வெளி மார்க்கெட்டில் அரிசி, ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூபாய் முப்பது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் அரிசிக்கே போய் விடும். மளிகை செலவு, பிள்ளைகள் செலவு, மின்சாரம், மருத்துவ செலவு, உறவுகளில் திருமணம், சாவு நிகழ்ச்சிகள் இப்படின்னு பட்டியல் போட்டுகிட்டு போனா இந்த எட்டாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று ரூபாயில் என்ன செய்ய முடியும்.</p>
<p dir="ltr">கிராமத்தில் இந்த நிலை என்றால், சென்னை போன்ற நகரங்களில் ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பவர்கள் இருபதாயிரம் மாத வருமானம் இருந்தாலும், ரேசன் கடை பொருட்கள் இல்லை என்றால் அபாயகர நிலை தான். இங்கு வாடகை, போக்குவரத்து செலவு வேறு கூடுதலாக சேரும்.<br></p>
<p dir="ltr">5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாதாம். விவசாயம் வருடா வருடம் அள்ளிக் கொடுக்கிறதா?. சில ஊர்களில் நிலங்கள் கருவேலமரம் முளைப்பதற்கே லாயக்காக இருக்காது. அவர்களும் வசதியானவர்களா?<br></p>
<p dir="ltr">ரேசன் கடை என்பது ஏதோ மானிய விலையில் பொருட்களை விற்கவும், இலவசமாக அரிசியை கொடுக்கவும் மாத்திரம் இருக்கும் கடை அல்ல. </p>
<p dir="ltr">வெளி மார்க்கெட்டில் அத்தியாவசியப் பொருட்கள் யானை விலை, குதிரை விலைக்கு விற்கப்படும் போதும், பொருட்களைப் பதுக்கி விலையேற்றி விற்க பெரு முதலாளிகள் முனையும் போதும், நாட்டின் குடிமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைக்க செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு ரேசன் கடைக்கு தான் உண்டு. எனவே ரேசன் கடை நடத்துவது அரசின் கடமை.</p>
<p dir="ltr">அரசு என்பது வரி வசூலித்து, முதலீடுகள் செய்து, லாபம் பார்க்கும் லேவா தேவித் தொழில் அல்ல. நாட்டின் குடிமக்களுக்கு இருப்பிடம், உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க பாடுபட வேண்டிய சேவை அமைப்பே அரசு. இஃதன்னியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து வசதி என சேர்த்துக் கொண்டே போகலாம், தேவைக்கேற்ப.</p>
<p dir="ltr">ஆனால் எல்லா அரசு சேவைத் துறைகளையும் ஊற்றி மூடி, கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்து, அவர்களிடம் கையேந்த வைத்து விடுவார்கள் போல.</p>
<p dir="ltr">இந்த சட்ட திட்டங்களை போடும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஓரறை கொண்ட கிராமத்து குடிசையில், மாதம் எட்டாயிரம் செலவுக்கு கொடுத்து குடும்பத்தோடு தங்க வைக்க வேண்டும், ரேசன் கடை இல்லாமல்.</p>
<p dir="ltr">அரசு என்பது மக்களுக்காக, மக்களுக்காக மட்டுமே</p>
<p dir="ltr"># புரிந்தவன் தான் மனிதன் !<br><br></p>
<p dir="ltr"> <br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-T9ZX6DdcNJw/WYBHAZ1MwtI/AAAAAAAAFdc/gsnNsZTcLU0GDH1ikBivCiu6R1-Ve9IfwCHMYCw/s1600/FB_IMG_1501578935554.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-T9ZX6DdcNJw/WYBHAZ1MwtI/AAAAAAAAFdc/gsnNsZTcLU0GDH1ikBivCiu6R1-Ve9IfwCHMYCw/s640/FB_IMG_1501578935554.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-36759926903265579592017-07-24T23:10:00.001+05:302017-07-24T23:10:01.024+05:30கல்லூரி சீனியர் தங்கம் தென்னரசு<p dir="ltr">"தம்பி, நானே கூப்பிட இருந்தேன். கூப்பிட்டுடீங்க. கும்பகோணத்தில் இருந்து கிளம்பப் போறேன்", அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள், அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார்.</p>
<p dir="ltr">இன்று (22.07.2017) கங்கைகொண்டசோழபுரத்தில் , "தொல்லியல் கழகம் 27 ஆம் ஆண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அண்ணன் வந்தார். முன்னாள் அமைச்சராக அல்ல, தொல்லியல் ஆர்வலர் என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தார். அண்ணன் கோமகன், உள்ளூர் செயலாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.</p>
<p dir="ltr"> அண்ணன் தென்னரசு அவர்கள், பாண்டியன் ஆய்வு மையத்தின் நிறுவனர், வரலாற்று ஆர்வலர். அந்த வகையில், இன்றைய விழாவில் "ஆவணம்" நூலை வெளியிட்டு சிறப்பிக்க அழைக்கப் பட்டிருந்தார்.</p>
<p dir="ltr">நான் அரியலூரில் இருந்து கிளம்பி செல்வதற்குள், அண்ணன் வந்து விடுவாரோ என பதற்றம். ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறனை, ஜெயங்கொண்டம் குறுக்குசாலையில் காத்திருக்க சொல்லி இருந்தேன்.</p>
<p dir="ltr">நான் போய் சேர்வதற்குள் வந்து விட்டார் அண்ணன். மணிமாறன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். நான் வரவில்லை என்றவுடன், அருகே இருந்த கழகத் தோழர் ராஜயோகத்தின் குறுகலான இடத்தில் அமர்ந்து விட்டார்.</p>
<p dir="ltr">எனக்காக காத்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தொடர்ந்து வந்திருந்தால், எதிரில் வந்த நான் அவருடன் இணைந்திருப்பேன். ஆனாலும் காத்திருந்தார். "வாங்க, வாங்க சங்கர்", என்று வரவேற்றார், உள்ளூர்காரர் போல.</p>
<p dir="ltr">அண்ணன் அரசு அவர்களுக்கு நூல்கள் பரிசளித்தேன். அவருக்கு விருப்பமான பறவைகள் குறித்த நூல் "பறவைகளும் வேடந்தாங்கலும்", வண்ணதாசன் நூல் மற்றொன்று. நூல்களை கண்டாலே அண்ணன் முகம் மலரும், இன்றும்.</p>
<p dir="ltr">நான் செல்வதற்கு முன்பாகவே கழகத் தோழர்களோடு பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை தொடர்ந்தார். "சங்கர் சபைக்கு வராததை சில நேரங்கள்ல உணர்கிறேன்" என்று என் சபை செயல்பாடுகளை சொல்லி நெகிழ்வாக்கி விட்டார். கழகத் தோழர் பக்கத்தில் இருந்த டீக்கடையில் வாங்கி வந்து அளித்த டீயை மகிழ்வாய் அருந்தினார்.</p>
<p dir="ltr">நிகழ்ச்சி குருவாலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்றடைந்தோம். முழுதும் தொல்லியல் அறிஞர்கள், தொல்லியல் துறையில் பணியாற்றியோர், ஆர்வலர்கள் என அது வேறொரு உலகமாக இருந்தது.</p>
<p dir="ltr">அண்ணன் அரசு அவர்களை கண்டதும் ஒரு பரபரப்பு. உறவினரை கண்டது போல எல்லோரும் வரவேற்றனர். அமைச்சராக இருந்தவர் என்பதே தெரியாத அளவிற்கு பழகுபவர் என்பது கழகத் தோழர்களுக்கு தெரியும். ஆனால் அங்கும் அதே பாங்கு தான்.</p>
<p dir="ltr">ஒவ்வொருவரையும் தனித்தனியாக பெயர் சொல்லி பேச, அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தமிழகத்தின் தொன்மை சின்னங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபடும், முகநூலில் இயங்கும் சகோதரர் சசிதரனை பார்த்தவுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். "வீர சோழன் அணுக்கப் படை" என டீ-சர்ட் அணிந்திருந்த அந்தத் தோழர்களுக்கும் மகிழ்ச்சி.</p>
<p dir="ltr">தனவேல் ஐ.ஏ.எஸ், தொல்லியல் அறிஞர் சுப்பையா என ஒரு அறிஞர் பட்டாளமே குவிந்திருந்தது. மேடையில் அமர அண்ணன் தென்னரசு அவர்களை முதலில் அழைத்தனர். வழக்கமான அரசியல்வாதிகள், நடுவில் உள்ள நாற்காலியில் தான் அமர்வார்கள். ஆனால் இவர் ஓர் ஓரமான நாற்காலியாக பார்த்து அமர்ந்தார், மற்றவர்களை நடுவில் அமர்த்தினார்.</p>
<p dir="ltr">"ஆவணம்" நூலை அண்ணன் தென்னரசு வெளியிடுவார் என்று அறிவித்தார்கள். வெளியிடுவதற்காக காகிதத்தில் கட்டப்பட்டு, அங்கு இருந்த பல்வேறு புத்தகக் கட்டில் ஆவணத்தை தேடி எடுக்க நேரமாகியது.</p>
<p dir="ltr">"நூல் வெளியிடுவது எவ்வளவு சிரமம் என்பது இப்போது தான் புரிந்தது. தயாரான நூலையே வெளியிட இவ்வளவு நேரமாகிறது. அதிலும் இது தொல்லியல் நூல், அதனாலும் அதிக நேரம்" என நகைச்சுவை உணர்வோடு உரையை துவங்கியவர், கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்து ஒரு அறிஞருக்கான பார்வையோடு உரையாற்றினார்.</p>
<p dir="ltr">அடுத்த அவர் மாவட்டத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உடனே புறப்பட வேண்டிய அவசரம். இருந்தாலும், இன்னும் இருவர் பேசும் வரை அமர்ந்திருந்து, பிறகே கிளம்பினார்.</p>
<p dir="ltr">ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லாத நிகழ்ச்சியாக இருந்தாலும், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்து, தன் வரலாற்று ஆர்வத்தின் அடிப்படையில், அறுநூறு கிலோமீட்டர் பயணித்து நிகழ்ச்சிக்கு வந்து சென்றதன் மூலமும், அங்கு அவரது செயல்பாட்டின் மூலமும் எனக்கு சில பாடங்களை நடத்திச் சென்றார் அண்ணன் தென்னரசு. </p>
<p dir="ltr"># கல்லூரி சீனியரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது !<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-k938ZEF_7XM/WXYw6TAluhI/AAAAAAAAFcg/2lt89i1r5PULZYQA4Pe_yycAZ1ajHEfDQCHMYCw/s1600/20170722_095625.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-k938ZEF_7XM/WXYw6TAluhI/AAAAAAAAFcg/2lt89i1r5PULZYQA4Pe_yycAZ1ajHEfDQCHMYCw/s640/20170722_095625.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-fiy4e4H0Ktc/WXYw7UvjBTI/AAAAAAAAFck/QN5zfxzs-OQ8L2KVWnt07G9A5cG6WGEvwCHMYCw/s1600/20170722_095531.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-fiy4e4H0Ktc/WXYw7UvjBTI/AAAAAAAAFck/QN5zfxzs-OQ8L2KVWnt07G9A5cG6WGEvwCHMYCw/s640/20170722_095531.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-faw9G4_mxJE/WXYw74MZ7aI/AAAAAAAAFco/novIvj4HlhAGYOqy27SEt24JHDrZ0PqFgCHMYCw/s1600/20170722_101529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-faw9G4_mxJE/WXYw74MZ7aI/AAAAAAAAFco/novIvj4HlhAGYOqy27SEt24JHDrZ0PqFgCHMYCw/s640/20170722_101529.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-2917425662274753872017-07-20T22:58:00.001+05:302017-07-20T22:58:42.032+05:30நண்பன் ஓவியர் சத்தியசீலன் !<p dir="ltr">நண்பன் சத்தியசீலன் ஓர் ஒவியக் கண்காட்சி வைக்கிறார் என்ற உடன் மகிழ்வுடன் கிளம்பினேன். ஏற்கனவே என்னை தன்னுடைய வரைப்பட்டியில் (டேப்லட்டில்) வரைத்து அனுப்ப, அதனை முகப்பு படமாக வைத்து மகிழ்ந்தேன்.</p>
<p dir="ltr">அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வடிவமைப்பு பிரிவில், மிக முக்கியப் பொறுப்பில் பல்வேறு பணி நெருக்கடிக்கு இடையில் இருந்தாலும், கலையை உயிராக நினைப்பவர், அதற்கு பெரும் நேரம் செலவிடுபவர். பாடல், இசை, இலக்கியம் இத்தோடு ஓவியம். என் பள்ளி, கல்லூரி நண்பன். </p>
<p dir="ltr">அவ்வப்போது அவர் வடிவமைப்பு செய்த வாகனங்களின் படங்கள், இயற்கை ஓவியங்கள், நண்பர்கள், திரை ஆளுமைகளின் படங்களை வரைந்து அனுப்புவார். ஆனால் ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடம் வேறு மாதிரியான ஓவியங்களுக்கான இடம்.</p>
<p dir="ltr">சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும்,  Focus art gallery. அந்த சாலையில் பயணிக்கும் போது, இங்கு மாடர்ன் ஆர்ட் கண்காட்சிகள் நடக்கும் விளம்பரங்கள் பார்த்த நினைவு.</p>
<p dir="ltr">புதுமை ஓவியங்களை பல பக்கங்களில் இருந்து பார்த்து அர்த்தம் கண்டு பிடிக்க முயலும் பாமர ரசிகன் நான். இங்கு சத்யாவின் படங்களும் அதே புதுமை ரகம். 15.07.2019 அன்று துவக்க நாள்.</p>
<p dir="ltr">அன்று சென்றேன். "சத்யா, இது..." , என்று நான் துவங்கும் முன்னே சத்யா உணர்ந்துக் கொண்டார். கை உயர்த்தி என்னை அமர்த்தினார். "நீ பாருண்ணே. உனக்கு என்ன தோணுதோ, அது தான் அர்த்தம், அது தான் ஓவியம்", என்றார்.</p>
<p dir="ltr">நான் பார்த்த முதல் ஓவியமே என் மனதில் அறைந்தது.  கருப்பு வெள்ளை படமாக, ஒரு துக்கத்தில் உறைந்த முகம். கண்களில் தேங்கிய சோகமும், நெளிந்த உதடுகளும் ஏதோ ஒரு சொல்ல முடியா சோகத்தை அழுத்தி சொன்னது.</p>
<p dir="ltr">அடுத்து வண்ணமயமாக ஓர் ஓவியம். கூர்ந்து கவனித்தால், திமிறி நிற்கும் காளையும், அடக்கத் துடிக்கிற காளையுமாக ஜல்லிக்கட்டுக் காட்சி. சூழ்ந்த இளஞ்சிவப்பு நிறப்பு நிறம், ஜல்லிக்கட்டின் கொதி நிலைக்கு குறியீடோ. இப்படி நானாக சிந்தித்து, ஒரு வழியாக புதுமை ஓவியக்கலை ரசிகனாக தயாரானேன்.</p>
<p dir="ltr">ஒரு ஓவியம் முழுதும் கோடுகளாலும், அதன் முடிச்சுகளாலும் பின்னப்பட்டிருந்தது. அது புத்தராக இருக்கும் என்பது என் அனுமானம். இன்னொரு ஓவியம் , ஒரு முகம் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும், கீழுமாக வண்ண வண்ண சுழிகள், வளையங்கள். அது அவதார் படத்தின் வரைகலை முகமாக தோன்றியது. </p>
<p dir="ltr">இங்கே இணைத்திருக்கும் கருப்பு, வெள்ளைப் படம் எனக்கு சத்தியமாக புரியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.</p>
<p dir="ltr">ஒரு சுற்று முடித்து வந்தேன். எங்களது கல்லூரி நண்பர்கள் ரவீந்திரன், சீனுவாசன், கங்காதரன், குமரன் வந்திருந்தனர். துவக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகழ்பெற்ற ஓவியர் 'டிராட்ஸ்கி மருது' அவர்களை அழைத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார் சத்யா. இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்காவிட்டால், எனக்கு மருது அவர்களது அறிமுகம் கிடைத்திருக்காது.</p>
<p dir="ltr">"இந்த நிகழ்ச்சி மூலமா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என் நண்பர் மூலமா கிடைத்த வாய்ப்பு", என்றேன். அவர் சொன்ன பதில் மிக சிறப்பு. "வழக்கமா இங்க நடக்கிற ஓவியக் கண்காட்சிக்கு இவ்வளவு பேர் வரமாட்டாங்க. ஓவியம் தொடர்புடையவர்கள் தான் வருவாங்க. சத்யா நிகழ்ச்சி என்பதால், பெரிய அளவில் திரண்டிருக்கீங்க. இதுவே ஒரு வெற்றி. உங்களை போன்றோர் வந்தது மகிழ்ச்சி", என்றார். எளிய மக்களிடம் புதுமை ஓவியக் கலையை கொண்டு சேர்த்திருக்கிறார் நம்ம ஆள் சத்யா.</p>
<p dir="ltr">ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்திருந்த சத்யாவின் தாய், தந்தையருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. நிச்சயம், அந்த ஓவியங்கள் அவர்களுக்கு புரிந்திருக்காது. ஆனால் தன் மகனின் கலையை ரசிக்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது.</p>
<p dir="ltr">சத்யாவுடன் வாகன வடிவமைப்புத் துறையில் பணிபுரியும் பல உயர் பொறுப்பில் இருந்தோர் வந்திருந்தனர்.  ஆங்கிலேயர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடம் சத்யா தன் தாயை அறிமுகப்படுத்தினார். "சத்யா சில்ரன் , நோ பிளே. ஒன்லி ஆர்ட்" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சத்யாவின் தாய், தன் மகன் குறித்து மகிழ்வாய் பேச எல்லோருக்கும் நெகிழ்ச்சி.</p>
<p dir="ltr">பழச்சாறு தட்டு வந்தது. வந்த உடன் பச்சை நிறத்தில் இருந்த சாறு கொடுத்தார்கள், அது என்ன சாறு என்று தெரியவில்லை. இப்போது இளஞ்சிவப்பு நிறத்தில். தர்பூசணி சாறு, கடைசி சொட்டு வரை ருசித்தது எளிமையாய். சத்யாவின் ஓவியத்தை போலவே. "Flow it in", "உள்ளீடு பரவல்" என்பது காட்சியின் தலைப்பு. சாறும், ஓவியமும் உள்ளீடு பரவல் நிகழ்த்தியது.</p>
<p dir="ltr">நடிகரும், ஓவியருமான நடிகர் சிவக்குமார் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்.</p>
<p dir="ltr"># ஓவிய உலகத்தில் சத்யா, உலகப் பார்வை படட்டும் !</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-qCOsXMXdyHc/WXDoORltRTI/AAAAAAAAFcE/lRLq5k9VOnwAunruh0F7H-sNVewZyPVyACHMYCw/s1600/FB_IMG_1500563384576.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-qCOsXMXdyHc/WXDoORltRTI/AAAAAAAAFcE/lRLq5k9VOnwAunruh0F7H-sNVewZyPVyACHMYCw/s640/FB_IMG_1500563384576.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-xsN42Pr-7jk/WXDoO5IPO8I/AAAAAAAAFcI/lhJL5_4MC3Q05Bj0sPll4b0RhtDYgDaTwCHMYCw/s1600/FB_IMG_1500565483825.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-xsN42Pr-7jk/WXDoO5IPO8I/AAAAAAAAFcI/lhJL5_4MC3Q05Bj0sPll4b0RhtDYgDaTwCHMYCw/s640/FB_IMG_1500565483825.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-4GTNVrtSMBc/WXDoP177S8I/AAAAAAAAFcM/YRbQfZVMWF4px6VAPLzVnrReIBphSlI5wCHMYCw/s1600/FB_IMG_1500565673215.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-4GTNVrtSMBc/WXDoP177S8I/AAAAAAAAFcM/YRbQfZVMWF4px6VAPLzVnrReIBphSlI5wCHMYCw/s640/FB_IMG_1500565673215.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-5754610125389426252017-07-20T21:19:00.001+05:302017-07-20T21:19:59.029+05:30கிராம சுகாதாரத்தை பாதிக்கும் நீட்<p dir="ltr">இன்று கர்நாடகா, நாளை தமிழகம்...</p>
<p dir="ltr">கர்நாடக மருத்துவத் துறை, உயர்கல்வி பயின்ற மருத்துவர்களுக்காக தத்தளிப்பதை இன்றைய 'ஆங்கில இந்து' நாளிதழ் முதல் பக்க செய்தியாக்கியுள்ளது.</p>
<p dir="ltr">சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த திணறிய கர்நாடக மருத்துவத்துறை, இணையம் வாயிலாக பணியமர்த்த முடிவு செய்து அறிவித்தது. </p>
<p dir="ltr">ஒரு இளம் மயக்கவியல் நிபுணர், மாதம் ரூபாய் மூன்றரை லட்சம் ஊதியம் கேட்டுள்ளார். அவரது அனுபவம் ஒரு வருடம் தான். இப்படி மற்ற மருத்துவர்களும் கேட்ட தொகை, துறை செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகையை விட அதிகம்.</p>
<p dir="ltr">மிகக் குறைவாக ஒரு மருத்துவர் கேட்டுள்ள தொகையே ரூபாய் ஒன்றரை லட்சம். அவரும் வட்டார அளவிலான பொது மருத்துவமனையில் பணிபுரிய மறுக்கிறார். </p>
<p dir="ltr">இதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். தும்கூரு மாவட்ட மருத்துவமனையில் 26 ஆண்டுகால அனுபவத்தோடு பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் பெறும் சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம்.</p>
<p dir="ltr"> இந்த வித்தியாசம் இப்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p dir="ltr">இதற்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என எண்ணலாம்.</p>
<p dir="ltr"> தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் ஏற்படப் போகும் நிலை வேறு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போது போதுமான அளவு இளநிலை மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ் படித்தவர்கள்) இருக்கிறார்கள். ஆனால் வரும் காலங்களில் பணிபுரிய இளநிலை மருத்துவர்களே இல்லாமல் திண்டாடும் நிலை வரும்.</p>
<p dir="ltr">காரணம், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வு. ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்தது. </p>
<p dir="ltr">அதனால் முதுநிலை மருத்துவம் படிக்க விரும்புபவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து கொண்டே படித்து தேர்வு எழுதுவார்கள். இதனால் கிராமப்புற மக்கள் எளிதாக மருத்துவ வசதி பெற்றனர்.</p>
<p dir="ltr">அவர்கள் அரசுப் பணியில் பணியாற்றும் ஆண்டுகளுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் முன் வந்தார்கள். இதை மருத்துவர்கள் 'சர்வீஸ் கோட்டா' என்பார்கள். நீட்டால் இந்த இடஒதுக்கீடு பறி போய் விட்டது. இதற்காகத் தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கடந்த மாதங்களில் போராடினார்கள்.</p>
<p dir="ltr">சில மருத்துவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை காக்க நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் இதன் பிற்கால தாக்கத்தை உணராமல், இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது. </p>
<p dir="ltr">இந்த வருடம் இளநிலை மருத்துவர்கள், முதுகலை படிப்பிற்காக கொச்சின், டெல்லி, சென்னை என 'கோச்சிங் கிளாஸ்'க்கிற்காக படையெடுப்பார்கள். </p>
<p dir="ltr">அரசு மருத்துவர்களுக்கு, இடஒதுக்கீட்டு இல்லை என்ற நிலையில் அரசு மருத்துவப் பணிக்கு ஆள் இல்லாத நிலை ஏற்படும். </p>
<p dir="ltr">அடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்புவதில் அடுத்த சிக்கல் வந்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்பில் பாதி இடத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் எதிர்காலத்தில்.</p>
<p dir="ltr"> தமிழகத்திலும், தென் மாநிலங்களில் இருக்கும் அளவு எண்ணிக்கையிலான மருத்துவ படிப்பு இடங்கள், வட மாநிலங்களில் கிடையாது.</p>
<p dir="ltr"> இதை விட மோசம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளின் நிலை. கல்லூரிக்கு ஓரிரு இடங்கள் தான் இருக்கிறது. அதையும் அடித்து பிடுங்குகிறார்கள்.</p>
<p dir="ltr">அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, தொலை நோக்கோடு திட்டம் வகுத்து, உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு இடத்தை தான் அவர்கள் அபகரிக்கிறார்கள். கஷ்டப்பட்டு நாம் உருவாக்கியதை திருடுவது தான் இது.</p>
<p dir="ltr">நான் உமி கொண்டு வருகிறேன், நீ அரிசி கொண்டு வா. இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊதி, ஊதி ஆளுக்கு பாதியாக சாப்பிடுவோம், கதை தான் இது.</p>
<p dir="ltr">உடனே சிலர் தகுதி, மெரிட் என குதிப்பார்கள். </p>
<p dir="ltr">பெரு நகரத்தில், பெரும் பணம் கொடுத்து பயிற்சி எடுத்து விட்டு இங்கு வந்து படிக்கும் அயல் மாநிலத்தவர்கள் இங்கு பணிபுரிய மாட்டார்கள். அவர்கள் மாநிலத்திற்கு ஓடியே போய் விடுவார்கள்.</p>
<p dir="ltr"> மெரிட்டில் படித்து விட்டு ஓடிப்போக இருப்பவர்களை விட , படித்து விட்டு இங்கேயே பணிபுரியும் நம் மாநிலத்து மருத்துவர்கள் போதும்.</p>
<p dir="ltr">நாம் உருவாக்கிய இடத்திற்கு தான் நாம் உரிமை கோருகிறோம். நம் மாநில சுகாதாரம் காக்க தான் நீட்டிற்கு எதிராக குரல் கொடுக்கிறோம்.</p>
<p dir="ltr"># தமிழக மக்களின் சுகாதாரம் காக்க, நீட்டை எதிர்ப்போம் !</p>
Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-64281815795697865992017-07-13T21:53:00.001+05:302017-07-13T21:53:23.854+05:30கவிராஜன் கதை<p dir="ltr">'என் ஜன்னலின் வழியே'<br>
பார்த்துக் கொண்டிருந்தேன்<br>
மெல்ல பூங்கதவு தாழ்திறந்தது</p>
<p dir="ltr">அந்திமழை பொழியப் போகிறதென<br>
'இதனால் சகலமானவர்களுக்கும்' அறிவிக்கப்பட்டது</p>
<p dir="ltr">'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்' <br>
வாருங்கள் என்றழைத்து 'கல்வெட்டுகளி'ல்<br>
அவர்தம் பெயர் பொறித்தான்</p>
<p dir="ltr">அவன் சொன்னது இவை<br>
'என் பழைய பனை ஓலைகள்'<br>
நவீன அலைபேசி செயலிகளை வீழ்த்துகின்றன</p>
<p dir="ltr">கண்ணதாசனுக்கு பிறகு சோர்ந்துகிடந்த<br>
திரைத்தமிழுக்கு 'ரத்ததானம்' ஈந்தான்</p>
<p dir="ltr">தம்மை படைத்த தமிழை<br>
'சிற்பியே உன்னை செதுக்குகிறேன்' என செதுக்கி, செதுக்கி அழகுப்படுத்தினான்</p>
<p dir="ltr">'இந்த பூக்கள் விற்பனைக்கல்ல'<br>
என அவன் சொன்னாலும்<br>
அவன் பாடல்களை விருது கொடுத்து <br>
வாங்கியன அரசுகள்</p>
<p dir="ltr">இவன் தந்த சின்ன,சின்ன ஆசை<br>
'இன்னொரு தேசிய கீதம்' ஆனது<br>
பூங்காற்று திரும்புமா<br>
'கருவாச்சி காவியம்" ஆனது</p>
<p dir="ltr">'வைகறை மேகங்கள்' திரட்டி<br>
'பெய்யென பெய்யும் மழை' <br>
பொழியச் செய்து<br>
'தண்ணீர் தேசம்' கட்டியவன்</p>
<p dir="ltr">ராசையாவோடு முரண் வந்த நேரம் அது <br>
'ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்' </p>
<p dir="ltr">'எல்லா நதியிலும் என் ஓடம்' என<br>
'வடுகப்பட்டி முதல் வால்கா வரை'<br>
துடுப்பு போட்டுக் கொண்டிருக்கிறான்</p>
<p dir="ltr">'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' <br>
என ஓய்வெடுங்கள் என்றாலும்<br>
'வில்லோடு வா நிலவே' என்று<br>
கவிப்போருக்கு கிளம்பி விடுவான்</p>
<p dir="ltr">சமீபகாலமாக<br>
'காவி நிறத்தில் ஒரு காதல்'-ஓ <br>
சந்தேகம் கூடுகட்டியது<br>
இல்லை,இல்லை <br>
'என் மௌனத்தின் சப்தங்க'ளும்<br>
திராவிடம் தான் பேசும் என்றான்</p>
<p dir="ltr">திரை 'வானம் தொட்டுவிடும் தூரம் தான்'<br>
பறந்தே விடுவான் என்றெண்ண<br>
என் 'கொடி மரத்தின் வேர்கள்'<br>
இலக்கிய மண்ணில் தானென்று <br>
முரசறைந்தான்</p>
<p dir="ltr">'இதுவரை நான்'<br>
'ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்' என பறந்தவன்<br>
ராஜாளியாய் 'பாற்கடல்' வென்றான்</p>
<p dir="ltr">அவ்வப்போது புத்துணர<br>
'மீண்டும் என் தொட்டிலுக்கு' என<br>
தேனீமண் தவழ்வான்</p>
<p dir="ltr">நெஞ்சத்து 'கேள்விகளால் ஒரு வேள்வி'<br>
நடத்தி <br>
'கள்ளிகாட்டு இதிகாசம்' கண்டான்</p>
<p dir="ltr">'நேற்று போட்ட கோலம்' அல்ல<br>
இந்த 'கவிராஜன் கதை'<br>
இது பழம் தமிழை <br>
'திருத்தி எழுதிய தீர்ப்புகள்'</p>
<p dir="ltr"># 'தமிழுக்கு நிறம் உண்டு'; வடுகப்பட்டி கருப்பு !</p>
<p dir="ltr">( '--' குறிக்குள் இருப்பவை கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூல்கள். இன்று கவிப்பேரரசு பிறந்தநாள்)</p>
<p dir="ltr">__எஸ்.எஸ்.<u>சிவசங்கர்</u></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-iJaaA5wYqIU/WWeeeDv2zzI/AAAAAAAAFbY/p1o3ZCTB2_gUkLuC8tVqOndIqzLYSxRhwCHMYCw/s1600/images-43.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-iJaaA5wYqIU/WWeeeDv2zzI/AAAAAAAAFbY/p1o3ZCTB2_gUkLuC8tVqOndIqzLYSxRhwCHMYCw/s640/images-43.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-11307931927219735522017-07-12T19:08:00.001+05:302017-07-12T19:08:27.094+05:30அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு<p dir="ltr">அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு.</p>
<p dir="ltr">அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம். </p>
<p dir="ltr">குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி. </p>
<p dir="ltr">அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.</p>
<p dir="ltr">பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.</p>
<p dir="ltr">இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.</p>
<p dir="ltr">அந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.</p>
<p dir="ltr">+2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.</p>
<p dir="ltr">கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வுப் பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.</p>
<p dir="ltr">ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.</p>
<p dir="ltr">இன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.</p>
<p dir="ltr">"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.</p>
<p dir="ltr">குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.</p>
<p dir="ltr">உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.</p>
<p dir="ltr">மணிரத்தினத்திடம் கேட்டேன், "அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ?". அவரது பதில் அடுத்த இடி. "அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா".</p>
<p dir="ltr">ஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.</p>
<p dir="ltr">கல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு முட்டாள் மத்திய அரசாங்கம்.</p>
<p dir="ltr">இந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ ? </p>
<p dir="ltr">இத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய 'மோடி' என்ன பதில் சொல்லப் போகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.</p>
<p dir="ltr"># அனிதாக்களுக்காக "நீட் தேர்வை" எதிர்ப்போம் !<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-Tddq5AO7uOc/WWYmR1O_wHI/AAAAAAAAFa0/n2HOEnarhdItyS4DZZk6KPtYWIU_ylLqQCHMYCw/s1600/IMG-20170712-WA0009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-Tddq5AO7uOc/WWYmR1O_wHI/AAAAAAAAFa0/n2HOEnarhdItyS4DZZk6KPtYWIU_ylLqQCHMYCw/s640/IMG-20170712-WA0009.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-un8Tby1HHYo/WWYmTITrjyI/AAAAAAAAFa4/qFS1UCZP29wZfOXpTogT2B4TEBOFJ8mQgCHMYCw/s1600/img812.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-un8Tby1HHYo/WWYmTITrjyI/AAAAAAAAFa4/qFS1UCZP29wZfOXpTogT2B4TEBOFJ8mQgCHMYCw/s640/img812.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-GpmdrcZzhBo/WWYmUYJ1wII/AAAAAAAAFa8/LGaqXyP-Uz83Uj31vVDACfs8MDhIMrxBgCHMYCw/s1600/img814.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-GpmdrcZzhBo/WWYmUYJ1wII/AAAAAAAAFa8/LGaqXyP-Uz83Uj31vVDACfs8MDhIMrxBgCHMYCw/s640/img814.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-31948078120607016912017-07-12T12:31:00.001+05:302017-07-12T12:31:53.638+05:30வைஸ் இராமமூர்த்தி<p dir="ltr">"வைஸ் இல்லீங்களா?". " தோ, தெருமுனையில தான் இருப்பார்". "நாங்க வரும் போது கண்ணுல படலயே". " இப்ப தாங்க போனாரு. ஜனங்க வந்து கூப்பிட்டுகிட்டு போனாங்க". வந்தவர்களுக்கு அவரை பற்றி தெரியாது. அவரது வார்டை சேர்ந்தவர்கள் என்றால், அவர் எங்கு இருப்பார், எந்த நிலையில் இருப்பார் என்று அறிவார்கள். </p>
<p dir="ltr">வெளியில் இருந்து வந்தவர்கள் என்பதால், வைஸ் பிரசிடெண்ட் பந்தாவாக இருப்பார், கண்ணில் படவில்லையே என நினைத்திருப்பார்கள். அவரும் 'பளிச்' என்று தான் இருப்பார். ஆறடி உயரம் இருப்பார். எப்போதும் சலவை செய்த வெள்ளை வேட்டி, சட்டையில் இருப்பார். வீரப்பன் போல பெரிய மீசை. கையில் 'தாமரைக்கனி' ஸ்டைல் மோதிரம்.</p>
<p dir="ltr">தெருமுனையில் ஒரு கூட்டம் நின்றது. தேடி வந்தவர்கள் கூட்டத்தில் வைஸை தேடினார்கள். கண்ணில் படவில்லை. யாரும் பளிச் என்று தெரியவில்லை. சாக்கடை வாய்க்காலில் ஒருவர் குனிந்து நின்று ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். "வைஸ் எங்கேங்க?". " அதோ சாக்கடை உள்ள நிக்கிறாரே அவர் தான் வைஸ்". </p>
<p dir="ltr">அவர் வெறுங்கையால் சாக்கடையை அடைத்துக் கொண்டிருந்த குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார். அது தான் 'வைஸ்' ராமமூர்த்தி. அரியலூர் நகராட்சியின் வைஸ் பிரசிடெண்ட். 2வது வார்டு கவுன்சிலர். தனது வார்டில் ஏதேனும் இது போன்ற குறைகளை யாராவது சொன்னால், அதிகாரிகளையோ பணியாளர்களையோ தேடிக் கொண்டிருக்க மாட்டார். அவரே ஆக்‌ஷனில் இறங்கிவிடுவார்.</p>
<p dir="ltr">முதியோர் உதவித்தொகை வேண்டுமெனக் கேட்டு மூத்தவர்கள் யாராவது உதவி கோரி விட்டால் போதும், அவரே விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் போய் விடுவார். உரிய அதிகாரிகளை பக்குவமாக அணுகி அதை பெற்றுக் கொடுக்கும் வரை ஓய மாட்டார். ஓங்கி உயர்ந்த உருவம், பெரிய மீசை தானே ஒழிய, சின்னக் குழந்தை தான். அவ்வளவு பணிவாக நடந்துக் கொள்வார்.</p>
<p dir="ltr">1996 உள்ளாட்சித் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடன் பிறந்தோர், உறவினர் அதிகம். அதனாலும், அன்பான சிரிப்பாலும் எளிதாக வென்றார். பிறகு மேற் சொன்ன பணிகளால், மக்கள் மனதில் இடம் பிடித்து 2001 தேர்தலிலும் நிறைய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில், நகராட்சியை அதிமுக கைப்பற்றியது. திமுக சார்பில் குறைவானவர்களே வெற்றி பெற்றனர். அதில் இவரும் ஒருவர்.</p>
<p dir="ltr">2006 உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். சின்ன குழந்தை பெயர் சொல்லி அழைத்தாலும் நின்று பதில் சொல்வார். பைக்கில் திமுகழகக் கொடி படபடக்க தான் பவனி வருவார், அது எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும். மறைந்த நகர செயலாளர் பொன்.பக்கிரி அவர்களின் விசுவாசி, வார்ப்பு.</p>
<p dir="ltr">2011 உள்ளாட்சித் தேர்தலில் அண்ணன் இராமமூர்த்திக்கு கடும் போட்டி. கழக சார்பாக இன்னும் இருவர் சீட்டு கேட்டுப் போட்டிப் போட்டனர். அந்த இருவரும் அவர் உடன்பிறந்த சகோதரர்கள் தான். பெரும் பஞ்சாயத்தாக போனது. என்னையும் நகர செயலாளர் முருகேசனையும் தனியாக சந்தித்த அண்ணன் இராமமூர்த்தி, "குடும்பத்திலும் கழகத்திலும் சங்கடம் வேண்டாம். உங்களுக்கும் சங்கடம் வேண்டாம். தம்பிக்கு சீட் கொடுத்து விடுங்கள். ஆனால் அடுத்த முறை நான் தான் போட்டியிடுவேன்" என்றார்.</p>
<p dir="ltr">அவரது தம்பி மாரிமுத்து நிறுத்தப்பட்டு, அவரும் வெற்றி பெற்றார். அந்த அளவிற்கு அந்த வார்டை கழகக் கோட்டையாக வைத்திருந்தார் அண்ணன் இராமமூர்த்தி. சட்டமன்றத் தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் தான். 2011க்கு பிறகு, எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும், "அண்ண மறந்துடலியே" எனக் கேட்டு சிரிப்பார். "கவலைப் படாதீங்கண்ணே" என நான் சொல்வேன். இது எங்கள் இருவருக்கிடையேயான வழக்கமான உரையாடல் ஆனது.</p>
<p dir="ltr">2016ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த அன்று என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் சிரித்தார். "மறக்கலண்ணே" என்று நான் சொன்னேன். தேர்தல் தள்ளிப் போய் விட்டது.</p>
<p dir="ltr">இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கத்தை காகிதத்தை நகர செயலாளர் முருகேசனிடம் கொடுத்திருக்கிறார். "எல்லாம் முதியோர் உதவித் தொகை விண்ணப்பங்கள். நிறைய பேருக்கு வரணும்" என சொல்லி இருக்கிறார்.</p>
<p dir="ltr">நேற்று நள்ளிரவு அண்ணன் இராமமூர்த்தி உலகை விட்டு விடுதலை பெற்று விட்டார்.</p>
<p dir="ltr">இரண்டாவது வார்டு மக்களும், முதியோர் உதவித் தொகை கோரியோரும் காத்திருக்கிறார்கள். அண்ணன் இராமமூர்த்தி தான் இல்லை.<br></p>
<p dir="ltr"># மக்கள் பணி நாயகன் இராமமூர்த்தி நெஞ்சங்களில் வாழ்வார் !<br></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-c2Bth3BFQKw/WWXJXphCXxI/AAAAAAAAFaY/dOGzQLCH49s1GWE83azOiv4mdw4z1Z92wCHMYCw/s1600/IMG-20170711-WA0001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-c2Bth3BFQKw/WWXJXphCXxI/AAAAAAAAFaY/dOGzQLCH49s1GWE83azOiv4mdw4z1Z92wCHMYCw/s640/IMG-20170711-WA0001.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-40819613218439212582017-07-10T19:08:00.001+05:302017-07-10T19:08:15.153+05:30குலோத்துங்கன் IAS<p dir="ltr">மருவத்தூர் கிராமம், அரியலூர் மாவட்டத்தில், செந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இந்த மருவத்தூருக்கு இது வரை இருந்த அடையாளத்தை குலோத்துங்கன் மாற்றி அமைத்திருக்கிறார்.</p>
<p dir="ltr">செந்துறை தாலுக்காவே வானம் பார்த்த பூமி. நீர் பாசன வசதி இல்லாத காரணத்தால், அந்தக் காலத்தில் முந்திரிகாடுகள் உருவாக்கப்பட்டன. வருடம் ஒருமுறை தான், முந்திரி காய்த்து வருமானம். முந்திரி தான் இங்கு முக்கியப் பயிர்.</p>
<p dir="ltr">மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த நமுனார் திராவிட இயக்கத்தின் முன்னோடி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது துணைவியார் தனலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர், 1996-2001ல். இன்னும் பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் எளிமையானக் குடும்பம். </p>
<p dir="ltr">நமுனாரின் மூத்த மகன் அசோகன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர் முப்பது ஆண்டுகளாக. இப்போதும் அவர் தான் ஊராட்சி செயலாளர். என் தந்தையாருக்கும், எனக்கும் தேர்தல் பணியாற்றியவர். நெருக்கமான குடும்பம்.</p>
<p dir="ltr"> அண்ணன் அசோகனுக்கு தொழில் சைக்கிள் பழுது நீக்கும் கடை. அண்ணன் அசோகன், மல்லிகா தம்பதியருக்கு ஒரு மகள், ஒரு மகன். </p>
<p dir="ltr">மகள் வெற்றிச்செல்வி எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி முடித்து மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவரது கணவர் சரவணன் பி.இ முடித்து முனைவர் பட்டம் பெற்று இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.</p>
<p dir="ltr">மகன் குலோத்துங்கன். பள்ளிப் படிப்பை பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அந்த சுற்று வட்டாரத்தில் நீண்ட வரலாறு கொண்ட பள்ளி.</p>
<p dir="ltr">அரசுக் கல்லூரியான திருச்சி, நவலூர் குட்டப்பட்டில் இருக்கும் அன்பில் தர்மலிங்கம் விவசாயக் கல்லூரியில் இளங்கலை விவசாயம் B.Sc(Agri) பயின்றார் குலோத்துங்கன்.</p>
<p dir="ltr">கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் விவசாய மேலாண்மையில் உயர்கல்வி (M.B.A) பயின்றார். படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.</p>
<p dir="ltr">பணியாற்றினாலும் அடுத்த இலக்கு அவரை உந்தியது. அது இந்திய ஆட்சிப் பணி. சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து பயின்றார். ஓராண்டு பயிற்சி முடித்து தேர்வு எழுதி வெற்றிப் பெற்றார்.</p>
<p dir="ltr">நேர்முகத் தேர்வு தடைகல்லாக அமைந்தது. அயரவில்லை குலோத்துங்கன். ஷங்கர் அகாடமியிலேயே பயிற்றுநராக இணைந்தார். இரண்டாண்டுகள் பணியாற்றினார். தேர்வுக்கும் தயாரானார்.</p>
<p dir="ltr">இதற்கிடையில் இவரது தந்தையார் அண்ணன் அசோகன் அவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினை கடுமையான நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இப்போது நலமாக உள்ளார்.</p>
<p dir="ltr">தந்தையின் சிகிச்சைக்கு இடையிலும் இந்த ஆண்டு தேர்வில் குலோத்துங்கன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற பதினான்கு பேரில் ஒருவர். விவசாயத்தையே முதன்மைத் தாளாகக் கொண்டு தேர்வு எழுதினார்.</p>
<p dir="ltr">அடுத்த மூன்று மாதங்கள் முசௌரியில் பயிற்சி வகுப்புகள். பிறகு ஒதுக்கப்படுகிற மாநிலத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மீண்டும் முசௌரி பயிற்சிக்கு பிறகு பணி நியமனம் வழங்குவார்கள். </p>
<p dir="ltr">தமிழ்நாடு கேடரில் இடம் கிடைத்து, தமிழ்நாட்டில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ் உணர்வும், ஆர்வமும் கொண்டவர்.</p>
<p dir="ltr">கிராமத்திலிருந்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தை பிரதானப் பாடமாக பயின்று குடிமைத் தேர்விலும் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு தேறியவர். கிராம வாழ்க்கை, விவசாய சிரமம் உணர்ந்தவர். சிறப்பாக பணியாற்றுவார்.</p>
<p dir="ltr">தேர்வு பெற்றமைக்கு நன்றி தெரிவித்த, அவரது முகநூல் செய்தி சிறப்பானது. "குடிமைத் தேர்வு சிலருக்கு 100 மீ ஓட்டம், சிலருக்கு 200 மீட்டர் ஓட்டம், ஆனால் எனக்கு மாரத்தான் ஓட்டம். மாரத்தானை வெல்ல காரணமாக இருந்த ஷங்கர் அகாடமி நிறுவனர் ஷங்கர் அவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். அவரது உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.</p>
<p dir="ltr">இன்று சொந்த ஊர் மருவத்தூர் வந்திருந்தார் குலோத்துங்கன். நேரில் சென்று வாழ்த்தினோம். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள மண்ணின் மகனை வாழ்த்துவது கடமையல்லவா.</p>
<p dir="ltr"> இன்னும் அந்த கிராமத்துக் கூச்சம் விலகாமல், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சிறுவயதில் பார்த்த பண்புகள் மாறாமல் இருக்கிறார். இதுவே இவரை உச்சத்திற்குக் கொண்டு சேர்க்கும்.</p>
<p dir="ltr"># வாழ்த்துகள் குலோத்துங்கன் IAS !<br></p>
<p dir="ltr">(படத்தில் குலோத்துங்கன் அருகில் நிற்பவர் அவரது தந்தை அசோகன்)</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-mF4O0f6eDZE/WWODQgohLQI/AAAAAAAAFZ0/4yEsTSOm3lkBs_5FdexTaZ__QgQZJkWwgCHMYCw/s1600/IMG-20170710-WA0005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-mF4O0f6eDZE/WWODQgohLQI/AAAAAAAAFZ0/4yEsTSOm3lkBs_5FdexTaZ__QgQZJkWwgCHMYCw/s640/IMG-20170710-WA0005.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-39253024596964405882017-07-08T23:23:00.001+05:302017-07-08T23:23:30.158+05:30பாடித் தீர்த்தப் பொழுதுகள் !<p dir="ltr">அத்தனையும் பொய்யா?</p>
<p dir="ltr">சிறுவயதில் இருந்து கண்ட கனவெல்லாம் பொய்த்துப் போனதே. ஒவ்வொரு நாளும் உருகி, உருகி மன்றாடியதெல்லாம் இல்லாமல் போனதே. இந்தப் பிரபஞ்சமே எனக்கு அடிமை என்று இருந்த அகந்தை எல்லாம் அழிந்துப் போனதே. காட்சிகளை எல்லாம் ரசித்து, ரசித்து இழைந்தது அத்தனையும் இல்லாமல் போனதே. அத்தனையும் நாமே என்றிருந்தது எல்லாம் போனதே.</p>
<p dir="ltr">புரட்சித் தலைவர் படம் பார்த்தால், போர்வீரனாய் எண்ணி "அச்சம் என்பது மடமையடா" என்றுப் பாடித் திரிவோம். உலகம் சுற்று வாலிபனாய், "தங்கத் தோணியிலே, தவழும் பெண்ணழகே" என்று லயித்து மகிழ்ந்தோம். "புதிய வானம், புதிய பூமி நான் வருகையிலே" என்று வானம், பூமி பார்த்து கதறித் தீர்ப்போம். அங்கே நாம் தான் எம்.ஜி.ஆர், நாம் தான் டி.எம்.சௌந்தர்ராஜன்.</p>
<p dir="ltr">"யாரடி நீ மோகினி" என்று சிவாஜிகணேசனாய் வரித்துக் கொண்டு துள்ளிக் குதித்தோம். "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" என்று பாச மழை பொழிவோமே நடிகர் திலகமாய். "வெள்ளிப் பனி மலை மீதூலவுவோம்" என பாரதியாய் அகமகிழ்ந்தோமே. "யாருக்காக, இது யாருக்காக" என தத்துவம் பாடினோமே. "ஏய் குருவி, சிட்டுக்குருவி" என சிவாஜியாய் நெகிழ்ந்தொமே.</p>
<p dir="ltr">"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என சிறுவன் கமலஹாசனாக உருகுவோம். ஒரு கட்டத்தில், "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்" என தத்துவம் பாடினோம். "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே" என காதல் இளவரசன் ஆனோம். "கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே" என கடிதம் எழுதினோம். "ஒன்ன விட இந்த உலகத்திலே" என கமலஹாசனாகவே ஆனோம். </p>
<p dir="ltr">"மை நேஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்" என உச்சி முடி களைத்து ஸ்டைல் காட்டினோம். "காட்டிலொரு சிங்கக் குட்டியாம்" என கர்ஜித்தோம். "அண்ணனுக்கு ஜே, காளையனுக்கு ஜே" என சுற்றி வந்தோம். "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்ததாம்", என சோகம் பொழிந்தோம். " வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என வீர சபதம் எடுத்தோம்.</p>
<p dir="ltr">"ராஜராஜன் சோழன் நான்" என தலையில் கிரீடத்தோடு நடந்தோம். " சங்கீத வானம் தேன் சிந்தும் நேரம்" என்று சங்கீதக் கடலாய் பொங்குவோம். "பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி" என மாடுகளை கண்டால் இசையால் தாலாட்டினோம். "மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கூறு" என தலையில் கரகம் இல்லாமலே கரகாட்டம் ஆடினோம். "பழமுதிர்சோலை எனக்காகத் தான்" என வரப்புகளில் ஓடினோம்.</p>
<p dir="ltr">பஸ்ஸில் ஏறினால், ஓடும் பாடலுக்கு உடன் பாடுவது, முந்திப் பாடுவது என இசை சாகரத்தில் நீந்திக் கிடந்தோம். காரில் உடன் வருபவர்களுக்கு நம் சங்கீத ஞானத்தைக் காட்ட பாட்டாய் பாடுவோம். காதில் மாட்டியிருக்கும் ஹெட் போனில் ஒலிக்கும் பாடலை, உடன் பாடி தெருவை திரும்பிப் பார்க்க வைப்போம். குளிக்கும் போதும் பாடி, வீட்டை மூழ்கடித்தோம்.</p>
<p dir="ltr">டி.எம்.சௌந்தர்ராஜன் குரலுக்காக உச்சஸ்தாயியில் குரல் உயர்த்துவோம். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக குரலை மென்மையாய் இழைப்போம். இளையராஜாவிற்காக கரகரப்போம். உன்னிகிருஷ்ணன், கானாபாலா ஒருவரை விடுவதில்லை, ஜெராக்ஸ் குரலாய் பாடுவோம். ஏன் எஸ்.ஜானகி, சித்ராவாக கூட உருவெடுத்து பாடி மகிழ்ந்திருக்கிறோம்.</p>
<p dir="ltr">இப்படி எல்லாம் இருந்த வாழ்வு, கடந்த சில நாட்களாக இருள் சூழ்ந்து விட்டது. காதடைத்துப் போனது. தொண்டை எழ மறுக்கிறது. மூளை சோர்வுற்று விட்டது.</p>
<p dir="ltr">எல்லாம் இந்த தொழில்நுட்பத்தால் தான். Smule appல் எல்லோரும் பாடுகிறார்கள் என முயற்சித்தேன்.</p>
<p dir="ltr">டி.எம்.எஸ் பழித்து காட்டுகிறார். எஸ்.பி.பியை நெருங்க முடியவில்லை. நம்ம குரலுக்கு இளையராஜா தான் சரி எனப் முயற்சித்தால், எட்டா உயரத்தில் இருக்கிறார். கானா பாலாவுக்கு கூட ஒத்துப் போகவில்லை என் குரல்.</p>
<p dir="ltr">அய்யகோ அத்தனையும் பொய்யா. இவ்வளவு நாள் உருகி, உருகிப் பாடியதெல்லாம் பொய்யா. கூட இருந்தவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும். நினைக்கவே பயமாய் இருக்கிறது.</p>
<p dir="ltr">இன்னும் ஒரு பாடல் தான் பாக்கி. அதை முயற்சி செய்து விட்டு, பொதுவெளியில் பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.</p>
<p dir="ltr">கோழிக்கூவுது படத்தில் வரும், "அண்ணே, அண்ணே சிப்பாய் அண்ணே".</p>
<p dir="ltr"># என் சோகக் கதையக் கேளு தமிழ்குலமே !<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-wem5w6Jnph8/WWEcGIvejrI/AAAAAAAAFZU/FkYOZ8o5MXEQ-POzNBhkNuwy4ZvDz8KYQCHMYCw/s1600/images-54.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-wem5w6Jnph8/WWEcGIvejrI/AAAAAAAAFZU/FkYOZ8o5MXEQ-POzNBhkNuwy4ZvDz8KYQCHMYCw/s640/images-54.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-63605848251079907982017-07-03T00:31:00.001+05:302017-07-03T00:32:51.334+05:30இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்<p dir="ltr">"இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும், தேனாறும் ஓடியிருக்கும். தமிழ்நாட்ட தவிர அத்தனை மாநிலமும் ஹிந்தி கற்றவர்கள்" என்று சொல்லும் அன்பு 'ஹிந்தியர்கள்' கொண்டது தான் நம் தமிழகம். </p>
<p dir="ltr">நானும், தமிழரல்லா இந்தியர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியும் என்று நினைத்த காலமும் உண்டு. பெங்களூரில் நான் பணியாற்றும் போது தான், 'தமிழ் மாத்திரமே தெரிந்த' ஆடிட்டர் அண்ணன் நெடுமாறன் பதினைந்து ஆண்டுகள் கன்னடர்களுக்கு 'கணக்கு-வழக்கு' பார்த்த விபரம் அறிந்தேன். கன்னடமும் தெரியாது, இந்தியும் தெரியாது.</p>
<p dir="ltr">என் அப்பா சிகிச்சைக்கு ஹைதராபாத் சென்ற போது ஆட்டோ டிரைவரிடம் நான் தெலுகில் பேச, அவர் விழிக்க, அடுத்த கதை தெரிந்தது. வெறும் 'உருது' மாத்திரமே தெரிந்த அந்த ஆட்டோ டிரைவர், பிறந்தது வளர்ந்தது அத்தனையும் 'ஹைதராபாத்' தான். அவருக்கு 'தெலுகும் தெரியாது, இந்தியும் தெரியாது'.</p>
<p dir="ltr">குன்னம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பயிற்சிபட்டறைக்கு டெல்லிக்கு சென்ற போது தான் இந்தியாவின் இன்னொரு முகம் தெரிந்தது. பயிற்சி வகுப்பை இந்தியில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வடகிழக்கு மாநிலத்தவர்கள்.</p>
<p dir="ltr">அப்புறம் தான் நாங்கள், தமிழக ச.ம.உக்கள் குரல் கொடுத்தோம். அடுத்து குஜராத், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் எதிர்த்தார்கள். உத்தரபிரதேசத்தை சுற்றியுள்ள சில மாநிலங்கள் தான் ஹிந்தியை ஏற்றுக் கொண்டவர்கள்.</p>
<p dir="ltr">சமீபத்தில் கார்ப்பரேட் மோடி கைங்கர்யத்தில், இன்னும் சில மாநிலங்கள் 'இந்தி திணிப்பு - எதிர்ப்பு' படையில் இணைந்துள்ளன. அதற்கு முதலில் நன்றி 'மோடி அண்ணா'. </p>
<p dir="ltr">ஆனால், மோடியை தனியாகக் கேட்டால், அவரும் குஜராத்தி மொழிக்கு ஆதரவாகத் தான் இருப்பார். ஆனால் 'ஏக இந்தியா' கார்ப்பரேட்களின் நெருக்கடியில் அவரும் 'ஹிந்தி ரட்சகனாக' உருவெடுத்து விட்டார்.</p>
<p dir="ltr">இப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு. எதற்குமே மத்திய அரசை எதிர்க்காத மாநிலம் ஒடிசா. அவ்வளவு பின் தங்கிய மாநிலம். அதன் முதல்வர் நவீன் பட்நாயக், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.</p>
<p dir="ltr">மைல்கல்களில் ஒடிய மொழியை தவிர்த்து, இந்தியில் எழுதியதற்கு தான் அந்த எதிர்குரல். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதினார். "ஒடிய மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்".</p>
<p dir="ltr">அடுத்த குரல் கேரளத்தில் இருந்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளில் "மலையாளம் கட்டாயம் " என்று அறிவிப்பு கொடுத்தார். இந்தி திணிப்பிற்கான எதிர்குரல் தான் அது.</p>
<p dir="ltr">அடுத்து கர்நாடகம். கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்தார். அவர் மாத்திரமல்ல, சாதாரண மக்களும் குரல் கொடுத்தனர்.</p>
<p dir="ltr">குறிப்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் இந்தி இடம் பெறுவதை, பெங்களூரு மக்கள் கடுமையாக எதிர்த்தனர். சமூக வலைதளங்களில் அனல் பறக்க ஆரம்பித்தது. இப்போது அறிவிப்பு பலகையில் இடம்பெற்றுள்ள இந்தி மறைக்கப்படுகிறது.</p>
<p dir="ltr"> காங்கிரஸ்காரர்களும் , பொதுமக்களும் மாத்திரம் எதிர்க்கவில்லை, பா.ஜ.கவினரும் எதிர்க்கிறார்கள். அது தான் கவனிக்கப்பட வேண்டியது.</p>
<p dir="ltr">சி.டி.ரவி. இவர் பா.ஜ.கவின் சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏ, மூன்று முறையாக.</p>
<p dir="ltr"> "Ministries and Departments should take immediate step to #StopHindiImperialism and ensure primacy for all the recognized languages in India" என ட்வீட் செய்தார். </p>
<p dir="ltr">"அமைச்சரகங்களும், துறைகளும் இந்தி ஆதிக்கத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மற்ற இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்". இது தான் ரவியின் ட்வீட். இந்தி திணிப்பு என்பதைத் தாண்டி, இந்தி ஆதிக்கம் என வலியுறுத்துகிறார் இவர்.</p>
<p dir="ltr">அடுத்து, பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா, மைசூரு தொகுதி. "Imposition of Hindi in schools. Respected @RashtrapathiBhavan. Sir pls don't impose Hindi on us. #OurKannadaOurPride.", என ட்வீட் செய்துள்ளார். </p>
<p dir="ltr">" எங்கள் பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி, இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள். எங்கள் கன்னடம், எங்கள் பெருமை" என்பது எம்.பி பிரதாப்பின் ட்வீட். இவர் பிரதமரை விட்டுவிட்டு ஜனாதிபதிக்கு ட்விட்டியிருந்தாலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தான் சப்ஜெக்ட்.</p>
<p dir="ltr">பொறியாளர் குருபிரசாத்தின் கேள்வி இன்னும் ஷார்ப். "ஐந்து கோடி மக்கள் தொகை கொண்டது கர்நாடகம். இதில் எழுபத்தைந்து சதவீத மக்களே படித்தவர்கள். மீதி இருக்கிற படிக்காதவர்கள் மீது இந்தியை திணித்து என்ன செய்யப் போகிறீர்கள்? ".</p>
<p dir="ltr">கர்நாடக மக்களுக்கு தெரிந்தது கன்னடம் மாத்திரமே. படித்த 75% மக்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களே பெரும்பான்மை. அதில் ஹிந்தியை, "பாஸ் மார்க்" கிற்காக படித்தவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்தியை படிக்கத் தான் தெரியும், ஆனால் பேச தெரியாது. அது தான் கொடுமை. இது புரியாம ஹிந்தி படிக்கணும்னு கதறும் கோஷ்டி தான் கவனிக்க வேண்டும்.</p>
<p dir="ltr">மராத்தி எழுத்துக்கள், அப்படியே இந்தியை ஒத்தவை. மராத்தி பேசுபவர்களுக்கு, இந்தி பேசுவது எளிது. ஆனால் மராத்தியர்களும் இந்தி திணிப்பிற்கு எதிர் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.</p>
<p dir="ltr">மகராஷ்டிராவில் 'மோடி' என்று ஒரு மொழி உண்டு. இந்தி திணிப்பால், மோடி அழியும் நிலை. அதற்காகவும் குரல் எழும்ப ஆரம்பித்து விட்டது. இன்னும் பல மொழிகள், இந்தி திணிப்பால் அழியும் கதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.</p>
<p dir="ltr">ஆழி.செந்தில்நாதன் அவர்களால் நான் ஒரு குழுவில் இணைக்கப் பட்டேன். "மொழி சமத்துவம் ஊக்குவிப்போம். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல" என்பது அந்தக் குழு. அதில் இணைந்த பிறகு பல இந்தி பேசும் மாநிலங்களிலேயே 'இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு' இருக்கிறது என்பது புரிய வருகிறது.</p>
<p dir="ltr">இன்றைய செய்தி:</p>
<p dir="ltr">மும்பையில் இன்றைய ட்வீட் ட்ரெண்ட்.</p>
<p dir="ltr">#AapliMetroHindiNako<br>
#StopHindiImposition</p>
<p dir="ltr">"எங்கள் மெட்ரோவில் இந்தி வேண்டாம்.<br>
இந்தி திணிப்பை நிறுத்து".</p>
<p dir="ltr">80 ஆண்டுகளுக்கு முன் இந்தியை எதிர்த்த முதல் மாநிலம் "தமிழ்நாடு". இன்று மற்ற மாநிலங்கள் பின் தொடர்கின்றன.</p>
<p dir="ltr">Inferiority complex-ஐ விட்டுத் தொலையுங்கள் ஹிந்தி-தமிழர்களே !</p>
<p dir="ltr">இந்தியை எதிர்க்கவில்லை, ஆனால் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். </p>
<p dir="ltr"># இப்போ இந்தியாவே திரள்கிறது, இந்தி எதிர்ப்பில் ! </p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-B-UJ_XZM698/WVlDRQ1AHoI/AAAAAAAAFYU/-lw3mKrOjW8OZBtF0rGNpQX27Rfn3aIRACHMYCw/s1600/Screenshot_2017-07-02-21-01-38.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-B-UJ_XZM698/WVlDRQ1AHoI/AAAAAAAAFYU/-lw3mKrOjW8OZBtF0rGNpQX27Rfn3aIRACHMYCw/s640/Screenshot_2017-07-02-21-01-38.png"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-icLGljddwGM/WVlDTIztHvI/AAAAAAAAFYY/WA4LRyhtc6kz3jJJ4yIoXDJcs2SdPUYLgCHMYCw/s1600/Screenshot_2017-07-02-20-58-34.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-icLGljddwGM/WVlDTIztHvI/AAAAAAAAFYY/WA4LRyhtc6kz3jJJ4yIoXDJcs2SdPUYLgCHMYCw/s640/Screenshot_2017-07-02-20-58-34.png"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-1vhCKD1SFkY/WVlDUbjiNnI/AAAAAAAAFYc/XkWpUGoeiv8PnlOUKq3u5Rbio8-8Asj4gCHMYCw/s1600/Screenshot_2017-06-30-12-17-01.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-1vhCKD1SFkY/WVlDUbjiNnI/AAAAAAAAFYc/XkWpUGoeiv8PnlOUKq3u5Rbio8-8Asj4gCHMYCw/s640/Screenshot_2017-06-30-12-17-01.png"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-HbugjmcoBrE/WVlDU4lIaEI/AAAAAAAAFYg/I5yZmm6Cv7A6zoQdqu9yt52Kx-76oyV-ACHMYCw/s1600/FB_IMG_1499014022641.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-HbugjmcoBrE/WVlDU4lIaEI/AAAAAAAAFYg/I5yZmm6Cv7A6zoQdqu9yt52Kx-76oyV-ACHMYCw/s640/FB_IMG_1499014022641.jpg"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-b6OtoewPzZ0/WVlDWQWn4hI/AAAAAAAAFYk/jwBvovbaYkQ57O9O6j4AkUSWgo50sC3awCHMYCw/s1600/20170703_002723.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-b6OtoewPzZ0/WVlDWQWn4hI/AAAAAAAAFYk/jwBvovbaYkQ57O9O6j4AkUSWgo50sC3awCHMYCw/s640/20170703_002723.png"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-16445206525825159332017-06-29T23:55:00.001+05:302017-06-29T23:55:10.706+05:30கிராம சுகாதாரமும் 'நீட்'டும் !<p dir="ltr"> குளத்தூர், ஆண்டிமடத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம். ஆண்டிமடம் தான் குளத்தூருக்கு அருகில் இருக்கும் சிறுநகரம். ஆண்டிமடத்தில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. ஏதேனும் உடல்நலக் கோளாறு என்றால், ஆண்டிமடத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையமோ அல்லது தனியார் மருத்துவமனையோ தான் தஞ்சம்.</p>
<p dir="ltr">ஆண்டிமடத்தை விட்டால், குளத்தூரில் இருந்து அடுத்த 8 கி.மீட்டரில் வாரியங்காவலில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் உண்டு. குளத்தூரில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் ஒரு டி.வி.எஸ்-50 அல்லது பைக் பிடித்து ஆண்டிமடம் அல்லது வாரியங்காவல் செல்ல வேண்டும்.</p>
<p dir="ltr"> இப்படி இருந்த நிலையை மாற்றியவர் அசோகசக்கரவர்த்தி. அசோக், ஆசிரியர் சுப்ரமணியன் அவர்களது மகன். மருத்துவம் படித்தவர் சொந்த கிராமத்திலேயே சேவை செய்ய முடிவெடுத்தார்.</p>
<p dir="ltr">சந்திரகாசு அவர்களுக்கு வயது 82. ஏதும் அவசரமென்றால் இப்போது டாக்டர் அசோக்கிடம் பார்த்துக் கொள்கிறார். முன்னர் யாராவது ஹோமியோபதி டாக்டர்கள் தான் வீட்டுக்கு வந்து வைத்தியம் பார்ப்பார்கள்.</p>
<p dir="ltr">டாக்டர் கண்ணன், ஆசிரியர் தங்கராசு அவர்களது மகன். தனது கிராமமான பெரியகிருஷ்ணாபுரம் அருகில் இருக்கும் ஆண்டிமடத்தில் மருத்துவமனை கட்டி பணியாற்றுகிறார். </p>
<p dir="ltr">டாக்டர் அறிவுச்செல்வன் தங்கள் கிராமமான இரும்புலிக்குறிச்சிக்கு அருகிலுள்ள சிறுநகரமான செந்துறையில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்துள்ளார். சுற்றி இருக்கும் பல கிராம மக்கள் இங்கு தான் சிகிச்சை பெறுகின்றனர்.</p>
<p dir="ltr">டாக்டர் ரமேஷ்குமார் காது,மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர். இவரது கிராமம் மணப்பத்தூர். இவர் அரியலூர் கூட செல்லாமல் செந்துறையிலேயே மருத்துவம் பார்க்கிறார். கிராம மக்கள் சேவை பெறுகிறார்கள்.</p>
<p dir="ltr">இவர்கள் எல்லாம் இவர்கள் பிறந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள சிறு நகரத்திலோ மருத்துவ சேவை செய்கிறார்கள். மேற்படிப்பு படித்திருந்தாலும் பெரு நகரத்திற்கு செல்லவில்லை. </p>
<p dir="ltr">கிராமத்து அரசு பள்ளியிலோ, சிறு நகரத்து தனியார் பள்ளியிலோ படித்தவர்கள் மருத்துவம் படித்தார்கள். அவர்கள் இது போன்று கிராமப்புற சேவையில் உள்ளனர்.</p>
<p dir="ltr">கிராமப்புறத்தில் இருந்து சென்று மருத்துவம் படித்தவர்கள் தான், அரசு மருத்துவமனையில் பணிபுரிய முன் வருகிறார்கள். இவர்களால் தான் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. கிராமத்தில் இருப்பவர்கள், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்தியம் பெற வாய்ப்பிருக்கிறது.<br></p>
<p dir="ltr">இலையூர் கிராமத்தில் டீக்கடை நடத்தும் சாதாரண ஏழையின் மகன் ராஜா, டீக்கடையில் காலை தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு வாரியங்காவல் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து, மாலை ஒரு மணி நேரம் கடையில் வேலை செய்து விட்டு, படித்து டாக்டர் படிப்புக்கு தேர்வானார். நீட் தேர்வுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து பயிற்சி பெற இவர்கள் குடும்பம் தாங்கியிருக்காது. நல்லகாலம், மோடி ஆட்சிக்கு முன் படிக்க போய்விட்டார். டாக்டர் ஆகிவிட்டார்.</p>
<p dir="ltr">சி.பி.எஸ்.சியில் படித்து, நகர்புற நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் நகரத்தில் உள்ளவர்கள், அல்லது கிராமப்புற பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள்.</p>
<p dir="ltr">இவர்கள் மருத்துவம் படித்து விட்டு கிராமத்திற்கு வரமாட்டார்கள். இவர்கள் பெருநகரங்களில் பணிபுரியவே விரும்புவார்கள். இந்த சூழலில் கிராமப்புறத்தில் பணிபுரிய மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.<br></p>
<p dir="ltr">கிராமப்புற மருத்துவ சேவையை நசுக்கிவிட்டால், நகர்புறத்திற்க்கு தான் மக்கள் வந்தாக வேண்டும். நகர்புறத்தில் வருங்காலத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் தான் கோலோச்சும். இப்போது அப்போலோ, வருங்காலத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள். </p>
<p dir="ltr">ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் வந்த "பிரபல மாடல்" மோடி, அந்த மருத்துவமனை விளம்பரத்திலும் வந்து சிரிப்பார், "இங்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என.</p>
<p dir="ltr"># கார்ப்பரேட் மோடி வாழ்க, ஏழைகள் சாக !<br><br></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-4zs8-s1RYOk/WVVGA4ZjQ-I/AAAAAAAAFXo/4dpM_VVit-UU6RUUVlUwI5aD9mcxuEn6wCHMYCw/s1600/images-16.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-4zs8-s1RYOk/WVVGA4ZjQ-I/AAAAAAAAFXo/4dpM_VVit-UU6RUUVlUwI5aD9mcxuEn6wCHMYCw/s640/images-16.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-77794461047002768842017-06-26T08:40:00.001+05:302017-06-26T08:40:05.933+05:30நீட் தேர்வு - சமூக விரோதம்<p dir="ltr">நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய போது, அதை பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஏகடியம் செய்தார்கள். ஏனைய இந்தியா ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகத்திற்கு மாத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.</p>
<p dir="ltr"> இன்று நீட் தேர்வு முடிவுகள் அதற்கு பதில் சொல்லி விட்டது. முதல் 25 இடத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வரவில்லை என்று செய்திகள் வருகின்றன.</p>
<p dir="ltr">+2 தேர்வில், 1150 மதிப்பெண் எடுத்தவர்கள் கூட நீட்டில் வெற்றி பெறவில்லை, தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 40 % பேரே தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நேற்றில் இருந்தே தமிழகம் அலையடிக்கிறது. </p>
<p dir="ltr">நீட் தேர்வு எழுதியவர்களில் 2% பேர் தான் மத்தியப் பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், மீதமுள்ளவர்கள் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதற்காகவாவது, இந்த ஆண்டு மட்டுமாவது நீட் வேண்டாம் என ஒரு சாரார் குரல் கொடுத்தனர். </p>
<p dir="ltr">இந்தக் குற்றச்சாட்டை உறுதிப் படுத்தி, தமிழக அரசே புதிதாக ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85%, மத்தியப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 15% என இடத்தை பாகம் பிரித்திருக்கிறது.</p>
<p dir="ltr">இது சரி. மாநிலப் பாடத்திட்டத்தில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் பெற போகிறது என்பது தான் முக்கிய கேள்வியாக உள்ளது. </p>
<p dir="ltr">எந்தக் கேள்விக்கும் நேராக பதில் சொல்லாத ஒரு மாநில அரசாங்கம், பதிலே சொல்லாத மத்திய அரசாங்கம்.</p>
<p dir="ltr">ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள்கள் . ஒரே மாநிலத்தில் ஆங்கிலத்தில் ஒரு கேள்வித்தாள், உள்ளூர் மொழியில் வேறு கேள்வித்தாள். அதற்கு தமிழகமே சாட்சி. இதில் இரண்டுமே கடுமையான கேள்வித்தாள்கள். </p>
<p dir="ltr">குஜராத்தில் எளிதான கேள்வித்தாள் என நீட் தேர்வு குளறுபடிகளை சுட்டிக்காட்டி மதுரையை சேர்ந்த மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசிடம் பதில் கேள்வி கேட்டது.</p>
<p dir="ltr">பதறிப் போன மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரியது. உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உடனே உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் பணிந்தது. </p>
<p dir="ltr">அத்தோடு நில்லாமல் உடனே முடிவை வெளியிட வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஒரு வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே, விசாரணையின்றி தீர்ப்பு வழங்கியுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.</p>
<p dir="ltr">இப்போது நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. நீதி கேட்ட பெண்ணின் குரல் காற்றோடு கலந்து விட்டது. அந்தப் பெண்ணின் குரல் போல தான் தமிழகத்தின் குரலும் கேட்க நாதியற்றுப் போயுள்ளது. </p>
<p dir="ltr">இன்னொருபுறம் தேர்வுத்தாள்களில் இந்த கூத்துகள் என்றால், தேர்வு எப்படி நடைபெற்றிருக்கும் என்ற அய்யமும் எழுகிறது. காரணம், இவர்களது வரலாறு அப்படி. </p>
<p dir="ltr">மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு நான்காவது முறையாக தொடர்ந்து ஆள்கிறது. அங்கு நடைபெற்ற "வியாபம் ஊழல்" உலகப் பிரசித்தி பெற்றது. வியாபம் என்பது அந்த மாநிலத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகள், பணிக்கான தேர்வுகளுக்கான அரசு அமைப்பு. மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்பட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் மிக அதிகம்.</p>
<p dir="ltr">2000 ஆண்டு துவங்கியது 2009ல் பெரும் பிரச்சினையானது. காவல்துறை வழக்கு தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தது. வழக்கு தேங்கியது. பிறகு நீதிமன்றம் தலையிட்டு சூடுபிடித்தது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என வழக்கோடு தொடர்புடையோர் கிட்டத்தட்ட 50 பேர் மர்மமான முறையில் மரணமுற்றுள்ளனர். அதற்கும் வழக்குப் பதியாமல் காவல்துறை ஏமாற்றியதும் நடந்தது. </p>
<p dir="ltr">2015 ஜூன் வரை 2000 பேருக்கு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தும் இதில் திருப்திப் படாத உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை சி.பி.ஐ இடம் ஒப்படைத்துள்ளது. இது நுழைவுத் தேர்வு நடத்தியதற்கு, உச்சநீதிமன்றத்திடம் பா.ஜ.க பெற்றுள்ள தகுதிச் சான்றிதழ். </p>
<p dir="ltr">இதை விட நம் தமிழ்நாட்டில் மத்திய பா.ஜ.க அரசு நடத்திய தேர்வின் கதை சிறப்பு. மூன்று மாதங்களுக்கு முன் மத்திய அரசின் தபால் துறை அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு நடந்தது. தமிழகத்தில் பணி என்பதால் தமிழ் தெரிவது அவசியம். அதற்கு 25 மதிப்பெண்கள். தேர்வு முடிவு வந்தது. 30 க்கு மேற்பட்ட கோட்டங்களிலும் தேர்வு பெற்றவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். சந்தேகப்பட்ட நம்மவர்கள் அதில் உள்ளவர்கள் இருவருக்கு அலைபேசியில் பேச ஒருவருக்கும் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை.</p>
<p dir="ltr">முழுவதும் விசாரிக்க எல்லாமே கோல்மால் எனத் தெரிய வந்தது. புகார் கொடுத்தார்கள், அரசு செவிசாய்க்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு, விசாரித்து உண்மை வெளிவந்துவிட்டது. இப்போது அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு நடந்துள்ளது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு மோடியின் அரசு தான் பொறுப்பு.</p>
<p dir="ltr">வியாபம், தபால்துறை தேர்வுகள் ஒரு அடையாளம். பா.ஜ.க தேர்வை எப்படி நம்புவது என்பதும் இதனால் முக்கியக் கேள்வி.</p>
<p dir="ltr">அடிப்படையாக மாநில அரசின் பட்டியலான கல்வியில் மத்திய அரசு தலையிடுவதே தவறு. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.</p>
<p dir="ltr">இது வெறும் தேர்வெழுதிய மாணவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. மக்களின் சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இது அரசின் சுகாதாரத் துறையை நொறுக்கி, கார்ப்பரேட்கள் கையில் கொடுக்கும் நடவடிக்கை.</p>
<p dir="ltr">பதில் சொல்ல வேண்டிய பிரதமர் மோடி பெருமான் எந்த நாட்டில் இருக்கிறாரோ? என்ன விவாதத்தில் இருக்கிறாரோ ?</p>
<p dir="ltr">தமிழக மாணவர்கள் எக்கேடு கேட்டால் அவருக்கு என்ன கவலை ?</p>
<p dir="ltr"># நீதி கேட்டது மதுரைப் பெண், பற்றி எரியும் !</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-yYOlbauAGig/WVB7C4_D51I/AAAAAAAAFXE/AmjgKTblELwOaa2MN3Rb230EVtVLEvFTACHMYCw/s1600/images-31.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-yYOlbauAGig/WVB7C4_D51I/AAAAAAAAFXE/AmjgKTblELwOaa2MN3Rb230EVtVLEvFTACHMYCw/s640/images-31.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-18835353720360322872017-06-23T21:07:00.001+05:302017-06-23T21:07:02.539+05:30கொச்சி மெட்ரோவும், பாகுபலியும்<p dir="ltr"></p>
<p dir="ltr">கடந்த சில நாட்களாக மலையாள நண்பர்கள் இந்தத் தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள். எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகுபலி-2 திரைப்படம் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதனால் இந்தத் தலைப்பு கொஞ்சம் கேரளாவை எட்டிப் பார்க்க வைத்தது. யூடியூபில் காட்சிகள் விரிந்தன.</p>
<p dir="ltr">கொச்சியில் மெட்ரோ ரயில் துவக்க விழா ஜூன் 17ம் தேதி நடைபெற்றது. மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைப்பது மரபு. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்பாக நடந்த சில நிகழ்வுகள் தான் சர்ச்சையாகி இருக்கின்றன.</p>
<p dir="ltr">பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால், யார் யார் கலந்து கொள்ள வேண்டுமென்ற பட்டியலை, 14 பெயர்களோடு, மாநில அரசு பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதில் சில பெயர்களை நீக்கி பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. உள்ளுர் சட்டமன்ற உறுப்பினர், மேயர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. பணி நடக்கும் போது, உள்ளூர் பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் அவர்கள் தான்.</p>
<p dir="ltr">இதை விட இன்னும் சில பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. கொச்சி மெட்ரோ திட்டத்தை 2012ல் துவக்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆளுங்கட்சி. அப்போது முதல்வர் உம்மன் சாண்டி, அவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இப்போது காங்கிரஸ் எதிர்கட்சி. இப்போது எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா. அவர் பெயரையும் நீக்கியிருந்தது பிரதமர் அலுவலகம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை துவங்கியதே காங்கிரஸாக இருந்தாலும், இந்த எதிர்ப்பை அரசியல் நடவடிக்கை என கருத இடம் உண்டு.</p>
<p dir="ltr">இன்னொரு பெயர் நீக்கப்பட்டது தான் ஒட்டு மொத்த கொந்தளிப்புக்கு காரணமாக இருந்தது. அந்த பெயர் "சிரீதரன்". அவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. அது " மெட்ரோ மேன்". டெல்லி மெட்ரோ திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, குறிப்பிட்ட செலவை விடக் குறைவாக முடித்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர். அப்போது பத்திரிக்கைகள் அவருக்கு இந்த சிறப்புப் பெயரை வழங்கினார்கள்.</p>
<p dir="ltr">1990ல் அவர் ரயில்வே துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணி சிறப்பை உணர்ந்து, புகழ்பெற்ற "கொங்கண் ரயில்வே" திட்டத்திற்கு அவரை ஒப்பந்த அடிப்படையில் தலைவர் ஆக்கியது. அதற்கு பிறகு தான் டெல்லி மெட்ரோ. அதன் பின் எங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றாலும் இவர் தான் பொறுப்பு. கொச்சி மெட்ரோவும் இவர் கைவண்ணமே. இப்போது இவருக்கு வயது 85. ஆனாலும் இவர் தேவை தொடர்கிறது.</p>
<p dir="ltr">கொச்சினில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது மிகுந்த சிரமமானப் பணியாக இருந்தது. நில அமைப்பு, குறுகிய சாலைகள், தட்பவெப்பம் என பல இடர்பாடுகள் இருந்தாலும், இவரால் தான் திட்டம் நிறைவேறியது. இதனால் இவர் பெயர் இல்லை என்பது கொந்தளிக்க வைத்தது. இன்னொன்று, இவர் மண்ணின் மைந்தன். ஆமாம், இவர் கேரளாவை சேர்ந்தவர். எரியும் மாட்டுக்கறியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றியதாகியது.</p>
<p dir="ltr">மக்கள் எதிர்குரல் வலுத்தது. முகநூலும், ட்விட்டரும் அனல் தகித்தன. முதல்வர் பினராயி விஜயன், மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். ஏற்கனவே "பிரதமர் மோடி, கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கையா, முதல்வர் பினராயி விஜயன் " ஆகியோருக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எதிர்ப்பிற்கு பிறகு, இறங்கி வந்தது மத்திய அரசு.</p>
<p dir="ltr">திறப்பு விழா நாள் வந்தது. மோடியும் வந்தார். மென் நீலநிற பைஜாமா அணிந்து ஒய்யாரமாக வந்தார். திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக கையசைத்தார். புதிய மெட்ரோ நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை நறுக்க நின்றார். வெங்கையாவும், பினராயியும் சிரீதரனை முன்னே அழைத்தார்கள். திரும்பிப் பார்த்து விட்டு ரிப்பனை நறுக்கினார் மோடி. முடித்து சம்பிரதாயமாக முதல்வருக்கும், சிரீதரனுக்கும் கை கொடுத்தார். புதிய மெட்ரோவில் ஏறினார்கள். 17 நிமிடப் பயணம். தன் பக்கம் திரும்பிய மோடியை முதல்வர் பினராயி சட்டை செய்யவில்லை. அமைதி நிலவியது ரயிலில். பிரதமர் அலுவலகமே வீடியோ வெளியிட்டுள்ளது. அடக்கமாக அமர்ந்திருந்தார் சிரீதரன்.</p>
<p dir="ltr">பாகுபலி-2 திரைப்படத்தில் எதிர்பாராத திருப்பமாக, மன்னராக பொறுப்பேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமரேந்திர பாகுபலியை ஒதுக்கி விட்டு, பல்வாள்தேவன் பொறுப்பேற்பார் என ராஜமாதா சிவகாமி அறிவித்துவிடுவார். யாருக்கும் அதில் விருப்பம் இருக்காது. மக்கள் மனம் கவர்ந்தவர் பாகுபலி தான். ஆனால் அறிவித்தவர் ராஜமாதாவாயிற்றே.</p>
<p dir="ltr">அரசனாக பதவியேற்பார் பல்வாள்தேவன். அவர் தந்தை கைத்தட்ட மெல்ல கரவொலி எழும்பி அடங்கும். மன்னனாக எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி சேனாதிபதியாக பதவியேற்க வருவான். அப்போதே வாழ்த்துக்குரல் எழ ஆரம்பிக்கும். "அமரேந்திர பாகுபலி என்னும் நான்" என சொன்னவுடன் அரங்கே அதிரும்.</p>
<p dir="ltr">மெட்ரோ விழாவில் மோடி மலையாளத்தில் தன் உரையை துவங்கினார், லேசான கரவொலி. அதன் பின் கொச்சி மெட்ரோவின் அருமை பெருமைகளை அடுக்கினார். அரங்கத்தில் அசைவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்து அமர்ந்தார். கையொலித்தார்கள் மக்கள்.</p>
<p dir="ltr">கொச்சி மெட்ரோ திட்டத்தின் நிர்வாக இயக்குநர் எலியாஸ் நன்றி கூற வந்தார். ஒவ்வொருவராக விளித்து நன்றி கூறினார். பிரதமருக்கு நன்றி கூறினார், கைத்தட்டல் எழுந்தமர்ந்தது. அடுத்து "சிரீதரன்" என்று உச்சரித்தார் எலியாஸ். எழுந்த கரவொலி அடங்கவில்லை. காத்திருந்து கரவொலி அடங்கிய பிறகு பேச்சை தொடந்தார் எலியாஸ். கேமராவை பிரதமர் பக்கம் திருப்பவில்லை.</p>
<p dir="ltr">அமரேந்திர பாகுபலி உறுதிமொழி எடுத்து முடித்த உடன் மக்கள் கரவொலி எழுப்புவார்கள், வீரர்கள் வேல்களை தரையில் தட்டுவார்கள், யானைகள் பிளிரும், தரை மெல்ல அதிரும், பொருட்கள் உருளும், மன்னனின் கொற்றக் கொடை சரியும்.</p>
<p dir="ltr">கொச்சி மேடையில் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரவொலியிலேயே தட்டிக் காட்டிவிட்டார்கள் சேட்டன்களும், சேச்சிகளும்.</p>
<p dir="ltr">மெட்ரோவில் ரிலீஸான "பாகுபலி".</p>
<p dir="ltr"># மக்கள் தட்டத்தட்ட மகுடமும் சரியும் !</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-WcV3HKRNUFE/WU01nFYfQmI/AAAAAAAAFWg/JLFfSXYNIFQy5USNc8DQLQtKju80IpjlACHMYCw/s1600/images-39.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-WcV3HKRNUFE/WU01nFYfQmI/AAAAAAAAFWg/JLFfSXYNIFQy5USNc8DQLQtKju80IpjlACHMYCw/s640/images-39.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-27669277642279075772017-06-18T00:25:00.001+05:302017-06-18T00:25:31.168+05:30என்று தணியும் இந்த....<p dir="ltr">குவைத், எண்ணெய் வளத்தால் பொருளாதார வளமாக இருக்கும் ஒரு நாடு. 1990 ஆகஸ்ட் 2 அன்று ஈராக் படைகள் குவைத் நாட்டின் உள் நுழைந்தன. சுதந்திரத்திற்கு போராடும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான படையெடுப்பு என ஈராக் அறிவித்தது. ஆகஸ்ட் 4, "சுதந்திர குவைத்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 8, குவைத் ஈராக் நாட்டோடு இணைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் 28, குவைத் ஈராக்கின் ஓர் மாநிலம் என அறிவிக்கப்பட்டது.</p>
<p dir="ltr">அரபு நாடுகள் அல்லோகல்லோப்பட்டுப் போயின. இதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என பதறிப் போனார்கள். படையெடுப்புக்காகப் பயப்படவில்லை. படையெடுத்த மனிதரை கண்டு பயம். ஈராக்கின் தன்னிகரற்ற தலைவனாக முடிசூட்டிக் கொண்ட "சதாம் உசேனை" கண்டு தான் அந்த பயம். உலகின் வல்லாதிக்க நாடுகளின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது.</p>
<p dir="ltr">அமெரிக்கா தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ், போர் தான் வழி என்றார். <br></p>
<p dir="ltr">ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. காரணம், பொருளாதார அரசியல். ஈராக் குவைத்தை கைப்பற்றியதற்கும், அமெரிக்கா குவைத்தை விடுவித்ததற்கும் காரணமும் அதே பொருளாதார அரசியல் தான். அதிலும் குறிப்பாக எண்ணெய் அரசியல். மத்தியகிழக்கு நாடுகளில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய் தான் கிட்டத்தட்ட உலக பொருளாதார சுழற்சிக்கான மைய அச்சு. எனவே அதை சுற்றி தான் உலக அரசியல்.</p>
<p dir="ltr">மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் முதலீடு செய்த உலகப் பெரு நிறுவனங்கள், சதாம் ஜுரத்தால் பீடிக்கப்பட்டன. அடுத்து சதாமால் "உலக எண்ணெய் விலை"க்கு பாதிப்பு வரும், அதனால் உலக பொருளாதாரத்திக்கு பாதிப்பு வரும் என ஆதிக்க நாடுகள் கவலை கொண்டன. குவைத்தின் பெரும் பணம் பிரிட்டன் நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் குவைத்திற்கு 'தேள் கொட்டியது', பிரிட்டனிற்கு 'நெரி' கட்டியது. பெரு நிறுவனங்கள், ஆதிக்க நாடுகள், பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் கதறின.</p>
<p dir="ltr">உலக பாதுகாப்பு கவுன்சில் ஆதரவுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 1991 ஜனவரி 16ல் குவைத்தின் உள் நுழைந்தன. பிப்ரவரியில் சதாமின் ஈராக் படை வெளியேற்றப்பட்டது. அத்தோடு பிரச்சினையை விடவில்லை அமெரிக்கா. அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. ஈராக்கிடம் "அணு ஆயுதங்கள், ஆந்த்ராக்ஸ், விஷவாயு ஆயுதங்கள் குவிந்திருக்கின்றன" என அறிவித்தது.</p>
<p dir="ltr">1993ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து படிப்படியாக அமெரிக்கா ஈராக்கிற்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஈராக் தீவிரவாதத் தாக்குதலுக்கு தயாராகிறது என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவிற்கு தகவல் கொடுத்தார். எதிரிகளான இவர்கள் எண்ணெய் அரசியலில் மட்டும் ஓரணி. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் அறிவித்தார்.</p>
<p dir="ltr">போருக்கு முன்பாகவே ஈராக் கிட்டத்தட்ட தளர்ந்து போயிருந்தது. ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. ஈராக்கிற்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை. ஈராக்கால் பெட்ரோலியப் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக் அடிபணிந்தது. 1996 ஆம் ஆண்டு "உணவுக்கு எண்ணெய்" திட்டத்திற்கு ஈராக் ஒப்புதளித்தது. ஆனாலும் அமெரிக்க விடவில்லை.</p>
<p dir="ltr">2003 மார்ச் 20, போர் துவங்கியது. அமெரிக்கப் படைகள் மெல்ல முன்னேறின, அவர்களின் கை ஓங்கியது. சதாம் தலைமறைவானார். ஏப்ரல் 9ல் நெடிதுயர்ந்த சதாமின் சிலை கீழே தள்ளப்பட்டது. சதாமின் சகாப்தம் முடிந்ததற்கான குறியீடாக இது அமைந்தது.</p>
<p dir="ltr">அப்புறம் தான் எதிர் கிளைமாக்ஸ். எந்த ஆயுதங்கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக்கிறது என போர் தொடுத்தாற்களோ, அதன் பிளாஸ்டிக் மாடல்கள் கூட ஈராக்கில் இல்லை. இந்தப் போரின் நோக்கம் "எண்ணெய் அரசியல்" தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும் வெட்கப்படவில்லை, அமெரிக்கா.</p>
<p dir="ltr">2017 ஜூன் 5. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பிற்கு கத்தார் ஆதரவு தருகிறது என சவுதி அரேபியா குரல் கொடுத்தது. இதற்கு ஐக்கிய அரேபிய குடியரசு, பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் சவுதி அரேபிய குரலுக்கு ஆதரவு தெரிவித்தன. இது என்ன புதிய பிரச்சினை என்ற கேள்வி எழுந்தது. பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் கத்தார் முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த நாடுகளின் குரலுக்கான வேறு அர்த்தம் என்ன என ஆராயப்பட்டது. கத்தார் மீது இந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.</p>
<p dir="ltr">அப்போது தான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் டிரம்ப் காட்சிக்கு வந்தார். "தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும்" என எச்சரித்தார்.<br></p>
<p dir="ltr">கத்தார் இன்றைய தேதிக்கு உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்கார நாடு. ஆனால் சுண்டைக்காய் அளவு நாடு. நாட்டில் இருக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் வெளி நாட்டினர், வேலைக்காக வந்தவர்கள்.</p>
<p dir="ltr">"இந்தத் தடையால எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என கத்தார் அறிவித்தது. இன்னொரு ஈராக்கா என்ற பேச்சு வந்தது. ஆனால் சதாம் போல் நாங்கள் வீம்பு காட்டி ஏமாந்துவிட மாட்டோம் என கத்தாரின் அடுத்த நடவடிக்கை காட்டி விட்டது.</p>
<p dir="ltr">ஜூன் 14 அன்று ஒரு அறிவிப்பு. அமெரிக்காவுக்கும் கத்தாருக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ரூபாய் 77,460 கோடி மதிப்பிலான எப்-15 ரக விமானங்கள் 72ஐ கத்தாருக்கு விற்க அமெரிக்காவின் ஒப்பந்தம் தான். அப்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கை குறித்து விவாதித்தது தான் ஹைலைட்.</p>
<p dir="ltr">கத்தார், பொருளாதார அரசியலின் நுட்பம் உணர்ந்து அடி எடுத்து வைப்பதாகத் தோன்றுகிறது. பலத்தால் அடிக்காதே, பணத்தால் அடி.</p>
<p dir="ltr"># என்று தணியும் இந்த எண்ணெய் மோகம் !<br>
</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-5TpUotkoiAQ/WUV7If_v0oI/AAAAAAAAFVw/Ns4-c4Pj-QkFjw-YuIuHHHqKiwblmxufgCHMYCw/s1600/images-26.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-5TpUotkoiAQ/WUV7If_v0oI/AAAAAAAAFVw/Ns4-c4Pj-QkFjw-YuIuHHHqKiwblmxufgCHMYCw/s640/images-26.jpeg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-9470379419950069232017-06-08T00:29:00.001+05:302017-06-08T00:29:01.557+05:30டாக்டர் சாமிநாதன்<p dir="ltr"></p>
<p dir="ltr">"ராசேந்திரன கம்பத்துல கட்டி வச்சிருக்காங்களாம்".  மகனை கட்டி வைத்திருக்கும் சேதி கேட்டு பதறி ஓடுகிறார் தந்தை சாமிநாதன்.  " கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று ஊர் சுவர் எல்லாம் எழுதி வைத்தது தான் ராசேந்திரன்  செய்த குற்றம். கோபத்தில் இருந்த நாட்டார்களிடம் "இதுக்கு மேல இப்புடி செஞ்சான்னா, அடுத்தத் தடவ கெடா வெட்டும் போது சேத்து வச்சி இவன வெட்டிடுறேன்"என்று சமாதானம் சொன்னார்.</p>
<p dir="ltr">நிண்ணியூர் கிராமத்தில் கோயில் படைக்க வேண்டுமானால் சாமிநாதனை தான் அழைப்பார்கள். சாமிக்கு வேண்டி கொண்ட ஆட்டுக் கெடா வெட்டவும் இவரைத் தான் நாடுவார்கள். அவர் மகனே 'கடவுள் இல்லை' என்று எழுதினால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் ராசேந்திரன். செந்துறை பள்ளிக்கு போகும் போது, புலவர் பொன்னம்பலனார் அவர்களை நலம் விசாரிக்க வந்த தந்தைப் பெரியாரைப் பார்த்திருக்கிறார் ராசேந்திரன்.</p>
<p dir="ltr">பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, திராவிடர் கழக கொள்கைகளை உள்வாங்கி இருக்கிறார். அதன் விளைவு தான், 'கடவுள் இல்லை' சுவர் எழுத்து. இது போல் எழுதக் கூடாது என்று மகனுக்கு அறிவுரை சொன்னார் சாமிநாதன். மகன் ராசேந்திரனோ கொள்கை பேசியிருக்கிறார்.  மகன் சொன்ன செய்திகள் மீது  ஆர்வம் ஏற்பட்டது சாமிநாதனுக்கு. கீழமாளிகை கிராமத்திற்கு சென்ற போது, உறவினர் பாவாடைராயனை சந்தித்திருக்கிறார் சாமிநாதன். அந்தப் பகுதி திராவிடர் கழகத்தின் முக்கியமானவர் பாவாடைராயன்.</p>
<p dir="ltr">அங்கு நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தை பார்த்திருக்கிறார் சாமிநாதன். அவர்களது வாதம், பகுத்தறிவு மீது இவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பிறகு மகனின் கொள்கை விஷயங்களில் தலையிடவில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த ராசேந்திரன் முழு நேர திராவிடர் கழக செயற்பாட்டாளர் ஆனார். பிற்காலத்தில் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.</p>
<p dir="ltr">ஒரு கட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தார் ராசேந்திரன். ஒரு கூட்டத்தில் அவரது உரையையும், சமூக ஆர்வத்தையும் கண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வியந்துப் போனார். புழல் சிறையில் இருக்கிற கைதிகளுக்கு பாடம் நடத்த இயலுமா என்று கேட்கிறார் மாவட்ட ஆட்சியர். ஒப்புக் கொண்ட ராசேந்திரனை, புழல் சிறைக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். ஒன்பது ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர். அத்தோடு, அங்கேயே கைதிகளில் படித்தவர்களை தேர்வு செய்து சிறைக்குள்ளேயே ஒரு பள்ளியை கட்டமைத்து விட்டார் ராசேந்திரன். செய்தித் தாள்களில் இது குறித்து வந்த செய்திகளைப் பார்த்து உள்ளம் பூரித்துப் போனார் சாமிநாதன். </p>
<p dir="ltr">சாமிநாதனுக்கு ஆறு மகன்கள், இரண்டு மகள்கள். விவசாயியாக வாழக்கை நடத்தினார். மழை பொய்த்த நேரத்தில், இறந்த மாடுகளின் எலும்பை சேகரிக்கும் வேலைக்கு சென்றார். பதறிப் போன அந்தத் தொழிலாளர்கள், "சின்னவரே, நீங்க இந்த வேலைக்கு வரக்கூடாது" என சொல்ல, "பிள்ளைகளை காப்பாற்றி, படிக்க வைக்க எந்தத் தொழிலும் இழிவு இல்லை" என்று மறுத்து வேலை செய்தார்.</p>
<p dir="ltr">ஒரு மகன் ராணுவத்தில் பணியாற்றினார், மற்றொருவர் வெளிநாடு சென்று பொருளீட்டுகிறார். நான்காவது மகன் வழக்கறிஞர் பகுத்தறிவாளன். இவருக்கு சூட்டப்பட்டப் பெயர் திருஞானம். கல்லூரி காலத்தில் தன் பெயரை தமிழ்படுத்தி 'பகுத்தறிவாளன்' ஆக்கிக் கொண்டார். கல்லூரி கடைசி ஆண்டில் செந்துறையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். "சாதி மறுப்பு அல்லது விதவை மறுவாழ்வு திருமணம் செய்து கொள்வேன்".</p>
<p dir="ltr">சொன்னபடியே, இரண்டு குழந்தைகளோடு நிராதரவாக இருந்த 'தவமணி' அவர்களை மணமுடித்தார் பகுத்தறிவாளன். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், இரவு எட்டு மணிக்கு, "சுயமரியாதை திருமணம்" நடைபெற்றது. துவக்கத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை சாமிநாதன், பிறகு உணர்ந்து திருமணத்தில் மகிழ்ச்சியாய் கலந்து கொண்டார். விஜய் டிவியில் இந்த திருமண நிகழ்வு குறித்த செய்தி வெளியான போது, கூடுதல் மகிழ்ச்சி அடைந்தார்.</p>
<p dir="ltr">கடைசி மகள் சாதி கடந்து, மொழி கடந்து ஆந்திரத்து மருமகனை கைபிடித்ததையும் ஏற்றுக் கொண்டார் சாமிநாதன். கிராமத்து பூசாரி மெல்ல, மெல்ல பகுத்தறிவாளரானார் மகன்களால்.</p>
<p dir="ltr">இளம்வயதில்  மாட்டுவைத்தியம் பார்க்க  துவங்கிய சாமிநாதன், அதனால் சுற்றுவட்டாரத்தில் பிரபல்யமானார். மாட்டை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு விலாவை தடவி விட்டால், மாடு நலம் பெறும். கன்று போட திணறும் பசுக்களுக்கு வைத்தியம் பார்க்க இவரை அழைத்து செல்வார்கள். இவர் கை நுழைந்தால், எவ்வளவு சிக்கலான நிலையிலும் கன்றை கையோடு இழுத்து விடுவார்.</p>
<p dir="ltr">ஊரில் இவரது பங்களிப்பு பெரிது. யார் வயலில் ஏர் வோட்டுவதாக இருந்தாலும், இவரை முதல் ஏர் ஓட்டச் சொல்வார்கள். பயிர் விதைப்பிலும் இவரது கைராசி அந்தப் பகுதியில் பிரபலம். மிக முக்கியமானது, ஏரியில் கட்டைப் போடுவது. அடை மழை காலத்தில், ஏரியில் நீரை தேக்க, மூன்று ஆள் மட்டம் மூழ்கி,  மதகில் மரக்கட்டையை செலுத்தி நீரை தடை செய்ய வேண்டும். அதில் முதன்மையாக இருந்து செய்வார் சாமிநாதன். சிறுவயதில்,நண்பர்களோடு சாராயம் காய்ச்சினார் எனவும் செய்தி உண்டு.</p>
<p dir="ltr">இப்படி மக்களோடு வாழ்ந்தவர் 90வது வயதில், கடந்த ஜனவரி மாதம் மறைவுற்றார். இவரது சிதைக்கு மருமகள்களே கொள்ளி வைத்தனர். குடும்ப நிகழ்வுகளை சுயமரியாதை நிகழ்வாக நடத்தியவரது, இறுதி நிகழ்வும் அவ்வாறே நிகழ்வுற்றது.</p>
<p dir="ltr">அவரது இறப்புக்கு ஒரு மாதம் முன்,  ஆசிரியர் கருணாநிதி படத்திறப்பு நிகழ்விற்கு சென்றிருந்தேன். முதல் வரிசையில் பெரியவர் 'சாமிநாதன்'. நிகழ்ச்சி முடிந்து அருகே சென்றேன், எழுந்து விட்டார். உட்கார சொன்னேன், மறுத்து விட்டார். வயதை தாண்டி, பதவிக்கான மரியாதையை கொடுத்தார். கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.</p>
<p dir="ltr">படத்திறப்பு நிகழ்வில், அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவரது இளையமகன் தங்கசாமி பேசியது,"கடவு சீட்டில் என் பெயர் சாமிநாதன் தங்கசாமி என்று இருக்கும். நான் முனைவர் பட்டம் பெற்ற போது,  சாமிநாதன் பெயருக்கே சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மிகச் சரியானது தான். படிக்காமலே மாட்டுவைத்தியம், பயிர் செய்தல், கோவில் பூசை, சாராயம் காய்ச்சுதல், கடைசியில் பகுத்தறிவு என ஆய்வு செய்து வாழ்ந்திருக்கிறார். அவர் 'டாக்டர் சாமிநாதன்' தான்"என்றார்.</p>
<p dir="ltr">**********************</p>
<p dir="ltr">(அந்திமழை மே 2017 மாத இதழில் விருந்தினர் பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்) </p>
Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-87970432361560225032017-05-31T21:07:00.001+05:302017-05-31T21:07:13.136+05:30செகரட்டரி பன்னீர் !<p dir="ltr">அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஒருவரது வாழ்வு எப்படி இருந்தது என்பது அவர் விட்டு செல்லும் புகழ் மூலம் அறியப்படும். இது வள்ளுவரின் வாக்கு.</p>
<p dir="ltr">குறள் வழி பார்த்தால், 'செகரட்டரி' வாழ்க்கை மற்றோருக்கு பயன்பட்டது என்பது இன்று புலப்பட்டது. அரியலூரில் திரும்பியப் பக்கம் எல்லாம் செகரட்டரிக்கான கண்ணீர் அஞ்சலி பதாகைகள், சுவரொட்டிகள் தான். தொழிலதிபர்களும் வைத்திருந்தனர், ஆட்டோ ஓட்டுனர்களும் வைத்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களது வருத்தமும் வெளிப்பட்டது.</p>
<p dir="ltr">பன்னீர்செல்வம் என்பதை விட 'செகரட்டரி' என்றே எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர். அதனால் செகரட்டரி என்று பதவியின் பொருட்டு அலுவலகத்தில் அழைக்கப்பட்டவர், மக்களாலும் அழைக்கப்பட ஆரம்பித்தார். அரியலூரில் பல சங்கங்கள் உண்டு, பல செயலாளர்களும் உண்டு. ஆனால் இவரே 'செகரட்டரி'.</p>
<p dir="ltr">அரியலூர் மாவட்டத்தில் பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அரியலூர் நகரில் இருப்பது தான். சுற்றிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சங்கம் இது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம். ஒரு காலத்தில் திருச்சி அரசு பால் பண்ணைக்கு பெரும் பகுதி பாலை அனுப்பியது இந்த சங்கம் தான்.</p>
<p dir="ltr">ஆயிரக்கணக்கான குடும்பத்தின் வருமானத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது இந்த சங்கம். இந்த சங்கத்தில் எழுத்தராகப் பணிக்கு சேர்ந்தவர் தான் அண்ணன் பன்னீர்செல்வம். படிப்படியாக உயர்ந்து செயலாளர் ஆனார். சங்கப் பணியாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார். காரணம் சிறுவயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்.</p>
<p dir="ltr">பணியாளர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தவர், அதற்கான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்கான கோரிக்கைகளுக்காக அரசுடன் போராடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்.</p>
<p dir="ltr">சங்கப் பணிகள் இருந்தாலும், கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட அந்த சங்கத்தை நிர்வகிப்பது பெரும் பணி. பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் எல்லோரது அன்பையும் ஒருங்கே பெற்றிருந்தார். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரது அன்பையும் பெறுவது சர்க்கஸ் மாதிரி.</p>
<p dir="ltr">அதில் கைதேர்ந்தவர் அண்ணன் செகரட்டரி பன்னீர். இன்னொரு பக்கம் கட்சிப் பணியும் தொடர்ந்தார். அரசியல் ரீதியான குறுக்கீடுகள் வந்தாலும் அத்தனையையும் சமாளித்து விடுவார். பால்பண்ணைப் பணியில் முத்திரைப் பதித்து ஓய்வுப் பெற்றார். பிறகு பொதுவாழ்வில் ஈடுபட்டார். 2011 சட்டமன்றத் தேரதலில், அரியலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கணிசமான வாக்குகள் பெற்றார்.</p>
<p dir="ltr">அவரது பணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பான்மையினரின் அபிமானத்தோடு பணியாற்றினார். அதன் பலன் இன்று வெளிப்பட்டது, மறைவிற்கான அஞ்சலியில்.</p>
<p dir="ltr">அஞ்சலி செலுத்த வந்தவர்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காலை முதல் மாலை வரை கிராமத்து மக்கள், நகரத்தை சேர்ந்தவர்கள் என சாரி, சாரியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமும் அவரது பணியின் சிறப்பை வெளிப்படுத்தியது. ஒரு மனிதர் இவ்வளவு பேரிடம் பழகி, அவர்களது அன்பை பெற முடியுமா என எண்ண வைத்தது.</p>
<p dir="ltr"># பன்னீர் இயற்கையில் கரைந்தாலும் மணக்கிறார் !</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-VCiMt8wIvVI/WS7jAd7SxVI/AAAAAAAAFUs/x5K1LIy9zLwwVSnqIqWU3wV63hRLmF4DACHM/s1600/IMG-20170531-WA0017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-VCiMt8wIvVI/WS7jAd7SxVI/AAAAAAAAFUs/x5K1LIy9zLwwVSnqIqWU3wV63hRLmF4DACHM/s640/IMG-20170531-WA0017.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-66610761109268347102017-05-31T21:06:00.001+05:302017-05-31T21:06:37.309+05:30செகரட்டரி பன்னீர் !<p dir="ltr">அவரவர் எச்சத்தாற் காணப்படும். ஒருவரது வாழ்வு எப்படி இருந்தது என்பது அவர் விட்டு செல்லும் புகழ் மூலம் அறியப்படும். இது வள்ளுவரின் வாக்கு.</p>
<p dir="ltr">குறள் வழி பார்த்தால், 'செகரட்டரி' வாழ்க்கை மற்றோருக்கு பயன்பட்டது என்பது இன்று புலப்பட்டது. அரியலூரில் திரும்பியப் பக்கம் எல்லாம் செகரட்டரிக்கான கண்ணீர் அஞ்சலி பதாகைகள், சுவரொட்டிகள் தான். தொழிலதிபர்களும் வைத்திருந்தனர், ஆட்டோ ஓட்டுனர்களும் வைத்திருந்தனர். சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களது வருத்தமும் வெளிப்பட்டது.</p>
<p dir="ltr">பன்னீர்செல்வம் என்பதை விட 'செகரட்டரி' என்றே எல்லோருக்கும் நினைவுக்கு வருவார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அவர். அதனால் செகரட்டரி என்று பதவியின் பொருட்டு அலுவலகத்தில் அழைக்கப்பட்டவர், மக்களாலும் அழைக்கப்பட ஆரம்பித்தார். அரியலூரில் பல சங்கங்கள் உண்டு, பல செயலாளர்களும் உண்டு. ஆனால் இவரே 'செகரட்டரி'.</p>
<p dir="ltr">அரியலூர் மாவட்டத்தில் பெரிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், அரியலூர் நகரில் இருப்பது தான். சுற்றிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சங்கம் இது. ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கம். ஒரு காலத்தில் திருச்சி அரசு பால் பண்ணைக்கு பெரும் பகுதி பாலை அனுப்பியது இந்த சங்கம் தான்.</p>
<p dir="ltr">ஆயிரக்கணக்கான குடும்பத்தின் வருமானத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது இந்த சங்கம். இந்த சங்கத்தில் எழுத்தராகப் பணிக்கு சேர்ந்தவர் தான் அண்ணன் பன்னீர்செல்வம். படிப்படியாக உயர்ந்து செயலாளர் ஆனார். சங்கப் பணியாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார். காரணம் சிறுவயதிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர்.</p>
<p dir="ltr">பணியாளர்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தவர், அதற்கான அமைப்புகளில் ஈடுபாடு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்திற்கான கோரிக்கைகளுக்காக அரசுடன் போராடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது என எப்போதும் பரபரப்பாக இருப்பார்.</p>
<p dir="ltr">சங்கப் பணிகள் இருந்தாலும், கூட்டுறவு சங்கத்தின் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட அந்த சங்கத்தை நிர்வகிப்பது பெரும் பணி. பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் எல்லோரது அன்பையும் ஒருங்கே பெற்றிருந்தார். இப்படி ஒரே நேரத்தில் எல்லோரது அன்பையும் பெறுவது சர்க்கஸ் மாதிரி.</p>
<p dir="ltr">அதில் கைதேர்ந்தவர் அண்ணன் செகரட்டரி பன்னீர். இன்னொரு பக்கம் கட்சிப் பணியும் தொடர்ந்தார். அரசியல் ரீதியான குறுக்கீடுகள் வந்தாலும் அத்தனையையும் சமாளித்து விடுவார். பால்பண்ணைப் பணியில் முத்திரைப் பதித்து ஓய்வுப் பெற்றார். பிறகு பொதுவாழ்வில் ஈடுபட்டார். 2011 சட்டமன்றத் தேரதலில், அரியலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கணிசமான வாக்குகள் பெற்றார்.</p>
<p dir="ltr">அவரது பணியில் சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பான்மையினரின் அபிமானத்தோடு பணியாற்றினார். அதன் பலன் இன்று வெளிப்பட்டது, மறைவிற்கான அஞ்சலியில்.</p>
<p dir="ltr">அஞ்சலி செலுத்த வந்தவர்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பா.ம.க கம்யூனிஸ்ட், வி.சி.க என அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காலை முதல் மாலை வரை கிராமத்து மக்கள், நகரத்தை சேர்ந்தவர்கள் என சாரி, சாரியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலமும் அவரது பணியின் சிறப்பை வெளிப்படுத்தியது. ஒரு மனிதர் இவ்வளவு பேரிடம் பழகி, அவர்களது அன்பை பெற முடியுமா என எண்ண வைத்தது.</p>
<p dir="ltr"># பன்னீர் இயற்கையில் கரைந்தாலும் மணக்கிறார் !</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-VCiMt8wIvVI/WS7jAd7SxVI/AAAAAAAAFUs/x5K1LIy9zLwwVSnqIqWU3wV63hRLmF4DACHM/s1600/IMG-20170531-WA0017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-VCiMt8wIvVI/WS7jAd7SxVI/AAAAAAAAFUs/x5K1LIy9zLwwVSnqIqWU3wV63hRLmF4DACHM/s640/IMG-20170531-WA0017.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-35371663579889322272017-05-29T20:01:00.001+05:302017-05-29T20:01:25.044+05:30ஹு ஆர் யூ பிரைம் மினிஸ்டர் <p dir="ltr">"ரெண்டு பரோட்டா, ஒரு ஃபீப் ப்ரை". தமிழில் சொன்னாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் ஆனாலும் அவர்கள் திராவிட மொழிக் குடும்பம் தானே. சிறு கடை தான். உள்புறம் சின்ன பெஞ்ச், சின்ன மேசைகள் வரிசையாக. குண்டு பல்ப் மஞ்சளாக ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்தது. அது 2002. கிட்டத்தட்ட புரிந்திருக்கும். ஆமாம் "கடவுளின் தேசம்" கேரளா தான்.</p>
<p dir="ltr">அது தொழிற்முனைவராக இருந்த காலம். கேரளாவில் ஜேசிபி வாடகைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அடிக்கடி கேரளா சென்று வரும் வாய்ப்பு. போகும் போதெல்லாம் கேரள உணவை சுவைக்க கிடைக்கும் வாய்ப்பை விடுவதில்லை. காலையில் கிடைக்கும் ஆப்பம் - கொண்டக்கடலை, குழாப்புட்டு - நேந்திரம் வாழைப்பழம் எனத் துவங்கி, மதியம் மீன் பொளிச்சது, மீன் வறுத்தது என எதையும் விடவில்லை. </p>
<p dir="ltr">இப்படி இருந்தாலும் மாட்டுக்கறி "ஃபீப்" சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போது விடவில்லை. காரணம் கமல், அவர் வசனம். "வானத்தில பறக்கிற விமானத்தையும், கடல்ல மிதக்கிற கப்பலையும் தவிர ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாம் சாப்பிடுவேன்". அப்போ தான் கணக்கு பார்த்தேன், நாம எதெல்லாம் சாப்பிடிருக்கோம். விடுபட்டதில் முக்கியமானது மாட்டுக்கறி. </p>
<p dir="ltr">அந்த மாட்டுக்கறி சாப்பிடும் வாய்ப்பை தான் அடூரில் பெற்றேன். பரோட்டா கேரளாவில் தான் சாப்பிட வேண்டும். பொன் முறுவலா, அடடா. அதற்கு, மாட்டுக்கறி அத்தனை பிரமாதமானத் துணை. அப்போது முதன்முறை சாப்பிட்டவன், அதற்கு பிறகு கேரளா செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் விடுவதில்லை. வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு சுவையில் ஃபீப் கிடைத்திடும். </p>
<p dir="ltr">பிறகு அரியலூரில் ஒரு நாள் செந்துறை பைபாஸ் அருகில் ஃபீப் பிரியாணி பார்த்தேன், விடவில்லை. ரயில்வே கேட் அருகேயும் கிடைத்தது. அரியலூருக்கான சுவையோடு கிடைத்தது. கேரள சுவை இல்லாவிட்டாலும், இது ஒரு சுவை தான். சென்னையில் ஃபீப் கிடைக்கிறது. கிடைத்தாலும், கேரள சுவைக்கு ஈடாகாது. ஃபீப் கிட்டத்தட்ட கேரளாவின் தேசிய உணவு . </p>
<p dir="ltr">இன்னொரு பக்கம் ஃபீப் என்பது தமிழகத்தில் பரவலாகக் கிடைக்காத உணவு என்று ஒருத் தோற்றம். ஆனால் நகரங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே கிடைக்கிறது. இப்போது ஃபீப் பிரியாணி புகழ்பெற்ற உணவாகி விட்டது. அது ஏதோ இஸ்லாமியர்களும், ஒடுக்கப்பட்டோரும் நாடுகிற உணவு என ஊடகங்கள் கட்டமைக்க முயலுகின்றன. அது தவறு, பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவாகி விட்டது மாட்டுக்கறி.</p>
<p dir="ltr">என் துணைவியார் அசைவம் சாப்பிடுகிறவர் தான். ஆனால், திருமணத்திற்கு முன், வாரம் மூன்று நாட்கள் விரதம் இருந்தவர். என்னால் அவரது விரதங்கள் கைவிட்டுப் போயின. ஆயினும் மாட்டுக்கறி என்றால் வாய்ப்பே இல்லை என்று சொல்லக் கூடியவர் . அவருக்கு தெரியாமல் தான் கேரள சுவை ஃபீப். பிறகு அவரிடத்தில் சொல்லி விட்டேன். </p>
<p dir="ltr">மருத்துவர் என்பதால், ஒரு பயிற்சிக்காக துணைவியார் கொச்சின் செல்ல வேண்டி வந்தது. அவருக்கு துணை என்ற பெயரில் உடன் மகன்களோடு நானும் பயணித்தேன். தங்கும் அறை ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை உணவு, அறை வாடகையில் சேர்ந்தது. பஃபே சிஸ்டம். ஆப்பம் கிடைத்தது. காலையிலேயே அசைவமும் இருந்தது. இரண்டு பாத்திரங்கள் இருந்தன.</p>
<p dir="ltr">ஒன்று சிக்கன் ஸ்டூ. இன்னொன்று ஃபீப் மசாலா. துணைவியாரும் மகன்களும் ஆப்பமும் சிக்கனும் சாப்பிட, நான் ஆப்பமும் ஃபீபும் சாப்பிட்டேன். மூன்று நட்சத்திர விடுதியில் கிடைத்ததால் அவர் ஒன்றும் எதிர்ப்பு சொல்லவில்லை. "எப்படி இருக்கிறது?" என்றுக் கேட்டார். "செம ஃடேஸ்ட்" என்றேன். "சரி. எஞ்சாய் பண்ணுங்க" என்று சொன்னார்.</p>
<p dir="ltr"># ஹோம் மினிஸ்டரே அனுமதித்த பிறகு, நீ யார் மேன் ப்ரைம் மினிஸ்டர் ?<br><br><br></p>
<p dir="ltr"> <br>
</p>
Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5546850188612900078.post-56700562221321806142017-05-24T23:16:00.001+05:302017-05-24T23:16:22.807+05:30மறக்க இயலாது இராமதாசனை <p dir="ltr">உட்கோட்டை என்று ஊர் பெயர் சொன்னால், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக தோழர்களுக்கு அண்ணன் இராமதாசன் பெயர் தான் நினைவு வரும். அந்த அளவிற்கு சிறப்பான கழகத் தொண்டர். மூத்த நிர்வாகி. முப்பது ஆண்டுகள் மாவட்டப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். மாவட்டப் பிரதிநிதி என்பது மாவட்ட செயலாளரை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை உள்ள பதவி. ஒரு மாவட்டக் கழகத்தை நிர்வகிக்கும் பதவி மாவட்ட செயலாளர்.</p>
<p dir="ltr">அண்ணன் ராமதாசன் 25 வயதுகளிலேயே மாவட்டப் பிரதிநிதியாகி விட்டார். அவர் வாக்களித்தத் தேர்தலில் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்கள். தலைவர் கலைஞரின் அணுக்கத் தோழரும், கழக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அன்பிலாரோடு பணியாற்றினார் ராமதாசன். அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்.</p>
<p dir="ltr">உறவினர் இல்லத்திற்கு ஆண்டிமடம் வருவார். ஆனால் அங்கு செல்லும் முன், அப்போதைய மாவட்ட துணை செயலாளரான என் தந்தை சிவசுப்ரமணியன் அவர்களை முதலில் சந்திப்பார். கழகம் தான் முதலில். அப்போது நான் பள்ளி மாணவன். அன்றிலிருந்து அவரைப் பார்க்கிறேன். எப்போதும் திமுக கரை வேட்டி, கையில் ஒரு கைப்பை, ஒரு திமுக கரை போட்ட துண்டு என இருப்பார். கடைசி வரை அப்படித் தான்.</p>
<p dir="ltr">அதிர்ந்து பேசமாட்டார். அவர் உடல் மொழியில் பணிவு நிறைந்திருக்கும். குழைந்த சிரிப்போடு அன்பானப் பேச்சு தான் எப்போதும். சைக்கிள், லாரி, பஸ் என பயணித்து கழகப் பணியாற்றியவர்.</p>
<p dir="ltr">எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர், உழைப்பால் முன்னேறியவர். நேரத்தின் பெரும்பகுதியை கழக வளர்ச்சிக்கு செலவிடுவார். 1978ல் திமுக எதிர்கட்சியான சமயத்தில் தலைவர் கலைஞரை உட்கோட்டை கிராமத்திற்கு அழைத்து வந்து பொதுக் கூட்டம் நடத்தினார். பின்னர் தளபதி அவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தியவர். கழக முண்ணனித் தலைவர்கள் பலரையும் ஊருக்கு அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தியவர்.</p>
<p dir="ltr">கழகத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் துரோகம் இழைத்து வெளியேறிய நேரத்திலும் எஃகு தூணாக நின்றவர் இராமதாசன். பெரும்பான்மை சமூக எதிர்ப்புகளுக்கு பயப்படாமல் துணிந்து கழகப் பணியாற்றியவர். தேர்தலில் வாக்களித்தால் பிரச்சினை வரும் என்ற சூழலிலும் 1989 தேர்தலில் அண்ணன் க.சொ.கணேசன் அவர்களுக்கு கடுமையாக தேர்தல் பணியாற்றியவர்.</p>
<p dir="ltr">மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்களின் மனம் கவர்ந்த சிஷ்யர். அவர் ஆலோசனை பெற்று தான் செயல்படுவார். அவர் தலைமையில் தான் அண்ணன் இராமதாசன் இல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் அவர் அமைச்சராக இருக்கும் போது ஒரு நாளும் உதவி நாடி செல்ல மாட்டார். அண்ணன் இராமதாசனுக்கு மூத்த அமைச்சர்கள் பலரோடு நெருங்கியப் பழக்கம். ஆனால் சுயநலத்திற்காக அவர்களை அணுக மாட்டார். </p>
<p dir="ltr">கடந்த மார்ச் மாதம் தளபதி அவர்களுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி உட்கோட்டையில். அப்போது தான் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தார் அண்ணன் இராமதாசன். வீட்டிற்கு சென்று சந்தித்தோம். தன் உடல் நிலையை விட கழகப் பணிகள் குறித்தே எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.<br></p>
<p dir="ltr">தலைவர் கலைஞர் பிறந்தநாள், பேராசிரியர் பிறந்தநாள், தளபதி பிறந்தநாள் ஆகிய நாட்களில் காலை 7.00 மணிக்கு அழைப்பார். "மாவட்டம், நான் சென்னை வந்துட்டேன். தலைவர் வீட்டில் இருக்கிறேன்" என தகவல் தந்து விடுவார். அது மாத்திரமல்லாமல், மாவட்டத்தில் பொதுக் கூட்டம், போராட்டம் என்றால் முதல் ஆளாக இருப்பார். நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்பே அங்கு இருப்பார்.</p>
<p dir="ltr">கடந்த 22ம் தேதி ஜெயங்கொண்டம் நகரில் கழகப் பொதுக் கூட்டம். அண்ணன் இராமதாசன் கண்ணில் படவில்லை. கூட்டம் முடிந்த அரியலூர் பயணிக்கும் போது அலைபேசியில் மெசெஞ்சர் பார்த்தேன். அண்ணன் ராமதாசன் மகன் அருள் செல்வன் ஒரு செய்தி அனுப்பி இருந்தார். </p>
<p dir="ltr">"அண்ணா வணக்கம்,<br>
என் தகப்பனார் உட்கோட்டை இராமதாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.<br>
ஆதலால் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்துகிறார்..".</p>
<p dir="ltr">" அப்பா எப்படி இருக்கிறார்கள்?" எனக் கேட்டு இரவு 11.30க்கு பதில் அனுப்பினேன்.</p>
<p dir="ltr">நேற்று மாலை 4 மணி வாக்கில் அருள் பதில் அனுப்பி இருந்தார். "இன்று ஆஞ்சியோகிராம். இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்". </p>
<p dir="ltr">இன்று காலை 7.00 மணிக்கு அந்த செய்தி வந்துவிட்டது, "அண்ணன் இராமதாசன் மறைந்து விட்டார்".</p>
<p dir="ltr">இறுதி அஞ்சலி செலுத்தும் போது, அருள் அழுகைக்கு இடையே சொன்னார், " நேற்றைய மாலையும் அப்பா தான் பதில் அனுப்ப சொன்னாங்க. இரவு இப்படி ஆயிடுச்சி".<br></p>
<p dir="ltr">மரணத் தருவாயிலும் கழக நினைவு தான். </p>
<p dir="ltr"># மறக்க இயலாது அண்ணன் இராமதாசனை !<br></p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://lh3.googleusercontent.com/-Bt18yONfW0c/WSXG7IhIORI/AAAAAAAAFUE/OzlEl-GXTa0kRhhghDKRYvBX3CbQUM0NgCHM/s1600/FB_IMG_1495640609476.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://lh3.googleusercontent.com/-Bt18yONfW0c/WSXG7IhIORI/AAAAAAAAFUE/OzlEl-GXTa0kRhhghDKRYvBX3CbQUM0NgCHM/s640/FB_IMG_1495640609476.jpg"> </a> </div>Anonymoushttp://www.blogger.com/profile/10091183167127341912noreply@blogger.com0