பிரபலமான இடுகைகள்

வியாழன், 14 நவம்பர், 2013

சிங்கம் 1 & சிங்கம் 2

மழைவிட்டு லேசான தூறல்...

தேவி காம்ப்ளக்ஸில் சினிமா விட்டு காரை எடுத்தேன். பின்புற சாலை வழியாக வாலாஜா சாலையை நோக்கி செல்ல தூறல் தொடர்ந்தது.

சப்வே தாண்டி வாலாஜாசாலையில் இடதுபுறம் திரும்புகையில், சாலையில் நின்ற மழைநீரால் ஒரு பிரேக் அடித்து நகர்த்தினேன். 

கார் சற்று அசங்கி திரும்பியது.

இடது புறம் நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ரோட்டிற்கு வந்தார், கையிலிருந்த சிகப்பு விளக்கைக் காட்டி நிறுத்தினார். காரை நிறுத்தினேன்.

பார்த்த ஒரு நிமிடம் தயங்கினார். கார் உள்ளே இருந்த மனைவி, மகன்களை பார்த்தார். 


" ஊதுங்க" என்றார். அவரை நோக்கி ஊதினேன். தலையாட்டி "போங்க" என்றார்.

மகன் சொன்னார்,"கார் தள்ளாடியதை பார்த்து, நீங்க தள்ளாடுறீங்களோன்னு சந்தேகப்பட்டிருக்கிறார்". 


சிரித்துக் கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

****************************

மற்றொரு நாள்....
கடற்கரை சாலை. நேப்பியர் பாலம் தாண்டி சாலை குறுக்கே இருப்புத்தடுப்பு. வேகத்தைக் குறைக்கும் போது, கை நீட்டினார் டிராபிக். காரை நிறுத்தினேன். தள்ளாடியவர் காரை பிடித்து நின்றார். காரின் உள் குடும்பத்தினர்.

"எங்கே இந்த நேரத்தில் ?"
"செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிட்டு வர்றோம்"
"டிக்கெட் காட்டுங்க"
காட்டினேன்.
"டிரைவிங் லைசென்ஸ் இருக்கா ?"
காட்டினேன்.
"சரி. செலவுக்கு ஏதாவது குடுத்துட்டு போங்க"
காரின் முன்புற கண்ணாடியை ஒட்டி இருந்த பாஸை காட்டினேன்.
"அது என்ன ?"
"எம்.எல்.ஏ பாஸ்"
"எம்.எல்.ஏங்களா ?"
"ஆமாம்"
"வணக்கம் அய்யா"
"வணக்கம்"
"அய்யாவுக்கு தெரியாததில்ல. பாத்து ஏதாவது செய்யுங்க"
பதில் சொல்லாமல் காரை நகர்த்தினேன்.

"ஏம்பா, ஏன் பணம் கேக்குறாரு ? இது தப்பில்லையா ? கம்ப்ளெயின் பண்ணலாமில்ல" -மகன்
" பாவம்பா "

# சிங்கம் 1 &  சிங்கம் 2 



                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக