பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 1 மே, 2015

எல்லோருமே தொழிலாளிங்க தான்

தொழிலாளர்கள் தினம்னா வேற யாருக்கோன்னு நிறைய பேர் நினைச்சிகுறாங்க. உழைக்கும் எல்லோருமே தொழிலாளர்கள் தான். நாமும் தாங்க
.

சிகாகோ நகரில் நடந்த போராட்டம் யாருக்காக நடந்தது ?. தொழிலாளர்களுக்காக. அவர்களது வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும் அப்படிங்கறது தான் கோரிக்கை.

அப்போலாம் 12 மணி நேரத்துக்கும் அதற்கு மேலவும் வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டார்கள் தொழிலாளர்கள், முதலாளிகளால். அதக் கண்டிச்சு போராட்டம்.

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம், இது தான் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை. அந்தப் போராட்டத்திற்கு பின்னாடி தான் படிப்படியா விடிவு.

எல்லோருமே தொழிலாளர்கள் தான். இப்ப இந்தியாவில் உச்ச அதிகாரம் வாய்ந்தவர் யார், பிரதமர். ஆனால் அவரும் தொழிலாளி தான், வாக்களித்த மக்களுக்கு.

ஆனா நம்ம செல்ஃபி அண்ணன் மோடிய நினைச்சுக்காதீங்க. அவர் கதை வேற. அண்ணன் கார்ப்போரேட் தொழிலாளி. கொஞ்சம் ஹை ஸ்டேண்டர்ட்.

தொழிலாளி ரத்தத்தை எல்லாம் உறிஞ்சுறானே முதலாளி, அவன் எப்படி தொழிலாளி ஆகிறான்னு கேப்பீங்க. அவன் பணத்துக்கு தொழிலாளி. அம்பானி, அதானி வகையறா.

இந்த சின்னப் பிள்ளைங்க எல்லாம் எப்புடி தொழிலாளியாக முடியும். அவங்க தான் சார் மோசமான தொழிலாளிகள். பள்ளிக்கூடம் போகும் போது பாருங்க, மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள்.

பெண்கள எடுத்துக்குங்க. இந்த வேலை நேர வறைமுறைய எல்லாம் தாண்டி குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. அதும் வேலைக்கு போறவங்கன்னா, டபுள் டியூட்டி. வேலையும், குடும்பமும்.

இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தொழிலாளி தான். மே தினம் எல்லாருக்குமானது தான். எல்லோரும் வாழ்த்துக்கு உரியவர்கள் தான்.

சரி, முக்கியமான ஆட்கள விட்டுட்டனே. நாம தான் சார். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, இப்படி மாங்கு மாங்குன்னு  உழைக்கிறோமே, இது தான் சார் டாப்பு.

காலையில ஏந்திரிச்சா, மொபைல்ல கண்ணு விழிச்சி, லைக்கு, கமெண்ட்டு, ஷேருன்னு இவ்வளவு உழைக்குறோமே, நாமும் உழைப்பாளிகள் தான் சார்.

# மே தினம், உழைப்பவர் லைக் தினம். வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக