பிரபலமான இடுகைகள்

இசைஞானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசைஞானி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஜூன், 2016

மனசு முழுசும் இசை தான்

காரில் ஏறினால் அந்தக் கேசட் தான், கல்யாணத்துக்குப் போனால் அந்தப் பாடல் தான் என அந்த சீசனில் கொடிக் கட்டி பறந்தது அந்தப் படத்துப் பாடல்கள் தான். அத்தனைப் பாடல்களும் ஹிட். இயல்பாக கிராமத்துப் படம் என்றால் சொல்லி அடிப்பவர், இதில் இன்னும் அழுத்தம். படம் - பாண்டி நாட்டுத் தங்கம். இசை அவரே தான்.

"ஏலேலோம் குயிலே, இளம் வயசுப் பொண்ண, மயிலாடும் பாறையில, சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு, உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது", என அனைத்துப் பாடல்களும் போன இடமெல்லாம் ஒலித்தது. இது ராஜாவுக்கு மட்டுமே சாத்தியம். படத்தில் எல்லாப் பாடல்களையும் ஹிட் கொடுப்பது, வருடத்தில் எல்லாப் படங்களையும் இசையால் தாங்கிப் பிடிப்பது என உச்சம் தொட்டவர்.

பாட்டு "தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா" அப்படின்னு ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளே இழுத்து விடும். அது தானே ராசா.

பாடல் தொடர்ந்து கிறங்கடிக்கிறது.

"உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்தயா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

பாடலை கேட்கும் போது, வழக்கமான காதல் பாடலாகத் தோன்றும். ராஜாவின் ரசிகர்களுக்கு தான் கவிஞர் வாலியின் வரிகளின் அர்த்தம் புரியும். முதல் வரியில் ஒளிவுமறைவாக ஆரம்பிப்பவர் "நெஞ்சைத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுசும் இசை தான் உனக்கு", என்ற வரியில் நேரடியாக சொல்லி விடுகிறார்.

இதற்கு பிறகு ஒவ்வொரு வரியாக கவனித்தால், வாலியின் ராஜா மயக்கம் புரியும். கடைசியாக ராஜா பதில் சொல்வது போல் முடித்திருப்பார்.

"என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு"

ராஜா, உன் மனசுல பாட்டு தான் இருக்குது, பல மனசு அதை கேட்டுத் தான் தவிக்குது, தமிழ் உலகமே அதக் கேட்டு தான் தூங்குது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே.

# மனசு முழுதும் இசை தான் உனக்கு, இசையோடு உனக்கும் இடமும் இருக்கு எங்கள் மனதில் !

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இனிய மனம் இசையை அனைத்து

"போன எடுத்தப் பிறகும் எப்படி காலர் டியூன் ஓடிகிட்டு இருக்கு". "ஹலோ இங்க கம்ப்யூட்டர்ல ஓடிகிட்டு இருக்குங்க". இது நேற்று இரவு. ஸ்டேடஸை போட்டுவிட்டு பாட்டை மீண்டும், மீண்டும் நான் ரசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

காலை 6.15க்கு அப்துல்லா அண்ணன் கூப்பிட்ட மிஸ்ட் காலை 7.20க்கு பார்த்துக் கூப்பிட்டேன். "அண்ணே, ஒரு க்யூரியாசிட்டி தான். காலர் டியூன் கேக்க தான் அடிச்சேன்". இது வரை அலைபேசி ஓயவில்லை. ஏதோ நம்மால் முடிந்த இசை சேவை.

"லலாலா லாலாலா" என சுஜாதா ஹம் செய்ய ஆரம்பிக்கும் போதே நாம் வசியப் பட்டு விடுவோம். மெல்ல ராஜா நம்மை மெல்லிசையால் நிமிர்த்துவார். கங்கை அமரனின் எளிய, இனிய வரிகள் சுஜாதா குரலில் தேன் மழை தான்.

"ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்"

இசை ஜாலம் துவங்கும். ஆஹா நம்மை அப்படியே ஆழ்த்தி விடும். என்ன வாத்தியத்தை வைத்து என்ன இசைப்பாரோ, நம் மனதைத் தடவிக் கொடுக்கிறது.

"ஜீவனானது இசை நாதமேன்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா...எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது ...."

சுஜாதாவின் தாலாட்டும் குரலோடு தபேலா மாத்திரமே இணைந்து பயணிக்கிறது. ஆனால் பாடுவதிலேயே நம்மை தாலாட்ட வைப்பார் ராஜா.

"மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த காலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே
அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்"

இசையை கொண்டாடும் பாடல். இசையே இசைத்து மகிழ்விக்கும் பாடல். மென்மையாக, எளிமையாக இசையமைத்து கொண்டாட வைத்து விடுகிறார். ஜானியில் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை தான். இது ஒரு வகை சிறப்பு.

பாடலை வீடியோவில் பார்த்தால், அது இன்னும் ஒரு விதமாக பரவசப்படுத்தும். மகேந்திரன் இயக்கத்தில், ஶ்ரீதேவியின் நடிப்பும், ரஜினியின் மேனரிஸங்களும் ரசிக்க வைக்கும். சின்ன, சின்ன அசைவுகளிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்கம்.

புதிய படமான 'தாரை தப்பட்டை'  இசை குறித்து எழுத வேண்டும் என்று இருந்த வேளையில், அழகர்ராஜா இந்தப் பாடல் குறித்து எழுத வைத்து விட்டார். பலரும் 80க்கே போய் விட்டார்கள்.

# ஒரு இனிய இசை மனதை அணைத்துச் செல்லும் !

வியாழன், 14 ஜனவரி, 2016

இனிய மனம் இசையை அனைத்து

"போன எடுத்தப் பிறகும் எப்படி காலர் டியூன் ஓடிகிட்டு இருக்கு". "ஹலோ இங்க கம்ப்யூட்டர்ல ஓடிகிட்டு இருக்குங்க". இது நேற்று இரவு. ஸ்டேடஸை போட்டுவிட்டு பாட்டை மீண்டும், மீண்டும் நான் ரசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

காலை 6.15க்கு அப்துல்லா அண்ணன் கூப்பிட்ட மிஸ்ட் காலை 7.20க்கு பார்த்துக் கூப்பிட்டேன். "அண்ணே, ஒரு க்யூரியாசிட்டி தான். காலர் டியூன் கேக்க தான் அடிச்சேன்". இது வரை அலைபேசி ஓயவில்லை. ஏதோ நம்மால் முடிந்த இசை சேவை.

"லலாலா லாலாலா" என சுஜாதா ஹம் செய்ய ஆரம்பிக்கும் போதே நாம் வசியப் பட்டு விடுவோம். மெல்ல ராஜா நம்மை மெல்லிசையால் நிமிர்த்துவார். கங்கை அமரனின் எளிய, இனிய வரிகள் சுஜாதா குரலில் தேன் மழை தான்.

"ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்"

இசை ஜாலம் துவங்கும். ஆஹா நம்மை அப்படியே ஆழ்த்தி விடும். என்ன வாத்தியத்தை வைத்து என்ன இசைப்பாரோ, நம் மனதைத் தடவிக் கொடுக்கிறது.

"ஜீவனானது இசை நாதமேன்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா...எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது ...."

சுஜாதாவின் தாலாட்டும் குரலோடு தபேலா மாத்திரமே இணைந்து பயணிக்கிறது. ஆனால் பாடுவதிலேயே நம்மை தாலாட்ட வைப்பார் ராஜா.

"மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த காலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே
அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்"

இசையை கொண்டாடும் பாடல். இசையே இசைத்து மகிழ்விக்கும் பாடல். மென்மையாக, எளிமையாக இசையமைத்து கொண்டாட வைத்து விடுகிறார். ஜானியில் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை தான். இது ஒரு வகை சிறப்பு.

பாடலை வீடியோவில் பார்த்தால், அது இன்னும் ஒரு விதமாக பரவசப்படுத்தும். மகேந்திரன் இயக்கத்தில், ஶ்ரீதேவியின் நடிப்பும், ரஜினியின் மேனரிஸங்களும் ரசிக்க வைக்கும். சின்ன, சின்ன அசைவுகளிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்கம்.

புதிய படமான 'தாரை தப்பட்டை'  இசை குறித்து எழுத வேண்டும் என்று இருந்த வேளையில், அழகர்ராஜா இந்தப் பாடல் குறித்து எழுத வைத்து விட்டார். பலரும் 80க்கே போய் விட்டார்கள்.

# ஒரு இனிய இசை மனதை அணைத்துச் செல்லும் !

காலர் டியூன் கேக்கக் கூப்பிட்டேன்

அலைபேசி ஒலித்தது. எடுத்தேன். "சார், அதுக்குள்ள எடுத்துட்டிங்க. பாட்டக் கேக்கலாம்னு நினைச்சேன்". சொல்லி முடிக்கும் முன் கட் செய்தேன். அவர் அழகர்ராஜா, ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து. அது காலர் டியூனுக்கான விருப்பம்.

மீண்டும் அழைத்தார். முழு ரிங் வரும் வரை விட்டேன். இப்போது அவரை நான் அழைத்தேன். என்கேஜ்ட் ஒலி. மீண்டும் முயற்சித்தேன். பிஸி டோனே ஒலித்தது. அவர் என்னை முயற்ச்சிக்கிறார் போலும்.

சரி, இந்தப் பாட்டை கேட்க மீண்டும் முயற்சிக்கிறார் என்றால், அவர் பேசுவதற்குள் நாம் அந்தப் பாட்டைக் கேட்டு விட்டு மீண்டும் தயாராக வேண்டும் என கூகுள் குரோமில் துழாவினேன். பாடல் காட்சியுடன் வந்தது.

இந்தப் பாட்டை காலர் டியூனாக வைப்பதற்குள், நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். அதற்கு முன்னும் இசைஞானி பாடல் தான் காலர் டியூன். ஆனால் இப்போதைய பாடல் தூக்கி அடித்து விட்டது, கேப்டன் விஜயகாந்த் சொன்னது போல.

புது காலர் டியூன் மாற்றலாம் என முடிவு செய்த உடன் இசைஞானியின் 80ம் ஆண்டு பாடல்களில் தேடுதல் வேட்டையைத் துவங்கினேன். ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பிறகே இந்தப் பாடலைப் பிடித்தேன்.  பதின் வயதில் மெஸ்மரிசம் செய்த பாடல்.

யூ-டியுபில் பாடல் கிட்டியது. அடடா என்ன மாதிரியாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். நாயகனும், நாயகியும் இசைந்து பாடலோடு ஒன்றி வருகின்ற காட்சி அருமை. இயக்குனரின் கைவண்ணம் மிளிர்கிறது.

இடையில் அழகர்ராஜா லைனுக்கு வந்து விட்டார். "சார், பிஸி ஆயிட்டிங்க" என்றேன். "ஆமாம். இப்படி பாடல் வைத்தால் என்ன செய்வது?" என்றார். "ஏன் சார்?" என்றுக் கேட்டேன். "பாடலை முழுமையாக கேட்க தூண்டி விட்டீர்கள்"என்றார்.

"சார், இசைஞானி பாடலை வைக்கத் தேடினேன். அதில் இந்தப் பாடலை தெரிவு செய்தேன். முன்னாடியும் இளையராஜாவின் பாடலை தான் வைத்திருந்தேன். அதற்கு முன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல்களை வைத்திருந்தேன்", என்றேன்.

"இந்தப் பாட்ட கேட்டா யார் சார் அதுக்கு மேல பேசுவாங்க" என்றுக் கேட்டார். "ஆமாம் சார். என் கல்லூரி நண்பர் அழைத்தவர், பழையக் காலத்துக்கு கொண்டு போய்ட சிவா என்றார்", என்றேன்.

"சார், அது மட்டுமில்ல தொகுதியில் இருந்து பிரச்சினைன்னு போன் பண்றவங்க கூட இந்தப் பாட்ட கேட்டாக்க, பிரச்சினைய மறந்திடுவாங்க", என்றார்.

ஆனால் நான் அப்படி நினைச்சு அந்தப் பாட்ட வைக்கவில்லை. பாட்டை கேட்பவர்கள் இசையோடு இசைந்து போக வேண்டும், ரசித்து வாழ வேண்டும் என்பது மாத்திரமே நோக்கம்.

அப்படி என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா....

# இளையராஜா பாட்டுன்னால்லே....

புதன், 7 அக்டோபர், 2015

பார்க்கும் பார்வை நீ

வழக்கமாக கதாநாயகிகள் கதாநாயகர்களோடு ஆடும், பாடும் பாடல் ஹிட் ஆகும். இல்லை என்றால் குத்துப் பாடலுக்கு ஆடும் கவர்ச்சி நடிகைகள் பாட்டு ஹிட் ஆகும். கதாநாயகன் கவர்ச்சி நடிகையோடு ஆடும் பாடல் சில தான் ஹிட் ஆகும், நாயகனின் ' நிலா அது வானத்து மேலே' போல.

இதில் இன்னும் சிறப்புகள் பல. ஹீரோவும் டாப், உடன் ஆடிய நடிகையும் டாப். இசையமைப்பாளரும் டாப். ஒருங்கிணைத்த இயக்குனரும் டாப் என்றால் கேட்கவும் வேண்டுமோ, பாட்டும் செம ஹிட்.

1983ல் வந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அந்தத் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் தான். அதில் இது தனித்துவம். இன்று கேட்டேன், அன்று கேட்ட அதே உணர்வு.

"பேசக் கூடாது, வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை, வேகம் இல்லை
லீலைகள் காண்போமே"

வழக்கமான ஸ்லிம் ரஜினி இல்லை, கொஞ்சம் பூசினாற் போல். உடன் ஆடும் நடிகை, அன்றையக் கனவுக் கன்னி 'சில்க் ஸ்மிதா' தான். ஆனால் பெரிய அளவில் கவர்ச்சியான நடனம் கிடையாது.  ஆனாலும் பாடல் ஹிட்.

காரணம் காம்பினேஷன். நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி என செம காம்பினேஷன் இந்தப் பாடல். எஸ்.பி.பியும் சுசீலாவும் இழைந்து இயல்பாகப் பாடி மனதில் இடம் பிடித்தப் பாடல்.

பெரிய அளவில் நடனம் கிடையாது, லேசான அசைவுகள் தான். ஆனால் அதிலேயே இயக்குனர் எஸ்.பி.எம் சமாளித்திருப்பார். ரஜினியின் நடனம் ஏற்கனவே பிரபலம், இதில் இன்னும் மேலே. நீச்சல் உடையில் வந்தாலும் சில்க் கண்ணியம், இன்றைய நடனங்களை ஒப்பிடுகையில்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மென்மையாக பாடுவது, நாமே பாடுவது போல பிரம்மை. சுசீலாவின் குரல் அதைவிட மென்மை.

"பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ"

பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள் எளிமை, இனிமை. கிறங்கடிக்கிறது.

தொடர்ந்து தலைவன் ரஜினியின் அசைவுகளில் லயித்துப் போவோம். அப்புறம் சில்க். இதைத் தாண்டி ஒருவர் இருக்கிறார், அவர்....

அவர் தான் நமது இசைஞானி. ஆமாம், அந்த இசையை இசைத்த இசைராசா.

ரஜினிக்கேற்ற துள்ளல் இசை, சில்க்கிற்கேற்ற மயக்கும் இசை, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சுவைக்கேற்ற கமர்ஷியல் இசை, எஸ்.பி.பி மற்றும் சுசீலா ஆகியோரின் குரலுக்கு ஒத்திசைந்த இசை, என எல்லாம் கலந்து தந்தவர் நமது இசையரசர்.

இசை உலகை என்றும் ஆளும் அரசன் நீ தான்.

# பாடும் ராகம் நீ, என் நாதம் நீ, என் உயிரும் நீ!

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காற்றினிலே வந்த கீதம்

தேனீ மாவட்டம் தேவாரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு. பண்ணைபுரத்திற்கு பக்கத்து ஊர் தான் தேவாரம்.  கிளம்பும் போது மறக்காமல் வாக்மேனை எடுத்துக் கொண்டேன். தேவாரத்தில் இருந்து மலையடிவாரம் செல்ல ஜீப் ஏறினோம்.

4 வீல் டிரைவ் ஜீப். காட்டுப் பாதை. தண்ணீர் ஒடாத காட்டு ஓடையில் ஜீப் செல்ல ஆரம்பித்தது. மணலில் மிதந்து சென்றது ஜீப். உள்ளே உட்கார்ந்திருப்போர் மீது இழையும் அளவிற்கு செடி, கொடிகள். முட்செடிகளும். வாக்மேனை காதில் மாட்டினேன். "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

ஜீப் பாதை முடிந்த இடத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். தலையை சுடும் வெயில், ஆனால் இதமான காற்று. பரவசப் படுத்தியது. "இங்க கிளம்புற காற்று தான் தேனீ மாவட்டத்த குளுமையாக்குறது". பெரும் பாறைகள் மீது ஏறினோம். "மலைக்கு அந்தப் பக்கம் கேரளா. அதோ அந்தப் பக்கம் பண்ணைபுரம்".

ஓங்கி வளர்ந்த மரங்கள். இதமான நிழல். குளிர்ச்சியான காற்று. அப்போது தான் வாக்மேனில் அந்தப் பாட்டு துவங்கியது. ஜானகி குரலில் ஹம்மிங் மனதை வருட ஆரம்பித்தது. ஆ.......

ஹம்மிங் முடிந்து ஒரு இசைக் கோர்வை வரும். அது அப்படியே அங்கு வீசிய காற்றை பிரதிபலித்தது.

"கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்"

அப்படியே உண்மையான சித்தரிப்பு, அந்தப் பகுதியை. நேரில் உணர்ந்தேன். காற்றில் ஆடும் காட்டு மலர்கள். தொட்டுத் தொட்டு பேசும் தென்றல். பாடலை எழுதிய கண்ணதாசன் அந்த மலையடிவாரத்திற்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உணர்ந்து எழுதியது போன்ற வரிகள்.

கண்ணதாசனை எழுத வைத்தது இளையராஜாவின் இசைக் கோர்வையாகத் தான் இருக்க வேண்டும். இந்த மலை சார்ந்தப் பகுதிகளில் நிச்சயம் உலவியிருப்பார் ராஜா. பாடல் தொடர்ந்தது .

"காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அங்கே அன்று இங்கே இன்று"

ஒரு பாறை மீது ஏறி உட்கார்ந்தேன். கண்களை மூடி ரசித்தேன். சுற்றிலும் இப்போது இசைஞானியின் ட்ரூப். தபேலா சற்று அழுத்தம்.
 
"வண்ணக்கிளியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவளுது முல்லை தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு"

இந்த இடத்தில் புல்லாங்குழல் சற்று விளையாடும். அங்கு வீசும்
காற்றே அப்படி தான் இருக்கிறது.

"கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உள்ளம சொந்தம் கொள்ள"

பாடலை ரீவைண்ட் செய்தேன். மீண்டும் துவக்கத்தில் இருந்து ஜானகி பாட ஆரம்பித்தார். அடுத்து ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் கேட்டேன். தூரத்தில் மலை உச்சி தெரிந்தது. பறவைகள் ஒலி.

அந்தப் பகுதி காற்றின் மொழியை உள்வாங்கி அதை இசையாக்கி நம்மை மகிழ்விக்கும் ராஜா. அந்தக் காற்றை அளைந்திருக்கும் ராஜாவின் விரல்கள். நானும் அளைந்தேன், அந்தக் காற்றை என் விரல்களால். ராஜாவாய் உணர்ந்தேன்.

# அதிசயம் ஆனந்தம். காற்றாய்  வரும் ராஜா !

 

செவ்வாய், 10 மார்ச், 2015

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

 ஊர் கிளம்பினேன். கார் பயணம். வழக்கம் போல் இளையராஜா உடன் பயணித்தார். 80-கள் பாடல். அதில் ஒரு பாடல் ஆழமாக மனதை கிளறியது. “அந்தி மழை பொழிகிறது” தான் அது.

     


பழைய நினைவுகள் அலைபாய்ந்தது. ஆமாம். இந்தப் பாடல், நான் சென்னையில் பார்த்த முதல் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல். சிறு வயது நினைவுகள். அப்போது உணர்ந்ததை விட, இப்போது தான் முழுதும் உணர்ந்தேன்.

Image result for raja paarvai

கமல் நடித்த “ராஜபார்வை” திரைப்படம். அப்போது நான் ஏழாம் வகுப்பு. திருப்பெரும்புதூரில் பணியாற்றிய எனது சித்தப்பா  நெடுஞ்செழியன் அவர்களது இல்லத்திற்கு, விடுமுறைக்கு சென்றிருந்தேன். அப்போது தான் சென்னை சென்றிருந்தேன்.

வடபழனியில் உள்ள ஏவிஎம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்ததாக நினைவு. கண்பார்வை இல்லாத கமல் ஹீரோ. மாதவி ஹீரோயின். இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ். கமல் இன்றும் மனதில் நிற்கிறார். பாடலை பார்த்தால் அவர் முதல்.

பாடலை கேட்டால் இசைத்த இசைஞானி இளையராஜா முதலா? எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து முதலா? என்ற கேள்வி தான் எழும். பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

அந்த வினா இன்றும் எழுந்தது. என்னால் முடிவு செய்ய முடியவில்லை. காரணம் நான் ஒரே சமயத்தில் இசைஞானிக்கும் ரசிகன், கவிப்பேரரசுக்கும் ரசிகன்.

“அந்திமழை பொழிகிறது; ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”. யார் முகம்? இசையா, கவியா?.

“நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்” இளமை துள்ளலை அன்று கவிஞரை தாண்டி யாரும் சொல்லி இருக்க முடியாது. அதே போல் அதற்கு இசை ராஜாவை தாண்டி யாரும் கட்டி இருக்க முடியாது.

“கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?; தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது” கண் பார்வை இல்லா மனிதனின் காதலையும், காதலின் சிறப்பையும் இதற்கு மேல் சிறப்பாக, மனம் தைக்க சொல்ல முடியாது. அதே போல் அந்த இசை.

“நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி விசிரிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்” இது அக்மார்க் வைரமுத்து குறும்பு.

அந்த வயதில் தோன்றாத கற்பனை எல்லாம் இப்போது தோன்றுகிறது. மீண்டும் “ராஜபார்வை” பார்க்க வேண்டும். கமலின் நடிப்பு, மாதவி கண்கள், வயலின், ராஜாவின் இசை, வைரமுத்துவின் இளமை வரிகள், ஒருங்கிணைத்த இயக்கம்.

மீண்டும் வாய்க்குமா இதே போன்ற பாடலுக்கான வாய்ப்பு. வாய்ப்பில்லை. அந்த பாடலையே ரசிப்போம்.

“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
யார் ? கமலா? ராஜாவா? வைரமுத்தா?
எனக்கு என்னவோ தோன்றுகிறது.... !

# ராஜாவின் இசை ராஜபார்வை

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா....

ஒரு திரைப்படப் பாட்டு நம்மை பல ஆண்டுகளுக்கு பின் இழுத்து செல்லும் என்பதை இன்று உணர்ந்தேன். அப்படியே 1986க்கு கொண்டு சென்று விட்டது. வயது குறைந்து விட்டது. அந்த நாள் நினைவுகள்.

     

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பொறியியல் புலம். முதலாண்டு. மின்னியல் மற்றும் மின்ணணுவியல். வீட்டிலிருந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற நேரம். கட்டுபாடுகள் தளர்ந்து வாழ்க்கையின் சிறகுகள் விரிந்த நேரம்.

பள்ளிப்படிப்பு காலத்தில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் அம்மாவிடம் அனுமதி பெற வேண்டும். கல்லூரி, ஹாஸ்டல் வந்த பிறகு, நாமே நமக்கு தலைவன். அது தான் பல ரசனைகள் பிடிபட்ட காலம்.

பள்ளி காலத்திலேயே டிரான்சிஸ்டரை தலையணைக்கு கீழ் வைத்து பாடல்கள் கேட்ட இளையராஜா ரசிகக் கூட்டத்தின் தலைமுறை. இளையராஜா பாடல்களை கேட்டே பசியாற்றும் கூட்டத்தின் அங்கம்.

அந்த இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்த படம் என்றால் எவ்வளவு ஆர்வம் கிளம்பியிருக்கும்? அப்படி தான் அந்த படம் எங்களுக்கு அறிமுகம். ரிலீஸ் அப்போது.

படம் பார்க்க சென்றோம். லேனா தியேட்டர். கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்றோம். அது தான் நகரத்தில் சினிமா பார்க்க சென்று, கும்பலில் நின்ற முதல் அனுபவம். தோளில் ஏறி குதித்து செல்கிறார்கள்.

டிக்கெட் கவுண்டரை நெருங்குகையில் சட்டை கசங்கி, வியர்வை பெருத்து, தலை கலைந்து, நிலை குலைந்து போனோம், எங்கள் கேங். ஆனாலும் டிக்கெட் வாங்கி, வாழ்க்கையின் உச்சம் எட்டினோம்.

பாடல்கள் தான் படத்தின் பலம். டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன். பல வெற்றிப் படங்களின் டைரக்டர். மெல்லிய உணர்வுகளை கொண்டு திரைக்கதை நெய்யக் கூடியவர். ஆனால் இந்தப் படம் இசை மேல் கட்டப்பட்டது. மெல்லத் திறந்தது கதவு.

இன்று ஜெயா டிவியில் "குழலூதும் கண்ணனுக்கு" பாடல் பார்த்தேன். நம்ம "மைக் மோகன்" புல்லாங்குழல் வைத்துக் கொண்டு குழலூதூகிறார். ராதா கண்டாங்கி சேலைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் ஓடி பாடுகிறார்.

உடலை ஒட்டிய சட்டை. பல நிறங்கள் கொண்ட சட்டை. டைட்டான கருப்பு பேண்ட். இது மோகன். நீல நிற சேலை. மேக்கப் பெரிதாக இல்லாத ராதா. இவர்களை கொண்டு படமாக்கப்பட்ட பாடல். ஆனால் ஹிட் பாடல். அது அந்த காலம்.

இசை, பழைய நினைவுகள்.....

# பாடலில் வரும் மோகனை போல மனம் பழைய நினைவுகளை தேடி அலைகிறது !