பிரபலமான இடுகைகள்

வியாழன், 26 ஜனவரி, 2017

கொடியரசு தின வாழ்த்து

இரண்டு வருடத்திற்கு முன்னால அப்படி சொல்லி இருந்தா, நானே விழுந்து புரண்டு சிரிச்சிருப்பேன்.  இப்போ நண்டு, சிண்டு வரைக்கும் அத சர்வசாதாரணமா சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க. எல்லாம் இந்த மனுசனால வந்தது தான். வந்தப்ப பயங்கர டெரர்றா தான் இருந்தாரு. ஆனா அப்படியே பயங்கர காமெடியா ஆவாருன்னு  நினைக்கல.

இதுக்கு, அந்த காலத்தில நாம தான் முக்கிய கோரிக்கையா அத வச்சிருந்தோம். பின்னாடி நாட்டு நிலமைய நினைச்சி கைவிட்டோம். நாமளாவது சனநாயக வழி. இயக்கம் கட்டி, ஆயுதம் ஏந்தி போராடினவங்க உண்டு. அதில் உயிரிழப்பும் உண்டு. இப்படில்லாம் போராடி அரச பயங்கரவாதத்ல அந்த இயக்கம் அழிஞ்சே போச்சி. இப்படில்லாம் வரலாறு இருக்கறதனால, இனி வழியே இல்லன்னு மூடின சேப்டர் அது. பொசுக்குன்னு ஒப்பன் பண்ணிட்டாரு அண்ணன்.

கடந்த மாசம் நண்பர்கள் சிலரோட சந்திப்பு. அப்போ சர்வசாதாரணமா அவங்க அந்த சப்ஜெக்ட கையாண்டாங்க. கொஞ்சம் அட்வான்ஸா சிந்திக்கிற குரூப் தான். இருந்தாலும், இது ஓவர் திங்கிங்ஆ இருக்கேன்னு தோணுச்சி அப்போ.  ஆனா இப்போ சரியா தான் யோசிக்கிட்டு இருக்காங்கன்னு ஆயிடிச்சி. எல்லாம் அண்ணன நம்பி தான் யோசிருக்காங்க.

அண்ணன் அந்தத் திட்டத்த அறிவிச்சதுல முதல் பொறி விழுந்துருக்கு. ஆனா சரியா வெளியில தெரியல.  ரெண்டு, மூணு இடத்துல இந்தப் பேச்சு கிளம்பியிருக்கு. இங்க அப்போ கிளம்பல. இப்போ கிளம்பிடுச்சி. நண்டு ஒன்னு வாட்ஸ் அப் வீடியோல பேசுனப்ப இத சொல்லிச்சி. நான் பெருசா நெனைக்கல. ஆனா இன்னைக்கு முகநூல்ல பலரும் கதற்றத பார்த்தா பொறி வலுவாயிருக்குன்னு தெரியுது.

என்னாடா சப்ஜெக்ட்ட சொல்லாம இழுக்கறேன்னு பார்க்கறீங்களா? அவங்க சர்வசாதாரணமா சொன்னாலும், எனக்கு அத சொல்ல தயக்கமா தான் இருக்குது.

ம். அதே தான். தனி நாடு.

முன்னாடி அந்த நண்பர்கள் சொன்னப்ப நானே சிரிச்சேன். அப்ப தான் அவங்க சொன்னாங்க, நாங்கக் கூட இத நாங்களா நினைக்கல. எல்லாப் புகழும் அண்ணனுக்கு தான். அண்ணன் வேற யாரு, நம்ம மோடி அண்ணன் தான். அண்ணன் அவரு கட்சியில எல்லாரையும் காலி பண்ணி கைப்பிடிக்குள் வந்தது அவங்க கட்சிப் பிரச்சினை.

ஆனா அதே டேஸ்ட்ல இந்தியாவையும் கைக்குள்ள கொண்டு வரணும்னு பார்த்தாரு. குஜராத்த டைட்டா வச்சிருந்தது போல இந்தியாவையும். அது ஒரு மொழி பேசற, ஒரு கலாச்சாரம் கொண்ட மாநிலம். அத வச்சிருக்கறது வேற கதை. ஆனா இந்தியா பல மொழி, பல கலாச்சாரம் கொண்ட நாடு. இது மொத்தமா கைக்குள்ள வர்றது சிரமம்னு அண்ணனுக்கு புரிஞ்சுது.

அப்புறம் அவங்க வழிகாட்டி குரூப்போட ஏக இந்தியாவ நிர்மாணிக்க முடிவெடுத்தாரு. அப்பத் தான் இந்தி, சமஸ்கிருதம், பொதுச்சட்டம், பொதுக்கல்வின்னு ஆரம்பிச்சாரு. அப்பவே நம்ம நண்பர்கள் தனி நாடு கோரிக்கைக்கு அண்ணன் உயிர் குடுத்துடுவாருன்னு முடிவெடுத்துருக்காங்க.  பேசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ பாத்து தான் அண்ணன் ஒரு சிக்ஸர் அடிச்சாரு. பந்து ஸ்டேடியத்துக்கு வெளியில போயிடுச்சி. ஆமாம், "செல்லாக்காசு" திட்டம் தான். மேற்கு வங்காளம் கிளம்புச்சி.  அது ஏதோ மம்தாவுக்கு மட்டும் பிரச்சினைன்னு நினைச்சாங்க. வங்காளம் தமிழ்நாடு மாதிரி தான், தனி சிந்தனை.  மொத்த இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வித்தியாச சிந்தனை. அதனால அங்க கம்யூனிஸ்ட் கோலோச்சறது.  இப்போ மம்தா.

வடகிழக்கு மாநிலங்கள் பூரா ஒட்டிக்கிட்டு தான் இருக்கு. அதன் போக்கே வேற. காஷ்மீர் கதை தான் தெரிஞ்சது. கேரளா "செல்லாக்காசு" பிரச்சினையில  750 கி.மீ மனிதசங்கிலி நின்னு போராடி இருக்காங்க. இப்புடி ஆளுக்கொரு பக்கம் இழுக்கற நிலை.

அப்போ தான் நம்ம மேல உழுந்துது அடி.  காவேரி தீர்ப்ப ஒத்துக்க முடியாதுன்னு அண்ணன் கம்பெனி சொல்ல, லேசா.  அடுத்து அண்ணன் பொதுக்கல்வி, நீட் பொதுத் தேர்வு, பொங்கலுக்கு விடுமுற இல்லன்னு போட்டுத் தாக்க பொறி நெருப்பாச்சி. ஜல்லிக்கட்டு காள குறுக்க நெடுக்க ஓட, நெருப்பு காட்டுத் தீயாயிடிச்சி. மெரினா புரட்சியப்ப எதிரொலிக்க ஆரம்பிச்சுது. இளைஞர்கள் கோஷமாவே போட்டுட்டாங்க.

இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் "தனி நாடு" கோரிக்கையை பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி.

அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது.

'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'

'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்'

'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'

இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன்.

ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. "வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க ! ".

டிவி விவாதத்துல அய்யநாதன் அழுத்தி சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு ". USA, USSR போல USI (United States of India)ன்னு ஃபீல் கொடுக்கிறாரு.

பாஸ், என்ன தான் நடக்குதுன்னு குழப்பமாயிடிச்சி.

இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கருப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். அப்படியே போன வருசம் இந்த அளவுக்கு 'இந்திய' தேசியக் கொடி இருந்துது. இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தி, நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தி வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம்.

வலியுறுத்தல எல்லாம் அண்ணன் மான்கிபாத்க்கு தான் ரீடைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர் தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும், உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும்.

சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்கக் கைல தான் இருக்கு.

# பாத்து மனசு வைங்க அண்ணன் மோடி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக