பிரபலமான இடுகைகள்

சனி, 1 செப்டம்பர், 2012

கண்ணதாசன்... வனவாசம்..... கலைஞர் !

சில நண்பர்கள் கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தில் எழுதியதை எடுத்து நிலைத்தகவலாக போட்டு மகிழ்கிறார்கள். 

கண்ணதாசன் தலைவர் கலைஞரை குறித்து விமர்சிப்பதை சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். குட்டரோகி சொறிந்து சொறிந்து இன்பம் காண்பதை போல் தான் இதுவும்....

நண்பர்களே....

கண்ணதாசன் யோக்கியர் போலவும், அவர் உண்மை மட்டும் பேசுவார் என்பதும் உங்களது கற்பனை. 

திராவிடர் கழக மேடையை பார்த்தவுடன், தனது நெற்றியில் இருந்த வி
பூதி பட்டையை அழித்துக் கொண்டு மைக் கிடைக்குமா என்று அலைந்த மகான் தான் இவர்.

உங்களை பற்றி நான் அவதூறாக ஒரு நிலைத்தகவல் போட்டால் எப்படி உண்மையாகாதோ அப்படி தான் இதுவும். 





எங்கள் தலைவனின் சமூக உழைப்பை ஒப்பிட்டால், கண்ணதாசன் கால் தூசுக்கு ஒப்பாக மாட்டார். பாடல் எழுதியதை தாண்டி கண்ணதாசனின் சமூக பங்களிப்பை பார்த்தால் நாடு சிரிக்கும்...

# போதும் அரிப்பு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக