பிரபலமான இடுகைகள்

சனி, 16 நவம்பர், 2013

'துரும்பு' சட்டசபை தீர்மானத்தை அசைத்து பார்த்தது....

11.11.2013 அன்று சட்டப்பேரவை நிலைக்குழுவான பொது நிறுவனங்கள் குழு அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை ஆய்வு செய்தது. குழு உறுப்பினர்கள் என்ற வகையில் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

அடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அரியலூர் பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்தது குழு. ஆய்வு முடிந்து உணவு முடிந்தது. மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவசரமாக வந்தார். “சட்டப்பேரவை செயலகத்திலிருந்து அவசர தகவல், நாளை மாலை சட்டபேரவை அவசர கூட்டம். தெரிவிக்க சொன்னார்கள்”

குழு தலைவர் பி.ஜி.நாராயணன் (அதிமுக) அவர்களிடம் விடைபெறலாம் என்று சென்றோம். அவர் அதற்குள் பறந்திருந்தார். மற்ற இரு அதிமுக எம்.எல்.ஏ-க்களும் கிளம்பும் ஆயத்தத்தில். அப்போதே பரபரப்பாகிவிட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் செல்லில் பேசினார்,“சென்னை செல்ல டிரெயினில் எமர்ஜென்சி கோட்டா வாங்கி தரவா ?”.

அடுத்து சட்டபேரவை துணை செயலாளர் கூட்டம் குறித்து தகவல் சொன்னார். நான் அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்,”இந்தக் கூட்டத் தொடர் முழுதும் திமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டோமே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியுமா ?”.

அவர் பதட்டமாகிவிட்டார். "சட்டப்பேரவை செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன்" என்றார், பிறகு ”வரலாம்” என்று பதில் சொன்னார்.

திமுக கூட்டத்தில் கலந்து கொள்வதில் அரசின் ஆர்வம் அளவு கடந்து இருப்பது தெரிந்தது. (மறுநாள் சபாநாயகர் திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தனியாக ஒரு ஆணை பிறப்பித்தது தெரிய வந்தது)

12.11.2013 காலை. அறிவாலயம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். அவசர சட்டப்பேரவைக் கூட்டத்தில் என்ன வகை தீர்மானம் வரும், அதன் மீது கழக நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து தலைவர் கலைஞர் பேட்டி கொடுத்தார். “இலங்கையில் வாடுகிற தமிழர்களுக்கு கைகொடுக்கும் வகையில் வருகிற தீர்மானத்தை ஆதரிப்பதை நாங்கள் எங்களுடைய கடமையாகக் கருதுகிறோம்” "இந்தியாவிலிருந்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு ஒரு "துரும்பு" கூடச் செல்லக் கூடாது என்பது தான் எங்களுடைய திட்டவட்டமான கருத்து".

ஒரு பத்திரிக்கையாள நண்பர் சொன்னார்,”சட்டப்பேரவை அவசரக் கூட்டத்தின் நோக்கத்தையே, இவரோடு “துரும்பு” தூள் தூளாக்கிடுச்சி சார்.  திமுக ஸ்லிப்பாகும், சிக்க வைக்கலாம்னு நெனச்சி தான் கூட்டமே. இப்படி பண்ணிட்டாரே”

மாலை 6 மணி சட்டப்பேரவை கூடியது. 6 மணி முதல் 7.40 வரை என்ன நடந்தது என்பது நக்கீரன் நவ 16-19 இதழில்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக