பிரபலமான இடுகைகள்

சனி, 19 ஜூலை, 2014

அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

துடிப்பான நடை, மிடுக்கான உடை, பிடரி சிலிர்க்கும் முடி, மூக்கை துளைக்கும் பொடி, அனல் தெறிக்கும் வார்த்தை, கனல் நெறிக்கும் பார்வை, நெஞ்சம் நெகிழும் அன்பு, தஞ்சம் தரும் பண்பு.

                                              Photo: துடிப்பான நடை, மிடுக்கான உடை, பிடரி சிலிர்க்கும் முடி, மூக்கை துளைக்கும் பொடி, அனல் தெறிக்கும் வார்த்தை, கனல் நெறிக்கும் பார்வை,  நெஞ்சம் நெகிழும் அன்பு, தஞ்சம் தரும் பண்பு.

அவர் தான் அண்ணா தாவுத். பணியால் அவர் ஆசிரியர். கொள்கையால் பேராசிரியர். ஆசிரியர் பணியாற்றும் போது, வெறும் பாடத்தை நடத்தாமல் திராவிடத்தையும் போதித்தவர்.

மதம் இசுலாமாக இருக்கலாம், ஆனால் பகுத்தறிவு பகலவனின் சீடர். அண்ணாவின் எழுத்துக்களை மனதில் உள் வாங்கியவர், கலைஞரின் படைப்புகளை கரைத்துக் குடித்தவர்.

இவை எல்லாம் தாண்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தாசர் இவர். அவர் பாடல் வரிகளை இவர் உச்சரித்தால், இவர் தான் எழுதினாரோ என சந்தேகம் வரும், அல்லது பாரதிதாசனே இவர் உருவில் வந்திருக்கிறாரோ என சந்தேகம் வரும்.

“ கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே” என்று அவர் பிடரி முடி குலுங்க முழங்கினால் நமக்கு நாடி நரம்பு முறுக்கேறும், வாள் பிடிக்க கரம் துடிக்கும். அது தான் அய்யா அண்ணாதாவுத்.

அண்ணா காலத்தில், தலைவர் கலைஞர் காலத்தில் அயராமல் கழகப் பணியாற்றியவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் மாறவில்லை. கழகப் பணி தொடர்ந்தார் பள்ளியிலும், இயக்கத்திலும்.

ஆட்சி மாற்றம், கழகப்பணிக்காக பணியிட மாற்றத்தை பரிசாக தந்தது. ஆனாலும் அயரவில்லை. கழக உணர்வில் திளைத்தவருக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பது முதல் பணியாக அமைந்தது.

அண்ணன் ஆ.ராசா அவர்களின் தேர்தல் பணிகளுக்கெல்லாம் உடனிருந்தவர். 1998 தேர்தல் தோல்வியின் போது, பொடி டப்பாவை தட்டிக் கொண்டு சொல்வார் அண்ணாதாவுத்,”இந்தத் தோல்வி எல்லாம் நமக்கு கால் தூசு. எழுக, புறப்படுக”. அவர் வார்த்தைகள் உணர்வை தூண்டும்.

காலமெல்லாம் பேசியவர், உடல் நலம் குலைந்து பேச இயலாமல் போனார். மருத்துவமனையில் நீண்ட சிகிச்சை. அய்ந்துக்கு மேற்பட்ட முறை அண்ணன் ராசா அவர்கள் வந்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டார்,

ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை, இயற்கை வென்று விட்டது. அவர் பிரிந்தாலும், அவர் ஊட்டிய உணர்வு என்றும் குன்றாது.

# அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

அவர் தான் அண்ணா தாவுத். பணியால் அவர் ஆசிரியர். கொள்கையால் பேராசிரியர். ஆசிரியர் பணியாற்றும் போது, வெறும் பாடத்தை நடத்தாமல் திராவிடத்தையும் போதித்தவர்.

மதம் இசுலாமாக இருக்கலாம், ஆனால் பகுத்தறிவு பகலவனின் சீடர். அண்ணாவின் எழுத்துக்களை மனதில் உள் வாங்கியவர், கலைஞரின் படைப்புகளை கரைத்துக் குடித்தவர்.

இவை எல்லாம் தாண்டி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தாசர் இவர். அவர் பாடல் வரிகளை இவர் உச்சரித்தால், இவர் தான் எழுதினாரோ என சந்தேகம் வரும், அல்லது பாரதிதாசனே இவர் உருவில் வந்திருக்கிறாரோ என சந்தேகம் வரும்.

“ கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே” என்று அவர் பிடரி முடி குலுங்க முழங்கினால் நமக்கு நாடி நரம்பு முறுக்கேறும், வாள் பிடிக்க கரம் துடிக்கும். அது தான் அய்யா அண்ணாதாவுத்.

அண்ணா காலத்தில், தலைவர் கலைஞர் காலத்தில் அயராமல் கழகப் பணியாற்றியவர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் மாறவில்லை. கழகப் பணி தொடர்ந்தார் பள்ளியிலும், இயக்கத்திலும்.

ஆட்சி மாற்றம், கழகப்பணிக்காக பணியிட மாற்றத்தை பரிசாக தந்தது. ஆனாலும் அயரவில்லை. கழக உணர்வில் திளைத்தவருக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பது முதல் பணியாக அமைந்தது.

அண்ணன் ஆ.ராசா அவர்களின் தேர்தல் பணிகளுக்கெல்லாம் உடனிருந்தவர். 1998 தேர்தல் தோல்வியின் போது, பொடி டப்பாவை தட்டிக் கொண்டு சொல்வார் அண்ணாதாவுத்,”இந்தத் தோல்வி எல்லாம் நமக்கு கால் தூசு. எழுக, புறப்படுக”. அவர் வார்த்தைகள் உணர்வை தூண்டும்.

காலமெல்லாம் பேசியவர், உடல் நலம் குலைந்து பேச இயலாமல் போனார். மருத்துவமனையில் நீண்ட சிகிச்சை. அய்ந்துக்கு மேற்பட்ட முறை அண்ணன் ராசா அவர்கள் வந்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு முழு பொறுப்பேற்றுக் கொண்டார்,

ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை, இயற்கை வென்று விட்டது. அவர் பிரிந்தாலும், அவர் ஊட்டிய உணர்வு என்றும் குன்றாது.

# அண்ணாதாவுத், கொள்கையில் நீ ‘மன்னா’ தாவுத் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக