பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

மேளம் முழங்க, பலமான வரவேற்பு

பத்து நாட்களுக்கு முன்பே அண்ணன் ஸ்ரீதர் கூப்பிட்டு சொன்னார், “சிவா, எந்த வேலை இருந்தாலும் வந்துடு. உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். வேற கதைல்லாம் சொல்லக் கூடாது”. “அண்ணே வந்திடுறேன்”. “கமபார்ட்மெண்ட்டே நம்மளுது தான். வந்துடு, கலக்குவோம்”.

இரவு கடைசி நிமிடத்தில் ஸ்டேஷன் சென்றேன். உள்ளே நுழைந்தால், அடடா, நம்மாளுங்க. ஆமாம், பழைய நண்பர்களை இருபது வருடம் கழித்து பார்க்கும் போதும ஏற்படும் இனபத்தை எப்படி விவரிப்பது...

          

பழங்கதைகள் பேசிப் பேசி, செட்டில் ஆகும் போது, நள்ளிரவு தாண்டி விட்டது. படுத்தும் தூக்கம் வரவில்லை. ஒரு புறம் பழைய நினைவுகள், இன்னொரு புறம் அடுத்த மூன்று நாட்கள் எப்படி இனிமையாக இருக்கும் என்ற ஆர்வம்.

இப்படியே இருந்து, எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. எழுப்பியவுடன் துள்ளி எழுந்தோம்.

சேலம் ஜங்ஷனுக்குள் மெல்ல நுழைந்தது ஏற்காடு எக்ஸ்பிரஸ். ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க எங்கள் கல்லூரி நண்பர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தின் 1990 பேட்ச். 20 ஆண்டுகளுக்கு பிறகான சந்திப்பு, ஏற்காட்டில்.

அடித்து பிடித்து, ரயிலில் இருந்து இறங்கினோம். நாங்கள் பிளாட்ஃபார்மில் நடக்கும் போதே, மேள ஓசை கேட்டது. “டம் டம்” என்று பேண்ட் வாத்தியம். யாரோ வி.ஐ.பி வருகிறார் எனப் பேசிக் கொண்டே ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம்.

வரவேற்று எங்களுக்கு மாலையணிவித்தார்கள் ராம்ஸூம் அவர் நண்பர்களும். ஆமாம், வரவேற்பு ஏற்பாடு கல்லூரி நண்பர்களுக்கு தான். மேள வரவேற்பும் எங்களுக்குத் தான்.

அதிர்ந்து போனோம். மொட்ட ராம்ஸ் என்று நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் ராமச்சந்திரன் கொடுத்த வரவேற்பு அப்படி. அங்கிருந்தே தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு கிளப்பியது அது.

ரயிலில் இருந்து இறங்கிய மற்றப் பயணிகள், எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஏன் பார்க்க மாட்டாங்க?. சிலர் பேண்ட் சர்ட்டில் ரொம்ப ஃபார்மலாக. சிலர் டிராக் ஸூட்டில். கொஞ்சம் பேர் பர்முடாஸில். ஒன்னு, ரெண்டு ஆளுங்க கைலியிலும்.

இந்தக் குரூப்ப பார்த்தா, முக்கியமான ஆளுங்க மாதிரி தெரியல. ஆனா, வரவேற்பு இப்படி பலமா இருக்கே என்பது அந்தப் பயணிகளின் மைண்ட் வாய்ஸ்.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வாகனங்கள் காத்திருந்தன. நம்ம ஆளுங்களுக்கு பழைய நினைப்பு வந்து விட்டது. ஆமாம், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் ஞாபகம். எதிர்த்தாற் போல் இருந்த கடையை நோக்கி சென்றார்கள்.

டீ, காபிக்கு ஆர்டர் செய்தார்கள் சிலர். ஓசோனை ஓட்டை போட சிலர் முயன்று கொண்டு இருந்தனர். ராம்ஸ் மட்டும் தனது வேலையில் கண்ணாக இருந்தார். “மாம்ஸ் போலாமா?. டிபனுக்கு மேல போயிடனும்”என்று துரத்த ஆரம்பித்தார்.

வண்டி ஏறினோம், ஜெட்டாகக் கிளம்பியது. மனதும்...


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக