பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 6 மார்ச், 2016

ஊருக்கு ஊர் செம்பருத்திகள்

சொன்னதை செய்தார்கள். நன்றி !

செம்பருத்தி - படிப்பகம் செய்தியைப் படித்தவர்கள் பலர் உதவி செய்திட முன்வந்துள்ளனர்.

சீதைப்பதிப்பகம் உரிமையாளர் அண்ணன்  கௌரா ராஜசேகர் நூல்களை அன்பளிப்பாக அனுப்புகிறேன் என்றார். நீங்களே வந்து அளியுங்கள் என்று வற்புறுத்திய பிறகே வந்தார்.

ரூபாய் 80,000 மதிப்புள்ள 500 புத்தகங்களை அன்பளிப்பாக படிப்பகத்திற்கு அளித்தார். அதனை மாணவி செம்பருத்தியிடம் ஒப்படைத்தார்.

சிங்கை சிங்கங்கள் சார்பாக நரசிம்மன் நரேஷ், செம்பருத்தி கல்விக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மறுநாளே அண்ணன் அஜ்மீர் அலி தொடர்பு கொண்டார். அஜ்மீர் அலியும், அண்ணன் அபிஅப்பா என்கிற தொல்காப்பியனும் வருகை தந்தனர். செம்பருத்திக்கு கல்வி நிதி அளித்தனர்.

ஊராருக்கு அதிர்ச்சி. என்ன நடக்கிறது என அவர்களுக்கு புரியவில்லை. ஒரே நாளில் 'செம்பருத்தியும்', 'கொளப்பாடி படிப்பகமும்' ஊடக வெளிச்சத்தால் தமிழ் நாடளவில் புகழ் பெற்றுவிட்டதை அவர்கள் அறியவில்லை.

சிறு செம்பருத்தியின் ஆர்வமும் துடிப்பும் ஒரு கிராமத்திற்கு இத்தகைய நன்மையை பெற்றுத் தரும் போது, ஒவ்வொருவரும் முயன்றால் முடியாதது என்னவாக இருக்கும்.

# ஊருக்கு ஊர் செம்பருத்திகள் மலரட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக