பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சுஜாதா....

" சுஜாதா " - பெரிதும் வியக்க வைக்கிற பன்முகத் திறமையாளர் .

இவர் குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தைவிட புத்தகங்களோடும், கணினியோடும் தான் அதிகம் இருந்திருப்பார் என எண்ணுகிறேன். இவர் தொடாத துறைகள் எது ? கதை, கவிதை, கட்டுரை, அறிவியல், சினிமா, அடடா....

புறநானூற்றை எளிமையாகத் தருவார். கமலோடு கதை விவாதம். ஷங்கர் படத்துக்கு வசனம். ஹைகூ கவிதையை தமிழுக்கு அறிமுகம். இளமைக்காலத்தை ரசனை சொட்ட ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
கணேஷூம் வசந்தும் நம்மோடே வசிக்கிறார்கள். மெக்சிகோ சலவைக்காரி மர்மம் நீடிக்கிறது. ஜீனோ-வின் ஆட்சி தொடர்கிறது.( ஜீனோ தான் எந்திரன் சிட்டியின் முன்னோடி).

 பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரது ஆளுமை நீடிக்கிறது. சுஜாதா பதில்களாக, விமர்சனங்களாக, கற்றதும் பெற்றதுமாக அள்ளி தந்தது ஏராளம்.
வாக்களிக்க செல்லும் போது, மின்ணனு வாக்கு எந்திரத்தில் நினைவூட்டுகிறார். ஒரு காலத்தில் இவரது பெயரை போட்டே விற்பனை எகிறிய வாரப் பத்திரிக்கைகள் உண்டு. 
பள்ளி பருவத்தில், அவரது எழுத்தை சுவாசிக்க வாரப் பத்திரிக்கைகளுக்காக காத்திருந்த காலம்.....

# இளமை துள்ளும் எழுத்தாக ...... என்றும் நினைவில்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக