பிரபலமான இடுகைகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஹைதராபாத் அனுபவங்கள்....



டாக்டர்.காமராஜ் என்றவுடன் தமிழர் என நினைத்து, தமிழில் பேசினால், தெலுங்கில் பேசுகிறார், ஆந்திராக்காரர். பெருந்தலைவர் காமராஜர் மீதான அன்பால் வைக்கப்பட்ட பெயராம்.

அறைக்கு உணவு எடுத்து வரும் உணவக நபர், நாங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு நின்றார். என்ன என்று கேட்டால், காரைக்குடிக்காரராம், கணேசன். பத்து வருடமாக இங்கு வேலை செய்கிறாராம்.

மருத்துவமனை அறையை சுத்தம் செய்யும் துப்புரவுப் பெண் தெலுங்கர், அவர் வேறொரு பெண்மணியை அழைத்து வந்து, மாட்லாடு என சொல்ல, வந்தப் பெண், நீங்கள் தமிழா எனக் கேட்டார். அவர் யார் எனக் கேட்டால் தமிழர். நாற்பது வருடங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து இங்கு குடியேறியவர். இவர் தமிழில் பேசுவதைக் கண்டு தெலுங்கு பெண்மணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

எனது தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்தவர் டாக்டர்.பிரவீன், ஆந்திரர். இவர் எப்போதும் என் தந்தையிடம் விவாதிக்கும் சப்ஜெக்ட் - ஈழம். பிரபாகரன், யாழ்பாணம், முள்ளிவாய்க்கால் என விரல் நுனியில் அனைத்து விவரங்களும் அத்துபடி.

பக்கத்து அறையில் இருக்கும் ஆந்திர எம்.எல்.ஏவின் பாதுகாவலரான காவல்துறை நண்பர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சரத்குமார் வரை அலசி ஆராய்கிறார்.

அண்ணன் ராசா அவர்கள், அப்பாவை சந்தித்த புகைப்படம் நாளிதழில் வெளியானதைப் பார்த்து, மருத்துவமனைக்கு தேடி வந்தார் வழக்கறிஞர் கோவிந்தசாமி. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள டி.களத்தூரை சேர்ந்தவர். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர். ஆந்திரர்களின் குணநலன்கள குறித்து பேச்சு வந்த போது, இங்கு வாழும் தமிழர்களிடம் நல்லுறவே பாராட்டுகின்றனர் என சிலாகித்தார்.

" சென்னை ஷாப்பிங் மால்" என பெயர் தாங்கிய பிரம்மாண்ட வணிக வளாகம். எங்கு நோக்கினும் தமிழ் நடிகர்களின் முகம் தாங்கிய போஸ்டர்கள்.

இப்படியாக தமிழர்கள் பெருமளவில் ஹைதராபாத்தில் வாழ்வதும், தெலுங்கு மக்கள் தமிழகம் குறித்து கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு நண்பரோடு விவாதித்தபோது சொன்னார்," என்ன இருந்தாலும், நாங்கள் ஒரு காலத்தில் மதராஸ் பிரசிடென்சியை சேர்ந்தவர்கள் தானே" .

" சென்னை தானே தலைநகராக இருந்தது. மொழியும் பெரியப் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய பல வார்த்தைகள் ஒத்துப் போகும். திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள், இப்படி பல காரணங்கள் " என்றார் அந்த நண்பர்.

# சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.....

பி.எஸ்.எல்.வியும், வெங்கியும்...



பி.எஸ்.எல்.வி. சி - 20 நாளை மாலை விண்ணில் பாய்கிறது : திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் சாமி தரிசனம்

ஒவ்வொரு முறை செயற்கைக்கோள் ஏவப்படும்போதும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

# ஏன்யா கஷ்டம், வெங்கிட்டு சக்கரத்த இரவல் வாங்கி, ராக்கெட்ட அதுல வச்சு சுத்தி உட்ரலாமே ?





ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான விஷயம், நாட்டின் பொதுவான நடவடிக்கை. அதில் ஒரு விஞ்ஞானி இப்படி நடந்து கொள்வது சரியா

அடுத்தது இவரே யாராவது சொந்த விஷயங்களுக்கு நாள், நேரம் பார்த்தால் இந்த கேள்வி எழாது.


இது ஒரு மதச்சாற்பற்ற நாடு. ஒரு பொது விஷயத்தில் இப்படி நடப்பது சரியல்ல.
 

ஒரு விஞ்ஞானியே அஞ்ஞானமா நடந்தா ....

வாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....




நீதிமன்றம் பக்கம் தலை வைக்கமாட்டேன் என வாய்தா வாங்குவோருக்கு மத்தியில், நீதிமன்றத்தில் தினம் ஆஜாராகி வழக்கை சந்திப்பதோடு மாத்திரமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டு குழுவில் ஆஜராக தயார் என தானாக முன்வரும் அண்ணன் ஆ.ராசாவை போன்றோரும் இருக்கிறார்கள்.

இவரை குத்திக் கிழிக்க தான் சத்தியவான்கள் துடிப்பார்கள், வாய்தா ராணியை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.

அண்ணன் ஆ.ராசா அவர்களது கடிதம்.***********

மதிப்பிற்குரிய பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!

1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆஜராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர்.

மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது.

அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா
( மொழி பெயர்ப்பு - அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்)

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பொதுவாழ்வு - ஒரு நாள் பணி


இது எல்லோருக்குமான தகவல் அல்ல...

இவர் எம்.எல்.ஏ வேலை பார்க்கிறாரா, இல்லையா என்று எண்ணும் தோழர்களுக்கானது...

எம்.எல்.ஏ பணியோடு சேர்த்து எனக்கு மாவட்ட செயலாளர் பணியும் இருக்கு.

களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பணியை தெரியப்படுத்துவதற்காக எனது ஒரு நாள் சுற்றுப்பயண விவரத்தை மட்டும் இணைத்துள்ளேன்.

சுய விளம்பரம் அல்ல. பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் பணி இப்படிதான் அமையும். 

16.02.2013
சனிக்கிழமை...
காலை 8.30 – இல்லத்தில் பார்வையாளர்கள் சந்திப்பு.

9.00
மணி அரியலூர் நகரம்
சபரி டிஜிட்டல் சபரிஸ்வரன் திருமணம் விசாரிப்பு
தொ.மு.ச தோழர் கருப்பையா புதுமனைப் புகுவிழா
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழில்மாறன் திருமணம் விசாரிப்பு (காலை உணவு )


10.30
அரியலூர் ஒன்றியம், அய்க்கால் கிராமம்
*
கழகத் தோழர் அழகுதுரை இல்ல காதணி விழா விசாரிப்பு

11.30
செந்துறை ஒன்றியம்
*
தெற்கு பரணம் கிளை பிரதிநிதி விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு
*
பரணம் ஆதிதிராவிடர்காலனி செயலாளர் கோவிந்தன் மறைவு விசாரிப்பு
*
வடக்கு பரணம் கழகத் தோழர் விஸ்வநாதன் தந்தை மறைவு விசாரிப்பு

பகல் 12.30 ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் கிராமம்
*
குவாகம் கிளை பிரதிநிதி அன்பழகன் திருமணம் விசாரிப்பு
*
கீழகுவாகம் கழக முன்னோடி ரத்தினசாமி மறைவு விசாரிப்பு

1.15
கு.வல்லம் கிராமம்
*
வல்லம் கிளை கழக செயலாளர் முருகேசன் புதுமனைப் புகுவிழா விசாரிப்பு
*
வல்லம் கழகத் தோழர் கண்ணன் புதுமனைப் புகுவிழா ( மதிய உணவு )
*
வல்லம் கிளை பிரதிநிதி பொய்யாமொழி மகன் திருமணம் விசாரிப்பு

3.00
மணி இடையக்குறிச்சி கிராமம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( அதிமுக ) அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மறைவு விசாரிப்பு
கழக தோழர் செல்வராசு தந்தை மறைவு விசாரிப்பு


மாலை 4.30 ஜெயங்கொண்டம் நகரம்
மறைந்த கொள்கை முரசு அலைகடல் வெற்றிகொண்டான் இல்லம்- இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

5.30
தா.பழூர் ஒன்றியம்
*
ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் ( 6.00- 8.00)

8.30
ஜெயங்கொண்டம் நகரம்
*
மறைந்த மருத்துவர் விஜயன் உடலுக்கு இறுதி அஞ்சலி

9.15
உடையார்பாளையம் பேரூர்
*
மறைந்த கழகப் பேச்சாளர் சி.ஆர்.மாரிமுத்து உடலுக்கு இறுதி அஞ்சலி

10.00
ஜெயங்கொண்டம் ஒன்றியம்
*
வளவெட்டி குப்பம் கழக முன்னோடி முருகேசன் மறைவு அஞ்சலி

இரவு 10.45 அரியலூர் வீடு இரவு உணவு.
(
கிட்டத்தட்ட 160 கி.மீ சுற்றுப்பயணம், 14,15,16,17 அனைத்து நாட்களுமே இப்படிதான் )

இது என்ன கல்யாணத்திற்கு, சாவிற்கு போனதெல்லாம் கணக்கான்னு ஆரம்பிச்சுடாதீங்க... எங்கு போனாலும் பொதுமக்கள் சந்திப்பு தான், பொதுப் பணியின் அங்கம் தான். நோக்கம் அதுதான்.

#
இயக்கப்பணியும், பொதுப்பணியும் முடித்துதான், இணையப்பணி. அதுவே அவர்களுக்கு பிடிக்கலைன்னா, நான் என்ன செய்ய ?

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....


( ஹைதராபாத்திலிருந்து .... )



குண்டுவெடித்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்தேன். நகரம் அமைதியாகவே இருந்தது, வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது.

குண்டு வெடிப்புக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டன.

குரு அப்சல் தூக்குக்கு பதிலடி.....

மறுநாள் துவங்க இருந்த தெலுங்கானா போராட்டத்தை திசை திருப்ப...

வலுவிழந்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கம் தன் இருப்பை உறுதி செய்ய...


# ஆனால் பாதிக்கப்பட்டது பொது மக்களே...



                           ***************************************************



" தயவுசெய்து மறுபடியும் இதை செய்யாதீர்கள் " - அப்துல் வாசி மாசே, ஹைதராபாத் குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர் விடுத்துள்ள வேண்டுகோள்.

கொடுமை, இவர் 2007 குண்டு வெடிப்பிலும் பாதிக்கப்பட்டவர். பாதுகாப்பான இடம் தேடி தில்சுக் நகரில் குடியேறிவரை தேடி வந்து தாக்கியிருக்கிறது தீவிரவாதம்.

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு புத்தகம் வாங்க வந்த 24 வயதான விஜயக்குமார், வெடித்த குண்டிலிருந்து பறந்து வந்த இரும்பு ஆணிகளுக்கு பலியானார்.

ஹஜ் போக திட்டமிட்டிருந்தார், போன மாதம் மகளுக்கு திருமணம் முடித்த முகமது அமானுல்லா கான். ஆனால் மார்கெட்டுக்கு போன இடத்தில் உயிர் போனது.

எம்.பி.ஏ படிக்கும் மாணவர் வாங்கிய புத்தகத்தோடு கருகிப் போனார்,

கர்நாடகா பிதார் மாவட்டத்திலிருந்து பிழைக்க வந்த இளைஞர் உணவுக்காக அங்கே போக பிணமானதே மிச்சம்.

அய்.ஏ.எஸ் படிக்கும் கனவிலிருந்த திருப்பதி, கனவுகளோடு எரிந்துப் போனார்.

இப்படி பலியானோர் எண்ணிக்கை 16. காயமுற்று மருத்துவமனையில் இருப்போர் 200-ஐநெருங்கும்.

குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டோரில் பாகுபாடே இல்லை. முஸ்லிம், இந்து, வயதானவர்கள், இளையோர், மாணவர்கள், பணிபுரிவோர், ஏழை, பணக்காரன் என எல்லோரையும் துளைத்திருக்கிறது குண்டு.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் மனிதர்கள். பாதிப்படைய செய்தவன் மிருகம்.



                        **********************************************************


ஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....

குண்டு வெடிப்பு துயரத்திலிருந்து ஒரே நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

யாரும் யாரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை, பொதுமக்கள். அரசியல்வாதிகளை கணக்கில் கொள்ள வேண்டாம்.

பா.ஜ.க குண்டுவெடிப்புக்கு எதிராக விடுத்த பந்த் அழைப்பு பிசுபிசுத்தது.

மதக் கண்ணோட்டம் இல்லாமல் தீவிரவாதம் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறது. இந்து-முஸ்லிம் இணைந்தே உதவி வருகின்றனர்.

# தீவிரவாதிகளே மதப் போர்வை போர்த்திக் கொள்கின்றனர். மக்கள் தயாராயில்லை....


திங்கள், 18 பிப்ரவரி, 2013

சர்நேம் ( surname ) ஏமி ?

ஹைதராபாத் Croma showroom சென்றேன், மடிக்கணினிக்கு இணைப்பு சரடு வாங்கினேன்.

பணம் செலுத்துமிடம் வந்தேன். காசாளர் தொகையை சொன்னார், கொடுத்தேன்.

கணினியை தட்டியபடியே கேட்டார், " பேரு செப்பண்டி ? "

" சிவசங்கர் " என்றேன்.

" சர்நேம் ( surname ) ஏமி ? " 

( சர்நேம் - சாதி பெயர், ஆந்திராவில் எல்லோருடைய பெயருக்கும் பின்னால் கண்டிப்பாக சாதி பெயர் இருக்கும் )

" சர்நேம் லேது "

" எந்த ஊர் ?"

" தமிழ்நாடு "

" அங்க யாருக்கும் சர்நேம் கிடையாதா ? " என்று கேட்டார்.

" மிகக் குறைந்த பேருக்கு உண்டு "

" அப்போ உங்களுக்கு கிடையாதா ? "

" உண்டு. பெரியார் "

புரியாமல் பார்த்தார்...


குமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை

தலைவர் கலைஞர் மீது, காழ்ப்புணர்ச்சியோடு தனிமனிதத் தாக்குதல் நடத்தியுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் நச்சுத் தனத்தைக் கண்டித்து, 18.02.2013 காலை அரியலூர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... 



கழகத் தோழர்கள் தலைவர் மீது கொண்டிருக்கின்ற அன்பு, அந்தப் பத்திரிக்கைக்கு எதிர்ப்புக் குரலாக ஆவேசமாக வெளிப்பட்டது.


# குமு’தம்’ போகப் போவுது.....


குமுதம் வரதராஜா,
இந்தப் பிழைப்பிற்கு செத்து போகலாமென வள்ளுவரே சொல்கிறார்.

# உன் முடிவின் ஆரம்பம்.


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை

பார்கின்ஸன்ஸ் நோய்க்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை DBS ( Deep Brain stimulation ) என அழைக்கப்படுகிறது. 

இதே போன்று சிகிச்சை மேற்கொண்ட பலரையும் சந்தித்து, அவர்கள் சிகிச்சைக்கு பிறகு கண்டிருக்கின்ற முன்னேற்றத்தை உறுதி செய்தே, சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தோம்.

பெரம்பலூருக்கு அருகில் இருக்கும் பெரகம்பி என்ற கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சிகிச்சையை மேற்கொண்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார். நடக்க இயலாமல், தன்னால் சாப்பிடக்கூட இயலாத நிலையில் இருந்தவர், இன்று குடும்பப் பணிகளை மாத்திமல்லாமல் விவசாயப் பணிகளையும் மேற்கொள்கிறார்.

மூளையின் எந்த பகுதி செயல்படாமல் இருக்கிறதோ, அந்த பகுதி மின் தூண்டுதல் மூலம் செயல்பட வைக்கப்படுகிறது, இந்த DBS அறுவை சிகிச்சை மூலம்.

அந்த மின் தூண்டலை உற்பத்தி செய்யும் brain pacemaker மற்றும் மின் தூண்டலை கொண்டு செல்ல insulated wire மற்றும் மின் தூண்டலை மூளையுள் செலுத்தும் electrode ஆகியவற்றை பொருத்துவதே இந்த அறுவை சிகிச்சை.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பாக அப்பாவை அழைத்து சென்று MRI Scan செய்தனர். அதன் அடிப்படையில் தலையில், அளவுமானிகளுடன் ஒரு மெட்டல் ஃப்ரேம் பொருத்தினர்.



பிறகு மீண்டும் ஃப்ரேமுடன், ஸ்கேன் செய்து எந்த இடத்தில் மின்முனை பொருத்துவது என துல்லியமாக கணக்கிட்டனர். அடுத்து அறுவை சிகிச்சையை துவங்கினர். தலையின் மேல் பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக மின்முனையை செலுத்தினர்.

லோக்கல் அனஸ்தீசீயா கொடுக்கப்பட்டு, தலையின் மேல்பகுதி மட்டும் வலி தெரியாமல் செய்திருந்தனர். மின் தூண்டலை, மின்முனையில் செலுத்தி, அப்பா உணர்வதை உறுதி செய்து, அதன் மூலம் சரியான இடத்தில் பொருத்தினர்.

இது அறுவை சிகிச்சையின் முதல் பகுதி. இரண்டாவது பகுதியை சிலருக்கு மறுநாள் மேற்கொள்வார்கள். எங்களிடத்திலும் அப்படியே கூறியிருந்தார்கள். ஆனால் முதல் அறுவைசிகிச்சையில் அப்பா அளித்த ஒத்துழைப்பால் உடனே இரண்டாம் பகுதியையும் துவக்கினார்கள்.

இதில் வலப்புற கழுத்து எலும்புக்கு கீழாக, தோலுக்கு கீழாக pacemaker பொருத்தப்பட்டது. பிறகு மூளையில் பொருத்தப்பட்ட மின்முனையிலிருந்து tunnel முறையில் wire மூலம் இணைக்கப்பட்டது.



இந்த அறுவை சிகிச்சை, மயக்க மருந்து கொடுத்து முழு மயக்க நிலையில், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சை மூளையை ஒட்டி செய்யப்படுவதால், துல்லியம் தான் மிக முக்கியம்.

Dr. Rupam Borgohain தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற் கொள்ளப் பட்டது. இவர் Nizam's Institute of Medical Sciences மருத்துவமனையின், நரம்பியல் துறையின் பேராசிரியர். 


பார்கின்ஸன்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இயங்குபவர். தேசிய அளவில் குறிபிடத்தக்க மருத்துவர்களில் ஒருவர். இவர் மேற்பார்வையில் Dr. பிரவீண் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சையினை மேற்கொண்டார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் ICUல் இருந்து, மறுநாள் அறைக்கு திரும்பினார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு வழக்கமான நிலைக்கு திரும்பினார்கள்.

தற்போது pacemaker-ஐயும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அதனை அப்பா உடல் நிலைக்கு ஏற்ற அளவிற்கு ஒப்புமை செய்துள்ளார்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இருந்து, இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் சாப்பிடக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

எட்டு அல்லது ஒன்பது மாதத்தில் பார்கின்ஸன்ஸ் நோயின் பாதிப்புகள் படிப்படியாக கட்டுபாட்டுக்குள் வந்துவிடும், மாத்திரையை முற்றிலுமாக நிறுத்திவிடலாம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை 8ந்தேதி மருத்துவமனையிலிருந்து வெளி வந்துவிட்டார்கள். தற்போது நலமாக உள்ளார்கள்.

அப்பாவின் நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்கள் கேட்ட கேள்வி, " பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை இருக்கிறதா ? ". அந்த அளவிற்கு இந்த அறுவை சிகிச்சை முறை இருப்பது தமிழகத்தில் தெரியாமல் இருக்கிறது.

எனவே இதனை படிக்கின்ற நண்பர்கள், உங்களது உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தக்க வழி காட்டிடுங்கள்...

புதன், 6 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( 2 )


பார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது, அந்த நேரத்திற்கு கட்டுக்குள் தான் வைக்கமுடியும். இந்த நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. 

எனது அப்பா அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு இந்நோய் தாக்கியது. உடன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க துவங்கினார்கள்.

அப்பாவிற்கு வலது கையிலும், வலது காலிலும் லேசான நடுக்கமாக துவங்கியது. மெல்ல நடுக்கத்தின் அளவு கூட தொடங்கியது. கால் இயக்கம் தடுங்க ஆரம்பித்தது. கொடுக்கப்பட்ட மருந்து அந்த நேரத்திற்கு நடுக்கத்தை நிறுத்தும்.

மருந்தின் வீரியம் குறையும் போது, நடுக்கம் அதிகரிக்கும். பார்கின்ஸன்ஸின் கொடூரம் அது தான். சாப்பிட்ட மருந்து உடலில் இருக்கும் வரை தான் கட்டுபாட்டில் இருக்கும்.

அதே போல சாப்பிடும் மருந்தின் அளவு ஒரு கட்டத்தில் பற்றாக்குறையாகிவிடும்.அப்போது உட்கொள்ளும் மாத்திரையின் அளவை உயர்த்த வேண்டும். 

காலப்போக்கில் மாத்திரயின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்லும். இப்படியாக அப்பா சாப்பிட்ட மாத்திரையின் எண்ணிக்கை உயர்ந்தது.

முதலில் ஒரு நாளைக்கு ஒரு syncapone மாத்திரை சாப்பிட ஆரம்பித்து, அறுவை சிகிச்சைக்கு முன்பு கடைசியில் ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என ஒரு நாளைக்கு ஆறு வேளை மொத்தம் 12 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இன்னொரு புறம் இந்த மாத்திரையின் பக்கவிளைவுகள் தாக்க ஆரம்பித்தன. வலுவான உடலமைப்பு கொண்ட அவர்களது உடல் பார்கின்ஸன்ஸாலும், மாத்திரைகளாலும் மெலியவும் நலியவும் செய்தது, பற்கள் ஒவ்வொன்றாக கரைவது போல வலுவிழந்து விழ ஆரம்பித்தன.

நடக்க ஆரம்பிக்கும் போது, சட்டென அடி எடுத்து வைக்க முடியாது. சில நிமிடங்கள் நின்று நிதானித்து தான் நடக்க முடியும். அடுத்த கட்டமாக உடல் முழுவதும் முறுக்கி எடுப்பது போல சில நேரங்களில் நோய் வலுவானது.

இதற்கு முழுவதும் அதே மாத்திரைகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை. வேறு சிகிச்சை இல்லை. 

இதற்கிடையில் உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என வேறு இரண்டு மூன்று மருத்துவர்களை சந்தித்து, அவர்கள் மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து அந்த பாதிப்பு வேறு.

இதில் அந்த புதிய மருத்துவர்கள் பார்கின்ஸன்ஸ் குறித்து சொல்லியவை எல்லாம் பயமுறுத்தும் செய்திகள் தான். விபரம் தெரியாத நோயாளிகள் இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான், பயத்திலேயே நோயின் தாக்கம் கூடிவிடும். 

இது போன்ற மருத்துவர்கள் தங்களை update செய்து கொள்வதே இல்லை போலும்.

ஒரு சமயத்தில், அப்பாவின் நண்பரான முன்னாள் அமைச்சர் நல்லுசாமி அவர்களது மகன் டாக்டர். செந்தில் குமார் பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற தகவலை சொன்னார்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர். செந்தில் அவர்கள் ஒரு Medical conference-ல் சந்தித்த மருத்துவ நண்பரிடம் அப்பாவை பற்றி பேசிய போது இந்த தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த அறுவை சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள ஹைதராபாத் வந்தோம்....

( தொடர்ந்து பார்ப்போம்... )



திங்கள், 4 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....


பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....

எனது அப்பா இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால், எனக்கு இது குறித்த தெரிந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பொதுமக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. வயதானவர்களுக்கு மாத்திரம் வரும் என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. அது தவறு என தற்போது தெரிய வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள நிசாம்ஸ் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நரம்பியல் துறைக்கு வருகிறவர்களில் நாற்பது வயதுக்கு குறைந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம்.

முதலில் நோய்கான அறிகுறிகளை காண்போம்....

* கைகள் தானாக துடிப்பது ( Tremors )
* தலையில் நடுக்கம்
* நடை தடுமாறுதல், நடக்க இயலாமல் போதல்
* தசைகள் விறைப்பாதல் ( கை,கால்கள் மடக்க இயலாது )
* முதுகு வளையத் துவங்குவது
* கையெழுத்து சிறிதாகவும், ஒரே அளவில் இல்லாமல் மாற துவங்குதல்
* முகத்தில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்க இயலாமல் இறுகி போதல்
* கண்கள் தானாக துடித்தல்
* எச்சில் ஒழுகுதல்
* உணவை விழுங்க இயலாத நிலை
* தொடர் மலச்சிக்கல்
* தசைகளில் வலி
* நினைவுகளை இழத்தல்
* பதற்றம், மன அழுத்தம்
* சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை

இத்தகைய அறிகுறிகளை வயதானவர்களிடத்தில் காணும்போது, மூப்பு காரணமாக ஏற்படுகிற பாதிப்புகள் என நினைத்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்.

இவை அத்தனையும் பார்கின்ஸன்ஸ் நோய்கான அறிகுறியாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. ஆனால் இவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்வது அவசியம்.

மூளையில் சுரக்கின்ற ஒரு ரசாயனத்தின் பெயர் டோபமைன் ( Dopamine ). தசைகளை கட்டுபடுத்துவதற்கு, நரம்பணுக்களுக்கு இந்த ரசாயனமே உதவுகிறது.

இந்த ரசாயனத்தை உற்பத்தி செய்கிற மூளை செல்கள், பார்கின்ஸன்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மெல்ல சிதைய துவங்குகின்றன. இதனால் டோபமைன் உற்பத்தி தடைபடுகிறது.

இதனால் மூளையின் அந்த பகுதியில் உள்ள நரம்பணுக்கள், உடலின் சில பாகங்கள் செயல்படுவதற்கான உத்தரவுகளை அனுப்ப இயலாமல் போகிறது. இது தசைகளை செயலிழக்க செய்கிறது.

காலப்போக்கில் மூளை செல்களின் சிதைவு அதிகமாகும், அப்போது முழுவதுமாக இயக்கம் தடைபடும் சூழல் வரலாம். இன்னும் சிலருக்கு உடல் இயக்கத்தினை கட்டுபடுத்த இயலாமல் போகும். மலம், சிறுநீர் போன்றவை அவர்களை அறியாமல் பிரியும்.

துவக்கத்திலேயே இதற்கான சிகிச்சைகளை துவங்காவிட்டால், நோயின் கொடூரம் அதிகமாகும். முழுவதுமாக செயல்பட முடியாமல் போகும்.

சரி, பார்கின்ஸன்ஸ் நோயை எப்படி குணப்படுத்துவது...

* பார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது....

( தொடர்ந்து பார்ப்போம்... )

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே...


அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..

விஸ்வரூபம் பிரச்சினையின் "உண்மைரூபத்தை" தற்போது அறிந்திருப்பீர்கள்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே...

டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்....

நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

" இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்" என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,

ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.

தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,

உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

நடந்த அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த நாடகக் காட்சிகளை பார்த்து ரசித்திருப்பீர்கள்.

கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

அன்போடு...
பெரியாரின் பேரன்
சிவசங்கர்.

சனி, 2 பிப்ரவரி, 2013

தமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்! - ஆ. இராசா


"எதுவரை உன் மொழி  நீள்கிறதோ  அதுவரை உன் நாடு;  எது வரை உன் மொழி வாழ்கிறதோ  அதுவரை உன் இனம்"

என்ற பாவாணரின்  வரிகளை நினைவூட்டும் வகையில்  மொழியும் இனமும்  இங்கும் ஈழத்திலும் ஒடுக்கப்படும்போதெல்லாம் எதிர்த்து நிற்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்து வருகிறது. ஈழத்தில் தந்தை செல்வா அவர்கள் காலத்தில் தொடங்கிய அறப் போராட்டம் முதல் அண்மைக் காலத்து ஆயுதப்போராட்டம் வரை,  தி.மு. கழகம் அளித்து வரும் ஆதரவும், பங்களிப்பும்  தாய்த் தமிழ்நாட்டின் மொழி இன வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகளாகும். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அணி மாற்றம் இவைகளைக் கடந்து ஈழத் தமிழர் நலனில் வேறு எவருக்கும் - எந்த இயக்கத்திற்கும் இல்லாத உயிர்ப்புடனும், உண்மையுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களையும், கழகத்தையும் "பூச்சுகள் இல்லாத புரிதல்" உள்ளவர்கள் போற்றவே செய்வர். ஈழத்தமிழர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட, தனித்த இறையாண்மையுடன் கூடிய  தனி ஈழம் தான் தீர்வு என்பதை நோக்கமாகக் கொண்டு, 13-5-1985 அன்று  தலைவர் கலைஞர் அவர்களால் முன் மொழியப்பட்ட"டெசோ" (Tamil Eelam Supporters' Organisation- TESO)-  நடத்திய பல அமர்வுகள் மற்றும் அதன் தீர்மானங்கள் ஈழத்தில் நடந்தேறிய கொடுமைகளையும், இந்திய அரசின் பாராமுகத்தையும் அன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலிப்பூடக நிலையையும் பதிவு செய்துள்ளன.

அதே ஆண்டு  விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்ற போராளிக் குழுக்களின் தலைவர்களான சிறீ சபாரத்தினம், பத்மநாபா, மற்றும் பாலகுமார் ஆகியோர் ஒருமித்து கை உயர்த்தி  முழக்கமிட்ட திம்பு பேச்சு வார்த்தையில்  முன் வைக்கப்பட்ட  தனித் தேசிய இனம்  மற்றும் தாயகத்தை அங்கீகரித்தல்; முழு சுய நிர்ணய உரிமை - மற்றும்முழு குடி உரிமை ஆகியவற்றை ஆதரித்து அன்றைய "டெசோ" தமிழக எல்லை கடந்து இந்திய அரசியலில் விதைத்த விதைகளும், விளைச்சல்களும் களம் மாறிப் போனதா களவாடப்பட்டதா வேற்று விசைகளால்  கபளீகரம் செய்யப்பட்டதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை.

1983இல்  நடைபெற்ற ஈழப் படுகொலைகளைக் கண்டித்து  24 மணி நேரத்தில்  தமிழகத்தை மலைக்க வைத்த - அகில இந்தியாவை உற்று நோக்கிடச் செய்த - சர்வ தேச  நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பேரணியை தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27-7-1983 அன்று நடத்திக் காட்டியது  வெறும் அரசியல் நிகழ்வல்ல; தானும் ஆடி தசையையும் ஆட்டுவித்த இன உணர்வின் எழுச்சி வடிவமாகும். அதனால் தான் 4-5-1986இல் "இதோ இந்திய இனங்கள் ஒன்றுபடுகின்றன, இலங்கையில் அழியும் மனித இனம் காக்க" என்று பிரகடனப்படுத்தி,  "டெசோ"  மாநாட்டினை அன்று தலைவர் கலைஞர் மதுரையில்  கூட்டினார்.

அன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி. ராமராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், அகாலிதளக் கட்சியின் ராமுவாலியா, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத்,  தெலுங்கு தேசக் கட்சியின்  உபேந்திரா உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட அம்மாநாடு, திருபழ.நெடுமாறனின் வரவேற்புரையோடு தொடங்கியது என்பது இன்றைய நிகழ்வுகளின் போக்கில் "வரலாற்று முரணா" அல்லது "வாழ்க்கை முரணா" என்பதை "செற்றமும் உவகையும் செய்யாது காக்கும் ஞமன்கோல்" ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம். ஏனெனில் "இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை, கலந்து கொள்ள விடாமல், தடுப்பதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், காங்கிரசைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானதாகும்" என்றும், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு அகில இந்திய வடிவம்   கொடுக்கவும்,  இந்தியா முழுதும் உள்ள அனைவரின் ஆதரவைத் திரட்டவும்,  இது வெறும் தமிழர் பிரச்சினை அல்ல;  இந்தியாவின் தேசிய பிரச்சினை என்று எடுத்துக் காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது"  என்று முழங்கியவர் நெடுமாறன்.
உட்பகையின்றி 1984இல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக் கள் சேர்ந்து உருவாக்கிய  ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front) அமைந்தவுடன், பிரபாகரனும், சபாரத்தினமும், பத்மநாபாவும், பாலகுமாரும்  இணைந்த கைகளாய் எழுந்த நேரத்தில்  அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசை ஈழத் தமிழர் பிரச்சினையில் "துரோகம் செய்வதாக" கண்டித்தும்,  தி.மு.க.வின் செயல்பாட்டை முற்றிலும் ஆதரித்தும்  அறிக்கை வெளியிட்டவர்   நெடுமாறன்.

1987 ஜுலையில்  இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய அமைதிப்படை  உடனடியாக இலங்கை சென்ற போது, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போதும் இந்த ஒப்பந்தத்தையே  தவறு என்று தர்க்க ரீதியாகவும், போராளிகளின் நிலைமையிலும் நின்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அமிர்தலிங்கம், பத்மநாபா படுகொலையின் தாக்கமும், அதையொட்டி தி.மு.கழகத்தின் மீது நாளேடுகளும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடுத்த பொய்த் தாக்குதல்களும் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசை இரண்டாண்டுகளில் கலைத்ததில்  வெற்றி பெற்றன.  அதைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜீவ்காந்தி படுகொலை, அதன் காரணமாக தமிழக  மக்கள்  ஈழத் தமிழர் பிரச்சினையில் எடுத்த எதிர்மறை நிலை, பின்னிட்ட விடுதலைப் புலிகளின் மீதான  தடை,  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நேர்ந்த அரசியல் பின்னடைவு ஆகியவை "டெசோ""வின் பணிகளுக்கு இயற்கையான தடையாகவோ அல்லது  அவசியமற்ற கிடப்பாகவோ அமைந்து போனது சரித்திரத்தின் சோக நிகழ்வுகள். அப்போதுங்கூட, "புலிகள் இயக்கத்தைத் தடை செய்து விட்டு,  யாருடன்  பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்ற நியாயமான கேள்வியை (முரசொலி - 15-5-1992)  எழுப்பியவர் தலைவர் கலைஞர்.  

"மொழியையும், நாட்டையும்  ஆளாமல் துஞ்சுவது இல்லை" என்ற பெருஞ்சித்திரனாரின்  வரிகளுக்கு இலக்கணமாக மொழியின் மீதும்,  இனத்தின் மீதும் தனது பற்றை எப்போதும் தளர்த்திக் கொள்ளாத ஒரே தலைவராக  கலைஞரும்,  தன் ஆளுமையை விட்டுக் கொடுக்காத  ஒரே இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமும் இருந்து வந்திருக்கிறது என்பது  நிதர்சனம். சட்ட நெருக்கடி வரும்போது "புலிகளோடு எனக்கு எப்போதும் தொடர்பு இருந்ததில்லை" என்று அறிக்கை (14-10-1993) தந்த திரு.வைகோவைப் போன்றவர்களின்  அரசியல் நெறி ஆரவாரம் சார்ந்ததா அறம் சார்ந்ததா என்பதையும் எதிர்கால ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம்.

இவைகளையெல்லாம் இங்கே நினைவு கூரக் காரணம், 1986 "டெசோ" மாநாட்டில் ஈழப் பிரச்சினை, அகில இந்திய வடிவம் பெற்று விட்டதாகக் கணித்த நெடுமாறன் போன்றவர்கள்  பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய காரணமான ஜெயலலிதா அரசின் போக்கு - 2001ஆம் ஆண்டு  அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு பிந்தைய  சர்வதேச அரசியல் சூழ்நிலை - அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் அரசியல் தந்திரத்தால் விளைந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போர்  ஆகியவற்றை ஏன் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்பது "மில்லியன் டாலர்" கேள்வி.  இங்கே தான் "டெசோ"  வின் பணி மீண்டும் தேவைப்பட்டது.

1986ஆம் ஆண்டு அகில இந்திய வடிவம் பெற்ற ஈழப் பிரச்சினைக்கு "டெசோ" அமைப்பு அவசியப்பட்டதைப் போலவே, 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட குழு,  இலங்கை ராணுவம்  ஈழத் தமிழர்கள் மீது  நடத்திய  காட்டுமிராண்டித்தனமானப் போரினை உறுதி செய்து  அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த போது, ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவத்திலிருந்து "சர்வதேச வடிவத்திற்கு"  விரிவுபடுத்தப்பட்டது என்பதை அரசியல் தற்குறிகள் கூட ஒப்புக் கொள்வர். ஆனாலும் தமிழகத்தின் மேதாவிகள் சிலரும், மேதாவிலாசம் படைத்த பத்திரிகைகளும், அன்றைய முதல் அமைச்சர் கலைஞரையும், தி.மு.க. வையும்  காயப்படுத்தியதற்கு வக்கிரமும், வர்ணமும் தான் காரணம். என்றாலும் இவர்களின் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி விட்டு,  ஈழப் பிரச்சினையின் சர்வ தேச வடிவத்தை எதிர்கொள்ள  30-4-2012இல் "டெசோ"  மீண்டும் எழுப்பப் பட வேண்டியது நிகழ்வுகளின் நிர்ப்பந்தம் ஆகியது.

12-8-2012 அன்று  "டெசோ"  நடத்திய  ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு  ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து  இயற்றிய  தீர்மானங்களில்  "இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில்  அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்"" என்பது தலையாய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும். இது தவிர, "ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;  இப்பிரச்சினை  தெற்காசிய  மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்தவேண்டும்"  என்றும் வலியுறுத்தப்பட்டது.

"டெசோ" தொடங்கப்பட்ட போதும், வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலை எப்படி இருந்தது என்பதை  கணக்கில் கொண்டால், அறிஞர் அண்ணாவின் "இனமும் எதிரியும்" என்ற சொற்றொடருக்கு விளக்கம் கிடைக்கும். "தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு"  என்ற பாவேந்தரின் பாடலை நெஞ்சத்தில் தாங்கி நிற்கும்  தலைவர் கலைஞர்,  இந்த  அரசியல்  தட்ப வெட்பத் தடைகளை  எப்படி எதிர் கொண்டார் என்பது தமிழ் தேசியவாதிகள்  அறிந்திருக்க வேண்டிய  அரசியல்  பாடம்.

12-8-2012 அன்று  நடைபெற வேண்டிய மாநாட்டிற்கு, சூலை 29 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் காவல் துறை அனுமதி வேண்டி  கடிதம் கொடுக்கப் பட்ட நிலையில்,  10-8-2012 நள்ளிரவு  2 மணிக்கு  அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை மூலம் அரசு  அறிவித்தது எவ்வளவு பெரிய இன சூழ்ச்சியும் வஞ்சகமும் என்பதை உணர்ச்சியோடு வெளிப்படுத்த வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விழுந்தது. அதிகாலை 6 மணிக்கு பேராசிரியர் உள்ளிட்ட "டெசோ" உறுப்பினர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவசர ஆலோசனை நடத்தி நீதி மன்ற மேல் முறையீடு செய்து திட்டமிட்ட அதே இடத்திலேயே மாநாட்டை நடத்திட பெற்ற ஆணை இன எதிரிகளின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்களின் மீதும் கொடுக்கப்பட்ட சாட்டையடி ஆகும்.

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற உள் துறை அமைச்சகத்தின் "அச்சுப் பிழை அறிவுரை" அடுத்த சில மணி நேரங்களிலேயே  அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டு  மத்திய அரசின்  மனநிலையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்த  தலைவர் கலைஞர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதையும் அப்போதுதான்  தமிழ்நாடறிந்தது.  சிங்களப் பேரின வாத இலங்கை அரசு செய்து முடித்த இனப் படுகொலையை உலகறியச் செய்யவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து மீட்டுருவாக்கம் செய்திடவும்  சர்வதேச வடிவம் ஒன்றை ஏற்படுத்துவது ஒன்றே சாத்தியமான வழி என்பதை உலகுக்கு உணர்த்தியது தான் "2012 டெசோ மாநாடு".

இலங்கை சீனாவோடும், பாகிஸ்தானோடும் கொண்டிருக்கும் சுமூக உறவு, அமெரிக்க அரசுடன் ஏற்கனவே இலங்கை செய்து கொண்ட ராணுவ உடன் படிக்கை ஆகியவற்றை மறந்து விட்டு ஈழப் பிரச்சினையை அணுகுவது பன்னாட்டு  அரசியல் பிழையாக முடியக் கூடும் என்பது  உள்ளூர் குண்டுச் சட்டி குதிரையோட்டிகளுக்கும் தெரிந்தது தான். தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை  தங்களுக்குள் பிரயோகித்துக் கொள்ளும் விசித்திரமான சித்தாந்தத்தை பொதுவுடைமையாளர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டிருந்ததை இம்மாநாடு தோலுரித்துக் காட்டியது. முதலாளித்துவ நாடுகள் கூட  ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர் சிந்த முன் வந்த போதும், கம்யூனிச நாடுகள் இலங்கை அரசின் இன வாதத்திற்கு  கட்டியம் கூறியது  மார்க்சையும் ஏங்கல்சையும்  மறு வாசிப்பு செய்யக் கூட அல்ல,  மறுதலிக்கும் பரிதாபத்திற்குரிய வரலாற்றுச் சறுக்கலாகும். ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவம் பெற்ற போது தோள் கொடுத்த அரசியல் தலைவர்கள், ஆதரித்த பத்திரிகைகள், சர்வ தேச வடிவம் பெற்று இன்னமும் தீர்வு எட்டப்படாத நிலையில்  தங்களின் நிலைப் பாட்டினை மாற்றிக் கொண்டு  "பிழைப்பு" கருதி தி.மு.க. மீது குற்றம் சொல்வதும், "அழைப்பு" கருதி அரசியல் செய்வதும்  தமிழர்களுக்கு இழைக்கப்படும்  "சந்திப் பிழை அல்ல;  சந்ததிப் பிழை".

பன்னாட்டு அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள்,  அயலகத் தமிழ் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஆழமான பங்களிப்பு டெசோ மாநாட்டில் 12-8-2012 அன்று முன் வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானங்களை விவாதித்து வடித்தெடுத்தன.  முடங்கிக் கிடந்த உலகத் தமிழர்களை எழுந்து உட்கார வைத்த அந்தத் தீர்மானங்களை  நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிட 30-10-2012 அன்று கூடிய "டெசோ" கூட்டம் முடிவெடுத்து, அதன்படி கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும்,  நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும்  நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கினார்கள்.  அதேவாரத்தில்  7-11-2012 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பிரிட்டானிய தமிழர் பேரவையும் இணைந்து இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய  இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த  பன்னாட்டுக் குழு ஒன்றை  ஐ.நா. மன்றம்  அமைக்க வேண்டுமென்று   இயற்றிய தீர்மானம்  டெசோவின் நோக்கத்தை நிறைவேற்றும்   தொடக்க ஒளிக் கீற்றாக அமைந்தது. இந்த ஒளிக் கீற்றை உலகெங்கும் விரித்து ஜீவஜோதியாய் மாற்றிடும் முயற்சியாக "டெசோ" தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர்  டெல்லி சென்று  ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் துhதர்களையும், இந்தியக் குடியரசு தலைவரையும் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை  வழங்கி உரிய நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இப்பயணத்தின் நோக்கம் வரும் மார்ச் திங்களில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசு கண்டிக்கப்பட்டு,  இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான   சர்வதேச சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.  

லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தெறித்த  முதல் ஒளிக் கீற்று டெல்லி யிலும் பற்றிப் பரவி   சர்வதேச ஒளி வெள்ளமாகி  இலங்கைத் தமிழர்களின் இருண்ட  வாழ்க்கையை  வெளிச்சப்படுத்தி  டெசோ வெல்லும் என்பது தான் காலம் சொல்லப் போகும் சரித்திரம். அந்தச் சரித்திரத்திற்கான சரியான நகர்வையே டெசோ  டெல்லியிலும் செய்து திரும்பியிருக்கிறது.  வாழ்த்தி வரவேற்போம்!

அன்புடன்
ஆ. இராசா, எம்.பி.,
கொள்கைப் பரப்புச் செயலாளர்

நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..


குணா கமல் மாதிரி உங்கள நினைச்சிக்கோங்க... ம்... ஆரம்பிங்க...............


நடிகர் அன்போடு முதல்வர் நான் நான் கொடுக்கும் இண்டர்வியூ..
சீ... அறிக்கை.... இல்ல அறிவிப்பு வச்சிக்கலாமா ?... இல்ல பேட்டியே இருக்கட்டும்... எங்க படி...

"  
நடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே..."

பாட்டாவே படிச்சிட்டியா.... அப்ப நானும்...
மொதல்ல நடிகர் சொன்னேன்ல... இங்க ஆக்டர் போட்டுக்க....

ஆக்டர் ஒன் பேட்டி ரிலீசா, எம் பேட்டி இங்க ரிலீஸ்...

" ஆக்டரே உன் பேட்டி ரிலீஸா, என் பேட்டி இங்கு ரிலீஸே..."

உன்ன நெனச்சி பாக்கும் போது கோவம் மனசுல அருவி மாதிரி கொட்டுது.... ஆனா அத பேசனும்னு ஒக்காந்தா அந்த பேச்சுத்தான் வார்த்த...

" உன்னை எண்ணிப் பார்க்கையில் கோபம் கொட்டுது
(அதான்)
அதை சொல்ல நினைக்கையில் வார்த்த முட்டுது "

அதேதான்...ஆஹா... பிரமாதம்...
பேட்டி...பேட்டி...பேசு...

எனக்கு உண்டான ஓட்டு தன்னால விழுந்துடும்
அது என்னமோ தெரியல...
என்ன மாயமோ தெரியல....
எனக்கு ஒன்னுமே தெரியரதில்ல...

இதையும் பேசிரனுமா ?

நடுவுல நடுவுல தீவிரவாதம், பெட்ரோல் பாம், சட்டம் ஒழுங்கு
போட்டுக்கனும்...

இதப் பாரு... எனக்கு என்ன பிரச்சினைன்னாலும் ஆட்சி தாங்கிடும்...
உன் படம் தாங்குமா ? தாங்காது.. தாங்காது...

பிரதமர்... பிரதமர்... பிரதமர்...

அதையும் பேசிரவா ?

அது...கனவு...

ஆ.. என் கனவு என்னன்னு சொல்லாம...
ஏங்க, ஏங்க சிரிப்பா வருது....
ஆனா நான் சிரிச்சி... என் மகிழ்ச்சி உன்ன தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது வர்ர சிரிப்பு கூட நின்னுடுது...

நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
கனவு அல்ல....கனவு அல்ல....கனவு அல்ல....

அதையும் தாண்டி பெரிதானது....பெரிதானது....பெரிதானது....

" உண்டான பிரச்சினை தன்னாலே பெரிதானதென்ன
மாயம் என்ன பெட்ரோல் பாமே, பெட்ரோல் பாமே...
என்ன பிரச்சினை ஆன போதும் என் ஆட்சி தாங்கிக் கொள்ளும்
உந்தன் படம் தாங்காது தீவிரவாதமே
எந்தன் கனவு என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க சிரிப்பு வந்தது....
எந்தன் மகிழ்ச்சி உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த சிரிப்பு நின்றது...
நடிகர் உணர்ந்துக் கொள்ள இது சாதாக் கனவு அல்ல...
அதையும் தாண்டி பெரிதானது....

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ?
பி.எம்மே ஆட்சியில் நீயும் பாதியே அது உனக்கு தெரியுமா ?

சுபலாலியே லாலியே லாலி லாலியே
பிரதமரே லாலியே லாலி லாலியே

பிரதமரே தாலாட்டும் சோவே நான் தானே தெரியுமா ? உனக்கு தெரியுமா ? "

( தாலாட்டு முடிந்து ஜெ கண் விழிக்க அடுத்த பாடல் கேட்கிறது )

"இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்"

# ஏ.ஜி.எஸ் தியேட்டரில் கண்ணாடி உடைந்து சிதறுகிறது.....