பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

படிச்சா, அடுத்த இலக்கு....(பாஸ்போர்ட் புராணம் - 1)

எங்க தலைமுறையில் பத்தாம் வகுப்பு பாஸ் செய்தால், உடனே சில சடங்குகள் உண்டு. அவற்றில் முதன்மையானது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல். அரசாங்க வேலைக்கு போறது தான் அப்போ முதல் நோக்கம்.

                    

அதனால பத்தாவது பாஸ் செஞ்ச உடனே பதிஞ்சிட்டா சீனியாரிட்டியில இருப்போம்னு பெரியோர் அட்வைஸ். ரிசல்ட் வந்த உடனே அந்த ஆபிஸ தேன்கூட்டை போல் பசங்க மொய்ப்பாங்க.

அடுத்த நோக்கம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது. காரணம் அப்போ வெளிநாட்டு வேலை தான் ஹிட். பத்தாவதோ, பிளஸ் டூ-வோ பெயிலாயிட்டா உடனே வெளிநாட்டு ஏஜெண்ட புடிச்சி வேலைக்கு முயற்சி ஆரம்பமாயிடும்.

இப்பவும் எங்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து வேலை தேடி வெளிநாடு செல்வோர் எண்ணிகை அதிகம் தான். அதே போல வெளிநாட்டில் இன்னைக்கும் வேலை செய்யறவங்களும் நிறைய.

ஆனா இப்போ படிச்சவங்களும் வேலை தேடி வெளிநாடு செல்வது அதிகமாயிடிச்சி. மற்றவங்க அய்.டி, அது, இதுன்னு அமெரிக்கா, அய்ரோப்பான்னு போறாங்க. எங்க பக்கமிருந்து வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் பக்கம் நிறைய.

சரி மேட்டருக்கு வருவோம். பத்தாவது பாஸ் செஞ்சாச்சி. அடுத்த நாளே வகுப்பு நண்பர்கள்லாம் படையா கிளம்பினாங்க, எம்ப்ளாய்ண்ட்மெண்ட் எக்ஸேஞ்சுக்கு. நானும் கிளம்பினேன்.

வீட்டில கேட்டாங்க,”இதுக்கு மேல படிக்க போறதில்லையா? காலேஜ் போகப் போறதில்லையா? காலேஜ்ல படிச்சி பெரிய வேலைக்கு போகனும்னா, இப்போ பதிவு பண்ண வேண்டியதில்லையே”

“காலேஜ் முடிச்சி பதிஞ்சிக்கலாம்”. அவ்வளவு தான். பத்தோடு, பிளஸ் டூ-வும் போச்சி. எம்ப்ளாய்மெண்ட் எக்ஸேஞ்சும் போகல. பாஸ்போர்ட்டும் அப்ளை பண்ணல. காலேஜ் போயாச்சி.

கல்லூரி படிக்கும் போதே பல நண்பர்கள் வெளிநாட்டு மேற்படிப்புக்காக தேர்வுகளுக்கு தயாரானதோட, பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிச்சாங்க. எங்க கோஷ்டிக்கு தெரியும், நாமலாம் வெளிநாடு போயி, இந்தியாவ யார் காப்பத்தறது?

கல்லூரி முடிஞ்சது. ஒரு வழியா சென்னை வந்து தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு பண்ணியாச்சி. அடுத்த இலக்கு, பாஸ்போர்ட்டு தான். ஒரு வழியா வாங்கினேன் அப்ளிகேஷன...

# பாஸ்போர்ட் புராணம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக