பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு; மடைமாற்றம்

ஜல்லிக்கட்டு எதிர்ப்பை மடைமாற்றும் முயற்சியில் இந்துத்துவா கம்பெனி இறங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகம் கொதி நிலைக்கு வந்துள்ள சூழலில், அலங்காநல்லூரில் போராட்டம் வலுபெறும் நிலையில் peta-வுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் வகையறா. இதில் உள் அரசியலில் ஈடுபடும் சில தமிழ்நாட்டு கட்சிகள் வேறு.

இவர்களின் குற்றச்சாட்டு, peta-வுக்கு அனுமதி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா என்பது. அவர் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது என்பது அவர்கள் வாதம்.

1. Peta என்பது ஒரு லாப நோக்கில்லா தொண்டு நிறுவனம் என சொல்லிக் கொள்பவர்கள். 2000-ல் இந்த அமைப்பு இந்தியாவில் துவங்கப்பட்டது. (அப்போது மத்தியில் பா.ஜ.க அரசு)

2. அப்படிப்பட்ட தொண்டு நிறுவனம் அங்கீகாரம் பெறுவதற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு செல்ல தேவை இல்லை. அதற்கு வேறு அமைச்சகங்களுக்கு தான் செல்ல வேண்டும். (Peta இயங்குவதற்கான அனுமதியை வனத்துறை அமைச்சகத்திடம் பெற வேண்டிய அவசியம் இல்லை.)

3. அப்படியே Peta, விலங்குகள் பாதுகாப்பிற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் துறையிடம் ஒத்துழைக்கிறோம் என்று அனுமதி கேட்டிருந்தாலும், அது அதிகாரிகள் மட்டத்தில் முடிந்து விடும். எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரிடம் செல்லத் தேவை இல்லை.

4. 2008-ல் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்ற போது, ஆ.ராசா தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆகிவிட்டார். ( அப்போது தடையை பெற்றவர் பா.ஜ.கவின் மேனகா காந்தி)

5. 2011 ஜூலையில் தான் காளை காட்சிப் பொருளாக தடை விதிக்கப்பட்டது, நீதிமன்ற உத்தரவுப்படி. அப்போது ஆ.ராசா அமைச்சரே அல்ல. (வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972படி, வன விலங்கு பாதுகாப்பு வாரியம், காட்சிப் பொருளாக வைக்கக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தது 2011.)

ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும், இந்த ஆண்டு 'கண்டிப்பாக' நடத்தப்படும் என கதை விட்ட பொன்.ராதாகிருஷ்ணன் சிம்பிளா மன்னிப்பு கேட்டுட்டு, பிரச்சினைய திசை திருப்புறீங்க.

இப்போதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துபவர்கள் பா.ஜ.கவின் முண்ணனி தலைவர்களான மேனகா காந்தியும், சுப்ரமணியசுவாமியும் தான்.

Peta அமைப்பில் இருப்பவர்கள்  ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்.

வாதத்திற்கு உங்கள் கருத்தை எடுத்துக் கொண்டாலும், Peta வந்தது 2000, Peta ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்காக நீதிமன்றம் சென்றது 2011, இந்த காலக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆ.ராசா எந்த விதத்தில் பொறுப்பாவார் ?

இவ்வளவு சிக்கலையும் உங்கள் பா.ஜ.க பக்கம் வைத்துக் கொண்டு, பிரச்சினையை திசைதிருப்பி தப்பிக்க நினைக்கிறீர்கள்.

# ஜல்லிக்கட்டு, உன்னால முடியுமா இல்லையா? அதச் சொல்லு !

#jallikattu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக