பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 29 நவம்பர், 2013

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க !

"சார், அம்மா வரப் போறாங்க. ரோடு பிளாக்" அப்படின்னு சொல்லப் போறார் போலீஸ்கார்னு நினைச்சேன். ஆனா ஒன்னும் சொல்லவில்லை. ரோட்டில் ஈ,காக்காய் இல்லை, ஜெயலலிதா வருவதால். போலீசார் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பெருமாபாளையம் போய் தளபதி அவர்கள் எந்த இடத்தில் பேசுவது என பார்வையிட்டு நடந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு கடையில் இருந்த டி.வி அலறிக் கொண்டிருந்தது.

"உங்கள் அன்பு சகோதரியான என தலைமையிலான அரசு" புரட்சித்தலைவி குரல். எட்டிப் பார்த்தேன். ஜெயா டிவி லைவ். முதல் கூட்டம், வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு. மணி 12.00.

ஜலகண்டாபுரம் கிளம்பினோம். சர்க்கார் நாட்டார் மங்கலம் பிரிவு ரோட்டில் பெரிய கூட்டம். அதிமுகவினரையே போலீசார் தடுத்துக் கொண்டிருந்தனர். அம்மா வரும் பாதை. அம்மா வர மணி 2.00 ஆகும். ஆனால் 12.30க்கே பிளாக்.

திரும்பினோம். அதிமுகவினர் மக்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். புது பச்சை நிறப் புடவைகள். உள் ரோட்டை பிடித்து, அக்ரகார நாட்டார் மங்கலம் வழியாக பேளூர் மெயின் ரோட்டை பிடித்தோம். அங்கு நின்ற ஒற்றை போலீஸ் தடுக்கவில்லை.

ஜலகாண்டாபுரம் தேர்தல் அலுவலகம் அடைந்தோம். ஜெயா டிவி வைக்க சொன்னோம். ரபி பெர்னார்டு தேனொழுகும் குரலில் வர்ணித்துக் கொண்டிருந்தார். வாழப்பாடியில் அம்மா கான்வாய் நுழைகிறது. அவரது டெம்போ டிராவலர் வேனின் மேலே கண்ணாடி மேடை எழுகிறது.

அம்மா தோன்றுகிறார். பேச ஆரம்பிக்கிறார். பேச, பேச முன்புறத்தில் இருக்கும் அட்டையை ஒவ்வொன்றாக கீழே தள்ளுகிறார். வெள்ளாளகுண்டத்தில் பேசிய அதே பேச்சு, அதே அட்டை. அம்மாவிற்கே உரிய சூடு, எகத்தாளம், ஆக்ரோஷம் மிஸ்ஸிங்.

                          

“தமிழகத்தின் மின் வெட்டுக்கு திமுக தான் காரணம்” முந்தா நாள் நான் போட்ட ஸ்டேடசை அப்படியே படித்தார். இதில் என்ன காமெடின்னா, மின்வெட்டு இல்லாத ஏற்காடு தொகுதியில் மின்வெட்டு குறித்து சீரியஸா விளக்கினார்.

மாலை சர்க்கார் நாட்டார் மங்கலத்தை திரும்ப கிராஸ் செய்தேன். காலையில் ஏற்றிய மக்களை இப்போது இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர் லாரியிலிருந்து. இறங்க, இறங்க கையில் கொடுத்து அனுப்பினர்.

லாரியில் இருந்து இறங்கிய இரட்டை இலை சேலை பாட்டியை கை கொடுத்து அழைத்து வந்தார் பேரன். அவரும் இரட்டை இலை டீ-ஷர்ட். "உனக்கு ஓட்டு இருக்காப்பா ?" "இல்லிங்க சார், டீ-ஷர்ட் கொடுத்தாங்க போனேன்". இன்னும் ஜெயா டிவியில் லைவ். அயோத்தியாப் பட்டிணத்தில் அம்மா பேசி முடித்துக் கொண்டிருக்கிறார்.

# அண்ணா நாமம் வாழ்க! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக