பிரபலமான இடுகைகள்

வியாழன், 2 ஜூன், 2016

மனசு முழுசும் இசை தான்

காரில் ஏறினால் அந்தக் கேசட் தான், கல்யாணத்துக்குப் போனால் அந்தப் பாடல் தான் என அந்த சீசனில் கொடிக் கட்டி பறந்தது அந்தப் படத்துப் பாடல்கள் தான். அத்தனைப் பாடல்களும் ஹிட். இயல்பாக கிராமத்துப் படம் என்றால் சொல்லி அடிப்பவர், இதில் இன்னும் அழுத்தம். படம் - பாண்டி நாட்டுத் தங்கம். இசை அவரே தான்.

"ஏலேலோம் குயிலே, இளம் வயசுப் பொண்ண, மயிலாடும் பாறையில, சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு, உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது", என அனைத்துப் பாடல்களும் போன இடமெல்லாம் ஒலித்தது. இது ராஜாவுக்கு மட்டுமே சாத்தியம். படத்தில் எல்லாப் பாடல்களையும் ஹிட் கொடுப்பது, வருடத்தில் எல்லாப் படங்களையும் இசையால் தாங்கிப் பிடிப்பது என உச்சம் தொட்டவர்.

பாட்டு "தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா" அப்படின்னு ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளே இழுத்து விடும். அது தானே ராசா.

பாடல் தொடர்ந்து கிறங்கடிக்கிறது.

"உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்தயா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

பாடலை கேட்கும் போது, வழக்கமான காதல் பாடலாகத் தோன்றும். ராஜாவின் ரசிகர்களுக்கு தான் கவிஞர் வாலியின் வரிகளின் அர்த்தம் புரியும். முதல் வரியில் ஒளிவுமறைவாக ஆரம்பிப்பவர் "நெஞ்சைத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுசும் இசை தான் உனக்கு", என்ற வரியில் நேரடியாக சொல்லி விடுகிறார்.

இதற்கு பிறகு ஒவ்வொரு வரியாக கவனித்தால், வாலியின் ராஜா மயக்கம் புரியும். கடைசியாக ராஜா பதில் சொல்வது போல் முடித்திருப்பார்.

"என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு"

ராஜா, உன் மனசுல பாட்டு தான் இருக்குது, பல மனசு அதை கேட்டுத் தான் தவிக்குது, தமிழ் உலகமே அதக் கேட்டு தான் தூங்குது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே.

# மனசு முழுதும் இசை தான் உனக்கு, இசையோடு உனக்கும் இடமும் இருக்கு எங்கள் மனதில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக