பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

தந்தை-தனயன் உறவு, அண்ணன் ஆ. ராசா

தன்னுடைய அரசியல் அறிமுகம் குறித்துக் குறிப்பிடும் போதெல்லாம் " 1996-ல் முதன்முதலாக நாடாளுமன்ற வேட்பாளராக கழகத்தால் நிறுத்தப்பட முக்கிய காரணம் எஸ்.எஸ் அவர்கள்" என மறக்காமல் அப்பாவை குறிப்பிடுவார் அண்ணன் ராசா.

கடந்த மாதம் தளபதி அவர்கள் கலந்த...ு கொண்ட பெரம்பலூர் பொதுக்கூட்டத்திலும் குறிப்பிட்டார்.

அந்த உணர்வை பேச்சோடு இல்லாமல், செயலிலும் காட்டக்கூடியவர் அண்ணன் ராசா. அப்பா மாத்திரமல்ல, அந்த நேரத்தில் யாரெல்லாம் உடன் இருந்தவர்களோ, அவர்களிடமும், இன்றும் நன்றி பாராட்டி வருபவர்.

அவர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகமான போது, அப்பா மாவட்ட செயலாளர். பிறகு அவர் மாவட்ட செயலாளரான நேரத்தில், அப்பா உட்பட மூத்தோர்களை உரிய மரியாதையோடு நடத்தியவர்.

1996-ல் பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளராக இருந்த அப்பா, தொடர்ந்து நான்கு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அண்ணன் ராசா அவர்களுக்கு பணியாற்றியவர்.

தில்லியில் அண்ணன் சிறைபட்ட நேரத்தில், குன்றியிருந்த உடல் நலனையும் பொருட்படுத்தாது அப்பா அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

இப்படி அப்பாவிற்கும், அண்ணன் ராசாவிற்குமான உறவு, தந்தை-தனயன் உறவு.

அந்த உணர்வோடு, அண்ணன் ஆ. ராசா அவர்கள், எங்கிருந்தாலும் தினம் தொடர்பு கொண்டு தந்தையின் சிகிச்சை குறித்து விசாரித்து அறிவார்கள்.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று மாலையும், இன்று காலையும் ஹைதராபாத் NIMS மருத்துவமனைக்கு வருகை தந்து, சிகிச்சை பெறும் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

தனது மைத்துனரை உடன் இருந்து சிகிச்சையை கவனிக்க பணித்துள்ளார். சிகிச்சையின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வந்த நேரத்தில், மருத்துவமனை இயக்குனர் தலைமையில் மருத்துவர்கள் அவரை வரவேற்றக் காட்சி, இப்போதும் அவர் அமைச்சராகவே இருக்கிற உணர்வை ஏற்படுத்தியது.

நீலகிரி தொகுதி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் என்ன வரவேற்பு வழங்கப்படுமோ, அதே வரவேற்பு மருத்துவமனையிலும்.

அப்பாவை சந்தித்த செய்தி உள்ளூர் தினசரிகளிலும் வெளிவந்து பரபரப்பாகிவிட்டது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக