பிரபலமான இடுகைகள்

திங்கள், 26 அக்டோபர், 2015

பெட்டி வந்தாச்சி

வரவேற்க வந்த நண்பர்களோடு அளவளாவியபடி பார்க்கிங்கை அடைந்தோம். ஆயிரக்கணக்கில் கார்கள் நின்றன. எல்லாம் வெளிநாட்டு தயாரிப்பு கார்கள். கங்கை கொண்ட சோழபுரம் குமாரின் நிசானில் ஏறினோம்.

ஹோட்டலை அடைந்தோம். ஹோட்டல் "டூரிஸ்ட்". வந்த நண்பர்கள் பேசி விடை பெற எத்தனித்த போது, அண்ணன் பெரியண்ணன் அரசு தூக்கக் கலக்கத்தில் வந்தார். அறை தெரியாமல், அறந்தை ராஜூ முருகன் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு அண்ணனை எழுப்பி விட்டார்.

அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு படுக்கப் போன போது மணி 05.00. பெட்டி வராத வருத்தத்தில் இருந்த எனக்கு ஆறுதல் கூறிய அண்ணன் சதக் ஆப்ரேசனைத் துவங்கி இருக்கிறார். சதக், மினிஸ்டரி ஆப் இண்டிரியரில் வேலை பார்க்கிறவர். துபாய் ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் நண்பரிடம் தகவல் பரிமாறி இருக்கிறார்.

அப்துல்லா கனி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வேலை பார்ப்பவர். அவர் துபாயில் இருக்கும் சகாவிடம் தேட சொல்லி விட்டார். குமார் கத்தார் ஏர்வேஸில் வேலை பார்ப்பவர். அவர் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். இப்படியாக ஜாயிண்ட் ஆப்ரேசனில் லக்கேஜ் தோகாவை காலை 10.30க்கு வந்து சேர்ந்தது. எனக்கு உயிரும் வந்தது. அதற்கு பிறகு குளித்து உடைமாற்றிக் கிளம்பினேன்.

நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு சென்றோம் அண்ணன் அரசு அவர்களும் நானும். அரங்கு நிறைந்திருந்தது. முகநூலில் இயங்கும் கழக நண்பர்கள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கழகத் தோழர்கள், கட்சி சாராத முகநூல் நண்பர்கள் என கலந்து நிறைந்து இருந்தது அரங்கு.

இஸ்லாமிய பெண்கள் உட்பட பெண்களும் வந்திருந்தனர். சிலர் குழந்தைகளோடு. நிகழ்ச்சி துவங்கியது. அப்துல் ரஷீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சதக் தலைமை ஏற்று வரவேற்றார்.  முன்னிலை வகித்த அறந்தை ராஜுமுருகன் வாழ்த்திப் பேசினார். மதன் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்கள் "மக்களோடு நான்" நூலை வெளியிட, கத்தார் கழகத் தோழர்கள் பெற்றுக் கொண்டனர் . அடுத்து வாழ்த்தி பேச வந்தார் ஆரூர் பாலா என்கிற பாலாஜி.

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையாக சொல்லி, அதன் கதாப்பாத்திரங்களை விளக்கி, அதன் சிறப்புகளை எடுத்து கூறி ஒரு ஆய்வுரையே நிகழ்த்தினார் பாலா. அப்படியே அதிமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தவர், சூடாகி, பொதுக் கூட்ட பேச்சாளர் போல் வெளுத்து வாங்கினார்.

அடுத்த நிகழ்ச்சியாக, ஒரு அமைப்பு துவக்க விழா. வெளிநாடுகளில் பணிபுரியும் திமுக தோழர்களை கொண்ட அமைப்பு. International DMK welfare Association. இதன் மூலம் கழகத் தோழர்களுக்கு உதவுவது என அறிவித்தனர்.

#  கத்தார் கழக விழா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக