பிரபலமான இடுகைகள்

சனி, 25 மே, 2013

" மணப்பெண்ணை காணோம்"....


இரவு பதினோரு மணி, செல்லிடப்பேசி அழைக்கிறது.  கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி.

" அய்யா, ஒரு பிரச்சினை "
"சொல்லுங்கைய்யா "
" மணப்பெண்ணை காணோம்"
"என்ன சொல்றீங்க" அதிர்ச்சியானேன்.
"ஏற்கனவே காதலாம், இங்கே எல்லோரும் அதிர்ச்சியில்"

காலையில் நடைபெறுவதாக இருந்த திருமணம், சுயமரியாதை திருமணமாக. இப்போது இப்படி இக்கட்டு. மணமகன் எனக்கு வேண்டிய கழகத் தோழர்.

" என்ன செய்யலாம்" -நான்
"திருமணத்தை நிறுத்தக் கூடாது, இப்போதே பெண் தேட துவங்குகிறோம்"
" சரி அய்யா, முயற்சி செய்யுங்கள்
மணமகனுக்கு தைரியம் சொல்லுங்கள்" செல் கைமாறுகிறது.
" தம்பி, தைரியமாக இருங்க. திருமணத்திற்கு பிறகு என்றால் எவ்வளவு சங்கடம். இந்த நிலையில் தெரிய வந்தது பரவாயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வேலையை பாருங்கள்"
" சரிங்க அண்ணா"- மணமகன்

மீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு செல் அழைப்பு.

" அய்யா, பையனின் அத்தை பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார். திருமணம் உறுதி. வந்து நடத்திக் கொடுங்கள்"
"மகிழ்ச்சி. ஆக வேண்டிய வேலையை பாருங்கள். சரியாக வந்துவிடுகிறேன்"
“ மணமகன் தந்தை சங்கட்த்தில் இருக்கிறார், ஒரு வார்த்தை அவரிடமும் பேசிவிடுங்கள்
“ அண்ணா, திருமண வேலையை பாருங்கள். எந்த சங்கடமும் வேண்டாம் ஆறுதல் கூறினேன்.

காலை மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டு, இந்த திருமண நிகழ்விற்கு செல்ல வேண்டிய சூழல். காத்திருந்தார்கள், சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தோம்.

மணமக்களுக்கான வாழ்த்துரையில், மணமகள் பெற்றோருக்கு நன்றி சொன்னேன். மணமகள் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிராவிட்டால், மணமகன் குடும்பம், சொல்லொணா நிலைக்கு ஆளாகி இருப்பார்கள்.

அதே போல அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் இல்லையென்றால், இந்த திருமணம் நடந்திருக்காது.

மணமகன் குடும்பம் இடிந்து போயிருந்த சூழ்நிலையில், அவர்களுக்கு தைரியம் சொல்லி, இரவே பெண் தேடி, அவர்களை அழைத்து பேசி, திருமணம் சிறப்பாக நடக்க காரணமாக இருந்தார், நண்பர் என்ற முறையில்.


# ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பும் உறவும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக