பிரபலமான இடுகைகள்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

திருவரங்கம் என்றால் வித்தியாசம் தான்...

திருவரங்கம் வித்தியாசமானது. அது ஒரு தீவு. சுற்றி இருக்கிற நிலப்பகுதி போல திருவரங்கம் இருக்காது. அது முற்றிலும் வித்தியாசமானது. நிலப்பரப்பு மட்டுமல்ல, ஊரே சற்று வித்தியாசம் தான்.

      

தீவு என்றாலும் வித்தியாசம் தான். தீவு வழக்கமாக கடலுக்கு நடுவில் இருக்கும். இந்தத் திருவரங்கத் தீவு கடலுக்கு நடுவில் அல்ல, ஆற்றுக்கு நடுவில் இருப்பது. கர்நாடகத்தில் உருவாகும், காவிரி நீண்ட தொலைவு பயணம் செய்து திருச்சியை அடைகிறது.

அங்கு பிளவுபட்டு காவிரி, கொள்ளிடம் என இரண்டு நீரோட்டங்களாக பாய்கிறது. இவை இரண்டிற்கும் இடைப்பட்டப் பகுதி தான், திருவரங்கத் தீவு.

இந்தத் திருவரங்கத் தீவில் எழுந்தருளியிருப்பவர், மன்னிக்க பள்ளி கொண்டருளியிருப்பவர் தான் ஸ்ரீரங்கநாதர். வழக்கமா, எல்லா இடத்திலும் எழுந்தருளி இருக்கும் கடவுள், இங்கு மாத்திரம் பள்ளிக் கொண்டிருக்கிறார்.

இப்படி ஸ்ரீரங்கநாதரின் இந்த வரலாறே இவ்வளவு வித்தியாசம்னா, ஸ்ரீரங்கத்தின் வரலாற்று வீரியத்தை அளவிட்டுக் கொள்ளலாம். இப்படி ஒன்றிலும் ஒட்டாமல் இருப்பது தான் திருவரங்கம்.

வழக்கமாக சோழர்கள் சிவனுக்கு பெரிய, பெரிய ஆலயங்களை எழுப்பிய நிலையில், திருவரங்கத்தில் மாத்திரம் தர்மவரச் சோழனால் விஷ்ணுவிற்கு இந்தப் பெரிய ஆலயம் எடுக்கப்பட்டது. இதிலும் வித்தியாசம் தான்.

மற்ற ஆலயங்களில், கோபுரங்கள் ஆலயங்களோடு கட்டப்பட்டவை. இங்கு ராஜ கோபுரத்தை ஆலயம் கட்டிய பல் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் எழுப்பினார்கள். இப்படியும் வித்தியாசம் தான்.

அதே போல இந்த ரங்கநாதரின் வரலாறும் வித்தியாசமானது. ராமன் வீபிஷணனுக்கு இந்த விஷ்ணுவின் சிலையை பரிசளிக்கிறான். விபீஷணன் இந்த சிலையுடன் இலங்கை நோக்கி பயணிக்கிறான். ஸ்ரீரங்கம் வரும் போது, காவிரிக்கரையில் ரங்கநாதருக்கு ‘உற்சவம்’ செய்ய வேண்டி வருகிறது.

உற்சவம் முடிந்து ரங்கநாதர் நகர மறுத்து விடுகிறார். அதனால் ரங்கநாதருக்கு அங்கேயே ஆலயம் எடுப்பிக்கப்பட்டது. இப்படியும் வித்தியாசமான முறையில் அமைந்தது தான் இந்த ஆலயம்.

இந்தப் பெருமாள் ரங்கநாதர் தெற்கு நோக்கி இருப்பாராம். மற்றோர் வடக்கு நோக்கி இருப்பராம்.

   

எனவே திருவரங்க முடிவும் வித்தியாசமாகத் தான் அமையும், அமைந்திருக்கிறது. ரங்கநாதர் 2000 அழுத்தத்தால் நகர மறுக்கிறார். கர்ப்பகிரக இருட்டில் இருக்கிறார். திருவரங்கத்தான் அங்கேயே இருக்கட்டும்.

# எஞ்சியத் தமிழகம் வேறு திசை நோக்கி தான், வெளிச்சத்தை நோக்கி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக