பிரபலமான இடுகைகள்

வியாழன், 20 பிப்ரவரி, 2014

மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் அவருக்கு தான்...

கல்லூரி மாணவர்கள், முகநூலில் உள்ள இளையோர் என முதல் முறையாக மாநாட்டை காணும் ஆவலில் மாநாடு குறித்து விசாரித்து வந்தார்கள். அதே ஆவலோடு கிளம்பி வந்த வண்ணம் உள்ளனர். 

ஆனால் திருச்சி மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் தலைவர் கலைஞருக்கு தான்.

மலைக்கோட்டை ரயிலில் வருகிறார் என வரவேற்புக்கான ஏற்பாடுகளில் இருந்த நிலையில், காரில் வருவதாக சொல்லி விட்டார். 13ந் தேதி மதியம் 3.30 சென்னையிலிருந்து கிளம்பியவர் வழி நெடுக கழகத் தோழர்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக் கொண்டு திருச்சியை அடைந்தார்.

                                                Photo: திருச்சி....!

14-ந் தேதி காலை மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார். பந்தல் மேடை அமைப்புகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைந்தார். ஒரு இளைஞனுக்கான உற்சாகத்தோடு ரசித்துப் பார்த்தார். அவரே பல மாநாடுகளை முன்னின்று நடத்தியவர், இருப்பினும் ஆர்வம்.

மேடை எழிலை பார்த்து ரசித்தவர், பந்தலை நோக்கி திரும்பினார். மகிழ்ச்சி ஆரவாரம். பந்தலில் மக்கள் கடல். பொதுமக்கள். குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக பிரம்மாண்ட பந்தலை கண்டுகளிக்க வந்தவர்கள், தலைவரையே கண்டதில் ஆனந்தத்தின் உற்சாகத்திற்கு சென்றார்கள்.

                              

தலைவர் முன் சுவர் வைத்தது போல், பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், இணைய புகைப்படக்காரர்கள், மொபைல் புகைப்படக்காரர்கள். ஒதுங்க சொல்லி, சொல்லி ஓய்ந்து போனோம். தலைவர் மக்களை பார்த்து கையசைக்க ஆரவாரம் தொடர்ந்தது.

ஓய்வுக்கு அறைக்கு திரும்பியவர், மாலை மீண்டும் வந்தார், ஓளி அலங்காரத்தில் பந்தலை ரசிக்க. மேடையில் தலைவரை கண்டதும் ஹோ என்ற உற்சாகக் கூச்சல். இப்போதும் மக்கள் வெள்ளம் பந்தலில். உற்சாகமான தலைவர் ஒரு விரலை கீழிருந்து மேல் நோக்கி தூக்க, உற்சாக கூச்சல் உச்சம் தொட்டது.





விரலை கீழிறக்கியவர், மீண்டும் மேல் நோக்கி தூக்க, மீண்டும் உற்சாகக் கூச்சல். தலைவர் முகத்தில் பெருமிதம். சிறிது நேரம் மியூசிக் கண்டக்டராக கலக்கினார்.
அவருக்கான மைக் பொருத்தப்பட்டது. தலைவர் சரி பார்க்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இது போல் மைக் சரி பார்த்த தளபதி அவர்கள் "மைக் டெஸ்ட். ஒன், டூ, த்ரீ" என சொல்ல சிரிப்பலை. இப்போது தலைவர் மைக் மீது ஆட்காட்டி விரலை வைத்து வருட ஒரு வித்தியாச ஒலி. திருப்தியாக தலையசைத்தார். வீணை விதவான் தந்தியை வருடி சரி பார்த்த தோற்றம்.

# அவர் நா இசைக்கு தானே உடன்பிறப்புகளே அடிமை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக