பிரபலமான இடுகைகள்

புதன், 29 ஆகஸ்ட், 2012

சட்டசபை ----சுட்டுசபை


சட்டசபையில் அம்மாவும், கேப்டனும் சுட்டு விரலை நீட்டி நீட்டி ஆவேச வசனம் பேசி சட்டசபையை சுட்டுசபையாக்கி விட்டார்கள். அம்மா குமுற , கேப்டன் எகிற அடடா... அடடா. ....

அவர்கள் பேசியதை எல்லாம் தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள். தேமுதிக கொறடா சந்திரக்குமார் விலைவாசி உயர்வை குறித்து பேச ஆரம்பித்ததும் பிரச்சினை துவங்கிவிட்டது.

நேற்று பண்ருட்டி ராமச்சந்திரனை ஜெ துவைத்து காய வைத்ததை பார்த்திருப்பீர்கள். அப்போது பண்ருட்டி அடங்கி போய்விட்டார்.
அதேபோன்று இன்றும் அடக்கி விடலாம் என்று அமைச்சர்கள் எகத்தாளமாக பதில் சொன்னார்கள். ஆனால் சந்திரக்குமார் விடாமல் குற்றம் சாட்ட , அம்மாவுக்கு BP ஏற ஆரம்பித்துவிட்டது. முகம் தணலாய் கொதித்ததை நேரில் பார்த்திருக்க வேண்டும். 

"திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் நின்று பாருங்கள் "என ஜெ சொல்ல, "பெண்ணாகரத்தில் அதிமுக டெபாசிட் இழந்ததை" வி- சொல்ல, ஏகமாய் தகிக்க ஆரமித்தது சபை.....

அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாய் எழுந்து விஜயகாந்தை பார்த்து குரலெழுப்ப..... விஜயகாந்த் சுட்டுவிரல் நீட்ட...... சினிமா தோற்றது.
அதற்கு பிறகு காவலர்களை விட்டு தேமுதிக-வினரை வெளியேற்றிவிட்டு, " ஆளில்லாத கடையில் அம்மா டீ ஆற்றியதை " டீவியில் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்........

அதற்கு பிறகு 'தேமுதிக இல்லாவிட்டாலும் அதிமுக இதைதாண்டி வெற்றி பெற்றிருக்கும் , இதை அவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; " அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் " என்று ஜெ சொன்னப் போது, தாப்பா & வாப்பா கம்யூனிஸ்ட்கள் வாலை சுருட்டி வாயை அடைத்துக் கொண்டிருந்தது 


தனி காமெடி ட்ராக்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக