பிரபலமான இடுகைகள்

சனி, 26 ஜனவரி, 2013

ஒரு அலைபேசி , இரண்டு அழைப்புகள்...


காலையில் ஒரு அலைபேசி அழைப்பு.

" எம்.எல்.ஏ தானே ?"

" ஆமாங்க "

" நான் ......... கிராமத்திலிருந்து ................ பேசறேன். எங்கே இருக்கீங்க ?.. பார்க்கனும். "

" நான் ஹைதராபாத்தில் இருக்கேன். அப்பாவுக்கு ஒரு ஆப்பரேஷன்."

" நேத்து நடந்த கரிநாள் விளையாட்டு போட்டியப்ப, ஒரு தகராறு. எதிர்பார்ட்டி கேஸ் குடுத்துட்டாங்க. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு பேசனும் "

" நான் இப்போ டாக்டர்கிட்ட பேசிகிட்டிருக்கேன், கொஞ்ச நேரம் கழிச்சி பேசிடறேன்."

" உடனே போலீஸ் ஸ்டேஷன் பேசி, சொல்லிட்டு அப்புறம் பாருங்களேன்..."

# பொது வாழ்க்கைக்கு சகிப்புத் தன்மை நிறைய தேவைப்படுது....

**********************                  *************************         ******************
வழக்கமான அலைபேசி அழைப்பு என்று பார்த்தேன். மணி 11.02.

" private number "

தினம் இரண்டுமுறை அழைத்து தந்தையார் நலம் விசாரிக்கும் அண்ணன் ஆ. ராசா அழைக்கிறார் என நினைத்து,

" வணக்கம் அண்ணன் " என்றேன்.

மறுமுனையிலிருந்து கரகரத்த குரல்.

" வணக்கம் ஸ்டாலின் பேசறேன். அப்பா எப்படி இருக்காங்க ? "

ஒரு நிமிடம் தடுமாறிப் போனேன்.

" அப்பா நல்லா இருக்காங்க. ஆப்பரேஷன் முடிந்து நார்மலாயிருக்காங்க அண்ணே. "

" எனக்கு தெரியாது. இப்ப தான் சுபா ( மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர்) சொன்னாரு. ஏன் சொல்லல ? "

" இல்லிங்கண்ணா, யாருகிட்டயும் சொல்லல "

" ஏன், என்ன பிரச்சினை ? "

" ஏற்கனவே அப்பாவுக்கு கை, கால் நடுக்கம் இருந்தது. அது பார்கின்ஸன்ஸ் பிராப்ளம். நீயூரோவுக்கு ஹைதராபாத்ல தான் டெல்லி AIMSக்கு அப்புறம் ஆப்பரேஷன் பண்றாங்க. அதனால இங்க வந்துட்டோம் "

" அப்படியா, சரி. அப்பாவ நல்லா பாத்துக்குங்க. ஊருக்கு வந்தபிறகு சொல்லுங்க "

" நன்றிங்க அண்ணா. அப்பாகிட்ட சொல்லிடறேன் "

" அவசியம் சொல்லிடுங்க நான் விசாரிச்சேன்னு "

தூக்கம் கலைந்துவிட்டது.

தலைவரால் " தலைவராக" முன்மொழியப்பட்டு விட்ட எங்கள் சட்டமன்ற கழகத் தலைவர்.

யாரையேனும் விட்டு விசாரித்தேன் என்று சொல்ல சொல்லியிருக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் கழகப் பணியாற்றிவிட்டு, களைத்திருந்தாலும், கழகத் தோழரின் நலம் பெரிதென, மனம் கசிந்து விசாரித்த எங்கள் தளபதி.

# வாழ்நாளெல்லாம் இது போன்று கழகத்திற்கு உழைக்க வேண்டும்.......நான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக